கணபதியை வணங்கி ஒரு செயலை செய்யத் தொடங்கினால், அச்செயல் வெற்றியாக முடியும். அதற்காகவே நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குகிறோம். உலகில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவரே விநாயகப் பெருமான்தான். வேத வியாசர் மகாபாரதத்தை சொல்லச்சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதியவர் பிள்ளையார்.
விநாயகர் வழிபாட்டில் அருகம்புல்லுக்கு தனி இடம் உண்டு. இதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஒருமுறை அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கினார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன், மிக அதிகமாக அனலைக் கக்கினான். அந்த சூட்டைத் தணிக்க அருகம்புல்லை விழுங்கினார் விநாயகர். உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல், இதன் மூலம் விநாயகர் வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றது. பூவை விட, அருகம்புல் வைத்து பிள்ளையாரை வழிபடலாம்.
Shared 5 months ago
120 views