DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 14
முதலாளி பற்றிய ஓர் அறிமுகம்🥰👍

ஏஜென்ட்
இப்படி
சொல்ல...

நானும்
கோவத்தில்
வந்த
வார்த்தைகளை
வாய்க்குள்ளேயே
மெல்ல....

கமிஷன்
பிடித்தாலும்
என்ன
செய்வது
300 ரூபாய்
சம்பளத்தில்
இருந்து
450 கிடைத்ததே
மகிழ்ச்சி
என
இருந்தேன்....!

அனைத்திலும்
கமிஷன்
எடுக்கும்
வேலைகள்
எல்லாம்
தெரிந்தும்
முதலாளி
அமைதி
காப்பார்...!

இருந்தும்
ஏஜென்ட்டிம்
புன்னகை
பூப்பார்!!

காரணம்
அவருக்கு
இந்த
தொழில்
புதிது...

முதலாளி
பற்றிய
அறிமுகம்!!

பெயர்
முகமது அப்துல்காதர்....

முகமது
முகம்...அது
வாடாதது!!

சுகம்!!
சுவை..என
தேடாதது.....

ஆம்.
உழைப்பு
தான்
அவர்
உயிர்ப்பு....

தேவையில்லாமல்
திறக்காகது
அவர்
வாயும்..

திறந்தால்
பதில்
பேசாது...
எந்த
வாயும்...

காரணம்
பேசுவதெல்லாம்
நியாயம்...

எனவே
புன்னகை
நம்மை
அறியாமலே
அவர்
மீது
பாயும்....

உரக்க
பேசினால்
கூட
அடுத்தவருக்கு
கேட்காது....

கேட்டாலும்
கோபப்படாது
நம்
காது.....

தரம்
தாழ்ந்த
பேச்சுக்கள்
தடை
செய்யப்பட்ட
பகுதி
இவர்
நாக்கு....

சொன்ன
சொல்
தவறாதது
இவர்
வாக்கு....

2014
எ.டி.ம்
பே.டி.ம்
என்னிடம்
இல்லாத
காலம்...

பயணத்தில்
இடையே
என்
தந்தை
காலமாகி..விட்டார்

உடனே
இரவோடு
இரவாக
வந்து
25000
பணம்
தந்து
இறுதி சடங்கு
நடத்தி
வைத்தார்.....

அன்று
முதல்
என்
மனதில்
காவியமாகி
விட்டார்.....

இருந்தாலும்
இடை இடையே..
வரும்
சிறு சிறு
சண்டை...

அதற்கும்
காரணம்
நானாக
இருப்பேன்....

இரண்டு
நாள்
இருவரும்
பேசாமல்
இருப்பது...
தான்
அதற்கு
பரிகாரம்...

பிறகு
என்ன!!
இந்த
அழகரும்
பரி...ஏறும்... (பரி-குதிரை)

விசுவாசம்
என்பது
ஒரே
நாளில்
வருவது
அல்ல....

அதே
போல்
அது
தொழிலாளிக்கு
மட்டும்
சொந்தமானதும்
அல்ல....

என்பதை
உணர்த்துவதை
போல்
நடப்பார்...

நம்
கஷ்டத்தில்
கேட்காமலே
கை
கொடுப்பார்...!

மதம்
பார்த்து
ஒரு
நாளும்
பார்த்ததில்லை
பேதம்....

அப்படி
இருக்க
சொல்கிறது
போல்
அவர்கள்
வேதம்...

ஆம்
ஆயிர கணக்கில்
எனக்கு
கடன்
கொடுப்பார்...
பெறுவார்...

கேட்க
மாட்டார்
பெறவும்
மாட்டார்
வட்டி!!

அவரின்
மத நூல்
போட்டு
இருக்கிறது
அவரை
கட்டி!!

ஏழை
எனக்கு
இருக்க
கூடாதா!
ஆசை
ஒரு
பிடி மண்ணாவது
என்
பெயரில்
வாங்க.....

வாங்கினேன்
அவர்
என்னை
தாங்க!!!

ஏணி
வைத்தால்
கூட
எட்டாது
அவர்
குணத்திற்கும்
என்
குணத்திற்கும்...
இருந்தும்‌
அனுசரிப்பார்...

என்
மனமே
என்னிடம்
சொல்லும்
உன்னை
சரிப்பார்....

இப்படிபட்ட
இடத்தில்
கூட
இரண்டு
மூன்று
முறை
கோபத்தில்
வெளியேற
பார்த்தேன்...

அவரோ
இரண்டு
நாள்
போகட்டும்
என்பார்...
இரண்டு
மணி
நேரம்
கூட..
தாங்காது...
என்
கோபம்...

ஆக
மொத்தத்தில்
என்
விசுவாசத்திற்கு
ஏற்றவர்....

இப்படி
பட்ட
மனிதரை
விட்டு போவது
எப்படி!?

போனால்
எனக்கு
கிடைக்க... கூடும்
இன்னும்
நிறைய
பணம்...

அதை
ஒருபோதும்
ஏற்காது
என்
குணம்!!!!

ஏஜென்ட் செய்த தில்லுமுல்லு ...தடைளை தகர்த்த என் தந்திரங்கள்...
நரியாக சில நேரம்
சரியாக சில நேரம்
இவை எல்லாம்...15 ஆம் பாகத்தில்....🙏

2 weeks ago | [YT] | 19