🔥 நீதிமன்றத்தில் மாபெரும் வெற்றி! தடையை உடைத்தெறிந்த உரிமைப் போராட்டம்! 🔥
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், மேலமடை வருவாய் கிராமம் அருள்மிகு மாரியம்மன் கோவில் உரிமை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி, காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும், மதுரை உயர்நீதிமன்றத்தில் கடுமையாக போராடி அனுமதி பெறப்பட்டுள்ளது!
பாண்டிய மன்னன், PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் திரு. KN. இசக்கி ராஜா தேவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்.
⚖ உரிமைக்கான பட்டினிப் போராட்டம் ⚖
📅 நாள்: 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) ⏰ நேரம்: காலை 9.00 மணி முதல் 📍 இடம்: நத்தத்துப்பட்டி (சாத்தூர் வட்டம்)
🔥மதுரை மேலமடை மேம்பாலத்தை உலகறியச் செய்யும் மகுடம்🔥 தமிழக முதல்வருக்கு PMT KN இசக்கி ராஜா தேவர் நன்றி
மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர் சூட்டிய தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் முக்குலத்தோர் சார்பாக KN இசக்கி ராஜா தேவரின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்! 🙏 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
தினசரி முக்குலத்தோர் சமூகத்தில் நடக்கும் தகவல்களை தொகுத்து காலை எத்தனை மணிக்கு வீடியோவாக வெளியிட்டால் உங்களுக்கு வசதியாக இருக்கும்? நேரம்: 6:00 AM | 7:00 AM | 8:00 AM (உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்)
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து சேர்வைக்காரரின் நேரடி வாரிசுதாரர் மற்றும் கட்டாரங்குளம் ஜமீன்தார் உயர்திரு. லஷ்மி மோகன புஷ்பசாமி ராஜா அவர்கள் நேற்று 10/11/2025 இரவு 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அண்ணாரது இறுதிச்சடங்கு கோவில்பட்டி வெங்கடேஷ் நகர் (மூக்கரை பிள்ளையார் கோயில்) 4வது தெருவில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அன்னாருக்கு மரியாதை செலுத்தப்படும் அனைத்து உறவுகளும் கலந்து கொள்ளவும். ஐயாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் கோவில்பட்டி மகாராஜ பாண்டியனை தொடர்பு கொள்ளவும். +91 77086 47534
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1078வது சதய விழா குறித்த PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் அறிக்கை
PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், உலகமே வியக்கும் இணையற்ற மன்னர் இராஜராஜ சோழப் பெருவேந்தரின் 1040வது சதய விழாவை முன்னிட்டு, உலகம் முழுவதும் வாழும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாபாரதத்திற்குப் பின், இந்தியாவின் நிலப்பரப்பில் இமயத்தில் புலிக்கொடி நாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழன், வெறும் மன்னர் அல்ல; அவர் ஒரு மானுட விஞ்ஞானி. அவரது ஆட்சி நிர்வாகம், கலை, கட்டிடக்கலை, சமூகநீதி, கடற்படை வலிமை என அனைத்திலும் தமிழர்களின் புகழைத் தெற்காசியா முழுவதும் பரப்பிய ஒரு தன்னிகரற்ற தலைவன். உலக அதிசயங்களில் ஒன்றான தஞ்சைப் பெரிய கோயிலை (இராஜராஜேஸ்வரம்) வெறும் ஏழு ஆண்டுகளில் கட்டி முடித்தவர் இவர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் இந்தக் கோயில், தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் நுட்பத்தின் சிகரமாகும். தமிழக வரலாற்றிலேயே முதன்முதலில் நில அளவீடு (Land Survey) செய்து, நாட்டைப் பல மண்டலங்கள் மற்றும் வளநாடுகளாகப் பிரித்து, நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தினார். ஒவ்வொரு கிராமத்திலும் குடவோலை முறை மூலம் மக்களாட்சியை நிலைநிறுத்திய உள்ளாட்சித் துறைக்கு இவர் புதிய வடிவம் கொடுத்தார். இராஜராஜரின் நாவாய்ப் படை (கடற்படை) அக்காலத்திலேயே மிகச் சிறந்ததாக விளங்கியது. லட்சத்தீவு, இலங்கை, மாலத்தீவுகள் உள்ளிட்ட பல தீவு நாடுகளை வென்று, சோழப் பேரரசை கடல் கடந்தும் விரிவுபடுத்தினார், இதனால் பன்னாட்டு கடல் வணிகம் செழித்தது. சமயப் பொறையை வளர்த்தெடுத்த மாமன்னர் இவர்; சிவன் கோவிலுக்குப் பெருங்கோயிலைக் கட்டினாலும், நாகப்பட்டினத்தில் புத்தத் துறவிகளுக்காகச் சூடாமணி விகாரத்தைக் கட்ட நிதி வழங்கி, அனைத்து மதங்களையும் சமமாகக் கண்டார்.
இந்தச் சதய நன்னாளில், மாமன்னரின் புகழைப் போற்றும் வகையிலும், வருங்காலச் சமூகத்திற்கு வழிகாட்டும் வகையிலும், தமிழக அரசுக்கு சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கிறோம். தற்போது அரசு விழாவாகக் கொண்டாடப்படும் சதய விழா, மாமன்னர் அரியணை ஏறிய வருடமான கி.பி. 985-ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆனால், கல்வெட்டுகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்பட்ட அரசு ஆவணங்கள் மூலம், ராஜராஜ சோழனின் உண்மையான பிறந்த வருடம் கி.பி. 947 (ஐப்பசி மாதம், சதய நட்சத்திரம்) என்பது உறுதியாகியுள்ளது. கி.பி. 947-ஐ கணக்கீடு செய்தால், இந்த ஆண்டு கொண்டாடப்பட வேண்டியது 1078வது சதய விழாவாகும். எனவே, தமிழக அரசு இந்த வரலாற்றுப் பிழையைச் சரிசெய்து, மாமன்னரின் உண்மையான பிறந்த நட்சத்திர நாளான ஐப்பசி சதயத்தையே இனி அதிகாரப்பூர்வ சதய விழாவாக அறிவித்து, 1078வது சதய விழா என்ற உண்மையான கணக்கீட்டில் கொண்டாட வேண்டும். மேலும், இராஜராஜ சோழனின் நிர்வாகத் திறன்கள், கட்டிடக்கலை நுட்பங்கள் மற்றும் சமூக நல்லிணக்கக் கொள்கைகள் அடங்கிய ஒரு சிறப்புத் தொகுப்பு நூலினை அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் சேர்க்க வேண்டும். மேலும், இராஜராஜ சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நீர் மேலாண்மை மற்றும் விவசாயப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து ஆழமான ஆராய்ச்சி மேற்கொண்டு, இன்றைய நவீன விவசாயத்திற்கு ஏற்றவாறு அவற்றைச் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும், அத்துடன் அவரது கடற்படை உத்திகள் மற்றும் கடல் வணிகப் பாதைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு சிறப்பு ஆய்வு மையமும் அமைக்கப்பட வேண்டும். இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்த வலியுறுத்தி, சோழ தேச இளைஞர்கள் ஒருங்கிணைந்து, வரும் நவம்பர் 22-ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகக் கவனீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். கட்சி மற்றும் சங்கப் பாகுபாடின்றி, தமிழர்கள் அனைவரும் இந்த அறவழிப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். ராஜராஜ சோழன் விட்டுச் சென்ற நிர்வாகச் சீர்திருத்தங்கள், சமூக நல்லிணக்கம் மற்றும் வீரத்தையும் நாம் பின்பற்றினால், தமிழகம் மீண்டும் பொற்கால ஆட்சியை எய்தும் என்பதில் ஐயமில்லை. மன்னர் இராஜராஜ சோழரின் புகழ் ஓங்குக! தமிழர்களின் ஒற்றுமை நிலைக்கட்டும்!
இப்படிக்கு,
KN. இசக்கி ராஜா தேவர்,
தலைவர்,
PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்.
நாள்: 01.11.2025
Esakkiraja Esakkiraja PMT Esakkiraja #ராஜராஜசோழன்#ராஜராஜன்#கள்ளர்#rajarajacholan#rajarajan#kallar
வீரத்தை விலை பேச வெள்ளையன் வந்தான்! வேங்கையாய் சீறி விடுதலைக் கொடி பிடித்தீர்கள்! "மண் எங்கள் சொத்து; மானமே எங்கள் மூச்சு" என்று முழங்கியே நெருப்பாய் நீங்கள் எழுந்தீர்கள்!
சிவகங்கை சீமையைக் காக்க உயிர் கொடுத்த மாவீரர்கள்! மன்னர் முடியை துறந்து மக்களுக்கான துடிப்பை சுமந்தீர்கள்! மகுடம் உங்களுக்கில்லை – மண் மீதான பற்றே மணிமகுடம்! அதைச் சாமானியரும் உணரும் வண்ணம் வாழ்ந்து காட்டினீர்கள்!
கண்ணீரில் நனைந்ததா? இல்லை, குருதியில் பூத்ததா? சிவகங்கைத் தாயின் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க – தூக்கு மேடையும் உங்கள் வீரத்தின் எல்லைதான்; தூக்கு கயிற்றின் பிடியில் உறைந்த உங்கள் குரல் – அது சுதந்திரத்தின் முழக்கம்!
உடல் பிரிந்தாலும் மருதிருவர்களின் ஆன்மா ஓயவில்லை – ஆங்கிலேயன் மூச்சிலும் பயத்தின் அதிர்வை தந்தீர்கள்! விழுந்தது தலை அல்ல, விதையாக விழுந்தது! மரணம் உங்களுக்கில்லை, மண்ணில் நீங்கள் விதைக்கப்பட்டீர்கள்!
வருடம் பல கடந்தாலும், மருது பாண்டியர்களின் குருதிச் சிவப்பால், தமிழரின் நரம்பில் இன்னும் வீரத்தின் நாதம் கேட்கிறது!
YouTube-ல் தொடங்கிய பயணம்... Facebook-ல் 50,000 உறவுகளாய் வளர்ந்துள்ளது!🚀
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! 👋
எங்கள் PMT Media YouTube சேனலுக்கு நீங்கள் தந்த அதே அன்பு, இப்போது எங்கள் Facebook பக்கத்தையும் ஒரு மாபெரும் இடத்திற்கு இட்டுச் சென்றுள்ளது! ஆம், சரியாக ஒரு வருடத்தில், நாங்கள் 50,000 பின்தொடர்பாளர்கள் (Followers) என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறோம்!
இந்த வெற்றிக்குக் காரணம் உங்கள் அசைக்க முடியாத ஆதரவு மட்டுமே! நீங்கள் லைக் செய்தீர்கள், ஷேர் செய்தீர்கள், கமெண்ட் செய்தீர்கள், மேலும் எங்கள் தகவல்களை உங்கள் நண்பர்களிடமும் கொண்டு சென்றீர்கள்.
உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எங்களின் மனமார்ந்த நன்றி! 🙏
YouTube-ல் உள்ள எங்கள் தரமான உள்ளடக்கங்களை Facebook-லும் கொண்டு வந்து, மேலும் சுறுசுறுப்பாகவும், பயனுள்ளதாகவும் செயல்பட உறுதி அளிக்கிறோம்.
தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்! PMT Media குடும்பம் மேலும் வளரட்டும்! ❤️
#50KFollowers#PMTMediaTamilnadu#YouTubeToFacebook#DoubleTheFun#ஒருவருடவெற்றி#நன்றிஉறவுகளே#PMT#PMTMedia
விண் தொட்டு நிற்கும் வீரம்! உலகின் விதிகளையும் மாற்றும் வேகம்! — அதுவும் காலம் எனும் அனல்முன் கருகிப் போகும்! மண்ணில் எழும் மாவீரனும் ஒருநாள் மண்ணுக்குள் கறைந்து போவான், மறுக்க ஏதுமில்லை! நிலையாமையின் உச்சம் இது! நெஞ்சே, உணர்! இந்த நிதர்சனம் கண்டு, இன்னும் நீ வீறு கொள்!
இலக்கின் தீச்சுடர்!
களமாடும் போதில், கண்ணிமைப் பொழுதும் கணக்குக்குள் இருக்க வேண்டும்! — வீண் ஆரவாரம் விடுத்து, அக்னி மூச்சுடன் இறுதி வெற்றிக்கு எதுவோ தேவை, அந்த ஒரே செயலில் உன் உணர்வெல்லாம் திரட்டு! வெற்றியின் வேட்கையில் உன் வேர் பலம் காட்டிடு! கவனம் சிதறாதே! இலக்கு மட்டுமே உன் உயிர்!
அறத்தின் ஆயுதம்!
குருதி கொதிக்கும் போர்க்களம்! கோபம் குமுறும் புயலாய் நீ எழுந்தாலும் — உன் வாளின் இலக்கு வேறாக இருக்கட்டும்! அழிப்பதற்கல்ல உன் எழுச்சி! அமைதியை அங்கேயே கொண்டு வருவதற்கே சண்டையிடு! போரை முடிப்பதற்காகப் போரிடு! உன் ஆயுதத்தின் ஒரே நோக்கம் அறமாகட்டும்!
மௌனத்தின் மாட்சி!
பேச்சுகள் ஓயட்டும்! போராட்டத்தின் சத்தங்கள் அடங்கட்டும்! — பல நேரங்களில், நீயே ஒரு பேரமைதி ஆகிவிடு! உள்ளிருக்கும் சலனங்கள் முழுதும் ஓய்ந்தாலே, விடைதேடும் வினாக்களுக்குச் சத்யத்தின் ஒளி பிறக்கும்! வெளியே தேடும் ஞானம் உனக்குள் வந்து குவியும்! மௌனமே மகத்தான சக்தி! மனதில் அதை ஏந்திடு!
நமது முன்னோர்களின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அதன் ஒரு பகுதியாக வரும் மருது பாண்டியர்கள் குருபூஜை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி ராஜராஜ சோழன் சதய விழா ஆகியவைகளை முன்னிட்டு அந்தந்த ஊர்களில் நடைபெறும் விழாக்களில் மாணவ மாணவிகளுக்கு நமது முன்னோர்களின் தலைப்புகளை கொடுத்து அதில் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி போன்றவற்றை நடத்துங்கள் அவற்றை பெரிய அளவில் விளம்பரப்படுத்துங்கள். ஆடம்பரமாக அனாவசியமாக செலவழிப்பதை விட நமது சமூக மக்களிடம் வரலாற்றை கொண்டு செல்லும் விதமாக அத்தியாவசியத்திற்கு செலவளியுங்கள். ஊரில் உள்ள பெரியவர்களை அழைத்து நமது வரலாறு குறித்தும் நமது முன்னோர்களின் தியாகங்கள் குறித்தும் ஒவ்வொரு ஊரின் பாரம்பரியம் குறித்தும் மேடைகளில் பேச வையுங்கள்.
PMT MEDIA
🔥 நீதிமன்றத்தில் மாபெரும் வெற்றி! தடையை உடைத்தெறிந்த உரிமைப் போராட்டம்! 🔥
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், மேலமடை வருவாய் கிராமம் அருள்மிகு மாரியம்மன் கோவில் உரிமை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி, காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும், மதுரை உயர்நீதிமன்றத்தில் கடுமையாக போராடி அனுமதி பெறப்பட்டுள்ளது!
பாண்டிய மன்னன், PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் திரு. KN. இசக்கி ராஜா தேவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்.
⚖ உரிமைக்கான பட்டினிப் போராட்டம் ⚖
📅 நாள்: 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) ⏰ நேரம்: காலை 9.00 மணி முதல் 📍 இடம்: நத்தத்துப்பட்டி (சாத்தூர் வட்டம்)
PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்.
#viruthunagar #sattur #nathathupatti #PMT #விருதுநகர் #சாத்தூர் #நத்தத்துப்பட்டி #மாரியம்மன் #mariamman
18 hours ago | [YT] | 470
View 7 replies
PMT MEDIA
🔥மதுரை மேலமடை மேம்பாலத்தை உலகறியச் செய்யும் மகுடம்🔥 தமிழக முதல்வருக்கு PMT KN இசக்கி ராஜா தேவர் நன்றி
மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர் சூட்டிய தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் முக்குலத்தோர் சார்பாக KN இசக்கி ராஜா தேவரின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்! 🙏 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
#VeluNachiyar #Veeramangai #Madurai #MelamadaiFlyover #PMT #PMT_Makkal_Paathukappu_Iyakkam #KNEsakkiRajaThevar #Mukkulathor #TNCM #MKStalin #Sivagangai #VeeraMangaiVelunachiyar
1 week ago | [YT] | 471
View 11 replies
PMT MEDIA
தினசரி முக்குலத்தோர் சமூகத்தில் நடக்கும் தகவல்களை தொகுத்து காலை எத்தனை மணிக்கு வீடியோவாக வெளியிட்டால் உங்களுக்கு வசதியாக இருக்கும்? நேரம்: 6:00 AM | 7:00 AM | 8:00 AM (உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்)
1 week ago | [YT] | 584
View 75 replies
PMT MEDIA
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து சேர்வைக்காரரின் நேரடி வாரிசுதாரர் மற்றும் கட்டாரங்குளம் ஜமீன்தார் உயர்திரு. லஷ்மி மோகன புஷ்பசாமி ராஜா அவர்கள் நேற்று 10/11/2025 இரவு 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அண்ணாரது இறுதிச்சடங்கு கோவில்பட்டி வெங்கடேஷ் நகர் (மூக்கரை பிள்ளையார் கோயில்) 4வது தெருவில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அன்னாருக்கு மரியாதை செலுத்தப்படும் அனைத்து உறவுகளும் கலந்து கொள்ளவும். ஐயாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் கோவில்பட்டி மகாராஜ பாண்டியனை தொடர்பு கொள்ளவும். +91 77086 47534
#அழகுமுத்துசேர்வை #முக்குலத்தோர் #தேவர் #alagumuthuservai #mukkulathor #thevar
1 month ago | [YT] | 427
View 16 replies
PMT MEDIA
தேவரினம் வசிக்கும் கிராமங்களில் கட்டாயம் CCTV கேமராக்களை பொருத்துங்கள். பிறர் பிரச்சனை செய்யும் போது செல்போனில் வீடியோ எடுங்கள்.
1 month ago | [YT] | 684
View 25 replies
PMT MEDIA
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1078வது சதய விழா குறித்த PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் அறிக்கை
PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், உலகமே வியக்கும் இணையற்ற மன்னர் இராஜராஜ சோழப் பெருவேந்தரின் 1040வது சதய விழாவை முன்னிட்டு, உலகம் முழுவதும் வாழும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாபாரதத்திற்குப் பின், இந்தியாவின் நிலப்பரப்பில் இமயத்தில் புலிக்கொடி நாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழன், வெறும் மன்னர் அல்ல; அவர் ஒரு மானுட விஞ்ஞானி. அவரது ஆட்சி நிர்வாகம், கலை, கட்டிடக்கலை, சமூகநீதி, கடற்படை வலிமை என அனைத்திலும் தமிழர்களின் புகழைத் தெற்காசியா முழுவதும் பரப்பிய ஒரு தன்னிகரற்ற தலைவன். உலக அதிசயங்களில் ஒன்றான தஞ்சைப் பெரிய கோயிலை (இராஜராஜேஸ்வரம்) வெறும் ஏழு ஆண்டுகளில் கட்டி முடித்தவர் இவர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் இந்தக் கோயில், தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் நுட்பத்தின் சிகரமாகும். தமிழக வரலாற்றிலேயே முதன்முதலில் நில அளவீடு (Land Survey) செய்து, நாட்டைப் பல மண்டலங்கள் மற்றும் வளநாடுகளாகப் பிரித்து, நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தினார். ஒவ்வொரு கிராமத்திலும் குடவோலை முறை மூலம் மக்களாட்சியை நிலைநிறுத்திய உள்ளாட்சித் துறைக்கு இவர் புதிய வடிவம் கொடுத்தார். இராஜராஜரின் நாவாய்ப் படை (கடற்படை) அக்காலத்திலேயே மிகச் சிறந்ததாக விளங்கியது. லட்சத்தீவு, இலங்கை, மாலத்தீவுகள் உள்ளிட்ட பல தீவு நாடுகளை வென்று, சோழப் பேரரசை கடல் கடந்தும் விரிவுபடுத்தினார், இதனால் பன்னாட்டு கடல் வணிகம் செழித்தது. சமயப் பொறையை வளர்த்தெடுத்த மாமன்னர் இவர்; சிவன் கோவிலுக்குப் பெருங்கோயிலைக் கட்டினாலும், நாகப்பட்டினத்தில் புத்தத் துறவிகளுக்காகச் சூடாமணி விகாரத்தைக் கட்ட நிதி வழங்கி, அனைத்து மதங்களையும் சமமாகக் கண்டார்.
இந்தச் சதய நன்னாளில், மாமன்னரின் புகழைப் போற்றும் வகையிலும், வருங்காலச் சமூகத்திற்கு வழிகாட்டும் வகையிலும், தமிழக அரசுக்கு சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்கிறோம். தற்போது அரசு விழாவாகக் கொண்டாடப்படும் சதய விழா, மாமன்னர் அரியணை ஏறிய வருடமான கி.பி. 985-ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆனால், கல்வெட்டுகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்பட்ட அரசு ஆவணங்கள் மூலம், ராஜராஜ சோழனின் உண்மையான பிறந்த வருடம் கி.பி. 947 (ஐப்பசி மாதம், சதய நட்சத்திரம்) என்பது உறுதியாகியுள்ளது. கி.பி. 947-ஐ கணக்கீடு செய்தால், இந்த ஆண்டு கொண்டாடப்பட வேண்டியது 1078வது சதய விழாவாகும். எனவே, தமிழக அரசு இந்த வரலாற்றுப் பிழையைச் சரிசெய்து, மாமன்னரின் உண்மையான பிறந்த நட்சத்திர நாளான ஐப்பசி சதயத்தையே இனி அதிகாரப்பூர்வ சதய விழாவாக அறிவித்து, 1078வது சதய விழா என்ற உண்மையான கணக்கீட்டில் கொண்டாட வேண்டும். மேலும், இராஜராஜ சோழனின் நிர்வாகத் திறன்கள், கட்டிடக்கலை நுட்பங்கள் மற்றும் சமூக நல்லிணக்கக் கொள்கைகள் அடங்கிய ஒரு சிறப்புத் தொகுப்பு நூலினை அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் சேர்க்க வேண்டும். மேலும், இராஜராஜ சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நீர் மேலாண்மை மற்றும் விவசாயப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து ஆழமான ஆராய்ச்சி மேற்கொண்டு, இன்றைய நவீன விவசாயத்திற்கு ஏற்றவாறு அவற்றைச் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும், அத்துடன் அவரது கடற்படை உத்திகள் மற்றும் கடல் வணிகப் பாதைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு சிறப்பு ஆய்வு மையமும் அமைக்கப்பட வேண்டும். இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்த வலியுறுத்தி, சோழ தேச இளைஞர்கள் ஒருங்கிணைந்து, வரும் நவம்பர் 22-ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகக் கவனீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். கட்சி மற்றும் சங்கப் பாகுபாடின்றி, தமிழர்கள் அனைவரும் இந்த அறவழிப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். ராஜராஜ சோழன் விட்டுச் சென்ற நிர்வாகச் சீர்திருத்தங்கள், சமூக நல்லிணக்கம் மற்றும் வீரத்தையும் நாம் பின்பற்றினால், தமிழகம் மீண்டும் பொற்கால ஆட்சியை எய்தும் என்பதில் ஐயமில்லை. மன்னர் இராஜராஜ சோழரின் புகழ் ஓங்குக! தமிழர்களின் ஒற்றுமை நிலைக்கட்டும்!
இப்படிக்கு,
KN. இசக்கி ராஜா தேவர்,
தலைவர்,
PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்.
நாள்: 01.11.2025
Esakkiraja Esakkiraja PMT Esakkiraja #ராஜராஜசோழன் #ராஜராஜன் #கள்ளர் #rajarajacholan #rajarajan #kallar
1 month ago | [YT] | 974
View 12 replies
PMT MEDIA
வீரத்தை விலை பேச வெள்ளையன் வந்தான்! வேங்கையாய் சீறி விடுதலைக் கொடி பிடித்தீர்கள்! "மண் எங்கள் சொத்து; மானமே எங்கள் மூச்சு" என்று முழங்கியே நெருப்பாய் நீங்கள் எழுந்தீர்கள்!
சிவகங்கை சீமையைக் காக்க உயிர் கொடுத்த மாவீரர்கள்! மன்னர் முடியை துறந்து மக்களுக்கான துடிப்பை சுமந்தீர்கள்! மகுடம் உங்களுக்கில்லை – மண் மீதான பற்றே மணிமகுடம்! அதைச் சாமானியரும் உணரும் வண்ணம் வாழ்ந்து காட்டினீர்கள்!
கண்ணீரில் நனைந்ததா? இல்லை, குருதியில் பூத்ததா? சிவகங்கைத் தாயின் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க – தூக்கு மேடையும் உங்கள் வீரத்தின் எல்லைதான்; தூக்கு கயிற்றின் பிடியில் உறைந்த உங்கள் குரல் – அது சுதந்திரத்தின் முழக்கம்!
உடல் பிரிந்தாலும் மருதிருவர்களின் ஆன்மா ஓயவில்லை – ஆங்கிலேயன் மூச்சிலும் பயத்தின் அதிர்வை தந்தீர்கள்! விழுந்தது தலை அல்ல, விதையாக விழுந்தது! மரணம் உங்களுக்கில்லை, மண்ணில் நீங்கள் விதைக்கப்பட்டீர்கள்!
வருடம் பல கடந்தாலும், மருது பாண்டியர்களின் குருதிச் சிவப்பால், தமிழரின் நரம்பில் இன்னும் வீரத்தின் நாதம் கேட்கிறது!
1 month ago | [YT] | 992
View 15 replies
PMT MEDIA
YouTube-ல் தொடங்கிய பயணம்... Facebook-ல் 50,000 உறவுகளாய் வளர்ந்துள்ளது!🚀
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! 👋
எங்கள் PMT Media YouTube சேனலுக்கு நீங்கள் தந்த அதே அன்பு, இப்போது எங்கள் Facebook பக்கத்தையும் ஒரு மாபெரும் இடத்திற்கு இட்டுச் சென்றுள்ளது! ஆம், சரியாக ஒரு வருடத்தில், நாங்கள் 50,000 பின்தொடர்பாளர்கள் (Followers) என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறோம்!
இந்த வெற்றிக்குக் காரணம் உங்கள் அசைக்க முடியாத ஆதரவு மட்டுமே! நீங்கள் லைக் செய்தீர்கள், ஷேர் செய்தீர்கள், கமெண்ட் செய்தீர்கள், மேலும் எங்கள் தகவல்களை உங்கள் நண்பர்களிடமும் கொண்டு சென்றீர்கள்.
உங்களுக்கு மீண்டும் ஒருமுறை எங்களின் மனமார்ந்த நன்றி! 🙏
YouTube-ல் உள்ள எங்கள் தரமான உள்ளடக்கங்களை Facebook-லும் கொண்டு வந்து, மேலும் சுறுசுறுப்பாகவும், பயனுள்ளதாகவும் செயல்பட உறுதி அளிக்கிறோம்.
தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்! PMT Media குடும்பம் மேலும் வளரட்டும்! ❤️
#50KFollowers #PMTMediaTamilnadu #YouTubeToFacebook #DoubleTheFun #ஒருவருடவெற்றி #நன்றிஉறவுகளே #PMT #PMTMedia
1 month ago | [YT] | 370
View 12 replies
PMT MEDIA
காலக் களத்தில் ஒரு வீரன்!
நிலையாமை உணர்!
விண் தொட்டு நிற்கும் வீரம்! உலகின் விதிகளையும் மாற்றும் வேகம்! — அதுவும் காலம் எனும் அனல்முன் கருகிப் போகும்! மண்ணில் எழும் மாவீரனும் ஒருநாள் மண்ணுக்குள் கறைந்து போவான், மறுக்க ஏதுமில்லை! நிலையாமையின் உச்சம் இது! நெஞ்சே, உணர்! இந்த நிதர்சனம் கண்டு, இன்னும் நீ வீறு கொள்!
இலக்கின் தீச்சுடர்!
களமாடும் போதில், கண்ணிமைப் பொழுதும் கணக்குக்குள் இருக்க வேண்டும்! — வீண் ஆரவாரம் விடுத்து, அக்னி மூச்சுடன் இறுதி வெற்றிக்கு எதுவோ தேவை, அந்த ஒரே செயலில் உன் உணர்வெல்லாம் திரட்டு! வெற்றியின் வேட்கையில் உன் வேர் பலம் காட்டிடு! கவனம் சிதறாதே! இலக்கு மட்டுமே உன் உயிர்!
அறத்தின் ஆயுதம்!
குருதி கொதிக்கும் போர்க்களம்! கோபம் குமுறும் புயலாய் நீ எழுந்தாலும் — உன் வாளின் இலக்கு வேறாக இருக்கட்டும்! அழிப்பதற்கல்ல உன் எழுச்சி! அமைதியை அங்கேயே கொண்டு வருவதற்கே சண்டையிடு! போரை முடிப்பதற்காகப் போரிடு! உன் ஆயுதத்தின் ஒரே நோக்கம் அறமாகட்டும்!
மௌனத்தின் மாட்சி!
பேச்சுகள் ஓயட்டும்! போராட்டத்தின் சத்தங்கள் அடங்கட்டும்! — பல நேரங்களில், நீயே ஒரு பேரமைதி ஆகிவிடு! உள்ளிருக்கும் சலனங்கள் முழுதும் ஓய்ந்தாலே, விடைதேடும் வினாக்களுக்குச் சத்யத்தின் ஒளி பிறக்கும்! வெளியே தேடும் ஞானம் உனக்குள் வந்து குவியும்! மௌனமே மகத்தான சக்தி! மனதில் அதை ஏந்திடு!
இரா. ஆறுமுகச் செல்வன்
PMT Media
2 months ago | [YT] | 209
View 9 replies
PMT MEDIA
நமது முன்னோர்களின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அதன் ஒரு பகுதியாக வரும் மருது பாண்டியர்கள் குருபூஜை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி ராஜராஜ சோழன் சதய விழா ஆகியவைகளை முன்னிட்டு அந்தந்த ஊர்களில் நடைபெறும் விழாக்களில் மாணவ மாணவிகளுக்கு நமது முன்னோர்களின் தலைப்புகளை கொடுத்து அதில் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி போன்றவற்றை நடத்துங்கள் அவற்றை பெரிய அளவில் விளம்பரப்படுத்துங்கள். ஆடம்பரமாக அனாவசியமாக செலவழிப்பதை விட நமது சமூக மக்களிடம் வரலாற்றை கொண்டு செல்லும் விதமாக அத்தியாவசியத்திற்கு செலவளியுங்கள். ஊரில் உள்ள பெரியவர்களை அழைத்து நமது வரலாறு குறித்தும் நமது முன்னோர்களின் தியாகங்கள் குறித்தும் ஒவ்வொரு ஊரின் பாரம்பரியம் குறித்தும் மேடைகளில் பேச வையுங்கள்.
2 months ago | [YT] | 1,000
View 22 replies
Load more