DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை .. பாகம் 15
இறுதி பாகமாக கூட இருக்கலாம்❤️🙏

அந்த
ஏஜென்ட்
முதலாளி-
தொழிலாளி
பேசுவதை
தவிர்ப்பான்....

பேசினால்
செய்வதறியாது
திகைப்பான்...

எங்கே
என்ன
பொருட்களை
வாங்குகிறோம்
என்பதை
கூட
மறைப்பான்...

தரம்
நல்லா
இல்லையே
என்றால்
முறைப்பான்....

பாஸ்மதி
அரிசி கிலோ
67 ரூபாய் ((2011)
என
மூட்டை
மூட்டையாக
வாங்கி
போட்டுவிட்டான்...

ஆஹா...ஓஹோ
அற்புதமான
அரிசி
என்றான்...

அரிசியை
பார்த்தால்
மஞ்சள்காமாலை
வந்தது போல்
உள்ளது....

என்ன
மசாலா
போட்டு
சமைத்தாலும்
நான்
ஏன்
நல்லா
இருக்க
வேண்டும்
என
கேட்கிறது....

இந்த
ஏரியாவில்...
இது
புதுசு
என்பதால்...
முதலாளிக்கும்
தெரியவில்லை...

அவனோ
இது
ஸ்பெஷல்
அரிசி
இப்படித்தான்
இருக்கும்
என்கிறான்....

இவரோ
அப்படியா!!
சரி
சரி..
என்கிறார்...

என்
கண்
முன்
நடந்தாலும்
அநியாயத்தை
தட்டி
கேட்க முடியவில்லை...

இவனால்தான்
நாம்
இங்கு
வந்து
இருக்கிறோம்....

எப்படி
இவனை
எதிர்த்து
பேசுவது
என
தயக்கம்...

ஏற்கனவே
இப்படி
பேசி
பேசி
ஏகப்பட்ட
வேலையை
இழந்தாயிற்று...

எனவே
அமைதி
காப்போம்
என
இருந்தாயிற்று....

அனையப்போகும்
விளக்கு
பிரகாசமாக
எரிவதை
போல்...

அந்த
ஏஜென்ட்டுக்கு
ஒரு
விபரீத
ஆசை...

நாமே
முதலாளி
ஆகி விட்டால்
என்ன!??

இவரின்
முதலீடுக்கு
ஈடு
கொடுக்க
அவனிடம்
ஈடு (பணம்)
இல்லை....

எனவே
இவ்வளவு
பெரியதாய்
வேண்டாம்...
குறைந்த
முதலீட்டில்
தனியாய்
துவங்க
போகிறேன்...

என
காரைக்காலில்
அடி
வைப்பதாய்
செய்தான்
முடிவு....

நல்ல ஊர்
நன்றாக
போகும்
வியாபாரம்
என
நம்பி...

அதாவது
அரசனை
நம்பி
புருசனை
கைவிட்ட
கதையாய்.....

இந்த
கடையை
நான்
அங்கிருந்தே
பார்த்துக்கொள்கிறேன்..
புதுக்கடையை
நானே
நடத்திக்கொள்கிறேன்
என்றான்.....

அதற்கும்
ஆட்டுகிறார்
இவர்
தலையை...

வெட்ட
வெட்ட
காட்டுகிறார்
தலையை....

அய்யோ
இப்படியுமா?
ஒரு
பொறுமைசாலி🧐
நான்
பார்த்து
இல்லை...

அவனோ
இந்த
கடையின்
பெயரை
பயன்படுத்தி
எல்லாப் பொருட்களை
வாங்கி
கொள்கிறேன்....

புது
மாஸ்டராக
நல்ல
ஆள்
வேண்டும்
என்று
என்னிடமே
கேட்கிறான்....

இவன்
இங்கேயே
இருப்பதால்....

எங்களை
பரஸ்பரம்
பேச
கூட
விடமாட்டான்...

சரி
என
நானே‌
என்
குருவை
வர
சொல்லி
அந்த
கடையில்
சேர்த்தேன்..

சேர்த்தப் பின்னர்
வேர்த்தேன்...

ஏன்...டா!
சேர்த்தோம்
என!

ஆம்
நல்ல ஊர்
நல்ல மாஸ்டர்
நல்ல பொருட்கள்
நல்ல இலவச பொருளாதாரம்
இத்தனை
இருந்தும்
நடக்கவில்லை
அவனுக்கு
வியாபாரம்....

ஆம்
ஆண்டவன்
என்ன
அப்துல்‌ காதாரா!??
சரி
சரி
என
தலையாட்ட!!

ஒட்ட
ஒட்ட
வெட்டிவிட்டான்
இவன்
வாலாட்ட...

ஆம்
ஏமாற்றி
சேர்த்த
அனைத்து
பணமும்
அம்பேள்.....

மாதம்
மூன்று
ஆனது...
நிலைமை
முற்றி
போனது...

நாகை
கடை
நல்ல
வியாபாரம்..

காரைக்கால்
கடை
கடும்
நஷ்டம்....

ஆமாம்
தொழில் தர்மம்
என்று
ஒன்று
இல்லையா!!

அப்பாவி
ஒருவரை
இப்படி
ஏமாற்றினால்
எந்த
தர்மமும்
சும்மா
விடாது...

அதுவும்
செய்வதெல்லாம்
அதர்மம்
என்றால்
சும்மா
விட்டுவிடுமா!?

இந்த
நேரத்தில்

அவன்
வாங்கிய
அரிசி
காலியாகும்
நேரம்....

அது
தான்
அவனை
காவு
வாங்கும்
நேரமும்
கூட....

முதலாளி
என்னிடம்...
தினேஷ்
நாம
வேற
அரிசி
போடலாமா!?
என்றார்....

நானோ
நீங்க
ரேஷன்
அரிசி
குடுத்தா கூட
போடுவேன்
என்றார்...

முதலாளி
நாம்
சென்னை
சென்று

மாதிரி(sample)
பார்த்து
வாங்கலாமா!?
என்றார்...

அதனால்
என்ன
தாரளமாக
போகலாம்....
என்றேன்.....

சென்னை
எங்களை
வரவேற்ற
விதமே
சரியில்லை...

அது
மிகப்பெரிய
மார்க்கெட்...

நாங்கள்
ஒரு
மூட்டை
வாங்கி
சமைத்து
பார்த்தால்
பின்பு
வாங்கி
கொள்கிறோம்...
என்றோம்...

அவர்களோ..
அதைப்பற்றி
கவலைபடுவதாய்
தெரியவில்லை...

பிறகு
பாண்டிச்சேரி
நமக்கு
பக்கம்...
அங்கேயும்
பார்ப்போமா
என்றார்
முதலாளி...

நீங்க
ரைட்டுனா...
ரைட்...
லெப்டுனா
லெஃப்ட்...
என்றேன்.....

அப்படியாக
பாண்டி
பாரதியார் தெரு
தணிகாச்சல முதலியார்
கடைக்கு
போனோம்....

அப்போதெல்லாம்
எங்களிடம்
கார்
இல்லை...
பேருந்து
பயணம்
தான்.....

வயது 21
அப்போதே
நான்
ஆயிரம்
யோசனை
சொல்வேன்....

காரணம்
என்னை
பொருத்தவரை
இவர்
அமிர்தத்தை
போன்றவர்..
அவன்
நஞ்சை
போன்றவன்......

எனவே
அதர்மம்
எப்போதும்
ஜெயிக்காது..
என்பதை
நான்
என்னை
அறியாமலேயே
அறிந்து
இருந்தேன்....

நாங்கள்
நான்கு
மூட்டை‌
அரிசி
தலா
இரண்டு
இருவருக்கும்
என
தோளில்
சுமந்து
பேருந்தில்
வந்தோம்...

மறுநாள்
பிரியாணி
செய்தேன்...

மகிழ்ச்சி
வெள்ளத்தில்
முதலாளி

ஆம்
ஆயிரம்
சூரியனாய்
பிரகாச
புன்னகைப்பு
அவரில்....

அதுதானே
தேவை
என்னில்.......

விஷயம்
கசிந்து விட்டது..
ஆம்
மற்ற
தொழிலாளிகள்
ஏஜென்டிடம்
பற்ற
வைத்தனர்...
இவ்வாறாக!!

அண்ணா
நீங்கள்
இல்லை
இங்கு...

எனவே
எல்லாமே
மாறிக்கொண்டே
போகிறது....

கணக்கு
என்றால்
என்ன
என
கேட்கும்
முதலாளி!!

இப்போது
தொட்டதுக்கெல்லாம்
கணக்கு
கேட்கிறார்....
காரணம்
அந்த
பொடிப்
பயல்!!

இருவரும்
இருக்கின்றனர்
நகையும்...
சதையுமாக..

எனவே
ஒவ்வொன்றிலும்
நம்
பெயர்
பெறுகிறது
அடியும்
உதையுமாக....

நம்முடைய
ஊழல்
குற்றச்சாட்டு
அனைத்தும்....
தெரியவந்து விட்டது...

என
போட்டு கொடுக்க
எனக்கு
அந்த
ஏஜென்ட்டிடம்
இருந்து‌
போன்
வந்தது....

என்ன ஆனது!!!!?
நாளை பார்ப்போம்...

இன்னும்
ஒன்று
அல்லது
இரண்டு
பாகத்தில்
முடித்து விடவா கதையை....!!!
உங்கள் விருப்பமே
என்
விருப்பம்...
உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது....

2 weeks ago | [YT] | 28