DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 17
அம்மா என்றால் சும்மா இல்லை ❤️

ஆம்
பெற்றோரை
அழைத்து
வந்தேன்
இங்கே!
அவர்கள்
மனம்
இருந்ததோ
அங்கே!!

காலகாலமாய்
வாழ்ந்த
ஊரை
விட்டு
அழைத்து
வந்தது
அவர்களுக்கு
பிடிக்கவில்லை!

என்னைப்
பொறுத்தவரைக்
அப்பா அம்மாவை
அமர வைத்து
பார்க்க
வேண்டும்
என்ற
ஆசை !

அப்பா
கூட
சரி
என்றார்...
அம்மாவோ
நீ
என்ன
சொந்த
வீடா
கட்டிவிட்டாய்...!
வா
வா
என
நச்சரிக்கிறாய்...

வந்தே
ஆக
வேண்டும்
என
எச்சரிக்கிறாய்!!

எனக்கு
இருக்க
கூடாதா
ஆசை...

அப்பா
அம்மாவை
உட்கார
வைத்து
சோறு
போட
வேண்டும்
என்று!!

அந்த
கனவு
நினைவானது
இன்று!!
என
எனக்கு
திருப்தி...

அவர்களுக்கோ
இந்த
வயதிலேயே
பிள்ளை
உழைப்பில்
இருக்க
வேண்டுமா!?
என
அதிருப்தி...

அம்மா
ஓர்
அறிமுகம்...

கஸ்தூரி
என்ற
பெயரை
சுமந்தவர்...

சுகத்தை
ஒரு
நாளும்
சுமக்காதவர்....

அவருக்கு
எதிர்பாராமல்
பிறந்தவன்
நான்..

ஆம்...
அக்கா
பிறந்து
ஏழு
வருடம்
கழித்து
பிறந்தவன்
நான்...

குடிகார
கணவருடன்
நானே
ஒரு
பெண்
பிள்ளையை
வைத்து
கொண்டு
தினம்
தினம்
போராட...

நீ
வேறு
இங்கு
வந்து
ஏன்
பிறந்தாய்
என
புலம்புவார்....

பிறக்காமல்
நான்
இருக்க
எடுத்த
முயற்சிகளை
தகர்த்து
பிறந்தவன்
இவன்..
என
அடிக்கடி
சொல்வார்....

ஓட்டல்
தொழிலாளி
மனைவி
என்று
தான்
பெயர்...
சோறு
இரண்டு
வேளை
கிடைப்பதே
குதிரை
கொம்பு....

ஆம்
அடிக்கடி
வேலைக்கு
போகமால்
இருக்கும்
தந்தையால்..

முற்றுப்புள்ளி
வைக்க
முடியாத
துயரம்....

அதை
சரி
செய்ய...
அம்மா
நிறைய
வேலைகள்
செய்தார்....

படிக்காத
பெண்..
எனவே
எந்த
வேலை
செய்யவும்
கவுரவுத்
தடையில்லை.....

ஆம்பூரில்
பசு
பீடி
மண்டி
ஒன்று
உண்டு...

அதில்
பத்தாயிரம்
பீடி
சுற்றி
வரும்
பணத்தில்
வாழ்ந்தோம்
உண்டு..

பீடி
கட்டை
பிரித்து
லேபல்
ஒட்டி
16 பீடி
என
மீண்டும்
கட்டை
கட்டி....

பத்தாயிரம்
பீடிகளை
கொடுத்தால்
எட்டு ரூபாய்( 1995)
கிடைக்கும்
என்பார்..

பிறகு
வயிறுகள்
பெரிதாயின
எட்டு
ரூபாய்
போதவில்லை...

பீடி
ஒரு
பக்கம்...
புளி
சீசன்
வந்தால்...
நாள்
ஒன்றுக்கு
25 கிலோ
புளி....யில்
கொட்டை
கோது
நீக்கினால்..
25 ரூபாய்
கிடைக்கும்...

இப்படி
நாட்கள்
நகர
பிள்ளைகள்
வளர
அம்மா
பீடி
சுற்ற...
அப்பா
ஊரை
சுற்ற..!

கஷ்டங்கள்
மட்டும்
பஞ்சமில்லாமல்
எங்கள்
வீடு
நிறைய
இருந்தன....

அப்போது
ரேஷன்
அரிசி
கூட
பணம்
கட்டி
வாங்க
வேண்டும்....

10 ரூபாய்
கூட
கடன்
வாங்கி
அரிசி
வாங்கிய
காலம்
அது...

சரி
வீட்டில்
இருந்த
படி
வேலை
செய்ய
வேண்டாம்...

மாத
சம்பள
வேலையை
மாதா
தேட....

ஆயா
வேலை
மாதம்
எட்டு நூறு
சம்பளத்தில்
தனியார்
பள்ளியில்..
கிடைக்க..

அங்கே
கழிவறை
கூட
சமயத்தில்
சுத்தம்
செய்ய
வேண்டி
வரும்....

கருவறையில்
சுமந்ததால்
பள்ளிக்
கழிவறையை
சுத்தம்
செய்வார்...

ஆம்பூரில்
ஷீ (செருப்பு)
கம்பெனிகள்
அதிகம்...

அதிலும்
பல
ஆண்டு
பணி
புரிந்தார்..

இப்படி
காலத்திற்கும்
கஷ்ட
படுகிறாரே..

இன்று.....((2012-13))
நாம்
13,500
சம்பளம்
வாங்குகிறோமே!

எனவே
அம்மாவை
வேலைக்கு
அனுப்ப
கூடாது
என்பது
என்
ஆசை....

அவர்களோ
காலத்திற்கும்
வாடகை
வீட்டிலேயே
வாழ
வேண்டுமா....
சொந்த
வீடு
கட்டி
அழை
வருகிறேன்....
என்கிறார்!!

ஊர் பேர்
தெரியாத
ஊரில்
வாடகை
வீட்டில்
உட்கார்ந்து
சாப்பிட
மாட்டேன்
என
கூறி.....
ஆறே
மாதத்தில்
ஊருக்கு
அப்பாவுடன்
சென்று
விட்டார்.....

இரண்டு
இலட்சம்
அடமான
வீட்டில்
அனாதை
போல்
நான்....

அம்மாவிடம்
கிட்டத்தட்ட
இரண்டு
வருடம்
பேசவே
இல்லை
கோபத்தில்.....

பேசினேன்
என்
தந்தையின்
மரணத்தில்..

ஆம்
2014
நல்ல
வைகுண்ட
ஏகாதசி
தினத்தில்
என்
தந்தை
காலமானார்....

தாயோ
விதவை
கோலமானார்......

அப்போதும்
என்னோடு
வா...
என...
நான் கூற...!

எனக்கு
இன்னும்
உழைக்க
முடியும்....

எப்போது
முடியவில்லையோ...
அப்போது
நான்
வருகிறேன்
என
தனியாய்
ஆம்பூரில்
செருப்பு
கம்பெனி
பணி
தொடர...

சொந்த
வீடு
கட்டினால்
தான்...
அம்மா
வருவார்
என
முடிவு
செய்தேன்....

24வயது...
திருமணம்
செய்யலாம்
என
பேச்சுகள்
அடிப்பட்டன‌....

கஷ்ட்டங்கள்
மட்டுமே
இருந்த
கதையில்
சிறு
சிறு
காதலும்
வரப்போகிறது...
அடுத்த
பாகத்தில்
பார்ப்போமா!!?

1 week ago | [YT] | 22