NTK palacode நாதக பாலக்கோடு

தமிழ் தேசியவாதி Tamil Nationalism

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறுப்பினர்

தகவல் தொழில்நுட்ப பாசறை


NTK palacode நாதக பாலக்கோடு

மழை காலங்களில் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலையில் உள்ள கழிவு நீரை தென்பெண்ணை ஆற்றில் கலந்து விட்டு தமிழர்களின் மீது ஒரு மறைமுக தண்ணீர் போரை தொடங்கியுள்ளது கர்நாடக அரசு.

கிருஷ்ணகிரி அணையில் உள்ள மீன் அனைத்தும் செத்து கிடக்கிறது.
தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1 year ago | [YT] | 27

NTK palacode நாதக பாலக்கோடு

தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிப்பதா? தேர்தல் முடிந்ததும் தனது உண்மை முகத்தைக் காட்டுகிறாரா பிரதமர் மோடி?

ஒரிசாவில் தேர்தல் பரப்புரை செய்த பிரதமர் நரேந்திரமோடி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுடைய கருவூலத் திறவுகோல் தமிழ்நாட்டிலிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி, தனது அரசியல் தன் இலாபத்துக்காக பன்னிரண்டு கோடி தமிழ்த்தேசிய இன மக்களையும், அவர்களது வரலாற்றுத்தாயகமான தமிழ்நாட்டையும் கொச்சைப்படுத்திப் பேசியிருக்கும் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகிற்கு நாகரீகத்தையும், பண்பாட்டையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் கற்றுத் தந்த மரபார்ந்த இனம் தமிழ்ப்பேரினமாகும். மானத்தையும், வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி, அறத்தின் வழிநின்று வாழ்கிற பெருங்கூட்டத்தினர் தமிழர்கள் நாங்கள். அத்தகைய இனக்கூட்டத்தின் மீது போகிறப் போக்கில் திருட்டுப்பழியைச் சுமத்த நினைக்கும் பிரதமர் மோடியின் பேச்சு அற்பத்தனமானதாகும். தமிழ்நாட்டுக்குப் பரப்புரைக்கு வருகிறபோதெல்லாம் தமிழ்மொழியையும், தமிழர்களையும் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, ஒரிசாவில் தமிழர்களை இழிவாகக் காட்ட நினைக்கிறாரென்றால், எவ்வாறு இதனைச் சகித்துக் கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதெனும் துணிவில், தனது உண்மை முகத்தை வெளிக்காட்டத் தொடங்குகிறாரா பிரதமர் மோடி? இவ்வளவு நாட்களாக இசுலாமிய மதவெறுப்பை உமிழ்ந்துப் பரப்புரை செய்தவர், இப்போது அத்தோடு சேர்த்து தமிழர் இன வெறுப்பையும் காட்டியிருப்பது மிகவும் கீழ்த்தரமானதாகும்.

ஆகவே, தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிக்கும் விதமாகப் பேசிய நரேந்திரமோடி, தனது பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, ஒட்டுமொத்த தமிழர்களிடம் வெளிப்படையான மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இதற்கான எதிர்விளைவுகளை வருங்காலத்தில் பாஜகவானது தமிழ்நாட்டில் எதிர்கொள்ள நேரிடுமென எச்சரிக்கிறேன்.

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

1 year ago | [YT] | 60

NTK palacode நாதக பாலக்கோடு

அப்படி தான் ஆள்வோம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒடிசாவை விட்டு ஓடுங்கள்,தமிழன் ஒருவன் அதிகாரம் மிக்க பதவிக்கு வருவதை ஆரியமும் சரி திராவிடமும் என்றைக்கும் விரும்பாது,அதை தடுக்க அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் அமித்ஷாவின் கருத்து சரி என்றாலும் அதை சொல்லும் தகுதி அவருகில்லை.
-மகிழன்

1 year ago | [YT] | 56

NTK palacode நாதக பாலக்கோடு

16-05-2024 அன்று தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதி நெருப்பூர் மற்றும் ஒட்டனூர் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று விவசாயிகளை அவர்களின் ஊரில் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து பிறகு மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதியை வேட்பாளர் அபிநயா மாநில குருதி கொடை பாசறை செயலாளர் அண்ணன் அரிமா.செந்தில்நாதன் உழவர் பாசறை மாநில துணை தலைவர் தமிழரசன் தகடூர் சா. தமிழரசன் கொங்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆனந்தன் Anandhan Perumal மு சந்தோஷ்குமார் Mohan Mohan நல்லாம்பட்டி நா.கோவிந்தன் பென்னாகரம் மற்றும் பாலக்கோடு தொகுதி பொறுப்பாளர்கள் வெ.திரு நீலகண்டன் Kutti Perumal Vignesh ஒன்றிய பொறுப்பாளர்கள்
Barath Raj Govind தர்மபுரி மாவட்ட மற்றும் மேட்டூர் தொகுதி பொறுப்பாளர்களுடன் கள ஆய்வு செய்த போது.

1 year ago | [YT] | 52

NTK palacode நாதக பாலக்கோடு

சிலந்தை ஆற்றில் அணை கட்டும் பணி!
தொடர்ந்து நதிநீர் உரிமைகளை பக்கத்து மாநிலங்களில் விட்டுக்கொடுக்கும் திமுக அரசு
உடனடியாக அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்தப்படுமா?

1 year ago | [YT] | 22

NTK palacode நாதக பாலக்கோடு

பாதிக்கப்பட்ட ஒகேனக்கல் மக்களுடன் தர்மபுரி நாம் தமிழர் கட்சியினர் கள ஆய்வு.

1 year ago | [YT] | 96

NTK palacode நாதக பாலக்கோடு

5 நாட்களுக்கு முன்னால் வனத்துறையால் ஒகேனக்கல்லில் வீடுகள் இடிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளான மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக ஆதரவு தெரிவித்தோம். உடன் தர்மபுரி வேட்பாளர் அபிநயா மற்றும் கிருஷ்ணகிரி வேட்பாளர் வித்யா வீரப்பன், மாநில குருதி கொடை பாசறை ஒருங்கிணைப்பாளர் அரிமா.செந்தில்நாதன் மற்றும் தர்மபுரி நாம் தமிழர் உறவுகள்.

1 year ago | [YT] | 62

NTK palacode நாதக பாலக்கோடு

வளையொலியை (YouTube) ஊடகமாகப் பயன்படுத்தி முதல் தமிழ் வலையொளி ஊடகத்தை உருவாக்கி, அனைத்துத் தமிழ் வலையொளியாளர்களுக்கும் முன்னத்தி ஏராக விலங்கும் ரெட்பிக்சு பெலிக்சு அவர்களை அரசியல் காரணங்களுக்காக கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

1 year ago | [YT] | 44

NTK palacode நாதக பாலக்கோடு

பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை கட்டி தமிழ்நாட்டை பாலைவனமாக்கிய கட்சிகள் காங்கிரசும், தெலுங்கு தேசமும்.

குப்பம் தொகுதியில் 215 கோடி செலவில் 23வது அணை கட்டப் போகிறார்கள்.

தமிழினத்தை வஞ்சிக்கும் சந்திரபாபு நாயுடுவிற்கு ஆதரவாக பாமக தேர்தல் பரப்புரை செய்வது பச்சைத் துரோகமே!

-கதிர் நிலவன்

1 year ago | [YT] | 50

NTK palacode நாதக பாலக்கோடு

ஆந்திர காட்டிற்குள் மரம் வெட்ட கூலி வேலைக்கு சென்ற தமிழர்களை, சுட்டு கொலை செய்த (தெலுங்கு தேசம் கட்சி) சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய எப்படி அன்புமணி அவர்களுக்கு மனம் வருகிறது??

இதெல்லாம் தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம்.

1 year ago | [YT] | 33