என் தமிழ்நாடு

தமிழர் உரிமை மீட்பு களம்



என் தமிழ்நாடு

பிக் பாஸ் உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கின்ற போராட்டம் நியாயமான மக்களுக்கான போராட்டமாக இருக்கும். துடைப்பத்துடனும், செருப்புகளுடனும் எங்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி போராட்டத்தை முன்னெடுக்கும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர்
முத்தமிழன் திரு.தி.வேல்முருகன் அவர்கள்.
Velmurugan.T
#legendary_speech_of_velmurugan
#leader_of_tamilnadu_velmurugan_mla
#protector_of_tamilnadu #TVKITWING #தி_வேல்முருகன் #TVKparty
#leader_of_tamilnadu
#தமிழர்களின்_உரிமைக்குரல்
#தமிழர்களின்_பாதுகாவலன் #தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி #thamizhaga_vaazhvurimai_கட்சி

1 month ago | [YT] | 1

என் தமிழ்நாடு

ஒன்றிய அரசே!

"டிஜிட்டல் இந்தியா" திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக, யூ.பி.ஐ. (Unified Payments Interface) முறையைப் பயன்படுத்தி, பெருமளவிலான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. பேடிஎம், போன் பே, ஜி.பே, ஏர்டெல் பே, வாட்ஸ்அப் பே போன்ற பல நிறுவங்களுக்குப் பணப் பரிமாற்ற உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் மிக முக்கியமான முன்னேற்றம் கண்டுள்ளோம் என்றாலும், இதன் எதிர்விளைவாக யு.பி.ஐ. மோசடிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. மோசடியாளர்களால், நடுத்தர வர்க்க மக்களும், சிறு மற்றும் குறு வணிகர்களும் குறிவைக்கப்பட்டு, அவர்கள் உழைத்துச் சேர்த்தப் பணத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விதமான மோசடிகளில், பொதுமக்களின் தனிப்பட்டத் தகவல்கள், கீழ்க்கண்ட வழிகளின் மூலமாக சுலபமாக திருடப்படுகின்றன.

போலி வங்கி அழைப்புகள் (Phishing),

QR Code மூலம் பணம் திருடல்,

SIM swap வழியாக OTP கைப்பற்றல்,

போலியான UPI Apps மூலம் தகவல் திருடல்,

இதன் விளைவாகப் பலர், தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கிறார்கள். மோசடிகளால் மக்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். பொதுமக்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது.

எனவே,
டிஜிட்டல் மோசடிகள் குறித்தச் சட்டங்களை, இழுபறி இல்லாமல் முற்றிலும் புதுப்பிக்க வேண்டும் என்றும்,

தற்போதைய ஐ.டி சட்டம் , மிகப் பழையது. UPI மோசடியாளர்களைக் குறிவைக்கும் தனிச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும்,

பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், UPI பரிவர்த்தனைகளுக்குக் காப்பீட்டு ஒழுங்கமைப்புகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும்,

மோசடியால் ஏமாற்றப்பட்ட மக்களின் இழப்புக்கு வங்கி அல்லது சேவை வழங்குநர், பொறுப்பேற்க வேண்டும் என்றும்,

அரசு அதிக அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்றும்,

ஊரகப்பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும்,

போலியான நுகர்வோர் தொடர்பு எண்கள், போலியான செயலிகள், போலியான இணையப் பக்கங்களைத் தடுக்கும் வகையில் கடுமையானச் சட்ட வடிவங்களை, தண்டணை நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும் என்றும்,

இணைய மோசடிகள் குறித்துப் புகார் தெரிவிப்பதற்கானத் தொடர்பு எண்ணின் (1930) செயல் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் , தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது

நாட்டின் வளர்ச்சி டிஜிட்டலாக இருந்தாலும், மக்கள் பாதுகாப்பும் அதே அளவில் டிஜிட்டல் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அரசின் கடமை.

தமிழக நலனைக் காக்க,
தமிழர் வாழ்வுரிமையை மீட்க

1 month ago | [YT] | 0

என் தமிழ்நாடு

“பெண்கள் முன்னேற்றம் – தமிழக முன்னேற்றம்!”
ஆண்களுக்கும் பெண்களுக்கும்,சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் உறுதி.
#tvk #Velmurugan
#womenempowerment2025
#EqualityForAll
#TamilnaduNews

2 months ago | [YT] | 0

என் தமிழ்நாடு

ஜிஎஸ்டி குறைப்பா?
ஒன்றிய அரசின் சூழ்ச்சியா?
ஒன்றிய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரிக் குறைப்புச் செய்தி, மக்களுக்கு நிம்மதி அளிக்கும் முடிவு அல்ல. மாறாக, மக்களை ஏமாற்றுவதாகவே கருதமுடியும்.
கடந்த எட்டு வருடங்களாக, ஜிஎஸ்டி என்ற பெயரில், மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டே வந்துள்ளது ஒன்றிய அரசு. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், எதிலும் கூடுதல் சுமைத் திணிக்கப்பட்டது. இதன் விளைவாக, சாதாரண மக்களின் குடும்பச் செலவுகள் வானளவு அதிகமாகின. சிறு வியாபாரிகள், சுய தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் எவரும், இந்த ஜிஎஸ்டி சுமையிலிருந்துத் தப்பவில்லை.
இப்போது சில சதவீதம் வரியைக் குறைத்துக் கொண்டு, “மக்களுக்கான நிவாரணம்” என விளம்பரம் செய்வது, தீ வைத்த இடத்தில், சிறிதளவு தண்ணீர் தெளித்து “நாங்கள் காப்பாற்றிவிட்டோம்” எனக் கூறுவது போன்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கேள்விகள் தெளிவானவை.
கடந்த எட்டு ஆண்டுகளாக மக்களிடம் இருந்து வசூலித்த அதிகப்படியான ஜிஎஸ்டி தொகையைத் திரும்பக் கொடுக்குமா, ஒன்றிய அரசு?
மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களிலிருந்து, ஏன் ஜிஎஸ்டியை முழுமையாக நீக்கக் கூடாது?
ஜிஎஸ்டி நடைமுறையில் வந்த பின், மாநில அரசுகளின் நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. வருவாய் ஈட்டும் அதிகாரம் மாநிலங்களிடம் இருந்துப் பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசின் கையில் சுருண்டு விட்டது. மாநில நலனைக் குறைக்கும் இந்த ஆதிக்கச் சட்டத்தை, ஒன்றிய அரசிற்குத் திருத்தக்கூடியத் துணிவு உண்டா?
ஜிஎஸ்டி குறைப்பு என்பது, ஒரு அரசியல் நாடகம். தேர்தல்களை முன்னிட்டு மக்களை மயக்கவே, இதுபோன்ற அறிவிப்புகள் வெளிவருகின்றன. ஆனால் உண்மையில் மக்கள் சந்திக்கும் துயரங்கள், குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள், வியாபாரிகள் அனுபவிக்கும் வீழ்ச்சிகள், இவையெல்லாம் ஒன்றிய அரசின் கொடூரமான வரிக் கொள்கையின் நேரடி விளைவுகளே. மக்களை ஏமாற்றும் இந்தப் போலியான ஜிஎஸ்டி குறைப்பு நாடகத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கையுடன் கண்டிக்கிறது.
அதே வேளையில்,
மக்களின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியமானப் பொருட்களுக்கு எந்தச் சூழலிலும் ஜிஎஸ்டி விதிக்கக் கூடாது என்றும்,
மாநிலங்களின் நிதி உரிமை, மீண்டும் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும்,
கடந்த எட்டு ஆண்டுகளில் மக்கள் மீது திணிக்கப்பட்ட அநியாய வரிச் சுமைகளுக்காக, மக்கள் முன் ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

2 months ago | [YT] | 1