மறைந்த நரகாசூரனை விடுங்கள்..... நம் மனதில் நாம் அறியாமலேயே அடிக்கடி வந்து போகும் நரகாசூர சக்தியை அழித்து....!!! ஆனந்தமாய் தீபாவளி திருநாளை கொண்டாட மனமார்ந்த வாழ்த்துக்கள்🥰🥰🥰❤️🙏
பிரியாணி மாஸ்டர் ஆன கதை::பாகம் 12 யார்!? எங்கே!? ஏன்!? எதை செய்கிறோம்... அனைத்திற்கும் இறைவன் ஒரு காரணமும் கதையும் வைத்து இருக்கிறான்.... 🥰❣️🙏
ஆம்பூரும் என்னை எட்டி உதைத்து விடாமல்... தன்னுள்ளே வைத்து கொள்ள வாய்ப்புகள் வழங்கின...
கிட்ட தட்ட இரண்டு வருட சமையல் அனுபவம்...
இருந்தும் இல்லை முடிவுகள் எடுப்பதில் முன் அனுபவம்....
மீண்டும் மீண்டும் வாட்ச்மேன் வேலை...
சத்தியமாக இது தான் கடைசி என எனக்கு அப்போது தெரியாது.....
என்னோடு கேட்டரிங் படித்த நண்பன் முஜூபர் ரஹ்மான்...
நல்ல மனம் படைத்தவன்..
வெள்ளை குணம் படைத்தவன்...
ஒரு நாள் மாலை மயங்கும் வேலையில்...
அவன் ஆம்பூரில் பணி புரியும் பிரபல பிரியாணி கடையில் வேலை இருப்பதாய் கூறினான்...
வரச் சொன்னான்... சென்றேன்..
அவன் தான் அங்கு மேனேஜர்...
முதலாளி வரட்டும் வெய்ட் பண்ணு மச்சி...
என்ன சாப்பிடுற.. என நல்ல படியாய் பேசினான்...
முதலாளி வரும் நேரம் தான்... இன்றைக்கே பேசி விடலாம்.... என்றான்.
கடையில் நல்ல கூட்டம்....
ஆம்பூரை பொருத்த வரை.... அனைத்து கடையிலும் பிரியாணி இருக்கும் நல்லா...
அதற்கு காரணம் ஃஅல்லா...🥰
ஆம் அங்கு இஸ்லாமிய சொந்தங்கள் அதிகம்...
அவர்கள் பிரியாணி சாம்ராஜ்யமும் அதிகம்.....
ஸ்டார் பிரியாணி காஜா பிரியாணி ஹஃமதியா பிரியாணி KR பிரியாணி A1 பிரியாணி... இதை போல் இன்னும் பல....
அனைத்தும் எனது மனதில் ஆக சிறந்த இடங்களை பெற்றவை...
இதில் உள்ள ஒரு கிளை நிறுவனத்திற்கு தான் சென்று உள்ளேன் கதைப்படி இன்று....
முதலாளி வந்தார்...
பணிபுரியும் அனைவரும் ஓரமாய் ஒதுங்கி ஒதுங்கி செல்ல முஜூபரோ அவர் காதருகில். இவன் வாய் வைத்து.. அதன் நடுவிலே கை வைத்து.... ஏதோ சொன்னான்... அவர் அறைக்கு சென்று விட்டார்..
ஓரிரு மணித்துளிகள் கழிந்தன... அந்த இடத்தின் மாயை சூழல் அழிந்தன....
மச்சி உன்னை வர சொல்கிறார்... நீ வா என உடன் அவனும் வந்து... அறையில் மூவரும் இருந்தோம்... அவர் அமர்ந்து...!!
நாங்கள் நின்றபடி நிமிர்ந்து...!!!
அவருக்கும் அரை சதம் மேல் ஐந்து...ஆறு இருக்கும் வயது....
அந்த நிறுவனத்திற்கோ முழு சதமே முடியப் போகும் தருவாய்...
எண்ணவே முடியாது அதன் புகழ் வருவாய்...
நல்ல தேங்காய்ப்பால் ஆறாய் வழிந்து ஓடுவது போல்... தாடி வைத்து இருந்தார்....
சந்தன நிற ஜிப்பா...
தலையில் அழகிய தொப்பி.. அதற்கு கீழ் ஐந்து வேளை தொடர் தொழுகையால் வரும் தழும்பு...
ஆக மொத்தம் அந்த அறை நிறைய அவர்தான் இருந்தார்..
நானோ அவரை பார்த்த படி... நின்றேன்...
முஜுபர்.. அவரிடம்...
எனது உயிர் நண்பன்.... உண்மையானவன்...
பையா. (மரியாதை நிமித்தமான சொல்) என (உருது-ல்) கூற...
நானும் பார்க்க இஸ்லாமிய பிள்ளை போல் இருந்ததால்...
எடுத்த எடுப்பில் "துமாரா நாம் க்யா -பா) என்றார்...
நான் திரு திரு என முழித்தப்படி..
தினேஷ் என்றேன்....
அச்சா.. என்றவர்..
நீ போ வேலையை பாரு... என அவனை அனுப்ப.. அவனோ என்னை பார்த்து கண் அசைத்து விட்டு சென்றான்....
பார்த்து பேசு என பேசாமல் சொன்னான்.....
என்ன வேலை தெரியும் என்றார்... பிரியாணி என்றேன்... சத்தமில்லாமல் சிரித்தவர்..
இங்கே நீண்ட வருட அணுபவசாலிகள் இருக்கின்றனர்...
சைனீஸ் மாஸ்டரின் கையாள் பணி உள்ளது... 5000 சம்பளம் தரலாம்...
அதுவும் மேனேஜர் நண்பர் என்பதால்...
நான் இல்லை பையா...... ஏற்கனவே 9000 சம்பளத்தில் பணி புரிந்து விட்டேன்... மாஸ்டராக..
இனி மீண்டும் கையாளாக (அசிஸ்டென்ட்) பணி புரிய விருப்பமில்லை...
நண்பன் கூப்பிட்டான் வரவில்லை என்றால் வருத்தப்படுவான் என்று தான் வந்தேன்...
என்னிடம் இவ்வளவு நேரம் உங்கள் நேரத்தை செலவிட்டமைக்கு நன்றி.. என கூறி.. வந்துவிட்டேன்...
ஆனாலும் என் நண்பன் உண்மையாகவே முயற்சி செய்தான்...
அது நடக்கவில்லை...
நான் நடந்தேன்... வாட்ச்மேன் வேலைக்கு...
ஆம்பூரில் நான் பிரியாணி மாஸ்டராக வாய்ப்பே இல்லை என புரிந்து கொண்டேன்....
நடப்பது நடக்கட்டும் என சல்யூட் வேலை துவங்கியது...
அதிக நாள் இல்லை..
ஓரிரு வாரத்தில் கேரளா மாஸ்டரிடம் இருந்து போன்.....
நான் இங்கு (வந்தவாசி) ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டேன்.... என்றார்...
நீங்க என்றார்...
நானும் தான்... வணக்கம் வைக்கும் வேலையில்...(ஆம்பூர்) என்றேன்..
அட ஏன்!? மாஸ்டர்
நீங்க உடனே கிளம்பி நாகப்பட்டினம் போங்க...
அங்கு புதிதாய் ஒரு கடை உதயமாகி ஓரிரு திங்கள் ஆகிறது....
ஆட்கள் சரியாய் இல்லாமல் நாட்கள் போகிறது...
என்னை அழைத்தார்கள் நான் போக முடியவில்லை...
நீங்கள் போனால் சரியாக இருக்கும்..!!
இல்லை என்றால்
என்னால் தான்...! நீங்க கஷ்ட்டபடுகிறீங்க என மனக் குறையாக இருக்கும்.....!!
என்றார்...
நான் நாகப்பட்டினமா!? எங்கே இருக்கு... என்றேன்..
சிதம்பரத்திற்கு பக்கம் தான் என்றார்...
ஆம்பூரில் இருந்து எப்படி போவது!?
19 வயது எனக்கு உண்மையாகவே எனக்கு தெரியாது...
அவரோ வேலூர் போய் அங்கிருந்து சிதம்பரம் அல்லது பாண்டி மார்க்கமாக போகலாம் என்றார்..
சரி என.. ஜெயவேல் சாரிடம் போய்ட்டு வரேன் சார் என்றேன்..
"ஆல் தி பெஸ்ட்" என்றார்...
அது ஒரு வெள்ளிக்கிழமை
மதியம் கிளம்பினேன்...
வேலுர் பாண்டி நாகை மார்க்கமாய் போவதென என முடிவு
பாண்டி வரவே மணி 9 இருக்கும் ..
நாகப்பட்டினம் பேருந்து...
அமர்ந்தேன்... பயணிகள் கவனிக்க... என்றார் நடத்துனர்...
இந்த பேருந்து நேரடியாக நாகை செல்ல முடியாது..
காரணம் காரைக்கால் நாகையை இணைக்கும் திருபட்டினம் பாலம் உடைந்து விட்டது... என்றார்....
நானும் உடைந்து விட்டேன்...
அதனால் காரைக்கால் மயிலாடுதுறை வாஞ்சூர் வழி நாகை செல்லும்... பயணக் கட்டணம் சற்றே அதிகம் வரும் என்றார்...
நாகப்பட்டினம் பஸ் ஸ்டேண்டில் விட்ரு சாமி..
உனக்கு புண்ணியமாக போகட்டும் என்றேன்...
அதன்படி பயணம் துவங்கியது...
என் மொபைல் 6 பாய்ண்ட் தான் சார்ஜ் இருந்தது...
அதனால் நாகையில் என்னை வேலைக்கு அழைத்தவரிடம் இப்போது 9.30 மணி நாகை நான் வர எவ்வளவு நேரம் ஆகும் என்றேன்...
இரவு ஒன்று.. இரண்டு ஆகலாம் வந்து போன் செய் என்றார்......
மொபைலில் சார்ஜ் இல்லை என்றேன்.. உடனே ஸ்விட்ச் ஆப் செய்...
இறங்கிய பின் போன் செய் என்றார்...
அதுவும் சரிதான் என போன் ஆப் செய்தேன்..
சுமார் ஐந்து மணி நேர பயணம்....
அருகில் என் வயது உடைய நபர்... அமர்ந்தார் ...
சின்னதாய்... ஒரு பேருந்து சினேகம்... பார்த்த உடன்...
கடமை என ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தோம்...
நான் என் பெயர் தினேஷ்.... நாகை முதல் முறை போகிறேன்..... என்றேன்
நாகூர் வந்தது அகபர் இறங்கி ஜன்னல் ஓரம் வந்து அடுத்து நாகையில் தான் பஸ் நிற்கும்..
பயப்படாமல் போய்ட்டு வா... என்றான்...
15 வருடம் முன் வெரும் ஐந்து மணி நேர நட்பு... இன்னும் நியாபகம் இருக்க காரணம்.. பிரியாணி மற்றும் டீ...❤️
நாகை வந்து விட்டது...
அனைவரும் இறங்கலாம்... என்றார் நடத்துனர்....
நாகை மாவட்டம் மிக பிரம்மாண்டமாய் இருக்கும் என பாதம் பதித்தேன்... இரவு இரண்டு மணி....
நான் வருகிறேன் என்பதால் 144 தடை உத்தரவு போட்ட படி... ஒரே நிசப்தம்... நான்கு அல்லது ஐந்து பேருந்து... மட்டும்... இருக்கிறது... அதுவும் ஓய்வுக்காக....
எண்ணி பார்த்தால் கூட பத்து பேர் இல்லை ....
ஆனால் எனக்கு மட்டும் இருக்கிறது உள்ளுக்குள்... பயம்...
ஸ்விட்ச் ஆன் செய்தேன்...
2 பாயிண்ட் இருந்தது... இது என்ன 6 பாயிண்டில் ஆப் செய்தேன்... எப்படி என மூளை யோசிக்கும் போது..
டேய் சீக்கிரம் போன் பண்ணி தொலைடா.. என்றது மனம்...
போன் செய்து கொண்டே ஆட்டோ ஓட்டுநரிடம் சென்று அருகில் நின்று கொண்டேன்...
அவர் எங்க போகனும் என்றார்...
நான் தயங்கிய-வாரு தெரியலை..
இருங்க போன் எடுக்கட்டும் என்றேன்...
1 பாயிண்ட் வந்து விட்டது.... போன் எடுத்தார் இவரிடம் விலாசம் சொல்லவும் என்றேன்....
ஆட்டோகார அண்ணன் ஓ அங்கயா என்றார்....
போன் ஸ்விட்ச் ஆப்.....
என் மனதில்...........
(((அவன் இவன் கிட்ட என்ன சொன்னான்... இவன் நம்பளை எங்க கூட்டிட்டு போகப் போறான்...)))
இரவு இரண்டு மணி.... பேருந்து நிலையத்தை தாண்டியவுடன்... இருள் மட்டும் நிறைந்த வீதி...
2010-11 அப்போது எல்லாம் எப்போதாவது தான் மின்சாரம் வரும்...
ஆட்டோ போகிறது...
நான் அண்ணே.. அண்ணே... என்றேன்....
அவர் என்ன என்றார்...
எங்க போறோம் என்றேன்...
சொன்னா உங்களுக்கு தெரியுமா... என்றார்....
இல்லை தெரிஞ்சுக்கதான் கேட்டேன்...
என்றேன்...
அவர் கொட்டுப்பாளையத் தெரு.. பக்கம் தான் என அழைத்து சென்றார்... தூரத்தில் ஒரு உருவம் ... கை காட்ட...
ஆட்டோ மெது மேதுவாக நின்றது.....
தினேஷ் மாஸ்ட்டரா என்றது....
அப்பாடி........ நல்ல வேலை... கூட்டி வந்து விட்டுவிட்டார்.... நல்ல அண்ணன் தான்... என மகிழ்ந்தேன்.....
இரவோடு இரவாக கள்ளக்கடத்தல் போல் கடத்தி இன்று வரை விட வில்லை...
நாகை மாநகர் என்னை....
நாளை...எந்த கடை...எங்கே எப்படி பிரியாணி செய்தேன் ...அந்த கூத்து எல்லாம் பார்ப்போமா!!?🥰😂
வாசகர்கள் இந்த அளவு வாசிப்பீர்கள் என நான் நினைக்கவில்லை.... ஆம் என் எழுத்துக்களை கடைசி வாரம் மட்டும் ஒரு இலட்சம் பேருக்கு மேல் வாசித்து உள்ளீர்கள்.... நன்றி.. நன்றி.. நன்றி.....
DK FOOD JUNCTION
மறைந்த
நரகாசூரனை
விடுங்கள்.....
நம்
மனதில்
நாம்
அறியாமலேயே
அடிக்கடி
வந்து
போகும்
நரகாசூர
சக்தியை
அழித்து....!!!
ஆனந்தமாய்
தீபாவளி
திருநாளை
கொண்டாட
மனமார்ந்த
வாழ்த்துக்கள்🥰🥰🥰❤️🙏
19 hours ago | [YT] | 26
View 2 replies
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 18
கல்யாண பிராப்தம்.....
2013 ல்
போனார்கள்
அப்பா
அம்மா
என்னை
விட்டு
ஊருக்கு...
அனாதை
ஆனேன்
பேருக்கு..
திருமணம்
செய்து
கொண்டால்
என்ன!!
அக்காவிற்கு
போன்
செய்தேன்...
நான்
மட்டும்
இருக்கின்றேன்...
தனியே...
தேடிக்கொள்ள
நினைக்கின்றேன்
துணையை....
உதவ
முன்
வா...
நான்
கேட்கவில்லை
சும்மா!!
இப்போ
உன்னை
விட்டால்
யார்
எனக்கு
அம்மா!!
அக்கா!!
அதுவும்
சரி
தான்....
உடனே
வேலையை
ஆரம்பிக்கின்றேன்...
என்றார்..
23
வயதில்
தொடங்கியது
பெண்
பார்க்கும்
படலம்...
ஏதோ
ஒரு
மகிழ்ச்சி
கொண்டது..
மனதும்
உடலும்....
நினைத்தேன்
நான்
எளியது
திருமணம்
என்று...
அனுபவம்
கிடைத்தது
நன்று....
அக்கா
பாவம்
பெண்
பார்க்க
போகிறேன்....
என
மாதா..மாதம்..
ஒரு ஊருக்கு
செல்வார்...
எனக்கு
விடுப்பு
இல்லாததால்....
அவரே
இருவரை
அழைத்து
செல்வார்....
தட-புடலாக
நடக்கும்
பெண்
பார்க்கும்
நிகழ்வு...
சம்பளம்
வீடு
குலம்
கோத்திரம்
எல்லாம்
சரி...
வேலையை
பார்த்தால்
சமையல்காரன்
என்கிறீர்கள்
அதுதான்
கஷ்டம்
என்பர்..
ஏறக்குறைய..
ஏழு
எட்டு
மாதம்
அமாவாசை
பௌர்ணமி
போல்...
பெண்
பார்ப்பதும்
வழக்கமானது...
இடையே
2014ல்
தந்தையும்
காலமானார்....
வருடம்
ஒன்று
முடியட்டும்..
நல்லது
நடக்கும்...
எனவே
இந்த
மாதா..மாதம்
நடக்கும்
உற்சவம்
தள்ளி
வைக்கப்பட்டது....
என்
ஆசைகளும்
பரன்-மேல்
அள்ளி
வைக்கப்பட்டது....
ஒரு
வேலை
ஜாதகம்
சாதகமாய்
இல்லையோ!?
அதனால்தான்
இந்த
தொல்லையோ!?
என
கட்டம்
பார்ப்பவரை
கட்டம்
கட்டினோம்...
அவரோ
சனி
சரியான
இடத்தில்
இல்லை
என்றார்...
வருகிற
வருடம்
ஏறக்கூடும்
தாலி...
அதை விட்டால்
வயது
முப்பது
ஆகட்டும்..
அதன்
பின்தான்
நடக்கும்
தாலி
கட்டும்
சோலி...
ஆனால்
ஒன்று
இவன்
காதல்
திருமணம்
தான்
செய்வான்...
என்ற
உடன்
அனைவரும்
என்னை
திரும்பி பார்க்க....
(((((நானோ
பழைய
நினைவுகளில்
மூழ்க...
ஒரு
வேலை
ஒன்பதாம்
வகுப்பு
தோழியோ....
இல்லை
இல்லை
அவளுக்குத்தான்
போன
வருடமே
திருமணம்
முடிந்து
விட்டதே....!!
அதுமட்டுமில்லை
அவளுக்குத்தான்
நான்
காதலித்த
விஷயமே
சொல்லவில்லையே!
ஆம்
90ன்
காதல்
அப்படித்தான்...
உள்ளுக்குள்ளேயே
காதல்
இருக்கும்...
கண்கள்
இடையே
கடிதங்கள்
பறக்கும்...
பிடித்து
இருந்தால்
மட்டும்
இதயம்
திறக்கும்....
கடைசி
வரை
விரல்கள்
கூட
உரசாது...
காதலர்கள்
காதல்
மட்டுமே
செய்த
காலம்
அது....
நான்😅
அதை
கூட
ஒழுங்காக
செய்ததால்
வந்த
கோலமிது...
இரண்டு
வருடம்
தேடியும்..
இன்னும்
கிடைக்கவில்லை
பெண்....
ஒரு
வேலை
கல்லூரி
காதல்
கை
கொடுக்குமோ!??
கல்லூரியில்
அன்புத் தோழியும்
நானும்
அடுத்தடுத்த
இருக்கை
அமைத்து
தந்தது
இயற்கை...
உணவு
இடைவேளையில்
இருவரும்
பகிர்வோம்
உணவை....
ஒரு
நாளும்
பகிர்ந்தது
இல்லை
உணர்வை....
நான்
வேலை
பார்த்து
படித்ததால்
தோழிக்கு
என்மேல்
பிரியம்....
பிரியமான
தோழி
என்பதால்
என்
கண்கள்
அவள்
பேர்
சொன்னாலே
விரியும்....
ஆயினும்
குடும்ப
சூழல்
காரணமாய்
காதலை
வீட்டில்
சொல்லா-விட்டால்
கூட
பரவாயில்லை....
அவளிடமே
சொல்லவில்லை
நான்😂..
ஆக
இது
வரை
இரண்டு
காதல்
இரண்டும்
ஒரே
வகை
காதல்..
ஒரு
தலைக்காதல்....)))))))
ஐயரும்
அனைவரும்
என்னையே
பார்க்க....
எதாச்சும்
இருந்தா
சொல்லுடா...
என..
நானோ
ச்சே....சே
அப்படி
எல்லாம்
ஒன்னுமில்லை...
என்றேன்.....
கட்டம்
சொல்கிறது
காதல்
திருமணம
என...
என்
மனதோ
கட்டாயம்
சொல்கிறது...
அதுக்கு
நீ
சரிப்பட்டு
வர
மாட்டாய்
என...😂
ஐயர்
கொடுத்த
வருடம்
வந்து
விட்டது....
காதலும்
வந்த பாடில்லை...
கத்திரிக்காயும்
வந்த பாடில்லை...
வந்தது
அக்காவிடம்
இருந்து
ஒரு
போன்.....
சொந்தத்தில்
ஒரு
பெண்
நல்ல
குணவதி...
நல்ல
பெண்...
பேசிக்கொண்டு
இருக்கிறோம்....
என...
ஏதோ
ஒரு
எண்ணில்
இருந்து
அழைப்பு....
கிளியும்
குயிலும்
கலந்த
கீச்
குரலில்....
பெண்
குரல்....
ஆம்
2k
குரல்...
அந்த
குரல்
அந்த
சொந்தக்கார
பெண்
குரல்...
பிற்காலத்தில்
எனக்கு
சொந்தமாகும்
குரல்
என
அறியேன்.....
அழைப்பேசியில்
நான்...
நான்...
என
பெயர்
சொல்லி...
அறிமுகம்
ஆக...
நான் தான்
90ஸ் கிட்ஸ்
ஆச்சே....
இப்படி
எல்லாம்
வீட்டிற்கு
தெரியாமல்
போன்
செய்ய
கூடாது
தப்பு
என்றேன்....
அந்நியன்
அம்பியாக....!!
இரு வீட்டார்
மனம்
ஒப்ப....
நல்ல
நாள்
ஒன்று
குறிக்கப்பட்டது
நிச்சயம்...
நிச்சயம்
செய்ய....!
பூ
வைக்கும்
நிகழ்வு...
பின்பு
இருவரும்
பேசலானோம்......
நான்..
என்னை
பிடித்து
இருக்கிறதா
உனக்கு
என!!
அவளோ
ஒரு
வருடமாகவே
உங்களை
பிடிக்கும்....
உங்கள்
பெயர்
சொன்னாலே
இதயம்
துடிக்கும்.....
என்றாள்...!
அப்படியா!!
எங்கே
எப்போது
என்னை
பார்த்தாய்
என
கேட்க....!!
உங்கள்
தந்தையின்
மரணத்தில்
பிறந்தது
உங்கள்
மீது
அன்பு....
தெருமுனை
பிள்ளையாரிடம்
மட்டுமே
சொல்லியதை
இன்று
உங்களிடமும்
சொல்லி
விட்டேன்......
என்றாள்...
அடடே
இதுவும்
காதல்
திருமணம்தான்
போலேயே!¡!!
ஜாதகம்
உண்மை
தானோ!??
மணப்பெண்
காதலி
ஆகி
மீண்டும்
மனைவி
ஆன கதை...
இன்னார்க்கு
இன்னார்
என்று
இறைவன்
வகுத்த
பாதையில்
திருமணம்
ஓர்
நாள்
என
முடிவு.....
அவள்....!!
சொல்லாமல்
சொன்னவள்
காதலை...
நான்
அவள்
சொல்லியதும்
சொன்னவன்
காதலை...
முதல்....
முறை
இரு தலை காதல்....
மூன்று
மாத
இடைவேளையில்
திருமணம்..
புது
அலைப்பேசி
ஒன்று
பரிசளித்து
சரியாக
வேலை
செய்கிறதா...
என
சாப்பிடும்
தூங்கும்
நேரம்
தவிர
சரிபார்த்த
காலம்
அது......
என்ன
பேசுகிறோம்!?
ஏன்
பேசுகிறோம்!?
எதற்கு
பேசுகிறோம்!?
என
தெரியமாலே
பல
மணி
நேரம்.....பேசி
பரவாயில்லை
அலைப்பேசி
அழகாய்த்தான்....
வேலை
செய்கிறது...
என்போம்..
திருமணத்திற்கு
முன்பு
காதலிக்கு
ஓர்
கவிதை
இல்லை என்றால்
எப்படி!!!?
நாளை பார்ப்போமா!!???
1 week ago | [YT] | 20
View 10 replies
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 17
அம்மா என்றால் சும்மா இல்லை ❤️
ஆம்
பெற்றோரை
அழைத்து
வந்தேன்
இங்கே!
அவர்கள்
மனம்
இருந்ததோ
அங்கே!!
காலகாலமாய்
வாழ்ந்த
ஊரை
விட்டு
அழைத்து
வந்தது
அவர்களுக்கு
பிடிக்கவில்லை!
என்னைப்
பொறுத்தவரைக்
அப்பா அம்மாவை
அமர வைத்து
பார்க்க
வேண்டும்
என்ற
ஆசை !
அப்பா
கூட
சரி
என்றார்...
அம்மாவோ
நீ
என்ன
சொந்த
வீடா
கட்டிவிட்டாய்...!
வா
வா
என
நச்சரிக்கிறாய்...
வந்தே
ஆக
வேண்டும்
என
எச்சரிக்கிறாய்!!
எனக்கு
இருக்க
கூடாதா
ஆசை...
அப்பா
அம்மாவை
உட்கார
வைத்து
சோறு
போட
வேண்டும்
என்று!!
அந்த
கனவு
நினைவானது
இன்று!!
என
எனக்கு
திருப்தி...
அவர்களுக்கோ
இந்த
வயதிலேயே
பிள்ளை
உழைப்பில்
இருக்க
வேண்டுமா!?
என
அதிருப்தி...
அம்மா
ஓர்
அறிமுகம்...
கஸ்தூரி
என்ற
பெயரை
சுமந்தவர்...
சுகத்தை
ஒரு
நாளும்
சுமக்காதவர்....
அவருக்கு
எதிர்பாராமல்
பிறந்தவன்
நான்..
ஆம்...
அக்கா
பிறந்து
ஏழு
வருடம்
கழித்து
பிறந்தவன்
நான்...
குடிகார
கணவருடன்
நானே
ஒரு
பெண்
பிள்ளையை
வைத்து
கொண்டு
தினம்
தினம்
போராட...
நீ
வேறு
இங்கு
வந்து
ஏன்
பிறந்தாய்
என
புலம்புவார்....
பிறக்காமல்
நான்
இருக்க
எடுத்த
முயற்சிகளை
தகர்த்து
பிறந்தவன்
இவன்..
என
அடிக்கடி
சொல்வார்....
ஓட்டல்
தொழிலாளி
மனைவி
என்று
தான்
பெயர்...
சோறு
இரண்டு
வேளை
கிடைப்பதே
குதிரை
கொம்பு....
ஆம்
அடிக்கடி
வேலைக்கு
போகமால்
இருக்கும்
தந்தையால்..
முற்றுப்புள்ளி
வைக்க
முடியாத
துயரம்....
அதை
சரி
செய்ய...
அம்மா
நிறைய
வேலைகள்
செய்தார்....
படிக்காத
பெண்..
எனவே
எந்த
வேலை
செய்யவும்
கவுரவுத்
தடையில்லை.....
ஆம்பூரில்
பசு
பீடி
மண்டி
ஒன்று
உண்டு...
அதில்
பத்தாயிரம்
பீடி
சுற்றி
வரும்
பணத்தில்
வாழ்ந்தோம்
உண்டு..
பீடி
கட்டை
பிரித்து
லேபல்
ஒட்டி
16 பீடி
என
மீண்டும்
கட்டை
கட்டி....
பத்தாயிரம்
பீடிகளை
கொடுத்தால்
எட்டு ரூபாய்( 1995)
கிடைக்கும்
என்பார்..
பிறகு
வயிறுகள்
பெரிதாயின
எட்டு
ரூபாய்
போதவில்லை...
பீடி
ஒரு
பக்கம்...
புளி
சீசன்
வந்தால்...
நாள்
ஒன்றுக்கு
25 கிலோ
புளி....யில்
கொட்டை
கோது
நீக்கினால்..
25 ரூபாய்
கிடைக்கும்...
இப்படி
நாட்கள்
நகர
பிள்ளைகள்
வளர
அம்மா
பீடி
சுற்ற...
அப்பா
ஊரை
சுற்ற..!
கஷ்டங்கள்
மட்டும்
பஞ்சமில்லாமல்
எங்கள்
வீடு
நிறைய
இருந்தன....
அப்போது
ரேஷன்
அரிசி
கூட
பணம்
கட்டி
வாங்க
வேண்டும்....
10 ரூபாய்
கூட
கடன்
வாங்கி
அரிசி
வாங்கிய
காலம்
அது...
சரி
வீட்டில்
இருந்த
படி
வேலை
செய்ய
வேண்டாம்...
மாத
சம்பள
வேலையை
மாதா
தேட....
ஆயா
வேலை
மாதம்
எட்டு நூறு
சம்பளத்தில்
தனியார்
பள்ளியில்..
கிடைக்க..
அங்கே
கழிவறை
கூட
சமயத்தில்
சுத்தம்
செய்ய
வேண்டி
வரும்....
கருவறையில்
சுமந்ததால்
பள்ளிக்
கழிவறையை
சுத்தம்
செய்வார்...
ஆம்பூரில்
ஷீ (செருப்பு)
கம்பெனிகள்
அதிகம்...
அதிலும்
பல
ஆண்டு
பணி
புரிந்தார்..
இப்படி
காலத்திற்கும்
கஷ்ட
படுகிறாரே..
இன்று.....((2012-13))
நாம்
13,500
சம்பளம்
வாங்குகிறோமே!
எனவே
அம்மாவை
வேலைக்கு
அனுப்ப
கூடாது
என்பது
என்
ஆசை....
அவர்களோ
காலத்திற்கும்
வாடகை
வீட்டிலேயே
வாழ
வேண்டுமா....
சொந்த
வீடு
கட்டி
அழை
வருகிறேன்....
என்கிறார்!!
ஊர் பேர்
தெரியாத
ஊரில்
வாடகை
வீட்டில்
உட்கார்ந்து
சாப்பிட
மாட்டேன்
என
கூறி.....
ஆறே
மாதத்தில்
ஊருக்கு
அப்பாவுடன்
சென்று
விட்டார்.....
இரண்டு
இலட்சம்
அடமான
வீட்டில்
அனாதை
போல்
நான்....
அம்மாவிடம்
கிட்டத்தட்ட
இரண்டு
வருடம்
பேசவே
இல்லை
கோபத்தில்.....
பேசினேன்
என்
தந்தையின்
மரணத்தில்..
ஆம்
2014
நல்ல
வைகுண்ட
ஏகாதசி
தினத்தில்
என்
தந்தை
காலமானார்....
தாயோ
விதவை
கோலமானார்......
அப்போதும்
என்னோடு
வா...
என...
நான் கூற...!
எனக்கு
இன்னும்
உழைக்க
முடியும்....
எப்போது
முடியவில்லையோ...
அப்போது
நான்
வருகிறேன்
என
தனியாய்
ஆம்பூரில்
செருப்பு
கம்பெனி
பணி
தொடர...
சொந்த
வீடு
கட்டினால்
தான்...
அம்மா
வருவார்
என
முடிவு
செய்தேன்....
24வயது...
திருமணம்
செய்யலாம்
என
பேச்சுகள்
அடிப்பட்டன....
கஷ்ட்டங்கள்
மட்டுமே
இருந்த
கதையில்
சிறு
சிறு
காதலும்
வரப்போகிறது...
அடுத்த
பாகத்தில்
பார்ப்போமா!!?
1 week ago | [YT] | 22
View 9 replies
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 16
எல்லா நேரமும் ஒரே மாதிரி இல்லை...
ஏஜென்ட்டிடம்
இருந்து
வந்தது
போன்
கால்...
ஏய்...!
நீ
வந்த
வேலை
என்ன!?
இப்போ
பார்க்கும்
வேலை
என்ன!!?
எந்த
அரிசி
தந்தாலும்
ஏன்
சமைக்க
ஒத்துழைக்கிறாய்...
என்னால்
தான்
இங்கே
வந்தாய்
என்பதை
மறந்து
விட்டொளிக்கிறாய்....
நியாயம்தானா !??
நீ செய்வது
நம்பிக்கை
துரோகம்
இல்லையா
இப்படி
மாறுவது!!?
சிறிய
வயது
உனக்கு
நல்லது
கெட்டது
யார்
கூறுவது!!
என்
மனதில்
((ஆஹா
சாத்தானா
வேதம்
ஓதுவது))
நான்...
எந்த அரிசி
தந்தாலும்
ஆக்க
வேண்டியது
என்
வேலை!!
இதில்
என்ன
இருக்கிறது
நரி தந்திர
லீலை!!
கோபத்தின்
உச்சத்தில்
உன்னை
பணியிலிருந்து
நீக்கி
விடுவேன்
என்றான்
ஏஜென்ட்!!
இருப்பவனுக்கு
ஒரு
வேலை
இல்லாதவனுக்கு
பல
வேலை
என்னை
பார்த்து
நீ
தொழில்
செய்யவில்லை
உன்னை
பார்த்து
நான்
தொழில்
கற்கவில்லை..
எதற்கும்
துணிந்தவன்
நான்
எதைப்
பற்றியும்
கவலை
இல்லை
எனக்கு!!
காரணம்
இதெல்லாம்
இறைவன்
கணக்கு....
உன்னை
என்ன
செய்கிறேன்
பார்
என்றான்......???
இறைவன்
என்ன
செய்தாலும்
சரி
என்றேன்....
போன்
கட்..
ஆனது...
முதலாளியிடம்
நடந்ததை
செப்பினேன் ..
முதலாளியோ..
அவர்தான்
சேர்த்தார்
உங்களை..
வேண்டாம்
என்றால்
நின்று
விடுங்கள்...
சென்று
மீண்டும்
வந்து
சேர்ந்து
விடுங்கள்..
கமிஷன்
இல்லாமல்
மொத்த
சம்பளமும்
உங்களுக்கே
உரித்தாகும்
என
உரைத்தார்...
ஆனால்
ஏஜென்ட்
மீண்டும்
எதுவும்
பேசவில்லை...
ஒரு
கட்டத்தில்
காரைக்கால்
கடை
முழுவதாய்
மூடும்
நேரம்
வந்தது...
ஏஜென்ட்
கிலோ
67
என
வாங்கிய
அரிசி
உண்மை
விலை
54
என
தெரியவந்தது...
ஆயினும்
முதலாளி
கோபப்படவில்லை...
நம்
தவறு
இதன்
விலை (பணம்)
அறியாமை..
அவர்
தவறு
இதன்
விலை (பாவம்)
அறியாமை...
என்றார்...
அந்த
ஊரை
விற்று
உலையில்
போடுபவன்..
மீண்டும்
நாகை
வர
துடிக்க...
முதலாளியோ
அதை
நடக்க
விடாமல்
தடுக்க...
அவனோ
நான்
இல்லாமல்
எப்படி!!
தேவையில்லாமல்
வைக்காதீர்
தப்படி!!
என்றான்...
முதலாளியோ
உங்களின்
அரிசி
பேரம்
கூட
தெரியும்
எமக்கு ...
அது
நன்றாக
புரியும்
உமக்கு...!
இருந்தும்
நாம்
நண்பர்களாக
சேர்ந்தோம்...
நண்பர்களாகவே
பிரிவோம்
என்றார்...
அப்பா....டி...
இப்போதாவது
திறந்தாரே
வாய்...
என
மனம்
மகிழ்ந்தேன்...
அவர்
பொறுமையை
கண்டு
நெகிழ்ந்தேன்...
அவன்
வைத்த
ஆட்களை
கொஞ்ச
கொஞ்சமாக
திரும்ப
பெற்றான்
ஏஜென்ட்....
அதில்
திரும்பி
பார்க்காதவன்
நான்...
நாளடைவில்
அவனின்
தொடர்பு
முழுதாய்
துண்டானது..
எங்களின்
நட்பு
பலம்
இரெண்டானது....
சிறந்த
வேலை
ஆட்களை
ஊர்
ஊராய்
சென்று
இருவரும்
பிடித்தோம்...
உழைப்பின்
ஊதியத்தை
வியர்வை
காயும்
முன்னே
உரியவருக்கே
கொடுத்தோம்....
நாட்கள்
நகர்ந்தது...
என்
வயதும்
தான்...
ஊரில்
அப்பா
அம்மா
தனியாக
இருப்பதால்
2012ல்
இதே
ஊருக்கு
அவர்களை
அழைத்தேன்
ஆசையாக...
தனி
வீடு
இலட்சம்
இரண்டு
கொடுத்து...
அடமானம்
பிடித்தேன்...
பெற்றோர்
இங்கேயே
வர
வேண்டும்
என
அடம்
பிடித்தேன்...
அவர்களோ...
ஊர்
தெரியாத
ஊரில்
நாங்கள்
செய்வது
என்ன!?
வீட்டில்
சும்மா
இருந்து
என்ன
பண்ண???
என்றனர்...
நானே
உங்களை
பார்த்து
கொள்கிறேன்...
என்று
கட்டாய
ஓய்வு
உழைப்பில்
இருந்து
என
அழைத்து
வந்தேன்...
ஆனால்
அது
நீடிக்கவில்லை...
ஏன்!!
எப்படி!!
எதனால்...!!!?
நாளை
பார்ப்போமா....
1 week ago | [YT] | 18
View 3 replies
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை .. பாகம் 15
இறுதி பாகமாக கூட இருக்கலாம்❤️🙏
அந்த
ஏஜென்ட்
முதலாளி-
தொழிலாளி
பேசுவதை
தவிர்ப்பான்....
பேசினால்
செய்வதறியாது
திகைப்பான்...
எங்கே
என்ன
பொருட்களை
வாங்குகிறோம்
என்பதை
கூட
மறைப்பான்...
தரம்
நல்லா
இல்லையே
என்றால்
முறைப்பான்....
பாஸ்மதி
அரிசி கிலோ
67 ரூபாய் ((2011)
என
மூட்டை
மூட்டையாக
வாங்கி
போட்டுவிட்டான்...
ஆஹா...ஓஹோ
அற்புதமான
அரிசி
என்றான்...
அரிசியை
பார்த்தால்
மஞ்சள்காமாலை
வந்தது போல்
உள்ளது....
என்ன
மசாலா
போட்டு
சமைத்தாலும்
நான்
ஏன்
நல்லா
இருக்க
வேண்டும்
என
கேட்கிறது....
இந்த
ஏரியாவில்...
இது
புதுசு
என்பதால்...
முதலாளிக்கும்
தெரியவில்லை...
அவனோ
இது
ஸ்பெஷல்
அரிசி
இப்படித்தான்
இருக்கும்
என்கிறான்....
இவரோ
அப்படியா!!
சரி
சரி..
என்கிறார்...
என்
கண்
முன்
நடந்தாலும்
அநியாயத்தை
தட்டி
கேட்க முடியவில்லை...
இவனால்தான்
நாம்
இங்கு
வந்து
இருக்கிறோம்....
எப்படி
இவனை
எதிர்த்து
பேசுவது
என
தயக்கம்...
ஏற்கனவே
இப்படி
பேசி
பேசி
ஏகப்பட்ட
வேலையை
இழந்தாயிற்று...
எனவே
அமைதி
காப்போம்
என
இருந்தாயிற்று....
அனையப்போகும்
விளக்கு
பிரகாசமாக
எரிவதை
போல்...
அந்த
ஏஜென்ட்டுக்கு
ஒரு
விபரீத
ஆசை...
நாமே
முதலாளி
ஆகி விட்டால்
என்ன!??
இவரின்
முதலீடுக்கு
ஈடு
கொடுக்க
அவனிடம்
ஈடு (பணம்)
இல்லை....
எனவே
இவ்வளவு
பெரியதாய்
வேண்டாம்...
குறைந்த
முதலீட்டில்
தனியாய்
துவங்க
போகிறேன்...
என
காரைக்காலில்
அடி
வைப்பதாய்
செய்தான்
முடிவு....
நல்ல ஊர்
நன்றாக
போகும்
வியாபாரம்
என
நம்பி...
அதாவது
அரசனை
நம்பி
புருசனை
கைவிட்ட
கதையாய்.....
இந்த
கடையை
நான்
அங்கிருந்தே
பார்த்துக்கொள்கிறேன்..
புதுக்கடையை
நானே
நடத்திக்கொள்கிறேன்
என்றான்.....
அதற்கும்
ஆட்டுகிறார்
இவர்
தலையை...
வெட்ட
வெட்ட
காட்டுகிறார்
தலையை....
அய்யோ
இப்படியுமா?
ஒரு
பொறுமைசாலி🧐
நான்
பார்த்து
இல்லை...
அவனோ
இந்த
கடையின்
பெயரை
பயன்படுத்தி
எல்லாப் பொருட்களை
வாங்கி
கொள்கிறேன்....
புது
மாஸ்டராக
நல்ல
ஆள்
வேண்டும்
என்று
என்னிடமே
கேட்கிறான்....
இவன்
இங்கேயே
இருப்பதால்....
எங்களை
பரஸ்பரம்
பேச
கூட
விடமாட்டான்...
சரி
என
நானே
என்
குருவை
வர
சொல்லி
அந்த
கடையில்
சேர்த்தேன்..
சேர்த்தப் பின்னர்
வேர்த்தேன்...
ஏன்...டா!
சேர்த்தோம்
என!
ஆம்
நல்ல ஊர்
நல்ல மாஸ்டர்
நல்ல பொருட்கள்
நல்ல இலவச பொருளாதாரம்
இத்தனை
இருந்தும்
நடக்கவில்லை
அவனுக்கு
வியாபாரம்....
ஆம்
ஆண்டவன்
என்ன
அப்துல் காதாரா!??
சரி
சரி
என
தலையாட்ட!!
ஒட்ட
ஒட்ட
வெட்டிவிட்டான்
இவன்
வாலாட்ட...
ஆம்
ஏமாற்றி
சேர்த்த
அனைத்து
பணமும்
அம்பேள்.....
மாதம்
மூன்று
ஆனது...
நிலைமை
முற்றி
போனது...
நாகை
கடை
நல்ல
வியாபாரம்..
காரைக்கால்
கடை
கடும்
நஷ்டம்....
ஆமாம்
தொழில் தர்மம்
என்று
ஒன்று
இல்லையா!!
அப்பாவி
ஒருவரை
இப்படி
ஏமாற்றினால்
எந்த
தர்மமும்
சும்மா
விடாது...
அதுவும்
செய்வதெல்லாம்
அதர்மம்
என்றால்
சும்மா
விட்டுவிடுமா!?
இந்த
நேரத்தில்
அவன்
வாங்கிய
அரிசி
காலியாகும்
நேரம்....
அது
தான்
அவனை
காவு
வாங்கும்
நேரமும்
கூட....
முதலாளி
என்னிடம்...
தினேஷ்
நாம
வேற
அரிசி
போடலாமா!?
என்றார்....
நானோ
நீங்க
ரேஷன்
அரிசி
குடுத்தா கூட
போடுவேன்
என்றார்...
முதலாளி
நாம்
சென்னை
சென்று
மாதிரி(sample)
பார்த்து
வாங்கலாமா!?
என்றார்...
அதனால்
என்ன
தாரளமாக
போகலாம்....
என்றேன்.....
சென்னை
எங்களை
வரவேற்ற
விதமே
சரியில்லை...
அது
மிகப்பெரிய
மார்க்கெட்...
நாங்கள்
ஒரு
மூட்டை
வாங்கி
சமைத்து
பார்த்தால்
பின்பு
வாங்கி
கொள்கிறோம்...
என்றோம்...
அவர்களோ..
அதைப்பற்றி
கவலைபடுவதாய்
தெரியவில்லை...
பிறகு
பாண்டிச்சேரி
நமக்கு
பக்கம்...
அங்கேயும்
பார்ப்போமா
என்றார்
முதலாளி...
நீங்க
ரைட்டுனா...
ரைட்...
லெப்டுனா
லெஃப்ட்...
என்றேன்.....
அப்படியாக
பாண்டி
பாரதியார் தெரு
தணிகாச்சல முதலியார்
கடைக்கு
போனோம்....
அப்போதெல்லாம்
எங்களிடம்
கார்
இல்லை...
பேருந்து
பயணம்
தான்.....
வயது 21
அப்போதே
நான்
ஆயிரம்
யோசனை
சொல்வேன்....
காரணம்
என்னை
பொருத்தவரை
இவர்
அமிர்தத்தை
போன்றவர்..
அவன்
நஞ்சை
போன்றவன்......
எனவே
அதர்மம்
எப்போதும்
ஜெயிக்காது..
என்பதை
நான்
என்னை
அறியாமலேயே
அறிந்து
இருந்தேன்....
நாங்கள்
நான்கு
மூட்டை
அரிசி
தலா
இரண்டு
இருவருக்கும்
என
தோளில்
சுமந்து
பேருந்தில்
வந்தோம்...
மறுநாள்
பிரியாணி
செய்தேன்...
மகிழ்ச்சி
வெள்ளத்தில்
முதலாளி
ஆம்
ஆயிரம்
சூரியனாய்
பிரகாச
புன்னகைப்பு
அவரில்....
அதுதானே
தேவை
என்னில்.......
விஷயம்
கசிந்து விட்டது..
ஆம்
மற்ற
தொழிலாளிகள்
ஏஜென்டிடம்
பற்ற
வைத்தனர்...
இவ்வாறாக!!
அண்ணா
நீங்கள்
இல்லை
இங்கு...
எனவே
எல்லாமே
மாறிக்கொண்டே
போகிறது....
கணக்கு
என்றால்
என்ன
என
கேட்கும்
முதலாளி!!
இப்போது
தொட்டதுக்கெல்லாம்
கணக்கு
கேட்கிறார்....
காரணம்
அந்த
பொடிப்
பயல்!!
இருவரும்
இருக்கின்றனர்
நகையும்...
சதையுமாக..
எனவே
ஒவ்வொன்றிலும்
நம்
பெயர்
பெறுகிறது
அடியும்
உதையுமாக....
நம்முடைய
ஊழல்
குற்றச்சாட்டு
அனைத்தும்....
தெரியவந்து விட்டது...
என
போட்டு கொடுக்க
எனக்கு
அந்த
ஏஜென்ட்டிடம்
இருந்து
போன்
வந்தது....
என்ன ஆனது!!!!?
நாளை பார்ப்போம்...
இன்னும்
ஒன்று
அல்லது
இரண்டு
பாகத்தில்
முடித்து விடவா கதையை....!!!
உங்கள் விருப்பமே
என்
விருப்பம்...
உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது....
2 weeks ago | [YT] | 28
View 8 replies
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 14
முதலாளி பற்றிய ஓர் அறிமுகம்🥰👍
ஏஜென்ட்
இப்படி
சொல்ல...
நானும்
கோவத்தில்
வந்த
வார்த்தைகளை
வாய்க்குள்ளேயே
மெல்ல....
கமிஷன்
பிடித்தாலும்
என்ன
செய்வது
300 ரூபாய்
சம்பளத்தில்
இருந்து
450 கிடைத்ததே
மகிழ்ச்சி
என
இருந்தேன்....!
அனைத்திலும்
கமிஷன்
எடுக்கும்
வேலைகள்
எல்லாம்
தெரிந்தும்
முதலாளி
அமைதி
காப்பார்...!
இருந்தும்
ஏஜென்ட்டிம்
புன்னகை
பூப்பார்!!
காரணம்
அவருக்கு
இந்த
தொழில்
புதிது...
முதலாளி
பற்றிய
அறிமுகம்!!
பெயர்
முகமது அப்துல்காதர்....
முகமது
முகம்...அது
வாடாதது!!
சுகம்!!
சுவை..என
தேடாதது.....
ஆம்.
உழைப்பு
தான்
அவர்
உயிர்ப்பு....
தேவையில்லாமல்
திறக்காகது
அவர்
வாயும்..
திறந்தால்
பதில்
பேசாது...
எந்த
வாயும்...
காரணம்
பேசுவதெல்லாம்
நியாயம்...
எனவே
புன்னகை
நம்மை
அறியாமலே
அவர்
மீது
பாயும்....
உரக்க
பேசினால்
கூட
அடுத்தவருக்கு
கேட்காது....
கேட்டாலும்
கோபப்படாது
நம்
காது.....
தரம்
தாழ்ந்த
பேச்சுக்கள்
தடை
செய்யப்பட்ட
பகுதி
இவர்
நாக்கு....
சொன்ன
சொல்
தவறாதது
இவர்
வாக்கு....
2014
எ.டி.ம்
பே.டி.ம்
என்னிடம்
இல்லாத
காலம்...
பயணத்தில்
இடையே
என்
தந்தை
காலமாகி..விட்டார்
உடனே
இரவோடு
இரவாக
வந்து
25000
பணம்
தந்து
இறுதி சடங்கு
நடத்தி
வைத்தார்.....
அன்று
முதல்
என்
மனதில்
காவியமாகி
விட்டார்.....
இருந்தாலும்
இடை இடையே..
வரும்
சிறு சிறு
சண்டை...
அதற்கும்
காரணம்
நானாக
இருப்பேன்....
இரண்டு
நாள்
இருவரும்
பேசாமல்
இருப்பது...
தான்
அதற்கு
பரிகாரம்...
பிறகு
என்ன!!
இந்த
அழகரும்
பரி...ஏறும்... (பரி-குதிரை)
விசுவாசம்
என்பது
ஒரே
நாளில்
வருவது
அல்ல....
அதே
போல்
அது
தொழிலாளிக்கு
மட்டும்
சொந்தமானதும்
அல்ல....
என்பதை
உணர்த்துவதை
போல்
நடப்பார்...
நம்
கஷ்டத்தில்
கேட்காமலே
கை
கொடுப்பார்...!
மதம்
பார்த்து
ஒரு
நாளும்
பார்த்ததில்லை
பேதம்....
அப்படி
இருக்க
சொல்கிறது
போல்
அவர்கள்
வேதம்...
ஆம்
ஆயிர கணக்கில்
எனக்கு
கடன்
கொடுப்பார்...
பெறுவார்...
கேட்க
மாட்டார்
பெறவும்
மாட்டார்
வட்டி!!
அவரின்
மத நூல்
போட்டு
இருக்கிறது
அவரை
கட்டி!!
ஏழை
எனக்கு
இருக்க
கூடாதா!
ஆசை
ஒரு
பிடி மண்ணாவது
என்
பெயரில்
வாங்க.....
வாங்கினேன்
அவர்
என்னை
தாங்க!!!
ஏணி
வைத்தால்
கூட
எட்டாது
அவர்
குணத்திற்கும்
என்
குணத்திற்கும்...
இருந்தும்
அனுசரிப்பார்...
என்
மனமே
என்னிடம்
சொல்லும்
உன்னை
சரிப்பார்....
இப்படிபட்ட
இடத்தில்
கூட
இரண்டு
மூன்று
முறை
கோபத்தில்
வெளியேற
பார்த்தேன்...
அவரோ
இரண்டு
நாள்
போகட்டும்
என்பார்...
இரண்டு
மணி
நேரம்
கூட..
தாங்காது...
என்
கோபம்...
ஆக
மொத்தத்தில்
என்
விசுவாசத்திற்கு
ஏற்றவர்....
இப்படி
பட்ட
மனிதரை
விட்டு போவது
எப்படி!?
போனால்
எனக்கு
கிடைக்க... கூடும்
இன்னும்
நிறைய
பணம்...
அதை
ஒருபோதும்
ஏற்காது
என்
குணம்!!!!
ஏஜென்ட் செய்த தில்லுமுல்லு ...தடைளை தகர்த்த என் தந்திரங்கள்...
நரியாக சில நேரம்
சரியாக சில நேரம்
இவை எல்லாம்...15 ஆம் பாகத்தில்....🙏
2 weeks ago | [YT] | 19
View 8 replies
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 13
இனிதான் ஆட்டம் ஆரம்பம்🥰🥰🙏
இரவு
நேரம்
ஆதலால்
சரியாக
பரிமாறப்படவில்லை
வார்த்தைகள்..
காரணம்
அனைவருக்கும்
தூக்க...
கலக்கம்..🙂
விடியட்டும்
எனக்கூறி
உறங்குவது
என
முடிவானது...!
சற்று
நேரத்திலேயே
வந்துவிட்டது
விடிவானது!!
என்னை
இங்கு
வேலைக்கு
அழைத்தவர்
பெயரை
தவிர்க்க
போகிறேன்....
காரணம்
போகப்
போக
உங்களுக்கு
புரியும்...!
ஆறு மணி
காலை
ஒரு
குரல்...
தினேஷ்
வந்து
விட்டாரா
என!!
இவ்வளவு
மரியாதையாக
பேசுகிறார்களே!
என
உள்ளுக்குள்
ஆச்சரியம்...
எங்க
ஊரில்
வா!
போ!
என்பதே
மரியாதையான
சொற்கள்
தான்....
ஆனால்
இங்கு
யாரும்
யாரையும்
அப்படி
விளிப்பதில்லை..
ஆனால்
சிறு
பாலகன்
என்னை
வந்துவிட்டாரா!?
என
விளித்ததால்
நானோ
ஆச்சரியத்தில்...
புருவம்
உயர்த்தி
விழிக்கிறேன்..!!
அந்ந
குரலின்
சொந்தகாரர்
ஜன்னலின்
ஓரத்தில்
இருந்து
இப்படி
கேட்க....
என்னை
வேலைக்கு
அழைத்த
ஏஜென்ட்
ம்..ம்..
வந்துட்டார்..
நான்
7.30 போல
கூட்டி
வருகிறேன்...
என்றுக்கூற
அவரோ
சரி...சரி
என
பறந்தார்...
நானும்
ஏஜென்ட்டும்
கடைக்கு
செல்ல
மணி
எட்டு...
20 கிலோ
பிரியாணி
செய்ய
வேலைகள்
மும்முரமாய்
நடந்து
கொண்டு
இருந்தது....
நீல கலர்
முழுக்கை
சட்டை
வெள்ளை
கைலியோடு
ஒருவர்...
வெங்காயம்
வெட்டிய படி
இருந்தார்....
ஏஜென்ட்
என்னிடம்
இவர்தான்
முதலாளி
என்றார்....
அவர்
வாங்க
வாங்க
என்றார்..
முகமன்
பரிமாற
சிறு
புன்னகையோடு
சந்திப்பு
நிகழ்ந்தது...
எனக்கு
ஏகப்பட்ட
ஆச்சரியம்..
இதுவரை
நான்
பார்த்த
முதலாளிகள்
தோரனையான
முதலாளிகளாக
இருந்தனர்...
ஆனால்
இவர்
முதலாளி
என்ற
தோரனையே
இல்லாமல்
இருக்கிறார்...
நம்மையும்
பார்த்து
மதிக்கிறார்..
.
இவர் தான்
காலையில்
தினேஷ்
வந்துவிட்டரா
என
கேட்டவர்...!
கதைப்படி
நேற்று
வெள்ளிக்கிழமை
கடந்த
மூன்று
மாதமாய்
ஏஜென்ட்
மூலம்
பணியில்
இருந்தவர்...
சோமபான
பிரியராய்
மாறி
பிரியாணியை
போடாமல்
சரக்கை
போட்டு...
சாகசம்
செய்ததால்
பணியில்
இருந்து
நீக்கப்பட்டார்...
அவசரத்திற்கு
உள்ளூர்
பிரியாணி( புல்லட் அரிசி)
மாஸ்டர்
யாரோ
ஒருவர்..
15 கிலோ
பாஸ்மதி
பிரியாணியை
குழைய
விட்டுவிட்டார்..
காரணம்
அவருக்கு
மட்டுமல்ல..
அந்த
ஊருக்கே
பாஸ்மதி
அந்த
அளவுக்கு
பரிட்சையம்
இல்லாத
காலம்(2010-2011)
இதனால்
தான்
ஏகப்பட்ட
எதிர்பார்ப்பு
என்
மேல்...
ஆனால்
என்னை
பார்த்ததும்..
சரியாக
இன்னும்
மீசை
கூட
முளைக்காத
பயல்...
என்ன
செய்ய
போகிறானோ!
என்ற
நியாயமான
பயம்...
அவர்களுக்கு...
தாடி
வைத்தவரே..
தடுமாறிய
அரிசி
இது...
என்னிடம்
ஒரு
பழக்கம்
உண்டு...
புதிய
இடத்தில்
சமைத்தால்
பொருட்களை
எண்ணி
பார்ப்பேன்..
அவர்கள்
என்னையே
பார்க்கின்றனர்..
என்ன
செய்கிறீர்
என்றார்...
முதலாளி...
அனைத்தும்....
சரியாகத்தான்
உள்ளதா
என
பார்க்கிறேன்...
என்றேன்...
ஒரு
மாதிரியாய்
தலை
அசைத்துவிட்டு
சென்றுவிட்டார்...
ஏஜென்ட்
என்னை
சமைக்க
சொல்லிவிட்டு
சென்றார்...
விறகு
அடுப்பு..
இரும்பு
துடுப்பு....
விரு விருவென
பிரியாணி
வேலை
ஆரம்பம்...
12.00
மணிக்குள்
மட்டன்
மற்றும்
சிக்கன்
பிரியாணி
தயார்....
அந்த
ஏஜென்ட்
தான்
பிரியாணியை
உடைத்தார்....
எதுவும்..
சொல்லவில்லை...
விடிய
விடிய
பயண..கலைப்பு
நீங்க...
ரூமுக்கு
போய்...
ஓய்வெடுங்கள்
என்றார்...
ஒருவேளை
பிரியாணி
பிடிக்கவில்லையோ!?
என
எனக்கு
ஒரு யோசனை..
முதலாளியோ
இருங்க
நான்
கூட்டிட்டு
போகிறேன்
என்றார்...
அவரின்
இருச்சக்கர
வாகனத்தில்
முதன்
முதலில்
சென்றேன்...
அவர்
என்னிடம்
கேட்டது..
என்ன
வயது
உங்களுக்கு...
எனக்கு
பயம்...
குறைவாக
சொன்னால்
சம்பளம்
குறைத்து
விட
போகிறார்...என..
அங்கே
ஒரு
பொய் ..21 என்றேன்...(19)
அவ்வளவு
தானா
என்றார்....
((அய்யோ
குறைத்து
சொல்லிவிட்டோம்
போல்..))
அவ்வளவு தான்
என்றேன்...
கூடவே
ஏன்
என்றேன்...?
எவ்வளவு
நாளாய்
பிரியாணி
செய்கிறீர்கள்
என்றார்...
அனுபவத்தை
குறைவாக
சொன்னால்
சம்பளம்
குறைந்து
விட
போகிறது....
எனவே
இன்னும்
ஒரு பொய்...
3 வருடம்((2))
என்றேன்...
எனக்கு
பொறுமை
இல்லை....
பிரியாணி
உங்களுக்கு
பிடிக்கவில்லையா!?
என்றேன்...
சத்தமாக
சிரித்து விட்டார்!!!
சூப்பரா
இருக்கு...
எப்படி
இவ்வளவு
சின்ன
வயதில்
இப்படி
சமைக்கிறீர்கள்
என
ஆச்சரியத்தில்
கேட்டேன்
என்றார்...
உடனே
நான்
வானத்தைப் போல...
விஜயகாந்த்
மாதிரி...
அந்த
சம்பளம்
எவ்வளவு
தருவீங்க
என்றேன்...
அதெல்லாம்...
நீங்க
ஏஜென்ட்டிடம்
பேசிக்கொள்ளுங்கள்
என்றார்...
ஆம்
இங்கு
இவர்
முதலீடு
செய்ததால்
முதலாளி..!
அந்த
ஏஜென்ட் தான்
வேலையாட்களை
சேர்ப்பது..
கடையை
நடத்துவது....
ஆர்டர்
எடுப்பது...
விலையை
நிர்ணயிப்பது....
எனவேதான்
இவர்
சம்பளம்
பற்றி
எதுவும்
பேசவில்லை.....
நான்கு
மணி போல
அந்த
ஏஜெண்ட்
வந்தார்..
சிறு சிறு
குறைகளை
சொன்னார்...
சம்பளம்
550
அதில்
100
எனக்கு
450
உனக்கு
என்றார்...
இந்த
நிபந்தனை..
நீ
இங்கு
பணிபுரியும்
வரை
என்றார்....
தொடரும்....14 ஆம் பாகத்தில் பார்ப்போமா!??
2 weeks ago | [YT] | 20
View 3 replies
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை::பாகம் 12
யார்!? எங்கே!? ஏன்!? எதை செய்கிறோம்... அனைத்திற்கும் இறைவன் ஒரு காரணமும் கதையும் வைத்து இருக்கிறான்.... 🥰❣️🙏
ஆம்பூரும்
என்னை
எட்டி
உதைத்து
விடாமல்...
தன்னுள்ளே
வைத்து கொள்ள
வாய்ப்புகள்
வழங்கின...
கிட்ட தட்ட
இரண்டு
வருட
சமையல்
அனுபவம்...
இருந்தும்
இல்லை
முடிவுகள்
எடுப்பதில்
முன்
அனுபவம்....
மீண்டும்
மீண்டும்
வாட்ச்மேன்
வேலை...
சத்தியமாக
இது
தான்
கடைசி
என
எனக்கு
அப்போது
தெரியாது.....
என்னோடு
கேட்டரிங்
படித்த
நண்பன்
முஜூபர் ரஹ்மான்...
நல்ல
மனம்
படைத்தவன்..
வெள்ளை
குணம்
படைத்தவன்...
ஒரு
நாள்
மாலை
மயங்கும்
வேலையில்...
அவன்
ஆம்பூரில்
பணி
புரியும்
பிரபல
பிரியாணி
கடையில்
வேலை
இருப்பதாய்
கூறினான்...
வரச்
சொன்னான்...
சென்றேன்..
அவன் தான்
அங்கு
மேனேஜர்...
முதலாளி
வரட்டும்
வெய்ட்
பண்ணு
மச்சி...
என்ன
சாப்பிடுற..
என
நல்ல
படியாய்
பேசினான்...
முதலாளி
வரும்
நேரம்
தான்...
இன்றைக்கே
பேசி
விடலாம்....
என்றான்.
கடையில்
நல்ல
கூட்டம்....
ஆம்பூரை
பொருத்த
வரை....
அனைத்து
கடையிலும்
பிரியாணி
இருக்கும்
நல்லா...
அதற்கு
காரணம்
ஃஅல்லா...🥰
ஆம்
அங்கு
இஸ்லாமிய
சொந்தங்கள்
அதிகம்...
அவர்கள்
பிரியாணி
சாம்ராஜ்யமும்
அதிகம்.....
ஸ்டார் பிரியாணி
காஜா பிரியாணி
ஹஃமதியா பிரியாணி
KR பிரியாணி
A1 பிரியாணி...
இதை போல்
இன்னும்
பல....
அனைத்தும்
எனது
மனதில்
ஆக
சிறந்த
இடங்களை
பெற்றவை...
இதில்
உள்ள
ஒரு
கிளை
நிறுவனத்திற்கு
தான்
சென்று
உள்ளேன்
கதைப்படி
இன்று....
முதலாளி
வந்தார்...
பணிபுரியும்
அனைவரும்
ஓரமாய்
ஒதுங்கி
ஒதுங்கி
செல்ல
முஜூபரோ
அவர்
காதருகில்.
இவன்
வாய்
வைத்து..
அதன்
நடுவிலே
கை
வைத்து....
ஏதோ
சொன்னான்...
அவர்
அறைக்கு
சென்று விட்டார்..
ஓரிரு
மணித்துளிகள்
கழிந்தன...
அந்த
இடத்தின்
மாயை
சூழல்
அழிந்தன....
மச்சி
உன்னை
வர
சொல்கிறார்...
நீ
வா
என
உடன்
அவனும்
வந்து...
அறையில்
மூவரும்
இருந்தோம்...
அவர்
அமர்ந்து...!!
நாங்கள்
நின்றபடி
நிமிர்ந்து...!!!
அவருக்கும்
அரை சதம்
மேல்
ஐந்து...ஆறு
இருக்கும்
வயது....
அந்த
நிறுவனத்திற்கோ
முழு
சதமே
முடியப்
போகும்
தருவாய்...
எண்ணவே
முடியாது
அதன்
புகழ்
வருவாய்...
நல்ல
தேங்காய்ப்பால்
ஆறாய்
வழிந்து
ஓடுவது
போல்...
தாடி
வைத்து
இருந்தார்....
சந்தன
நிற
ஜிப்பா...
தலையில்
அழகிய
தொப்பி..
அதற்கு
கீழ்
ஐந்து
வேளை
தொடர்
தொழுகையால்
வரும்
தழும்பு...
ஆக
மொத்தம்
அந்த
அறை
நிறைய
அவர்தான்
இருந்தார்..
நானோ
அவரை
பார்த்த படி...
நின்றேன்...
முஜுபர்..
அவரிடம்...
எனது
உயிர்
நண்பன்....
உண்மையானவன்...
பையா. (மரியாதை நிமித்தமான சொல்)
என (உருது-ல்)
கூற...
நானும்
பார்க்க
இஸ்லாமிய
பிள்ளை
போல்
இருந்ததால்...
எடுத்த
எடுப்பில்
"துமாரா
நாம்
க்யா -பா)
என்றார்...
நான்
திரு
திரு என
முழித்தப்படி..
தினேஷ்
என்றேன்....
அச்சா..
என்றவர்..
நீ
போ
வேலையை
பாரு...
என
அவனை
அனுப்ப..
அவனோ
என்னை
பார்த்து
கண்
அசைத்து
விட்டு
சென்றான்....
பார்த்து
பேசு
என
பேசாமல்
சொன்னான்.....
என்ன
வேலை
தெரியும்
என்றார்...
பிரியாணி
என்றேன்...
சத்தமில்லாமல்
சிரித்தவர்..
இங்கே
நீண்ட
வருட
அணுபவசாலிகள்
இருக்கின்றனர்...
சைனீஸ்
மாஸ்டரின்
கையாள்
பணி
உள்ளது...
5000
சம்பளம்
தரலாம்...
அதுவும்
மேனேஜர்
நண்பர்
என்பதால்...
நான்
இல்லை
பையா......
ஏற்கனவே
9000
சம்பளத்தில்
பணி
புரிந்து
விட்டேன்...
மாஸ்டராக..
இனி
மீண்டும்
கையாளாக (அசிஸ்டென்ட்)
பணி
புரிய
விருப்பமில்லை...
நண்பன்
கூப்பிட்டான்
வரவில்லை
என்றால்
வருத்தப்படுவான்
என்று தான்
வந்தேன்...
என்னிடம்
இவ்வளவு
நேரம்
உங்கள்
நேரத்தை
செலவிட்டமைக்கு
நன்றி..
என
கூறி..
வந்துவிட்டேன்...
ஆனாலும்
என்
நண்பன்
உண்மையாகவே
முயற்சி
செய்தான்...
அது
நடக்கவில்லை...
நான்
நடந்தேன்...
வாட்ச்மேன்
வேலைக்கு...
ஆம்பூரில்
நான்
பிரியாணி
மாஸ்டராக
வாய்ப்பே
இல்லை
என
புரிந்து
கொண்டேன்....
நடப்பது
நடக்கட்டும்
என
சல்யூட்
வேலை
துவங்கியது...
அதிக
நாள்
இல்லை..
ஓரிரு
வாரத்தில்
கேரளா
மாஸ்டரிடம்
இருந்து
போன்.....
நான்
இங்கு (வந்தவாசி)
ஒரு
கடையில்
வேலைக்கு
சேர்ந்து
விட்டேன்....
என்றார்...
நீங்க
என்றார்...
நானும்
தான்...
வணக்கம்
வைக்கும்
வேலையில்...(ஆம்பூர்)
என்றேன்..
அட
ஏன்!?
மாஸ்டர்
நீங்க
உடனே
கிளம்பி
நாகப்பட்டினம்
போங்க...
அங்கு
புதிதாய்
ஒரு
கடை
உதயமாகி
ஓரிரு
திங்கள்
ஆகிறது....
ஆட்கள்
சரியாய்
இல்லாமல்
நாட்கள்
போகிறது...
என்னை
அழைத்தார்கள்
நான்
போக
முடியவில்லை...
நீங்கள்
போனால்
சரியாக
இருக்கும்..!!
இல்லை என்றால்
என்னால்
தான்...!
நீங்க
கஷ்ட்டபடுகிறீங்க
என
மனக்
குறையாக
இருக்கும்.....!!
என்றார்...
நான்
நாகப்பட்டினமா!?
எங்கே
இருக்கு...
என்றேன்..
சிதம்பரத்திற்கு
பக்கம்
தான்
என்றார்...
ஆம்பூரில்
இருந்து
எப்படி
போவது!?
19 வயது
எனக்கு
உண்மையாகவே
எனக்கு
தெரியாது...
அவரோ
வேலூர்
போய்
அங்கிருந்து
சிதம்பரம்
அல்லது
பாண்டி
மார்க்கமாக
போகலாம்
என்றார்..
சரி
என..
ஜெயவேல்
சாரிடம்
போய்ட்டு
வரேன்
சார்
என்றேன்..
"ஆல் தி பெஸ்ட்"
என்றார்...
அது ஒரு
வெள்ளிக்கிழமை
மதியம்
கிளம்பினேன்...
வேலுர்
பாண்டி
நாகை
மார்க்கமாய்
போவதென
என
முடிவு
பாண்டி
வரவே
மணி 9 இருக்கும் ..
நாகப்பட்டினம்
பேருந்து...
அமர்ந்தேன்...
பயணிகள்
கவனிக்க...
என்றார்
நடத்துனர்...
இந்த
பேருந்து
நேரடியாக
நாகை
செல்ல
முடியாது..
காரணம்
காரைக்கால்
நாகையை
இணைக்கும்
திருபட்டினம்
பாலம்
உடைந்து
விட்டது...
என்றார்....
நானும்
உடைந்து
விட்டேன்...
அதனால்
காரைக்கால்
மயிலாடுதுறை
வாஞ்சூர்
வழி
நாகை
செல்லும்...
பயணக்
கட்டணம்
சற்றே
அதிகம்
வரும்
என்றார்...
நாகப்பட்டினம்
பஸ்
ஸ்டேண்டில்
விட்ரு
சாமி..
உனக்கு
புண்ணியமாக
போகட்டும்
என்றேன்...
அதன்படி
பயணம்
துவங்கியது...
என்
மொபைல்
6 பாய்ண்ட் தான்
சார்ஜ்
இருந்தது...
அதனால்
நாகையில்
என்னை
வேலைக்கு
அழைத்தவரிடம்
இப்போது
9.30 மணி
நாகை
நான்
வர
எவ்வளவு
நேரம்
ஆகும்
என்றேன்...
இரவு ஒன்று..
இரண்டு
ஆகலாம்
வந்து
போன்
செய்
என்றார்......
மொபைலில்
சார்ஜ்
இல்லை
என்றேன்..
உடனே
ஸ்விட்ச்
ஆப்
செய்...
இறங்கிய
பின்
போன்
செய்
என்றார்...
அதுவும்
சரிதான்
என
போன்
ஆப்
செய்தேன்..
சுமார்
ஐந்து
மணி
நேர
பயணம்....
அருகில்
என்
வயது
உடைய
நபர்...
அமர்ந்தார் ...
சின்னதாய்...
ஒரு
பேருந்து
சினேகம்...
பார்த்த உடன்...
கடமை
என
ஒருவரை
ஒருவர்
பார்த்து
புன்னகைத்தோம்...
நான்
என்
பெயர்
தினேஷ்....
நாகை
முதல்
முறை
போகிறேன்.....
என்றேன்
அவர்
நான்
அக்பர்
நாகூர் தான்..
என்றார்...
அப்படி
இப்படி
என
பிரியாணி
பேச்சு
வந்தது....
நாகூர்
பிரியாணி
பெருமை
அவர்
பேச....
ஆம்பூரை
விட்டுத்தர
முடியுமா....
நானும்
விடாமல்
பேச....
மூன்று
மணி
நேரம்
ஆனது...
பேருந்து
முட்லூர்
டீ
கடையில்
நிருத்தப்பட்டது...
நான்
குடித்த
டீ..க்கு
அவர்
பணம்
செலுத்தும்
அளவிற்கு
நட்பு
மலர்ந்தது...
ஆனாலும்
ஆம்பூர்
பிரியாணி
எல்லாம்
எங்க
ஊரில்
எடுபடாது...
என்றார்...
மனதிற்குள்
நானோ....
நாளைய
ரிசல்ட்
இன்றே
சொல்கிறானே..😂
என
நினைத்து
பார்ப்போம்... என்றேன்
நாகூர்
வந்தது
அகபர்
இறங்கி
ஜன்னல்
ஓரம்
வந்து
அடுத்து
நாகையில்
தான்
பஸ் நிற்கும்..
பயப்படாமல்
போய்ட்டு
வா...
என்றான்...
15 வருடம்
முன்
வெரும்
ஐந்து
மணி
நேர
நட்பு...
இன்னும்
நியாபகம்
இருக்க
காரணம்..
பிரியாணி
மற்றும்
டீ...❤️
நாகை
வந்து
விட்டது...
அனைவரும்
இறங்கலாம்...
என்றார்
நடத்துனர்....
நாகை
மாவட்டம்
மிக
பிரம்மாண்டமாய்
இருக்கும்
என
பாதம்
பதித்தேன்...
இரவு
இரண்டு
மணி....
நான்
வருகிறேன்
என்பதால்
144 தடை
உத்தரவு
போட்ட படி...
ஒரே
நிசப்தம்...
நான்கு
அல்லது
ஐந்து
பேருந்து...
மட்டும்...
இருக்கிறது...
அதுவும்
ஓய்வுக்காக....
எண்ணி
பார்த்தால்
கூட
பத்து
பேர்
இல்லை ....
ஆனால்
எனக்கு
மட்டும்
இருக்கிறது
உள்ளுக்குள்...
பயம்...
ஸ்விட்ச்
ஆன்
செய்தேன்...
2 பாயிண்ட்
இருந்தது...
இது
என்ன
6 பாயிண்டில்
ஆப்
செய்தேன்...
எப்படி
என
மூளை
யோசிக்கும்
போது..
டேய்
சீக்கிரம்
போன்
பண்ணி
தொலைடா..
என்றது
மனம்...
போன்
செய்து
கொண்டே
ஆட்டோ
ஓட்டுநரிடம்
சென்று
அருகில்
நின்று
கொண்டேன்...
அவர்
எங்க
போகனும்
என்றார்...
நான்
தயங்கிய-வாரு
தெரியலை..
இருங்க
போன்
எடுக்கட்டும்
என்றேன்...
1 பாயிண்ட்
வந்து விட்டது....
போன்
எடுத்தார்
இவரிடம்
விலாசம்
சொல்லவும்
என்றேன்....
ஆட்டோகார
அண்ணன்
ஓ
அங்கயா
என்றார்....
போன்
ஸ்விட்ச்
ஆப்.....
என்
மனதில்...........
(((அவன்
இவன்
கிட்ட
என்ன
சொன்னான்...
இவன்
நம்பளை
எங்க
கூட்டிட்டு
போகப் போறான்...)))
இரவு
இரண்டு
மணி....
பேருந்து
நிலையத்தை
தாண்டியவுடன்...
இருள்
மட்டும்
நிறைந்த
வீதி...
2010-11
அப்போது
எல்லாம்
எப்போதாவது
தான்
மின்சாரம்
வரும்...
ஆட்டோ
போகிறது...
நான்
அண்ணே..
அண்ணே...
என்றேன்....
அவர்
என்ன
என்றார்...
எங்க
போறோம்
என்றேன்...
சொன்னா
உங்களுக்கு
தெரியுமா...
என்றார்....
இல்லை
தெரிஞ்சுக்கதான்
கேட்டேன்...
என்றேன்...
அவர்
கொட்டுப்பாளையத் தெரு..
பக்கம் தான்
என
அழைத்து
சென்றார்...
தூரத்தில்
ஒரு
உருவம் ...
கை காட்ட...
ஆட்டோ
மெது
மேதுவாக
நின்றது.....
தினேஷ்
மாஸ்ட்டரா
என்றது....
அப்பாடி........
நல்ல
வேலை...
கூட்டி வந்து
விட்டுவிட்டார்....
நல்ல
அண்ணன்
தான்...
என
மகிழ்ந்தேன்.....
இரவோடு
இரவாக
கள்ளக்கடத்தல்
போல்
கடத்தி
இன்று
வரை
விட வில்லை...
நாகை மாநகர்
என்னை....
நாளை...எந்த கடை...எங்கே எப்படி பிரியாணி செய்தேன் ...அந்த கூத்து எல்லாம் பார்ப்போமா!!?🥰😂
வாசகர்கள்
இந்த
அளவு
வாசிப்பீர்கள்
என
நான்
நினைக்கவில்லை....
ஆம்
என்
எழுத்துக்களை
கடைசி
வாரம்
மட்டும்
ஒரு இலட்சம் பேருக்கு மேல் வாசித்து
உள்ளீர்கள்....
நன்றி..
நன்றி..
நன்றி.....
3 weeks ago | [YT] | 32
View 11 replies
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 11
கெட்ட நேரத்திலும் நல்ல நேரம்.... 👍👍👍
2010_11
ஆனது...
சுவாரஸ்யத்துக்காக
நான்
கூட்டவும்
இல்லை
கழிக்கவும்
இல்லை...
காரணம்
இது
கதையல்ல
நிஜம்...
மீண்டும்
ஆம்பூரில்
வாட்ச்மேன்
வேலை
மாதம்
3000
சம்பளம்....
கை
நிறைய
காசு
பார்த்த
கை...
வெறும்
கை
ஆனது.,..
நியாயத்தை
பேச
போய்
அநியாயமாக
வேலையை
விட்டுட்டியே
என
எனக்குள்
எள்ளி
நகையாடும்
மனசாட்சி....
இருந்தாலும்
உனக்கு
இது
வேணும்
கொஞ்ச
நஞ்சப்
பேச்சா..
பேசுற....
என
பண
முடக்கம்
வரும்
போது....
தன்னைத்தானே
தூற்றியும்
கொள்ளும்....
ஆனாலும்....
உழைப்பு
வீண்
போகாது...
"உண்மை"
துரோகம்
செய்யாது....
என
தேற்றியும் கொள்ளும்.....
அப்பா...அப்பப்பா...
இருக்கும்
இடம்
தெரியாத
மனதிற்குள்
இத்தனை
போராட்டமா....!!
இது
இன்னும்
கொஞ்சம்
வேண்டுமென
இதயம்
பாராட்டுமா?
15...20
நாட்கள்
இருக்கும்...
கேரளா
மாஸ்டரிடம்
இருந்து
ஒரு
போன்....
மாஸ்டர்
சிதம்பரத்தில்
ஒரு
வேலை
இருக்கு...
கடை
பெயர்
M. M raja...
சிதம்பர
பேருந்து
நிலையத்திலேயே
இருக்கு...
நானே
கூட
வருகிறேன்....
வேலைக்கு
சேர்த்து
விடுகிறேன்...
என
வரச் சொன்னார்....
அப்படியே
தில்லை
நகர்...
வந்தேன்
முதல்
முறையாக....
அது
மாடியின்
படியை
விட
ஒரு
சுற்று...
பெரிய
சமையல்
அறை...
அதுவும்
விறகு
அடுப்பு..
விறகு
கொஞ்சம்
நாம்
கொஞ்சம்
சேர்ந்து
எரிந்தால்
தான்....
பிரியாணி
தயாராகும்....
வாழ்வில்
நாம்
கற்க
வேண்டிய
பாடம்...
இது...
இருக்கும்
வேலை
உதருவது
எளிது...
இன்னும்
ஒரு
வேலையை
பிடிப்பது...
அது...
பிடிப்பது
போல்
நடிப்பது....
கடினம்..!
சரி
எதுவாக
இருந்தால்
என்ன!?
பிரியாணி
செய்தாக
வேண்டும்...
செய்தேன்
பிடித்தது...
அவர்களுக்கு..
பிடிக்கவில்லை
எனக்கு....
இஞ்சியும்
பூண்டும்
தோல்
உரித்து
அரைத்து
இருக்க
வேண்டும்...
என்றேன்...
அது
பேருந்து
நிலைய
வியாபாரம்....
பெரிதாய்
அவர்கள்
கண்டு
கொள்ளவில்லை....
நாளை
சரி
செய்கிறோம்
என்றனர்...
சரி
நாளை
பார்க்கலாம்..
என
அன்று
மாலை
படம்
பார்க்க
போனேன்....
என்ன
படம்
தெரியுமா???
"மைனா"
நல்ல படம்...
இரவு
முழுதும்
மா..மழை..
மாடிப்படியில்
சமையல்
கட்டு...
நான்
கழுவச்
சொல்லாமலே
தண்ணீர்
ஊற்றி
மெழுகி
விட்டான்...
வருண
பகவான்....
சரி
அடுப்பைத்தான்
கழுவினான்
பரவாயில்லை...
கடமை
உணர்ச்சிக்கு
அளவே
இல்லை....
விறகை
கூட
விட்டு
வைக்காமல்
விடிய
விடிய
தண்ணீர்
ஊற்றி
அழம்பி
இருக்கிறான்...
இந்த
வருண
அம்பி...
சரி
சொட்ட
சொட்ட
நனைந்த
விறகு...
ஈரம்
காயாத
அடுப்பு...
அடுப்பு
இருப்பதோ
இடுக்கு...
எப்படி
அழைப்பது
அக்னி
பகவானை...
அழைத்தாலும்
வந்த
பாடில்லை....
திறந்த நிலை
அடுப்பு...
எனக்கு
மண்ணெண்ணை
இருந்தால்
நன்றாக
இருக்கும்....
என
கேட்டேன்...
அவர்களிடம்
இல்லை...
சரி
இஞ்சி
பூண்டு
தோல்
உரித்தார்களா
அதுவும்
இல்லை.....
விறகாவது
வேறு
கிடைக்குமா
என்றேன்...
அதுவும்
இல்லை ...
தூது
வந்த
கண்ணன்
போல்
என்
நிலை...
எதுவும்
இல்லை
என்றால்
எப்படி!
அது
எங்களுக்கு
தெரியாது...
என
அங்கிருந்தவர்கள்
சொல்ல..
வேண்டுமானால்
முதலாளியிடம்
பேசிக்
கொள்ளுங்கள்
என்றனர்...
மனம்
நகரத்
தொடங்கியது
மெல்ல....
நல்ல
வேலை
கடையின்
அருகிலேயே
பேருந்து
நிலையம்
என்ன
செய்வது
என
தெரியாத
வயது....
மைனா
படம்
பார்த்த
திருப்தியோடு
தில்லை
நகரை
விட்டு
வந்தவாசி
அக்கா
வீடு
நோக்கி
பயனித்தேன்...
ஒரு
நாள்
முதல்வரை
போல....
இது
என்னை
சிறந்தவனாய்
காட்டும்
கதையல்ல...
நடந்தது
இதுதான்...
வேலைக்கு
சேர்த்து
விட்டவரிடம்
நடந்ததை
விரிவாக
போனில்
சொல்லிவிட்டு
நகரத்
தொடங்கிவிட்டேன்
நகரை விட்டு.....
என்னடா
இது...
என
ஒரு
வித
அழுப்பு..
காரணம்
வாய்
கொழுப்பு...
புதுப்பெண்
கோபித்து
கொண்டால்
அம்மா
வீட்டிற்கு
செல்வதை
போல்....
வாட்ச்மேன்
வேலை
எனக்கு...
ஆனால்
இந்தமுறை
தான்
கடைசி முறையாக
சல்யூட்
அடிக்கும்
வேலையில்
சேர்ந்தேன்...
நின்றேன்....
ஆம்
அடுத்த பாகம் நாகப்பட்டினம் வந்த கதை...
மிக மிக சுவாரஸ்யமாக இருக்கும்...
வாசிக்க தவறாதீர்...🥰❣️🙏
3 weeks ago | [YT] | 24
View 3 replies
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை;; பாகம் 10
சம்பளம் எவ்வளவு 😯😯😯
2009-10
அந்த
வருட
நிகழ்வு...!
நீங்கள்
வீணாக
பண்ண
வேண்டாம்
அகழ்வு....!! ..........(தோண்டுதல்)
பிரியாணி
சூப்பர்...
ஆஹா
ஓஹோ
என்று
விட்டார்...முதலாளி!
எனவே
சம்பளம்
அள்ளி
தர
போகிறார்..
என
ஆசை
உள் மனதில்...
ஆசை
யாரை விட்டது!??
அது
என் நெஞ்சிலும்
வேரை
விட்டது!!
நேருக்கு
நேர்
நானும்
அவரும்...
மத்தியஸ்தர்
போல
மேனேஜர்....
முதலாளி.....!
முதலாளி
போலவே
பேசினார்....
நல்லா
இருக்கு
தம்பி
பிரியாணி...
சம்பளம்
பற்றி
கவலை
வேண்டாம்...
மாதா...மாதம்
தேதி
1 வருகிறதோ
இல்லையோ
சம்பளம்
வந்து
விடும்...
என்றார்....
எல்லா
முதலாளியை
போல
அவர்
இருக்கலாம்...
நான்
அப்படி
இல்லையே!!
சார்
எனக்கு
தினமும்
சம்பளம்....
கொடுத்து விடுங்கள்....
அதுதான்
சரியாக
வரும்..
என்றேன்....
மேனேஜர்..
நீங்க
வேலை
செய்வதை
பார்த்துதான்
அது
எல்லாம்
முடிவு
பண்ண
முடியும்
என்றார்....!!
இன்னைக்கு
என்ன
செய்தேனோ...
அதைத்தான்
தினமும்
செய்வேன்....
என்றேன்....
பரோட்டாவுக்கும்
சேர்த்துதான்
சம்பளம்...
அதை
செய்யவில்லையே
எப்படி
சம்பளம்
தருவது
என்றார்
நக்கலாக....
அதுக்கு
என்ன
சம்பளமோ
அதை
பிடித்துக்கொண்டு
மீதி
எவ்வளவு
தர
முடியும்
என்பதை
சொல்லுங்கள்...?
இல்லையேல்
வழியை
மறைக்காமல்
தள்ளுங்கள்....!!
என்பதை
போல்
பார்த்தேன்..
முதலாளி
முந்தி
கொண்டு
ஏற்கனவே
இருந்த
மாஸ்டர்
மூன்றும்
சேர்த்து
பார்ப்பார்..
300ரூபாய்
கொடுத்தோம்...
நீங்கள்
பரோட்டா
முடியாது
என்பதால்
250ரூபாய்
வாங்கி
கொள்ளுங்கள்..
என்றார்
நான்
பரோட்டா
ஒன்று
இரண்டு
நாளில்
பழகி
கொள்கிறேன்...
அதே
சம்பளம்
கொடுங்கள்
என்றேன்...
சரி
நீங்கள்
செய்தால்
தருகிறோம்...என்றார்.
இன்றைய
சம்பளத்தை
கொடுங்கள்...
என்றேன்....
நீங்கள்
நாளை
வரவில்லை
என்றால்...
என்றார்
மேனேஜர்...
உங்க
காசு
நான்
வாங்கிட்டு
போகவில்லை..
இது
நான்
செய்த
வேலையின்
கூலி.....
நாளைக்கு
வந்தா
கூலி
குடுக்க
போறீங்க...
என்றேன்..
இளம்
கன்று...
பயமறியாது...
என
இருவரும்
பார்த்து
கொண்டு
250ரூபாய்
கொடுத்தனர்....
மதியம்
2 மணி...
வேலை
தினமும்
முடியும்...
கல்லாவிற்கு
நான்
வந்தாலே
சம்பளம்
தயாராய்
இருக்கும்...
காரணம்
நான்
பேசியது
அல்ல.
என்
பிரியாணி
பேசியது....
8 கிலோ
பிரியாணி..
மெது
மெதுவாக....
9...10..
என உயர்ந்தது...
ஊரும்
பேரும்
ஒன்றாய்
கொண்ட
சீனியர்
கேரளா...
என்னோடு
நட்பு
பாராட்டினார்....
பரோட்டாவும்
சொல்லி
கொடுத்தார்...
ஏற்கனவே
சிறிது
பயிற்சி
இருந்ததால்
இரண்டு
மூன்று
நாளில்
தனியாக
செய்தேன்...
5 கிலோ
மாவு
தான்...
சுட்டு
ஹாட் பாக்ஸில்
வைத்தால்
போதும்....
கேரளா
நன்கு
அனுபவம்
மிக்கவர்...
நான்
புதியவன்...
அனைத்தும்
செய்கிறாய்...
எது
முதல்
எது
கடைசி
என
உனக்கு
தெரியவில்லை...
ஒரு நாள்
காலை
ஆறு
மணிக்கே
வந்து
சொல்லி
தருகிறேன்
என
சொன்னது
மட்டுமல்ல
அப்படியே
செய்தார்.....
செய்யாமல்
இருக்க
அவர்
என்ன
அரசியல்வாதியா!?
இப்படி
நான்
அவரிடம்
நிறைய
நுணுக்கங்கள்
கற்றேன்....
எளிமையாக
செய்ய
பயிற்சி
பெற்றேன்.....
இருவரும்
இருந்தோம்
நகையும்
சதையுமாக....
அங்கே
அனைவருக்கும்
ஆச்சரியம்
இந்த
கடையில்
வந்த
மாஸ்டர்
எல்லாம்
இந்தாளு
கூட
வேலை
செய்ய
முடியாது
என
போவாங்க....
நீங்க
மட்டும்
தான்
விட்டு
கொடுக்காம
பேசுறீங்க
என்பர்.....
அவர்
நமக்கு
தொழில்
சொல்லி
தந்தவர்
குரு
போன்றவர்....
எதாச்சும்
சொன்னா
சொல்லிட்டு
போகட்டும்
விடுங்க
என்பேன்.....
இப்படியாக
நாட்கள்
ஓடின
வருடம்
ஒன்று
ஆனது...
ஒரு
நாள்
அது
நல்ல நாளா
கெட்ட நாளா
தெரியவில்லை....
கேரளா
ஒன்று
சொல்ல
மேனேஜர்
ஒன்று
சொல்ல....
கடைசியில்
நான்
வேலைக்கே
வர
மாட்டேன்
என
கேரளா
சொல்ல
நான்
இருக்கும்
தைரியத்தில்
மேனேஜர்
வரலைன்னா
போங்க
என
மாஸ்டரிடம்
கூற....
எனக்கு
ஒரே
குழப்பம்
சற்று
நேரத்தில்
சட்டசபையில்
கேப்டன்
நாக்கை
துருத்தியதை
போல்
எல்லாம்
கை
மீறி
போய்விட்டது...!
இதை
நாம்
சரி
செய்ய
வேண்டும்....
என
நான்
ஒரு
முடிவு
செய்தேன்....
அது
கேரளாவுக்கு
கூட
தெரியாது....
வேலை
முடித்து...
கல்லாவிற்கு
சென்றேன்
சம்பளம்
பெற்றேன்
நாளை
முதல்
நான்
வேலைக்கு
வர
மாட்டேன்
என்றேன்....
மேனேஜர்
முகத்தில்
ஈ
ஆடவில்லை...
ஏன்
ஏன்
என்றார்....?
தப்போ
சரியோ
அது
எல்லாம்
வேண்டாம்....
கேரளா
இருந்தால்
நான்
வருவேன்....
இல்லை
என்றால்
நான்
வரமாட்டேன்
என்றேன்...
என்ன?
ப்ளாக் மெயில்
பண்றீங்களா!!?
என்றார்
மேனேஜர்...
எப்படி
வேணும்னாலும்
வச்சிக்கோங்க
இதுதான்
என்
முடிவு
என்றேன்...
சொல்லிவிட்டு
நான்
நிற்கவில்லை
வீட்டுக்கு
வந்து
விட்டேன்....
வீட்டிற்கு
போவதற்கு
முன்
என்
மாமாவுக்கு
போன்
வந்து விட்டது..
சமாதான
தூது...
கேரளா
இருந்தால்
என்ன!?
இல்லை
என்றால்
என்ன;!?
நீ
செய்ய
வேண்டியது
தானே!??
என
மாமா
கேட்க...
நான்
இருப்பதால்
ஈஸியாக
அவரை
வேணானு
சொல்லிட்டாங்க
நாளைக்கு
இன்னும்
ஒருத்தன்
இருந்தா...
என்னையும்
இப்படித்தான்
செய்வாங்க...
வேலைக்காரங்க
அப்படினா
கிள்ளுக்
கீரையா
என்று
மாமாவிடம்
கேட்க...
அவர்
பதிலே
பேசவில்லை...
முதலாளியிடம்
இவரே
போன்
செய்து...
நான்
சொன்னதை
சொல்ல..
அவர்
மீண்டும்
முதலாளியாக
பேசினார்..
ஆசை
வலையை
வீசினார்.....!
தினம் 100
சம்பளம்
உயர்த்தி
கூட
வேண்டுமானாலும்
தருகிறேன்
உங்க
மச்சானை
வர
சொல்லுங்க
ஒரு
வருஷமா
நல்லா
வேலை
பாத்துட்டு....
8 கிலோ
பிரியாணி
13 கிலோ
ஓடுது...
இப்போ
இப்படி
பண்ணா
எப்படி
என
ஏகப்பட்ட
சமாதான
முயற்சி....
நானோ
ஒரே
பிடிவாதம்
கேரளாவோ
எனக்கு
போன்
செய்து
நீ
போ...
பரவாயில்லை..
எனக்கு
வேலை
ஈஸியாக
கிடைக்கும் ..
நீ
செய்
போ...
என்றார்...
முடிவாக
நான்
மறுத்துவிட்டேன்...
ஆம்...
மீண்டும்
ஜெயவேல்
சார்
ஆபிஸிக்கு
போய்
விட்டேன்...
9000
சம்பளம்
3000
ஆக
மாறியது....
எழுத
எழுதத் தான்...
இவ்வளவு
ஏற்ற
இறக்கமா
என்
வாழ்வில்
என
எனக்கே
ஆச்சர்யம் ....
அடுத்து எந்த ஊர் ???எனன வேலை !!? என்ன சம்பளம்....!!?
நாளை பார்ப்போமா!!??🙏🙏
நீங்கள்
கேட்டதால்
இரண்டு
பாகம்
இன்றே
எழுதி
இன்றே
வெளியிட்டு
விட்டேன்...
சூடாக
ருசியுங்கள்....🥰🥰🙏
3 weeks ago | [YT] | 15
View 6 replies
Load more