Reputed Tamil Editor, prolific writer, research scholar & innovative language professional. One of the pioneer in Tamil internet research, has been awarded PHD for the research on 'e-Governance in Tamil' & M.Phil on 'Internet magazines in Tamil'. Creative thinker, author of Akamozhi (அகமொழி), an unique thought series & 20 other books. My poems had been translated into 32 languages.
Passionate with technology, a self motivated personality with high positive energy. From editorial to localization, desk to field, offline to online, individual to team, hold many positions. Having 25 years of rich experience; served as Tamil Linguist / Editor with Google, Yahoo!, Flipkart, Webdunia, SIFY, Chennai Online & Amudhasurabi.
Founder of Vallamai.com (the first peer reviewed journal in Tamil), Nokkar Language Lab (Unique initiative to review language & content), SEER (to promote minimalism).
AnnaKannan K
சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வலிமையானவை என நம்பப்படுகின்றன. ஆனால், இவை வலிமை குறைந்த ஆடு, மாடு, மான் போன்றவற்றை வேட்டையாடுகின்றன. தங்களுக்கு இணையான வலிமையுடைய விலங்குடன் மோதி வெல்வதில்லை. எனவே இவற்றின் வலிமையும் வீரமும் கற்பனையானவை. உண்மையில் இவை பலவீனமானவை, தன்னை விட வலிமையான ஒன்றுடன் மோதும் துணிவும் உறுதியும் சாதுர்யமும் அற்றவை. எனவே, வெல்லப்படக் கூடியவை. (அகமொழி 1265)
#அகமொழி #akamozhi
2 weeks ago | [YT] | 1
View 0 replies
AnnaKannan K
உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; ஏசாயா 61 : 7 என்ற வாசகத்தை ஆட்டோ ஒன்றில் பின்னால் கண்டேன். இதன் மொழியழகு என்னைக் கவர்ந்தது. சற்றே காதல் வாசகமாகவும் தோன்றியது. வெட்கப்படும் பெண்ணுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் கற்பனை செய்தேன். ஆனால், இதன் பொருளே வேறு என்பது பிறகுதான் தெரிந்தது.
Instead of your shame you will receive a double portion [NIV] Isaiah 61:7 என்ற ஆங்கில வாசகத்தைத்தான் இப்படிப் பெயர்த்திருக்கிறார்கள். Isaiah 61:7 (NIV) speaks of God replacing shame and disgrace with a double portion of honor and joy for His people என்பது இதன் ஆங்கில விளக்கம்.
தலைக்குனிவுக்கும் அவமானத்துக்கும் பதிலாக இருமடங்கு பெருமையும் மகிழ்ச்சியும் பெறுவாய் என இதைப் பெயர்த்திருந்தால் உரிய கருத்து, முழுமையாகச் சென்று சேர்ந்திருக்கும். அவமானத்துக்குப் பதிலாக இருமடங்கு வெகுமானம் பெறுவாய் என்று கூடப் பெயர்த்திருக்கலாம். மொழியழகைக் காட்டிலும் பொருள் தெளிவாகப் புலப்பட வேண்டும். இதுவே முதன்மை இலக்காக இருக்க வேண்டும்.
#translation #tamil #bible #isaiah #Christ #Christian
1 month ago | [YT] | 2
View 0 replies
AnnaKannan K
This is my new group to review Tamil language and content quality in terms of spelling, grammar, readability, pronunciation, punctuation, terminology, effectiveness, fact and accuracy. We will observe, monitor and review the Tamil eco-system to improve the overall quality. We will also evaluate Tamil digital resources, tools and tech solutions. Please join and contribute.
www.linkedin.com/groups/15847042/
1 month ago | [YT] | 3
View 0 replies
AnnaKannan K
கிராமத்தில் ஒரு குடும்பம் நொடித்துப் போனால், மற்றவர்கள் ஆளுக்குச் சிறிது பங்களித்து, அந்தக் குடும்பம் மீண்டு வர உதவுவார்கள். இதே உணர்வை இப்போது மாநில அளவில், தேசிய அளவில் காண்கிறேன்.
கரூர் நெரிசலில் இறந்தோர் குடும்பங்கள் மீண்டு வர, தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்குகிறது. விஜய் தலா ரூ.20 லட்சம் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது (தலா ரூ.2.44 லட்சம்).
இறந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். பா.ஜ.க. தலா ரூ.1 லட்சம் நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது. எஸ்.ஆர்.எம். நிறுவனம், அந்தக் குடும்பங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளது.
உயிரை மீட்க முடியாது எனினும் இந்த உதவிகள், அந்தக் குடும்பங்களுக்குப் பெரும் ஆதரவாக இருக்கும். இவற்றை வைப்புநிதியாக வைத்து, மாதம்தோறும் கூடுதல் வட்டி கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். இதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தைத் தொடங்குமாறு மத்திய / மாநில அரசுகளை வேண்டுகிறேன்.
#karur #stampede #help
2 months ago (edited) | [YT] | 1
View 0 replies
AnnaKannan K
அரசுப் பள்ளி மாணவி, ஜப்பானிய மொழியில் பேசிவிட்டார். அரசுப் பள்ளி மாணவர், ஐஐடியில் சேர்ந்துவிட்டார். பழங்குடியின மாணவி, வழக்குரைஞர் ஆகிவிட்டார்... என்பன போன்ற செய்திகளில் ஓர் அடிப்படைச் சிக்கல் இருக்கிறது.
ஏதோ இவர்கள் கீழ்நிலையில் இருப்பது போலவும் அதிலிருந்து ஏறி வந்து, மேல்நிலைக்கு வந்துவிட்டது போலவும் ஒரு தொனி இவற்றில் இருக்கிறது. அரசுப் பள்ளி என்றால் மதிப்புக் குறைந்தது போன்ற ஒரு கண்ணோட்டத்தை அரசினரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து தங்களை அறியாமலே வலுப்படுத்துகின்றனர். அரசுப் பள்ளி, அரசுப் பள்ளி என அழுத்திச் சொல்வதன் மூலம், கழிவிரக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். தனியார் பள்ளி மாணவர்கள் யாரும் இவ்வாறு சொல்வதில்லை. தங்கள் பள்ளியின் பெயரை மட்டுமே சொல்கின்றனர். அதுவும், தன்னம்பிக்கையுடன், தலை நிமிர்ந்து சொல்கின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர் எனச் சொல்வதால், மாணவருக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அந்த மாணவரின் உழைப்பில், ஆசிரியர்களும் அதிகாரிகளும் தமிழக அரசினரும் விளம்பரம் தேட முயல்கிறார்கள். மாணவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி சார்ந்த சேவைகள், மக்கள் வரிப்பணத்திலிருந்தே செய்யப்படுகின்றன. ஒரு வகையில் அது கடமை. அதை முறையாக, ஒழுங்காக, தரமாகச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். சிறப்பாகப் படித்த மாணவர்களின் பெருமையில் அரசு உரிமை கோருகிறது என்றால், சரியாகப் படிக்காத மாணவர்களின் தரத்திற்கும் அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்.
#kalvi #education #tamilnadu
2 months ago | [YT] | 5
View 1 reply
AnnaKannan K
VIBGYOR
Violet, Indigo, Blue, Green, Yellow, Orange, Red
ஊகநீபமஞ்ஆசி
ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு
ஆக்கம்: அண்ணாகண்ணன்
#tamil
3 months ago (edited) | [YT] | 4
View 0 replies
AnnaKannan K
இந்தியாவின் தீர்க்க முடியாத சிக்கல்களாக, நெடுங்காலமாக நீடித்த பலவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாகத் தீர்த்துள்ளார்.
* காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகைகளை நீக்கி, யூனியன் பிரதேசமாக மாற்றியது
* பாபர் மசூதி வழக்கு முடிவு பெற்று, அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலை நிர்மாணித்தது
* பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு
* பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு
* முத்தலாக் தடைச் சட்டம்
* தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது அநேகமாக நிறுத்தப்பட்டது
* 12 கோடி வங்கிக் கணக்குகள் தொடக்கம். மானியங்கள், அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றன
* பாஸ்டாக் வழியே சுங்கக் கட்டணம்
* யூபிஐ வழியே பணப் பரிமாற்றம்
* இந்திய ரூபாயில் இதர நாடுகளுடன் வர்த்தகம்
* ரூ.12 லட்சம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு
இந்த இலக்குகளை எட்டுவதில் அவருக்கு ஏராளமான தடைகள் இருந்தன. கடும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்டார். ஆனால், துணிச்சலாக இவற்றை நிறைவேற்றினார். தொலைநோக்குடன் முடிவுகளை எடுத்தார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை உயர்த்தினார். எழுச்சி மிக்க புதிய இந்தியாவை மீண்டும் கட்டமைத்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
துணிவும் தொலைநோக்கும் ஆளுமையும் உறுதியும் மிக்கவராக நரேந்திர மோடி திகழ்கிறார். இன்று 75ஆவது பிறந்தநாள் காணும் அவர் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.
#modi #narendramodi
3 months ago | [YT] | 6
View 4 replies
AnnaKannan K
Wish you all the inspiring teachers.
உந்துசக்தியாகத் திகழும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.
#teachersday
3 months ago | [YT] | 2
View 0 replies
AnnaKannan K
A creative book mala by Kannikovil Raja
கன்னிக்கோவில் ராஜா, சென்னை, மயிலாப்பூரில் வசிக்கும் எழுத்தாளர், பதிப்பாளர், புத்தக வடிவமைப்பாளர். தாம் எழுதிய, பதிப்பித்த புத்தகங்களை இவ்வாறு மாலையாகக் கோத்து, விருந்தினர்களுக்கு அணிவிக்கிறார். இது நல்ல யோசனையாகத் தெரிகிறது. சிறிது நேரத்தில் வாடிவிடும் பூமாலை, பூங்கொத்து போன்றவற்றை வாங்குவதை விட, புத்தகங்களைப் பரிசாக வழங்குங்கள் எனப் பலரும் சொல்லி வருகிறார்கள். அந்தப் புத்தகங்களையே மாலையாக அணிவிக்கலாம் என்பது ஒரு புதுமை. வேண்டுவோருக்கு அவர்கள் விரும்பும் வகையில் இந்தப் புத்தக மாலையை இவர் உருவாக்கியும் தருகிறார். தேவையுள்ளோர், இவரைத் தொடர்பு கொள்ளலாம். கன்னிக்கோவில் ராஜா தொடர்பு எண் - 98412 36965.
படத்தில் கன்னிக்கோவில் ராஜா உருவாக்கிய மாலையை எழுத்தாளர் சிவகாமசுந்தரி அவர்களுக்கு, லதா சரவணன் அணிவிக்கிறார்.
3 months ago | [YT] | 5
View 0 replies
AnnaKannan K
நாகாலாந்து ஆளுநர் மாண்புமிகு இல.கணேசன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். சொற்சுவையும் கருத்தாழமும் சொல்வன்மையும் ஒருங்கே அமைந்த நாவரசர். ஆழ்ந்த புலமையும் தேச பக்தியும் பொதுநலமும் அணிகலன்களாய்ப் பூண்டவர். பொற்றாமரை என்ற அமைப்பின் மூலம் தமிழ் வளர்த்தார்.
2006ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக இல.கணேசன் La Ganesan பொறுப்பு ஏற்றிருந்தார். சிஃபி நிறுவனத்தில் தமிழ்த் தளத்துக்கு நான் ஆசிரியராக இருந்தேன். உலகெங்கும் உள்ள சிஃபி வாசகர்களுடன் நேரலையில் கலந்துரையாட வருமாறு இல.கணேசன் அவர்களை அழைத்தேன். என் அழைப்பை ஏற்று, சென்னை டைடல் பூங்காவில் உள்ள சிஃபி அலுவலகத்துக்கு வந்து வாசகர்களின் கேள்விகளுக்குச் சுவையாகப் பதில் அளித்தார். அவர் பதில்களைச் சொல்லச் சொல்ல, மூத்த இதழாசிரியர் கே.வெங்கடேஷ் Venkatesh Kannaiah, உடனுக்குடன் தட்டச்சு செய்தார். எங்களுடன் சிஃபி மலையாளம் இதழாசிரியர் சென்னி வர்கீஸ் Sennie Varghese இணைந்தார். எழுத்தாளர் மலர்மன்னன், இல.கணேசன் அவர்களை அழைத்து வரும் பணியினை ஏற்றுக்கொண்டார். தமிழில் இணைய இதழ்கள் என்ற என் நூலை, இல.கணேசன் அவர்களிடம் அளித்து மகிழ்ந்தேன்.
இல.கணேசனின் மறைவு, ஒரு கட்சிக்கு இல்லை, தேசத்திற்கே இழப்பு.
#laganesan #bjp
4 months ago | [YT] | 10
View 0 replies
Load more