இரவுபூத்த அல்லி கருக்கலோடு வெள்ளி
சோலை யாடுமயில் பாலை யோடுவெயில்
சுனையில் நீரும் பனையில் சாறும்
அழகுடன் முரண்பட ஆண்டவன் படைத்தான்
படைத்தவன் படைத்தான் என்னையும் கூட
பழம்நிறை மரத்தில் பறவையைப் போல
உயிர்த்தீ எரிய விறகும் தந்தான்
உயர்த்திடும் காலமும் ஒருநாள் தருவான்.
- வியன்