Vanniyar News வன்னியர் நியூஸ்

Vanniyary News
வன்னியர் செய்திகள்
Vanniyar sangam
Anbumaniramadoss
Vanniayr song


Vanniyar News வன்னியர் நியூஸ்

தலைவர் Anbumani Ramadoss MP அவர்கள், குடும்பத்துடன் மேல்மருவத்தூர் திரு.பங்காரு அடிகளார் அவர்களிடம் ஆசி பெற்று, அம்மனை தரிசனம் செய்த நிகழ்வு.!


https://youtu.be/buYF39NeIlA?si=JbIur...

2 years ago | [YT] | 23

Vanniyar News வன்னியர் நியூஸ்

வன்னியர் சங்க 💛❤🔥
கட்டிடத்தை இடிக்க கூடாது
என இடைக்கால உத்தரவு பிறபித்து ,
வழக்கை வரும் 22 ஆம் தேதி ஒத்திவைப்பு..!

2 years ago | [YT] | 45

Vanniyar News வன்னியர் நியூஸ்

ஆவணப்படம் NLC வாழ்வை இழந்த கடலூர் மக்கள்
youtube.com/live/RGmj2WR75Tc?feature=share

2 years ago | [YT] | 40

Vanniyar News வன்னியர் நியூஸ்

தென்பெண்ணை ஆறு விழுப்புரம் பிடாகம் ஆற்றுப் பொங்கல் திருவிழா

2 years ago | [YT] | 1

Vanniyar News வன்னியர் நியூஸ்

!! அய்யாவின் ஆத்திச்சூடி !!

1. அமாவாசையும், பெளர்ணமியும் கட்சியின் செயற்குழு கூட்டத்தால் நிறையட்டும்!

2. அரசாங்கம் போல் உழைத்தால் அரசாங்கம் நிச்சயம்!

3. அனைவரும் சமமே!

4. அனைத்து சமுதாயங்களுக்கும் உரிய இடப்பங்கீட்டை பெறுவதே நமது கொள்கை!

5. ஆக்கப்பூர்வமாக கட்சிப் பணி செய்!

6. ஆட்சியமைப்பதே இலக்கு.... அதை நோக்கியே நமது உழைப்பு!

7. இன்றே செய்... நாளைக்கு ஒத்திவைக்காதே!

8. உடற்பயிற்சி செய்... உடலையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்திரு!

9. ‘‘உயிரைத் தருகிறோம்... தமிழைத் தா’’ என்று முழங்கியவர்களில் பலர் மறைந்து விட்டனர்... ஆனால், தமிழ் தான் இல்லை!

10. உழைத்தால் மட்டுமே உயர்வு... சோம்பித் திரிந்தால் தாழ்வு!

11. உழைப்பே உன்பெயர் தான் ஜி.கே. மணியா?

12. உழைப்பே எங்கள் மூலதனம்!

13. உன் ஊரில் ஒரு பிரச்சினை என்றால், முதல் ஆளாக சென்று உதவி செய்!

14. உன்னால் முடியாதது எதுவும் இல்லை!
15. ஊக்கப்படுத்து... உனக்கு கீழ் உள்ளவர்களை!

16. எல்லோரிடமும் நட்பு கொள்!

17. ஏணியாய் இருந்தவர்களை எட்டி உதைக்காதே!

18. ஒவ்வொரு ஊரிலும் கட்சிக்கு பெயர்ப்பலகை திற... ஒவ்வொரு தெருவிலும் கொடி ஏற்று!

19. ஒன்றுபட்டு கட்சிக்காக உழை!
20. ஓட்டுக்களைச் சேர்... கட்சிக்காக!

21. கட்சிப் பணிகளில் பிள்ளையாராக இருக்காதே...முருகனாய் இரு!

22. கண்ணாடி முன் பயிற்சி கட்சியை வளர்க்கும்!

23. காலம் கனிந்திருக்கிறது... காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!

24. காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்!

25. காழ்ப்புணர்ச்சிக் கொள்ளாதே!
26. குடும்பத்திற்காக சிறிது நேரத்தை செலவிடு!

27. கோஷ்டி அரசியல் செய்யாதே... ஒன்றுபட்டு கட்சிப் பணியாற்று!

28. ச.மூ.ச சமூகத்தை உயர்த்தும்!

29. சுலபமாய் வெற்றி கிடைக்காது...
கடுமையாக உழைக்க கற்றுக் கொள்!

30. சோம்பல் என்பது எங்கள் கட்சியில் இல்லை!

31. நீ ஒருவன் தான்.... ஆனால், உன்னால் 1000 ஓட்டு நிச்சயம்!

32. தமிழைத் தேடி அலைகின்றோம்....இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!

33. தாய் வளர்த்து நாம் வளர்ந்தோம்... தமிழ் வளர்த்து நாம் வாழ்வோம்!

34. தினமும் 10 பேரிடம் பாமகவின் சாதனைகளையும், கொள்கைகளையும் சொல்.!அவர்களில் குறைந்தபட்சம் ஒருவரை கட்சியில் உறுப்பினராக சேர்!

35. பா.ம.க.வின் கொள்கைகளே.... கடைபிடிக்கப்பட வேண்டிய கொள்கைகள்!

36. பெண் குழந்தைகளை பெண் குழந்தைகள் என்று சொல்லாதீர்கள்... பெண் தெய்வங்கள் என்று சொல்லுங்கள்!

37. பெண் குழந்தைகளை பெண் தெய்வங்களாக மதித்து வளர்ப்போம்!

38. மக்களை சந்தி... அவர்களின் மனங்களை வெல்!

39. மகளிருக்கு மரியாதை கொடு.... அவர்களை தெய்வமாக வணங்கு!

40. மண்ணுக்கும், மனிதருக்கும் தீங்கு செய்ய எவரேனும் முயன்றால் அதை முறியடிக்க போராடு!

41 மரம் வளர்க்கும் அறமே, மாபெரும் அறம்!

42. மரம் வளர்ப்பதை முதன்மைக் கடமையாகக் கொள். பிறந்தநாளுக்கும், திருமண நாளுக்கும் தவறாமல் மரக்கன்று நடு!

43. முடியாது என்ற சொல் எங்கள் அகராதியில் இல்லை!

44. வன்னியர்களின் முன்னேற்றத்திற்கான நன்மருந்து 10.5% இடஒதுக்கீடு!

45. விடியலுக்காக காத்திருக்கிறோம்... விடியலுக்கு வெகுதூரமில்லை!
***************

#PMK2026 #Ayya #அய்யா #PMK2_0

2 years ago | [YT] | 7

Vanniyar News வன்னியர் நியூஸ்

கல்விக் கோவிலிற்கு மருத்துவர் ஐயாவிடம் ஒரு லட்சம் நிதியளித்தார் சேலம் வீரபாண்டியாரின் புதல்வர் மருத்துவர் பிரபு.

இயற்கையாக பழுக்கும் மாம்பழங்களில் சேலத்திற்கு என்றும் தனிமதிப்புண்டு.

#PMK #Villupuram_PSMF #VN_News #salem

2 years ago | [YT] | 66

Vanniyar News வன்னியர் நியூஸ்

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.!
மக்களை ஆசை காட்டி ஏமாற்ற முடியாது:
சுற்றுச்சூழலை சூறையாடும் என்.எல்.சி
வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம்!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்.எல்.சியின், சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தர மறுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை அல்லது நிதி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் ஆசைகாட்டியிருக்கிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக ஏமாற்றத்தையும், துரோகத்தையும் மட்டுமே பரிசாக அளித்த என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு கடலூர் மாவட்ட மக்கள் ஏமாற மாட்டார்கள்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத ஒப்பந்த வேலை, அதை விரும்பாதவர்களுக்கு மொத்தமாகவோ, மாத வாரியாகவோ ஒரு சிறிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் கொடுத்த மக்களை சுரண்டி, லாபம் ஈட்டி வரும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு, சுரண்டப்பட்ட மக்கள் மீது திடீர் கரிசனம் ஏற்பட்டிருப்பதும், என்.எல்.சிக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட மக்களை ஆசை காட்டி ஏமாற்ற மாவட்ட நிர்வாகம் ஆட்சியர் தலைமையில் களமிறங்கியிருப்பதும் வியப்பளிக்கவில்லை. மக்களை ஏமாற்றும் இம்முயற்சி பயனளிக்காது.
என்.எல்.சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிலங்கள் சுமார் 25,000 குடும்பங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அந்த குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ள 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்று வரை வேலை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
அப்போதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வழங்க முன்வராத என்.எல்.சி நிறுவனம், இப்போது அந்நிறுவனம் வெளியேற வலியுறுத்தி எனது தலைமையில் பா.ம.க. இருமுறை போராட்டம் நடத்திய பிறகும், நிலங்களை வழங்க முடியாது என்று கூறி அளவிட வரும் அதிகாரிகளை பொதுமக்கள் திருப்பி அனுப்பிய பிறகும் தான் என்.எல்.சி இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கிறது. இதிலிருந்தே என்.எல்.சி நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நோக்கம் என்ன? என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
இப்போதும் கூட நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 23,000-க்கும் கூடுதலான குடும்பங்களில் வெறும் 1000 பேருக்கு மட்டுமே வேலை வழங்க என்.எல்.சி முன்வந்திருக்கிறது. அதுவும் எந்த உத்தரவாதமும் இல்லாத ஒப்பந்த வேலை தான். அவ்வாறு தரப்படும் வேலை அடுத்த 99 நாட்களில் கூட பறிக்கப்படக் கூடும். 50 ஆண்டுகளாக தங்களை சுரண்டிய என்.எல்.சி. இப்போது தங்கள் மீது அக்கறை காட்டுவதை போல நாடகமாடுவதை மக்கள் நம்ப மாட்டார்கள்; அவர்கள் என்.எல்.சி மீது நம்பிக்கையிழந்து விட்டனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் வழிகாட்டுதலில் தான் அனைத்து பணிகளும் நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதே அமைச்சர்கள் தான் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், இப்போது என்.எல்.சிக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கின்றனர். வாக்களித்த மக்களின் நலன்களுக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ள அவர்கள் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர். அவர்களின் முயற்சிகள் பலிக்காது.
உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. அதற்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பவை நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட படிம எரிபொருட்கள் தான். அதிலும் குறிப்பாக நெய்வேலியில் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி எரிதிறன் குறைந்தது என்பதால் சுற்றுச்சூழலுக்கு கூடுதல் கேட்டை விளைவிக்கும். புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த படிம எரிபொருள் பயன்பாட்டை குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஒரு காரணத்திற்காகவே என்.எல்.சி நிறுவனத்தை மூட வேண்டும்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக நிலத்தடி நீரை உறிஞ்சி நீர்மட்டத்தை 1000 அடிக்கும் கீழே தள்ளியுள்ளது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும் சீரழித்து பாலைவனமாக்கி வருகிறது. என்.எல்.சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது தான் அனைத்து வகை சிக்கல்களுக்கும் தீர்வு. அதன் மூலம் தான் கடலூர் மாவட்டத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.
என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுக்கும்படி மக்களை நெருக்கடிக்குள்ளாக்க கடலூர் மாவட்ட ஆட்சியரோ, நிர்வாகமோ முயன்றால் அதை பாட்டாளி மக்கள் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களையும் காப்பாற்றுவதற்காக என்.எல்.சியை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.!

https://youtu.be/2EKIDb3viSM

3 years ago | [YT] | 27

Vanniyar News வன்னியர் நியூஸ்

மகளிர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்

youtube.com/shorts/Uv1oN3Hm4N...

3 years ago | [YT] | 2

Vanniyar News வன்னியர் நியூஸ்

மாவீரன் ஜெ.குரு அவர்களின் சிறந்த பாடல்கள்

https://www.youtube.com/watch?v=kRed8...

3 years ago | [YT] | 9

Vanniyar News வன்னியர் நியூஸ்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற தீர்ப்பினை மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இது சமூக நீதிக்கு எதிரானது கண்டனம் செய்துள்ளார்

https://youtu.be/zqNdjrr-CMA

3 years ago | [YT] | 13