Tiruchendur Murugar official

9994444768 ஓம் முருகா சரணம்
திருச்செந்தூர் முருகப் பெருமானின் அதிசயங்களும் ஆராதனைகளும் யாகங்களும் மந்திரங்களும் தினந்தோறும் நம் சேனலில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது விருப்பமுள்ள பக்தாக்கள் வந்து முருகனின் அருள் ஆசிகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்து சப்போர்ட் செய்யுங்கள் சத்ரு சம்ஹார யாகம் 9994444768

நன்றி முருகா சரணம்

9994444768 youtu.be/69jdWg8xyTo


Tiruchendur Murugar official

7/9/2025 ஞாயிற்றுக்கிழமை
சந்திர கிரகணத்தை முன்னிட்டு...

கோவில் தினசரி காலங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது...

7/9/2025 ஞாயிற்றுக்கிழமை மதியம்..

12 மணியுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி நிறுத்தப்படுகிறது

மதியம் 2 மணிக்கு சாய்ரச்சை
3 மணிக்கு ராக்கால அபிஷேகம்

5 மணியுடன் அனைத்து காலங்களும் முடிந்து நடை சாத்தப்படும்...


மீண்டும் 6:00 மணி அளவில் நடை திறக்கப்பட்டு

8/9/2025 திங்கள் கிழமைக்குரிய

விஸ்வரூபம் மாலை 06.30 மணி

கொடிமரம் நமஸ்காரம் முடிந்து பட்டு சாத்தி நடை சாத்துதல்
8:00 மணி...

கிரகணம் முடிந்து மீண்டும் திங்கட்கிழமை காலை நடை திறந்தவுடன் அபிஷேகம்....

1 week ago | [YT] | 63

Tiruchendur Murugar official

*_விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள்._*

விபூதி என்னும் சொல்லுக்கு மகிமை என்றும் பொருள்,

விபூதி திருநீறு என்றும் அழைக்கப்படும். சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் நெற்றியில் தரித்துக்கொள்வது திருநீறு. விபூதி தரித்துக்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

மேலும், ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் முடிவில் பிடி சாம்பல்தான் என்ற தத்துவத்தையும் நமக்கு உணர்த்துவதாகத் திகழ்கிறது.

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன…!

*அவை இங்கே*

1.தலை நடுவில் (உச்சி)
2.நெற்றி
3.மார்பு
4.தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5.இடது தோள்
6.வலது தோள்
7.இடது கையின் நடுவில்
8.வலது கையின் நடுவில்
9.இடது மணிக்கட்டு
10.வலது மணிக்கட்டு
11.இடது இடுப்பு
12.வலது இடுப்பு
13.இடது கால் நடுவில்
14.வலது கால் நடுவில்
15.முதுகுக்குக் கீழ்
16.கழுத்து முழுவதும்
17.வலது காதில் ஒரு பொட்டு
18.இடது காதில் ஒரு பொட்டு

*பலன்கள் :*

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்…!!!

"கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!"

திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும், திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.🌹

1 month ago | [YT] | 42

Tiruchendur Murugar official

ஆறுமுகம் கொண்டவரே! காப்பாற்றுவீர்.
ஸ்ரீ சரவணபவ தேவஸேநேச ஷட்கத்திலிருந்து..

1 month ago | [YT] | 73

Tiruchendur Murugar official

முருகன் பிள்ளைத் தமிழ் --------------------------------------------------முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர என வோதும் முக்கட்பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து,இருவரும் மூப்பத்துமூவர்க்கத்து அமரரும் அடிப்பேண, பத்து தலை தத்தக் கணையோடு,ஓற்றைக்கிரி மத்தைப் பொருது,ஒரு பட்டப் பகல் வட்ட திகரியில் இரவாக,பத்தற்கு இரதத்தைக் கடவிய,பச்சைப் புயல் மெச்சத்தகு பொருள், பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒரு நாளே,தித்தித்தெய ஓத்தப் பரிபுர,நிர்த்தப்பதம் வைத்து பைரவி,திக்கொட் க நடிக்க,கழுகொடு கழு தாட திக்குப்பரி அட்ட வயிரவர்,சித்தரப் பவுரிக்கு,தொக்குத் தொகு தொக்குத் தொகு திரிகடக எனவோத,கொத்துப் பறைகொட்ட களமீசைமுது கூகை,குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப் புதை புக்கு பிடியென கொட் புற்றெழ நட்பற்ற அவுணரை வெட்டிப் பலி யிட்டுக் குலக்கிரி குத்துப் பட,ஓத்து ப் பொரவல பெருமாளே,,,,

1 month ago | [YT] | 135

Tiruchendur Murugar official

#Tiruchendur Murugar official

8 months ago | [YT] | 215

Tiruchendur Murugar official

*" ஸுப்ரமண்ய யந்த்ரம் " உபாஸனையின் பெருமை :*

*꧁•⊹✍🏻படைப்பு⊹•✍🏻꧂*

*தமிழ் Junction*

whatsapp.com/channel/0029VaFmOpNLSmbdNmS5g52B

*தீக்க்ஷிதன்*

ஷட்கோண யந்த்ரமான ஸ்ரீ ஸுப்ரமண்ய யந்த்ர உபாஸனை ஆனது சொல்லிற்குள் அடங்காத சக்திகளையும் சிறப்புக்களையும் உடையதாக " கௌமார சாஸ்த்ரங்கள் " விளக்குகின்றன.

ஷட்கோண யந்த்ரத்தின் முதல் ரேகையில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியும் ஸனகாதி முனிவர்களும்

ஷட்கோண யந்த்ரத்தின் இரண்டாம் ரேகையில்
காஸ்யபர் ; அத்ரி ; பரத்வாஜர் ; விஸ்வாமித்ரர் ; கௌதமர் ; ஜமதக்னி ; வஸிஷ்டர் ; ஸுகப்ரஹ்ம மகரிஷி ; அகஸ்த்ய மகரிஷி ; தத்தாத்ரேய மகரிஷி முதலான ரிஷி ஸ்ரேஷ்டர்களும்

ஷட்கோண யந்த்ரத்தின் மூன்றாம் ரேகையில்

நவநாயகர்களும்

நித்யவாசம் செய்கிறார்கள்

இந்த மூன்று ரேகைகளுக்கு உள்ளே அமைந்துள்ள மூன்று வட்டங்களில்

முதல் வட்டத்தில் உள்ள முதல் வளையத்தில்

முக்குணங்களும் மாயா ; அணிமாதி போன்ற அஷ்ட ஸித்தி தேவதைகளும்

இரண்டாம் வட்டத்தில் உள்ள இரண்டாம் வளையத்தில்

வைகரீ ; மத்யமா ; பச்யந்தீ ; பரா என்ற வாக்தேவதைகளும்

மூன்றாம் வட்டத்தில் உள்ள மூன்றாம் வளையத்தில்

குண ; ஞான ; கர்மேந்திரிய பஞ்சகங்கள் மற்றும் நவவீரர்களும் வாசம் செய்கிறார்கள்

பனிரெண்டு இதழ் தாமரையில்

கலா ; காஷ்டா ; கடிகா ; முஹூர்த்தம் ; திவஸம் ; பக்ஷம் ; மாஸம் ; ருது ; அயனம் ; ஸம்வத்ஸரம் ; யுகம் ; காலம்

ஆகிய காலாதிஷ்டான தேவதைகளும்

ஆறு இதழ் தாமரையில்

பூலோகம் ; அக்னி மண்டலம் ; அந்தரிக்ஷம் ; ஸூர்ய மண்டலம் ; ஸ்வர்க்கம் ; ஸந்த்ர மண்டலம் முதலியவைகளும்

ஷட்கோணத்தில்

நான்கு வேதங்களும்
ஆறு சாஸ்த்ரங்களும்

பரமசிவ பீடம் ( சிவன் )

ஜெயந்தி பீடம் ( நாராயணன் )

ஸித்தி பீடம் ( சக்தி )

பூர்ணகிரி பீடம் ( மஹாகணபதி )

பூர்ணபல பீடம் ( ஸூர்யன் )

வனகிரி பீடம் ( பைரவ மூர்த்தி )

முதலிய பீடங்களும்

த்ரிகோணத்தில்

இச்சா ; க்ரியா ; ஞான சக்திகளும்

ஸத் - ஸித் - ஆனந்தமும்

பிந்து ஸ்தானத்தில்

பிரணவ வடிவமும்

சிவசக்தி ஐக்கிய வடிவமும் ஆன

ஸுப்ரமண்யரும் வாசம் செய்கிறார்கள்

இந்த மஹாயந்த்ர உபாஸனை ஆனது
பெருதற்கரிய ஸகல ஸௌபாக்யங்களையும் தந்தருளி பரப்ரஹ்ம ஸ்வரூபமான
ஸ்ரீ ஸுப்ரமண்யருடன் ஒன்றி விடும்
முக்தி பதத்தை அருள்கிறது என

இந்த " ஸுப்ரமண்ய யந்த்ர உபாஸனையின் " பெருமையை " குமாரதந்திரம் " அருள்கிறது

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை

வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா

10 months ago | [YT] | 121

Tiruchendur Murugar official

முருகா சரணம்


ஐப்பசி மாசம் வளர்பிறை
கந்த சஷ்டியின் முதல் நாள்..

இப் பூமியில் இறவாமல், நானும் உன் இணையடிகளைப் பாடி வாழ்வுற,

என் நெஞ்சிலே சிறந்த
உபதேசச் சொற்களைப் பதித்து அருள்வாயாக..
என்று

அருண மணிமேவு என்ற திருச்செந்தூர் திருப்புகழில்
சொல்வது போல

திருச்செந்தூர் குளக்கரை செந்தில் நாதனுக்கு தாமரை மலர்களால்
மாலை சாத்தப்பட்டு
மிக சிறப்பாக பூஜை செய்து
பிரார்த்தனை செய்ய பட்டது.

இந்த நன்னாளில் அனைவருக்கும் அருள் கிடைக்க செந்தில் ஆண்டவரை வேண்டுவோம்

10 months ago | [YT] | 256

Tiruchendur Murugar official

#திருச்செந்தூர்.

#குருவின் அம்சம் ..

கடல் நீர்நிலைகளில் அருகில் இருக்கும் ஸ்தலம்

விருச்சிக பாவகத்தை குறிக்கும்.

இதுவே ஒரு வகையில்,

நீரும் நிலமும் கலந்த பகுதி

சதுப்பு நிலம் என சொல்லலாம் அது மகரத்தையும் குறிக்கும் ..

பௌர்ணமி வெளிச்சத்தில்

குரு + சந்திரனை குறிக்கும்.

மஞ்சள் +வெள்ளை

அட்சதை -

இந்த திருத்தலத்தில் பௌர்ணமி அன்று ,

குரு ஸ்தானத்தில் இருப்பவர்களிடம் அட்சதையுடன் ஆசி பெறுவது ..

குருவின் காரக விஷயங்கள்

குழந்தை பாக்கியம்

தனப் பிராப்தி

நிறைவான மன வாழ்க்கையை கொடுக்கும் ..

11 months ago | [YT] | 366