DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 18
கல்யாண பிராப்தம்.....

2013 ல்
போனார்கள்
அப்பா
அம்மா
என்னை
விட்டு
ஊருக்கு...

அனாதை
ஆனேன்
பேருக்கு..

திருமணம்
செய்து
கொண்டால்
என்ன!!

அக்காவிற்கு
போன்
செய்தேன்...

நான்
மட்டும்
இருக்கின்றேன்...
தனியே...

தேடிக்கொள்ள
நினைக்கின்றேன்
துணையை....

உதவ
முன்
வா...
நான்
கேட்கவில்லை
சும்மா!!

இப்போ
உன்னை
விட்டால்
யார்
எனக்கு
அம்மா!!

அக்கா!!

அதுவும்
சரி
தான்....

உடனே
வேலையை
ஆரம்பிக்கின்றேன்...
என்றார்..

23
வயதில்
தொடங்கியது
பெண்
பார்க்கும்
படலம்...

ஏதோ
ஒரு
மகிழ்ச்சி
கொண்டது..
மனதும்
உடலும்....

நினைத்தேன்
நான்
எளியது
திருமணம்
என்று...

அனுபவம்
கிடைத்தது
நன்று....

அக்கா
பாவம்
பெண்
பார்க்க
போகிறேன்....
என
மாதா..மாதம்..
ஒரு ஊருக்கு
செல்வார்...

எனக்கு
விடுப்பு
இல்லாததால்....
அவரே
இருவரை
அழைத்து
செல்வார்....

தட-புடலாக
நடக்கும்
பெண்
பார்க்கும்
நிகழ்வு...

சம்பளம்
வீடு
குலம்
கோத்திரம்
எல்லாம்
சரி...

வேலையை
பார்த்தால்
சமையல்காரன்
என்கிறீர்கள்
அதுதான்
கஷ்டம்
என்பர்..

ஏறக்குறைய..
ஏழு
எட்டு
மாதம்
அமாவாசை
பௌர்ணமி
போல்...
பெண்
பார்ப்பதும்
வழக்கமானது..‌.

இடையே
2014ல்
தந்தையும்
காலமானார்....

வருடம்
ஒன்று
முடியட்டும்..
நல்லது
நடக்கும்...

எனவே
இந்த
மாதா..மாதம்
நடக்கும்
உற்சவம்
தள்ளி
வைக்கப்பட்டது....

என்
ஆசைகளும்
பரன்-மேல்
அள்ளி
வைக்கப்பட்டது....

ஒரு
வேலை
ஜாதகம்
சாதகமாய்
இல்லையோ!?

அதனால்தான்
இந்த
தொல்லையோ!?

என
கட்டம்
பார்ப்பவரை
கட்டம்
கட்டினோம்...

அவரோ
சனி
சரியான
இடத்தில்
இல்லை
என்றார்...

வருகிற
வருடம்
ஏறக்கூடும்
தாலி...

அதை விட்டால்
வயது
முப்பது
ஆகட்டும்..

அதன்
பின்தான்
நடக்கும்
தாலி
கட்டும்
சோலி...

ஆனால்
ஒன்று

இவன்
காதல்
திருமணம்
தான்
செய்வான்...

என்ற
உடன்
அனைவரும்
என்னை
திரும்பி பார்க்க....

(((((நானோ
பழைய
நினைவுகளில்
மூழ்க...

ஒரு
வேலை
ஒன்பதாம்
வகுப்பு
தோழியோ....

இல்லை
இல்லை
அவளுக்குத்தான்
போன
வருடமே
திருமணம்
முடிந்து
விட்டதே....!!

அதுமட்டுமில்லை
அவளுக்குத்தான்
நான்
காதலித்த
விஷயமே
சொல்லவில்லையே!

ஆம்
90ன்
காதல்
அப்படித்தான்...

உள்ளுக்குள்ளேயே
காதல்
இருக்கும்...

கண்கள்
இடையே
கடிதங்கள்
பறக்கும்...

பிடித்து
இருந்தால்
மட்டும்
இதயம்
திறக்கும்....

கடைசி
வரை
விரல்கள்
கூட
உரசாது...

காதலர்கள்
காதல்
மட்டுமே
செய்த
காலம்
அது....

நான்😅

அதை
கூட
ஒழுங்காக
செய்ததால்
வந்த
கோலமிது...

இரண்டு
வருடம்
தேடியும்..
இன்னும்
கிடைக்கவில்லை
பெண்....

ஒரு
வேலை
கல்லூரி
காதல்
கை
கொடுக்குமோ!??

கல்லூரியில்
அன்புத் தோழியும்
நானும்
அடுத்தடுத்த
இருக்கை

அமைத்து
தந்தது
இயற்கை...

உணவு
இடைவேளையில்
இருவரும்
பகிர்வோம்
உணவை....

ஒரு
நாளும்
பகிர்ந்தது
இல்லை
உணர்வை....

நான்
வேலை
பார்த்து
படித்ததால்
தோழிக்கு
என்மேல்
பிரியம்....

பிரியமான
தோழி
என்பதால்
என்
கண்கள்
அவள்
பேர்
சொன்னாலே
விரியும்....

ஆயினும்
குடும்ப
சூழல்
காரணமாய்
காதலை
வீட்டில்
சொல்லா-விட்டால்
கூட
பரவாயில்லை....

அவளிடமே
சொல்லவில்லை
நான்😂..

ஆக
இது
வரை
இரண்டு
காதல்
இரண்டும்
ஒரே
வகை
காதல்‌..
ஒரு
தலைக்காதல்....)))))))

ஐயரும்
அனைவரும்
என்னையே
பார்க்க....

எதாச்சும்
இருந்தா
சொல்லுடா...
என..

நானோ
ச்சே....சே
அப்படி
எல்லாம்
ஒன்னுமில்லை...
என்றேன்.....

கட்டம்
சொல்கிறது
காதல்
திருமணம
என...

என்
மனதோ
கட்டாயம்
சொல்கிறது...

அதுக்கு
நீ
சரிப்பட்டு
வர
மாட்டாய்
என...😂

ஐயர்
கொடுத்த
வருடம்
வந்து
விட்டது....

காதலும்
வந்த பாடில்லை...
கத்திரிக்காயும்
வந்த பாடில்லை...

வந்தது
அக்காவிடம்
இருந்து
ஒரு
போன்.....

சொந்தத்தில்
ஒரு
பெண்
நல்ல
குணவதி...
நல்ல
பெண்...
பேசிக்கொண்டு
இருக்கிறோம்....
என...

ஏதோ
ஒரு
எண்ணில்
இருந்து
அழைப்பு....

கிளியும்
குயிலும்
கலந்த
கீச்
குரலில்....
பெண்
குரல்....

ஆம்
2k
குரல்...

அந்த
குரல்
அந்த
சொந்தக்கார
பெண்
குரல்...

பிற்காலத்தில்
எனக்கு
சொந்தமாகும்
குரல்
என
அறியேன்.....

அழைப்பேசியில்
நான்...
நான்...
என
பெயர்
சொல்லி...
அறிமுகம்
ஆக...

நான் தான்
90ஸ் கிட்ஸ்
ஆச்சே....

இப்படி
எல்லாம்
வீட்டிற்கு
தெரியாமல்
போன்
செய்ய
கூடாது
தப்பு
என்றேன்....

அந்நியன்
அம்பியாக..‌..!!

இரு வீட்டார்
மனம்
ஒப்ப....

நல்ல
நாள்
ஒன்று
குறிக்கப்பட்டது

நிச்சயம்...
நிச்சயம்
செய்ய....!

பூ
வைக்கும்
நிகழ்வு...

பின்பு
இருவரும்
பேசலானோம்......

நான்..

என்னை
பிடித்து
இருக்கிறதா
உனக்கு
என!!

அவளோ
ஒரு
வருடமாகவே
உங்களை
பிடிக்கும்....

உங்கள்
பெயர்
சொன்னாலே
இதயம்
துடிக்கும்.....
என்றாள்...!

அப்படியா!!

எங்கே
எப்போது
என்னை
பார்த்தாய்
என
கேட்க....!!

உங்கள்
தந்தையின்
மரணத்தில்
பிறந்தது
உங்கள்
மீது
அன்பு....

தெருமுனை
பிள்ளையாரிடம்
மட்டுமே
சொல்லியதை
இன்று
உங்களிடமும்
சொல்லி
விட்டேன்......
என்றாள்...

அடடே
இதுவும்
காதல்
திருமணம்தான்
போலேயே!¡!!

ஜாதகம்
உண்மை
தானோ!??

மணப்பெண்
காதலி
ஆகி
மீண்டும்
மனைவி
ஆன கதை...

இன்னார்க்கு
இன்னார்
என்று
இறைவன்
வகுத்த
பாதையில்
திருமணம்
ஓர்
நாள்
என
முடிவு.....

அவள்....!!

சொல்லாமல்
சொன்னவள்
காதலை...

நான்
அவள்
சொல்லியதும்
சொன்னவன்
காதலை...

முதல்....
முறை
இரு தலை காதல்....

மூன்று
மாத
இடைவேளையில்
திருமணம்..

புது
அலைப்பேசி
ஒன்று
பரிசளித்து

சரியாக
வேலை
செய்கிறதா...
என
சாப்பிடும்
தூங்கும்
நேரம்
தவிர
சரிபார்த்த
காலம்
அது......

என்ன
பேசுகிறோம்!?
ஏன்
பேசுகிறோம்!?
எதற்கு
பேசுகிறோம்!?
என
தெரியமாலே
பல
மணி
நேரம்.....பேசி

பரவாயில்லை
அலைப்பேசி
அழகாய்த்தான்....
வேலை
செய்கிறது...
என்போம்..

திருமணத்திற்கு
முன்பு
காதலிக்கு
ஓர்‌
கவிதை
இல்லை என்றால்
எப்படி!!!?

நாளை பார்ப்போமா!!???

1 week ago | [YT] | 21