இந்தியாவில் வாழும் என் அன்பு சொந்தங்களே,
நம் தேசம் இதற்கு முன்பாக போலியோ என்னும் கொடிய நோயிலிருந்து முழுவதுமாக விடுபட்டது.உலக நாடுகளுடன் பொருத்திப் பார்க்கும்போது நம் இந்தியா பூஜ்ஜியம் அளவில் போலியோ என்று மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது.ஆனால் அதை காட்டிலும் மிக கொடிய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ரத்த சோகை எனப்படும் அனிமியா பெருமளவு நம் பாரத தேசத்தை ஆக்கிரமித்து உள்ளது.நம் இந்திய பாரத தேசத்தின் முதுகு எலும்பு என்பது விவசாயத்தை சார்ந்துள்ளதுஅதுபோல ஒவ்வொரு குடும்பத்தின் முதுகெலும்பு என்பது அந்த வீட்டின் பெண்ணையே சார்ந்துள்ளது.அத்தகைய மதிப்புமிக்க பெண்களை அடியோடு சாய்க்கும் முக்கிய வியாதிகளில் ஒன்றுதான் இந்த அனிமியா.ஒரு வீட்டின் பெண்ணின் ஆரோக்கியம் கெடுமானால் அது அந்த குடும்பத்திலே பாதிக்கும்.ஆகையினால் என்னுடைய சிறிய முயற்சி ஆக நம் பாரத தேசத்தை 2030க்குள் ஜீரோ அனிமியா என்ற வெற்றி பயணத்தை நோக்கி பயணிக்க உள்ளேன்.நீங்களும் என்னுடன் சேர்ந்து 2030க்குள் ஜீரோ அனிமியா என்ற வெற்றி இலக்கை அடைய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.