saavbtrust

ஆஷாட‌ நவராத்திரி விழா அழைப்பிதழ். அனைவரும் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து வாராஹி அன்னையின் ஆசி பெறும் படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

9 months ago | [YT] | 3

saavbtrust

SrimMahesh Samyji #0m_siva_siva_om

#ஒம்_ஸ்ரீ_குருப்யோ_நமஹ

#வாராஹி_அம்மனுக்கு_இந்த_தீபம்_ஏற்றி_கோரிக்கை_வைத்து_உங்கள்_விருப்பத்தை_கேட்டால்_போதும்.

நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ
அது உடனே நடந்து விடும்.

எதிரிகளை தூள்தூளாக உடைத்தெறிபவள் வராகியம்மன். எவர் ஒருவர் மற்றவருக்கு தீமை செய்கின்றாரோ அவர் இருந்த இடம் தெரியாமல் சுக்குநூறாக மாற்றி விடுவாள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எதிரிகள் இல்லாமல் இருப்பதில்லை. எதிர்பாராத சூழ்நிலையில் நாம் நன்றாக பழகுபவர் கூட நமக்கு எதிரியாக மாறி விடுகிறார்கள். அதேபோல என்னதான் நட்பாக பழகினாலும் பிரச்சனை என்று வரும் பொழுது நம்மை விட்டு விலகிச் செல்பவர்கள் தான் அதிகம். அதிலும் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று கூட அவர்கள் யோசிக்காமல் எனக்கு இப்பொழுதே இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பார்கள்.

இப்படி பிரச்சனையை சமாளிக்க முடியாமலும், கேட்பவர்கள் மீது கோபப்படாமலும் அந்த சூழ்நிலையை எப்படி சரி செய்ய வேண்டும் என்று நாம் குழம்பிப் போய் நிற்போம். இப்படிப்பட்ட நேரங்களில் நமது மனதை ஒருமுகப்படுத்தி, சிறிது நேரம் எடுத்து வாராஹி அம்மனை நினைத்து, இந்த தீபத்தை ஏற்றி வர நீங்கள் நினைத்ததும், உங்களை வதைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனையும் உடனே தீர்ந்து விடும். வாருங்கள் இந்த தீபத்தை ஏற்றி வாராஹி அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

அன்று ஒரு காலத்தில் ராவணன் சீதையை கடத்திச் சென்று இலங்கையில் வைத்திருந்த பொழுது, அங்கு ஒரு சோலைவனம் இருந்தது. அந்த சோலை வனத்தில் தான் சீதா தேவி வெகு நாட்கள் இருந்தார். அப்போது அவருடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் யாரும் கிடையாது. அந்த சோலையில் இருந்த செடிகளும், மரங்களுடனும் தான் சீதா தேவி பேசிக்கொண்டிருப்பார்.

இப்படி அவர் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்த ஒரு தாவரம் மருதாணி செடி ஆகும். இந்த மருதாணி செடியுடன் சீதா பேசும் பொழுது அதற்க்கு பதில் சொல்வது போல எப்பொழுதும் இந்த மருதாணி செடியும் தலையசைத்து கொண்டிருக்கும். இதனாலேயே சீதா தேவி அங்கிருந்து வருவதற்கு முன்னர் அந்த மருதாணி செடிக்கு ஒரு வரம் கொடுத்தார்.

என் தனிமையை போக்கிய மருதாணி செடியே, உன்னையும் உனது விதை, இலை, என்று எதனை வேண்டுமானாலும் வைத்து, எவர் ஒருவர் மனமுருக பூஜை செய்கிறாரோ அவருக்கு அவர்கள் வேண்டிய வரம் அனைத்தையும் நான் கொடுத்திடுவேன். என்று மருதாணி செடிக்கு ஒரு வரம் கொடுத்து சென்றார். எப்படி லட்சுமி தேவிக்கு துளசி இலை உகந்ததோ, அதுபோல வாராஹி அம்மனுக்கு மருதாணி இலை மிகவும் உகந்ததாகும்.

எனவே எப்பொழுதும் போல பூஜைக்கு தேவையான அனைத்து வித வேலைகளையும் செய்துவிட்டு, ஒரு தாம்பூலத்தட்டிற்க்கு மஞ்சள், குங்கும பொட்டு வைக்க வேண்டும். பின்னர் அதன் மீது ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலைகளை தூவி கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு மேல் ஐந்து கிராம்பு மற்றும் 5 ஏலக்காய் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு அதன் மீது ஒரு அகல் விளக்கை வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு அதில் திரி போட்டு தீபம் ஏற்றி வாராஹி அம்மனிடம் உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ, அதனை மனதார நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இந்த ஆஷாட வாராஹி நவராத்திரி காலங்களில் செய்துவர நீங்கள் இனிமேல் நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியம் கூட விரைவாக நடந்து விடும்.

நமது பீடத்தின் இந்த (2024) ஆண்டு ஆஷாட (வாராஹி) நவராத்திரி திருவிழா மற்றும் திருக்கல்யாண வைபவ அழைப்பிதழ்.

🙏அம்மா வாராஹி என் நிலை என்னவென்று நீ அறிவாய் இதோ உன் தாமரை மலர் பாதங்களில் என் நிலைமையை சமர்ப்பித்து விட்டேன் இனி நீ பார்த்துக்கொள் தாயே.
🙏🙏🙏🙏🙏
வாராஹி வாராஹி
வார்த்தாளி வார்த்தாளி.... அஷ்வாரூட மஹா வாராஹி தாயே🙏

வாராஹி_அம்மனின்_ஆஷடா_நவராத்திரி_திருவிழா_2024

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் ஸ்ரீம்.மகேஷ்சுவாமிஜீயின் ஸ்ரீம் அன்னை அஷ்வாரூட மஹா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில் ஆஷாட நவராத்திரி திருவிழா 05.07.2024 – 15.07.2024

ஜூலை மாதம் 05 ஆனி மாதம் 21 ஆம் தேதி ஆரம்பம் ஆகி ஜூலை மாதம் 15 ஆம் தேதி ஆனி மாதம் 31 ஆம் நாள் வரை ஆஷாடா நவராத்திரி பூஜை நடைபெறும்... பதினொரு நாள் அன்னை அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனுக்கு ஹோமம், அபிஷேகம் மற்றும் விசேஷ படையல்களுடன் பூஜைகள் மிகசிறப்பாக நடைபெறும்...

திருக்கல்யாண வைபவம்

15.07.2024 திங்கட்கிழமை காலை 05:00 மணிக்கு அஷ்வாரூட மஹா வாராஹி அம்மன் சிறப்பு யாகம், காலை 10:00மணிக்கு சிறப்பு அபிஷேகம் நண்பகல் 12:00மணிக்கு அன்னப் படைப்புடன் அலங்கார தீபாராதனை மேலும் மாலை 04:00 மணிக்கு சீர்வரிசை தட்டு சுற்றிவருதல் 06:00 மணிக்கு திருக்கல்யாணம் இரவு 07:00 மணிக்கு சப்பரம் திருவீதி உலா வருதல் இரவு 09:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ அன்னப் படையல் பூஜை தீபாராதனை இரவு 09:30 மணிக்கு திருக்கல்யாண விருந்து சாப்பாட்டுடன் அன்னதானம் நடைபெறும்.

05.07.2024 ல் இருந்து ஆஷடா நவராத்திரி பூஜை நம் தாய் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீம் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனுக்கு ஹோமம், ஆவரண பூஜையென பதினோரு நாட்களும், தூத்துக்குடி விஸ்வபுரம் முதல் தெரு ஸ்ரீம்.மகேஷ்சுவாமிஜீ மகா சித்தர் தவ பீடத்தில் பூஜைகள் மிக சிறப்பாக நடைபெறும், விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் பதினோரு நாள்களுக்கும் சேர்த்து தங்களால் முடிந்தால் முடிந்த காணிக்கை செலுத்தி, அவரவர் குடும்பத்தினருக்கு சங்கல்பம் செய்து கொள்ளலாம் விருப்பம் உள்ளவர்கள்.

ஆஷாட நவராத்திரியில் செய்யும் பூஜை ஹோமம் சகல செல்வங்களும் சௌபாக்கியங்களையும் வழங்கும்...

ஹோமத்தின் பலன்கள்..

எதிரிகள் விலகி செல்வார்கள்,
ஏவல் பில்லி சூனியம் விலகும்,
எதிர்மறை எண்ணங்கள் விலகும், சர்வ மங்கள காரியங்களும் கைகூடும்,
கடன் நிவர்த்தி ஏற்படும்,
திருமணம் தடை விலகும்,
குழந்தை பேரு உண்டாகும்,
தொழில் விருத்தி ஏற்படும்,,
சகல நன்மைகளும் உண்டாகும்,
கண் திருஷ்டிகளை விலகி ஓடும், குழந்தைகளின் ஒழுக்கம் கல்வியறிவு மேம்படும் உடல்நிலை ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் எற்படும் தீர்க்க ஆயுள் உண்டாகும் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த வருடம் கொஞ்சம் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் யாருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்க முடியவில்லை ஆகையால் இதையே அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு திருவிழாவில் கலந்து கொண்டு அம்மையப்பர் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

மேலும் நமது பீடத்தின் அபிவிருத்திக்காகவும் போதிய இடவசதி இல்லாதா காரணத்திற்காவும் நமது பீடத்திற்காக புதிதாக இடம் வாங்கி ஆன்மீகபணி, மக்கள் பணி மற்றும் கோசாலை அமைத்து ஆதரவைற்ற வாயில்லா ஜீவராசிகளை பராமரிக்க உத்தரவாகியுள்ளது இதற்கு நம் அன்பர்கள் எல்லோருடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்
நமது அறக்கட்டளைக்கு 80G வருமான வரி விலக்கு சான்றிதழ் கிடைத்துள்ளது ஆகையால் வருமானவரி கட்டுபவர்கள் நமது அறக்கட்டளைக்கு நிதியுதவி செய்தால் நாங்கள் ஒரு ரசீது தருவோம் அதை வருமானவரி அலுவலகத்தில் காண்பித்தால் வருமானவரி விலக்கு கண்டிப்பாக உண்டு மேலும் கோயிலுக்கு உதவி செய்த புண்ணியமும் கிடைக்கும்.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி
#ஸ்ரீம்_மகேஷ்_சுவாமிஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்
5/122,விஸ்வபுரம். முதல் தெரு மெயின்ரோடு.
தூத்துக்குடி - 628002.
தொடர்புக்கு ; 9894336164.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

#வாழ்க_வளமுடன்

#ஸ்ரீம்_மகேஷ்_சுவாமி_ஜீ

#ஓம்_சிவ_சிவ_ஓம்

#திருச்சிற்றம்பலம்

#வாழ்க_பைரவர்_அருளுடன்

#வளர்க_வாராஹி_அருளுடன்

#நலமுடன்_வாழ்க_பல்லாண்டு

10 months ago | [YT] | 8

saavbtrust

SrimMahesh Samyji #om_siva_siva_om

#ஓம்_ஶ்ரீ_குருப்யோ_நமஹ

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

மகா சித்தர் தவ பீடத்தை வலைத்தளம் மூலமாக தொடர்புகொள்ளவும்

www.saavbtrust.org/

youtube.com/channel/UCglDk4K1...

இந்த YouTube சேனல் நமது பீடத்திற்காக உருவாக்கி உள்ளோம் இந்த சேனலில் தூத்துக்குடி நமது பீடத்தில் நடைபெறும் அனைத்து விசேஷங்களும், சுவாமிகளின் அபிஷேகம் மற்றும் அலங்கார வீடியோக்களும் இதில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நமது நட்பு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் இந்த சேனலை subscribe செய்து இந்த YouTube சேனல் பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்து அருள்பெருங்கள்.

#ஸ்ரீகருப்பண்ணஸ்வாமி_மந்திரம்

அருள்மிகு கருப்பசாமி எனும் கருப்பண்ணசாமி, மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்கிறார். அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவரை கேள்விப்பட்டிராத தகவல்களாக இருக்கக்கூடும்!

வால்மீகி, தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல். 'தர்ப்பையில் பிறந்த கருப்பசாமி' எனும் ஸ்ரீகருப்பசாமி குறித்த பாடல் வரி, இதற்குச் சான்று பகரும். ஸ்ரீவீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழ்ந்தை கருப்பசாமி என்றும் சொல்வார்கள்.

கருப்பன், கருப்பசாமி எனும் பெயர் கொண்ட மனிதர்களின் தலை வெட்டப்பட்டுப் புதைக்கப்பட்ட இடத்தில், கருப்பசாமி கோயில் ஏற்பட்டது என்றொரு ஆய்வுத் தகவலும் உண்டு.

நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம்... இப்படிப் பல்வேறு நிலைகளில் பல கோயில்களில் காட்சி தருகிறார் கருப்பசாமி. கம்பீர உருவம், தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோயில் கொண்டிருப்பார். பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அவர் அருள்வதை தரிசிக்கலாம்.

கருப்பண்ணசாமிக்கு உகந்த படையல் பொருட்கள் - சர்க்கரைப் பொங்கல், அவல், பொரிகடலை, மாம்பழம், வாழை, பலா, கொய்யாப் பழம் மற்றும் இளநீர்.

கருப்பசாமி தியான ஸ்லோகம்:
த்விபுஜம் பீன க்ருஷ்ணாங்கம் பப்ருச்மச்ரு சிரோருஹம்;
கதாம் கட்கம்ச பிப்ராணம் மஹாகாலம் வயம் நம:

மூல மந்த்ரம் : க்ரூம் கோப்த்ரே ஸ்வாஹா

#வாழ்க_வளமுடன்

#ஸ்ரீம்_மகேஷ்_சுவாமி_ஜீ

#ஓம்_சிவ_சிவ_ஓம்

#திருச்சிற்றம்பலம்

#வாழ்க_பைரவர்_அருளுடன்

#வளர்க_வாராஹி_அருளுடன்

#நலமுடன்_வாழ்க_பல்லாண்டு

1 year ago | [YT] | 4

saavbtrust

SrimMahesh Samyji ஓம்சிவசிவஓம்

அதிசயத்திலும் அதிசயம் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோவில்கள் இந்தியாவில் உள்ள பிரபல எட்டு சிவன் கோவில்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டன. இந்த எட்டு கோவில்களுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அதாவது இந்த எட்டு கோவில்களும் மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தான் ஆச்சரியம் அளிக்க கூடிய விடயமாகும்.

ஏன் ஆச்சரியம்? அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை (latitude and longitude) யை அளந்து தான் இப்படி ஒரே மாதிரி இருக்கும் வகையில் வடிவமைக்க முடியும்.

ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த விதமான அறிவியல் சார்ந்த செயற்கை கோள் தொழில்நுட்பங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை!

பின்னர் இது எப்படி சாத்தியமானது என்பது மர்மமாகவே உள்ளது.

அதுவும் இதில் எல்லா கோவில்களும் வேறு வேறு திசையில் அமைந்துள்ளது. எடுத்துகாட்டுக்கு கேதாரிநாத் கோவிலுக்கும், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கும் இடையேயான இடைவெளி 2383 கிலோ மீட்டர் ஆகும்.

இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தாலும் ஒரே மாதிரி நேர்கோட்டில் அமைந்திருப்பது பெரிய ஆச்சரியம் தான்.

அது மட்டுமா! இந்த கோவில்களில் ஐந்து கோவில்கள் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ளது.

அதாவது, திருவனைகாவலில் இருக்கும் ஜம்புகேஷ்வரா கோவில் நீரையும், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் நெருப்பையும், காலேஷ்வரத்தில் அமைந்துள்ள காலேஷ்வர முக்தீஷ்வர கோவில் காற்றையும்,காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஷ்வரர் கோவிலானது நிலத்தையும், சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவிலானது ஆகாயத்தையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வளவு பெரிய விஷயங்கள் நிச்சயம் எதிர்பாராமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் பெரிய சம்பவங்கள் இதன் பின்னர் இருக்கும் என்பது தான் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

ஸ்ரீம்.மகேஷ்சுவாமிஜீ..ஓம்சிவசிவஓம்...
திருச்சிற்றம்பலம்..... 9894336164.

1 year ago | [YT] | 3

saavbtrust

SrimMahesh Samyji ஓம்சிவசிவஓம்

கடவுளை காண விரும்புகிறீர்களா?

நாம் நிச்சயம் காணலாம். ஆனால்,
அதற்கு முன்பு இதனை படியுங்கள்.

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம்
தவம் இருந்த ஒரு நாட்டின் மன்னனுக்கு அன்று முதன் முதலாக கடவுளின் தரிசனம் கிடைத்தது..

பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.. கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல.. மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்கிறான்..

எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ.. அதேபோல.. ராணியாருக்கும்.. மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்... நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும்.. என்று ஆவலான தன் வரத்தை கேட்டான்.

இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் என்பது ஒருபுறம் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டு விட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்..

அதன்படி கடவுள் ஒரு நிபந்தனை விதித்தார்.

அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா.. நான் காட்சி தருகின்றேன் என சொல்லி கடவுள் மறைந்துவிடுகிறார்.

மன்னனும் நாட்டில் அனைவருக்கும்
தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும் மக்களுடனும், மலையை நோக்கி புறப்படுகிறான்.

அனைவரும் கடவுளை காணும்
ஆவலில் மலையேற துவங்கினர்..

சிறிது உயரம் சென்றவுடன்.. அங்கே செம்பு பாறைகள் நிறைய தென்பட்டன.. உடனே, மக்களில் நிறைய பேர்.. ஆஹா செம்பு செம்பு என சப்தமிட்டுக்கொண்டே சிலர்.. செம்பை மடியில் கட்டிக்கொண்டும்.. சிலர் செம்பு பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர்.

மன்னன் சொல்கிறான்.
அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது... இதெல்லாம் அதற்க்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள் என்று உரக்க சப்தமிடுகிறான்.

அதற்கு வந்திருந்த மக்களில் சிலர்...
மன்னா..! இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது..

எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறதுவங்கினான் மன்னன்..

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன்
அங்கே வெள்ளியிலான பாறைகளும்
வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன..
அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டைகட்ட ஆரம்பித்தனர்..

மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்.. விலைமதிக முடியாத கடவுளின் காட்சி நமக்கு கிடைக்கப் போகின்றது அதற்க்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன என்று உரக்க கத்துகிறான்.

மன்னா..! இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர்.

உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன் மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான். இப்பொழுது சிறிது தொலைவில் தென்பட்டது தங்கமலை.. ராஜகுடும்பத்தினர் பாதிபேர் அங்கே சென்றுவிட மீதி இருந்தவர்கள் ராணியும்.. மந்திரியும், தளபதியும், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே..

சரி வாருங்கள்.. செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்.. அங்கே தென்பட்டது வைரமலை அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட..

மலையின் உச்சியில் தன்னந்தனியாக
போய் நின்றான் மன்னன்.. கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி "எங்கே உன் மக்கள்" என கேட்க, மன்னன் தலை குனிந்தவனாக

அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே.. என்னை மன்னியுங்கள் என்றான் மன்னன்.. அதற்கு கடவுள் "நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள். அப்படிபட்ட வர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்.. உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு உடல்.. செல்வம்.. சொத்து... என்ற செம்பு.. வெள்ளி.. தங்கம்.. வைரம்.. போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.. இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர் என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.

ஸ்ரீம்.மகேஷ்சுவாமிஜீ..ஓம்சிவசிவஓம்...
திருச்சிற்றம்பலம்...... 9894336164.

என் இனிய சிவ காலை வணக்கம்.

1 year ago | [YT] | 5

saavbtrust

Part 3
தற்போது, ஆண்டுக்கு ஒருமுறைதான் அதுவும் மஹாசிவராத்திரி எனப்படும் மாசி மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மட்டுமே குலதெய்வம் கோவிலுக்குச் செல்கிறார்கள்;

ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும்; நான்கு ஜாமப் பூஜைகள் சிவராத்திரி இரவில் நடைபெறும்; இதையே நான்கு காலப் பூஜை என்றும் அழைக்கின்றனர்;

முதல் ஜாமப்பூஜை என்ற முதல் கால பூஜை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை செய்வர்;

இரண்டாம் ஜாமப்பூஜை என்ற இரண்டாம் கால பூஜை இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 மணி வரை செய்வர்;

மூன்றாம் ஜாமப்பூஜை என்ற மூன்றாம் கால பூஜை நள்ளிரவு மணி 12.01 முதல் பின்னிரவு 3.00 மணி வரை செய்வர்;

நான்காம் ஜாமப்பூஜை என்ற நான்காம் கால பூஜை பின்னிரவு மணி 3.01 முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை செய்வர்;

சிவராத்திரி இரவு முழுவதும் சிவாலயம் அல்லது குலதெய்வம் கோவிலில் பின்வரும் மந்திரங்களை ஜபிக்க வேண்டும்; சிவராத்திரிக்கு மறுநாள் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும்; அப்படி இருந்தால் மட்டுமே சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிட்டும்; எத்தனையோ தருணங்களில் பல்வேறு சொந்த வேலையாக பல நாட்கள் இரவுகளில் இரவு முழுவதும் விழித்திருக்கிறோம்; ஆனால், சிவராத்திரியில் விழித்திருப்பதில்லை; காரணம் சிவராத்திரியின் மகிமையை எடுத்துச் சொல்ல ஆளே இல்லாமல் போய்விட்டனர்;

நமது தெருவில் யார் யாரோடு__________ அல்லது நமது அலுவலகத்தில் யார் யாரோடு ___________ என்று புறங்கூறுவதையே பெருமையாக நினைக்கிறோமே ஒழிய, சிவராத்திரியின் பெருமைகளைப் பற்றியும், எப்படி சிவராத்திரி பூஜை இருப்பது? என்று எந்த மாத இதழ்களிலாவது வருகிறதா? ம்கூம்!


முதல் கால பூஜை:-
--------------------------------

(சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) பசும்பால் (கிராமங்களில் தேடிப்பார்த்து வாங்குங்கள்; பாக்கெட் பால் உண்மையான பால் அல்ல); தேன், பசுநெய், பசும் சாணம், கோஜலம் (பசுவின் சிறுநீர்) இவைகள் ஐந்துமே பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது; சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள்;
சிவலிங்கத்திற்கு சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; இதனால், வேத நாயகனின் ஆசி கிட்டும்; பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும்; இதனால், பெரும் புண்ணியம் கிட்டும்; இதனால், அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்; எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்;

பஞ்சகவ்யம் வாங்கித்தர இயலாதவர்கள், சிவராத்திரி பூஜைக்கு உங்களால் முடிந்த உதவிகளை அருகில் உள்ள சிவாலயங்களுக்கு கொடுக்கலாம்;

இந்த முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; ரிக் வேதம் சொல்லத் தெரியாவிட்டால், ரிக் வேதிகளை அழைத்து வந்து ஓதச் சொல்லலாம்;

அதுவும் இயலாதவர்கள் "ஓம்-நமசிவாய" என்ற ஸ்தூல பஞ்சாட்சரத்தை இந்த முதல் ஜாமம் முழுவதும் ஜபிக்க வேண்டும்; இதனால், ஸ்ரீ ருத்ரம், ரிக் வேதம், சாம வேதம் சொன்ன பலன் கிட்டும்;

ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய்ப் புணர்ந்த பின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து உட்கலந்து நிற்குமே!

***************************

இரண்டாம் ஜாம(கால)பூஜை:-
----------------------------------------------------

(இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)

இரண்டாம் ஜாமத்தில் ஈசனை தரிசித்தால், நம்முடைய பிறவி முடிந்து, மீண்டும் மறுபிறவி எடுத்த பலன் கிட்டுகின்றது;

பால், தேன், சர்க்கரை, நெய், தயிர் கலந்த ரச பஞ்சாமிர்தம் ஆகும்; ஈசனாகிய சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்;
இந்த அபிஷேகத்திற்கு, பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள், தாய்ப்பால் பெறுவாள்; சுத்தமான பசும்பாலில் தான் அபிஷேகம் செய்ய வேண்டும்; காரம்பசுவின் பால் எனில் மிகவும் சிறப்பு; கிறிஸ்தவ ஆங்கிலேயனின் 300 ஆண்டுச் சதிகளால் மாவட்டத்திற்கு ஒரு ஊரில் தான் காரம்பசுவே இருக்கின்றது;

சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது; தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல, செல்வம் பெருகும்;

சிவலிங்கத்திற்கு அகில் குழம்பு பூச்சு சார்த்த வேண்டும்; இதனால், லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள்; தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும்; நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்; இதன் மூலமாக நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும்;

இந்த இரண்டாம் கால பூஜை சமயத்தில் (இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை) யஜீர் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; க்ருஷ்ண யஜீர், சுக்ல யஜீர் என்று இரு பெரும் யஜீர் வேதப்பிரிவுகள் இருக்கின்றன; இருவருமே கூடி அவரவர் யஜீர் வேதத்தை ஓத வேண்டும்; இதனால், நாடு சுபிட்சமடையும்; நாமும் நன்றாக இருப்போம்; இன்று தேசபக்தியுடன் கூடிய தெய்வபக்திதான் தேவை;

ஒருவேளை, யஜீர் வேதம் தெரியாவிட்டால் அல்லது யஜீர் வேதம் தெரிந்தவர்கள் கிடைக்காவிட்டால் வருத்தப்படவேண்டியதில்லை; "சிவாய-நம" என்ற சூக்சும பஞ்சாட்சரத்தை இந்த இரண்டாம் காலம் முழுவதும் ஜபிக்க வேண்டும்;

செம்பு பொன்னாகும் சிவாயநம வென்னீற்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும்,கிரீயுமெனச்
செம்பு பொன்னான திரு அம்பலமே!

இதையே நமது தாத்தா பாட்டிகள் பழமொழியாக எழுதி வைத்துள்ளனர்; சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு ஒரு நாளும் துன்பமில்லை;


மூன்றாம் ஜாம(கால) பூஜை:-
--------------------------------------------------

(நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3.00 மணி வரை)

இந்த காலத்தில் சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்;
சிவலிங்கத்திற்கு மேல் பூச்சு அரைத்த பச்சைக் கற்பூரம் சார்த்த வேண்டும்; வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும்;

சாம வேதம் பாடவேண்டும்; சாமவேதம் தெரியாவிட்டால், "சிவயசிவ" காரண பஞ்சாட்சரத்தை நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3 மணி வரை ஜபிக்க வேண்டும்;

போகின்ற உயிரை நிறுத்தவும், விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும்;

இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர்; இந்த நேரத்தில் யார் "சிவய-சிவ; சிவய-சிவ" என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதுகிறார்களோ, அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்;

நான்காம் ஜாம(கால) பூஜை:-
---------------------------------------------------

(பின்னிரவு 3.01 முதல் மறுநாள் காலை 6 மணி வரை)

கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் சிவலிங்கத்திற்குச் செய்ய வேண்டும்; மேல் பூச்சு அரைத்த குங்குமப்பூ பூச வேண்டும்; வில்வத்தாலும், நீலோற்பவ மலர்களாலும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்; இன்று நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும்; பச்சரிசி சாதம் வடித்து, அதில் குறைந்தது இரண்டு கரண்டி பசுநெய் விடவேண்டும்; இதுவே சுத்த அன்னம் இடவேண்டும்;

அதர்வண வேதம் பாடவேண்டும்; அதர்வண வேதத்தை எட்டு வருடங்கள் குரு அருகில் இருந்தே ஜபித்துப் பழகவேண்டும்; குரு அருகில் இல்லாமல் இந்த அதர்வண வேதத்தின் ரகசிய மந்திரத்தை ஜபித்தால்,உடனே உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும்;

அதர்வண வேதம் தெரியாவிட்டால், பின்வரும் திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடினால் போதுமானது;

சிவசிவ என் கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்றிட சிவகதி தானே!

இதையும் பாட இயலாதவர்கள் "சிவசிவ" என்ற அதி சூக்சும பஞ்சாட்சரத்தை ஜபித்தாலே போதுமானது; பின்னிரவு 3 மணி முதல் விடிகாலை 6 மணி வரை இப்படி ஜபிக்க வேண்டும்;

இவ்வாறு நான்கு ஜாம(கால) பூஜைகளையும், சிவராத்திரி விரதங்களை யாரொருவர் ஆண்டுகள் செய்கின்றார்களோ, அவர்கள் இறுதியாக வேதியர்களுக்கு ஸ்வர்ண தானம், பூ தானம், கோதானங்களை அன்புடன் செய்ய வேண்டும்; அனைவருக்கும் அன்னதானம் போன்ற தான தருமங்களைச் செய்ய வேண்டும். அதுவும் சிவ தலங்களில் அன்னதானம் செய்ய வேண்டும்; இப்படிச் செய்து முடிப்பவர்கள் முக்தி அடைவார்; அவர்களின் பரம்பரையும் அகத்தியர் பெருமானின் குருவருளோடு சொர்க்கத்தை அடைவார்கள்;

சிவராத்திரியின் மகிமையை சுக்ரதேசாத்திரியில் சாஸ்திரம் கூறுகின்றது; இதன் படி, மகாசிவ ஆகமங்களும், சிவபுராணங்களும் விவரிக்கின்றன;
சிவராத்திரி மகிமைகளைக் கேட்டவர் சிவனாய் ஆவார்;
சொன்னவர் சிவன் நாமத்தில் என்றும் திளைப்பார்;
கேட்டு மகிழ்கின்றவரும் சிவனாய் ஆவார்;
இதனைச் செய்கின்றவர்களுக்கு சிவலோகப் பிராப்தம் உண்டு;

அபூர்வ சிவ பஞ்சாட்சர மந்திரம்:-
----------------------------------------------------------

ராவனேஸ்வரன் சிவபூஜையில் கூறிய அபூர்வ அனைத்து வல்லமைகளையும் கொடுக்க கூடிய சிவ பஞ்சாக்சர மந்திரம்.

அறி ஓம் ஐயும் கிலியும்
சௌவும் றீயும் ஸ்ரீயும்
நமசிவய மசிவயந
சிவயநம வயநமசி
யநமசிவ ஸ்வாஹா....

(இந்த மந்திரத்தை 1008 முறை சிவராத்திரி இரவில் சிவன் சந்நிதியில் ஜெபித்தால் கேட்ட வரத்தை உடனே சிவபெருமான் அருள்வார் என.... கரூர் மாந்திரிகம் என்ற நூலில் கரூர் சித்தர் கூறியுள்ளார். அவசியம் நம் வாட்சப்குழுவில்இருக்கும் அன்பர்கள் எல்லோரும் ஜெபம் செய்யுங்கள். 24 மணி நேரத்துக்குள் கேட்ட பிரார்த்தனை நிறைவேறும். இது கருவூர் சித்தர் வாக்கு.)

1 year ago | [YT] | 1

saavbtrust

Part 2

மாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜையை மனைவி செய்தால், பிற பெண்களை நாடும் கணவன் திருந்திவிடுவான்; கணவன் செய்தால், பிற மாதரை நாடும் எண்ணத்தில் இருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்;

பங்குனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,சிவபெருமானின் பங்குனி உத்திர நடனத்தைக் காணும் அளப்பரிய பாக்கியம் கிடைக்கும்; பங்குனி உத்திர நடனத்தைப் பார்ப்பதற்கு 3 கோடி முறை மனிதப் பிறப்பு எடுத்து சிவசிந்தையோடு வாழ்ந்தால் தான் கிட்டும்; அதை ஒரே ஒரு பிறவி பங்குனி மாத சிவராத்திரி பூஜைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கிடைத்துவிடுகின்றன;

நமது பிறந்த நட்சத்திரமும், சிவராத்திரியும் சேர்ந்து வரும் நாளில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தாலே போதும்; கலியுகத்தில் மானுடப் பிறவி எடுத்தமைக்கான லட்சியத்தை அடைந்துவிட்டதாக அர்த்தம்;

ஒருவேளை பிறந்த நட்சத்திரமும் சிவராத்திரியும் இணைந்து வராவிட்டாலும் கூட, பிறந்த கிழமையும் சிவராத்திரியும் இணைந்து வரும் நாளில் கூட சிவராத்திரி விரதம் இருந்து சிவபூஜை செய்வது மிகுந்த புண்ணியம் தரும்;

நட்சத்திரமும் சிவராத்திரியும்:-
-----------------------------------------------------

அசுவினியும் சிவராத்திரியும்:
இந்த நாளில் சிவராத்திரி பூஜை செய்தால், அற்புதமான வேலை கிடைக்கும்; (உங்களுக்குப் பிடித்தமான வேலை கிடைக்கும்)

பரணியும் சிவராத்திரியும்:
பெற்ற தாய்க்கு உத்தமமாய் கர்மம் செய்த பலன் களைக் கொடுக்கும்;

கார்த்திகையும் சிவராத்திரியும்:
முருகக் கடவுளுடன் சேர்ந்து ஈசனைக் கண்ட பலனைக் கொடுக்கும்;

ரோகிணியும் சிவராத்திரியும்:
திருமாலே நமக்கு வெண்சாமரம் வீசுவார்;

மிருகசீரிடமும் சிவராத்திரியும்: பசுவிற்கு உணவு இட்ட பலன் கிட்டும்;கோ பூஜை செய்த பலன் கிட்டும்;

புனர்பூசமும் சிவராத்திரியும்: மறுபிறவி(புனர் ஜன்மம்) எடுத்த பலன் கிட்டும்;

பூசமும் சிவராத்திரியும்:
ஈசன் அருகே இருக்கக் கூடிய அனுக்கிரகம் கிட்டும்;

ஆயில்யமும் சிவராத்திரியும்:
எவ்வளவு வேதனைகள் ஏற்பட்டாலும், அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஈசனுக்கு திருப்பாதத் தொண்டு செய்யக் கூடிய மன நிலை கிட்டும்;

பூரமும் சிவராத்திரியும்:
நோய்கள் அணுகாது;

உத்திரமும் சிவராத்திரியும்:
லோபியாக(கஞ்சனாக) இருந்தாலும், சாந்த நிலை அடைவார்;

சித்திரையும் சிவராத்திரியும்:
தேவப் பிறவி கிட்டும்;

பூராடமும் சிவராத்திரியும்:
யாரோடும் தேவையில்லாமல் நட்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்;

சதயமும் சிவராத்திரியும்:
அஷ்ட ஐஸ்வர்யங்களோடு (இம்முறை வரும் சிவராத்திரி) இருப்பார்;

பூரட்டாதியும் சிவராத்திரியும்:
தேவர்களே வணங்குவர்;

உத்திரட்டாதியும் சிவராத்திரியும்:
கர்ப்பவாசத்தில் உழல மாட்டார்கள்;

ரேவதியும் சிவராத்திரியும்:
இனி பிறவியே எடுக்க மாட்டார்கள்:

இம்மாதம் வரும் சிவராத்திரி:- இந்த நாளில் விரதமிருந்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று இந்த பூலோகத்தில் குபேரன் போன்ற வாழ்க்கை வாழ்வார்கள் என சிந்தாமணி நிகண்டு கூறுகிறது.

கிழமையும் சிவராத்திரியும்:-
--------------------------------------------------

திங்கள்: சோம்பேறியாகத் திரியும் பிறவி எடுக்க மாட்டார்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள். கோவில் கட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கும்;

செவ்வாய்: அரசாங்க வேலை கிடைக்கும்; சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மாநில அரசின் மந்திரி அல்லது மத்திய அரசின் மந்திரி பதவி கிடைக்கும்; (இப்பிறவியில் இப்பதவிகளில் இருப்பவர்கள் கடந்த ஐந்து பிறவிகளாக தொடர்ந்து இந்தக் கிழமையில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தவர்களே!!!)

புதன்: திருமாலை பார்த்த பலன் கிட்டும்; அதாவது, திருமால் சங்கு சக்கரத்துடன் சாம கானம் ஓத, காட்சி அளித்து ஆசி கொடுப்பார்;

வியாழன்: குரு கிட்டுவார்; குருவுடன் சேர்ந்து திருப்பணி செய்ய வாய்ப்பு கிட்டும்; சித்தர்கள் அனைவரும் குருவாக வந்து பூரண ஆசியை வழங்குவார்கள்.

வெள்ளி; ஆத்மவிசாரம் செய்வார்கள்; தான் யார் என்பதை உணர வெள்ளிக்கிழமைகளில் வரும் சிவராத்திரியன்று பூஜை+விரதம் இருக்க வேண்டும்;
தான் யார்? என்பதை உணர்ந்தவர் ரமண மகரிஷி! தான் என்பது எங்கே இருக்கின்றது? மனதிற்குள் இருக்கின்றது; தான் எங்கிருந்து வருகின்றது? இருதயத்தில் இருந்துதான் வருகின்றது.

வெள்ளிக்கிழமையும் சிவராத்திரியும் வரும் இரவில் தனியாக அண்ணாமலை கிரிவலம் வந்தால் ஆத்மவிசாரம் (நான் யார்? என்பதற்கான விடை) கிட்டும்; என திருவண்ணாமலை தல புராணம் சொல்கிறது.

சனி: சனிபகவானால் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்; ஆமாம்! சனிக்கிழமையன்று வரும் சிவராத்திரி விரதம்+பூஜை செய்தால் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனியால் வரும் துயரம் சிறிதும் வராது; நெருங்காது;

ஞாயிறு: சூரியதேவனாகப் பிறக்கலாம்; சூரியப் பதவி கிடைப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிதான அதிசயம்

தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரி என்பது மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்; 12 தேய்பிறை சிவராத்திரிகள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;எக்காரணம் கொண்டும் இதில் இடைவெளி விழுந்துவிடக் கூடாது;

அதுவும் சிவராத்திரி இரவில் நள்ளிரவு 12 மணிக்கு கிரிவலம் புறப்பட்டு, மறுநாள் அதிகாலையில் 5.20 முதல் 6.20க்குள் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்; பிறகே,சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்;

40 ஆண்டுகளுக்கு முன்பு, வாரம் ஒருமுறை குடும்பத்துடன் குலதெய்வம் இருக்கும் இடத்துக்குச் சென்று வழிபடுவது வழக்கமாக இருந்தது;

20 ஆண்டுகளுக்கு முன்பு, அதுவே மாதம் ஒரு நாள் என்று குறைந்துவிட்டது; இதெல்லாம் சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களால் மட்டுமே பின்பற்ற முடிந்தது; மாநகரங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களால் இதைக் கூட பின்பற்ற முடியாமல் போனது;

1 year ago | [YT] | 3

saavbtrust

SrimMahesh Samyji #om_siva_siva_om

#ஓம்_ஸ்ரீ_குருப்யோ_நமஹ

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

மகா சித்தர் தவ பீடத்தை வலைத்தளம் மூலமாக தொடர்புகொள்ளவும்

www.saavbtrust.org/

youtube.com/channel/UCglDk4K1...

இந்த YouTube சேனல் நமது பீடத்திற்காக உருவாக்கி உள்ளோம் இந்த சேனலில் தூத்துக்குடி நமது பீடத்தில் நடைபெறும் அனைத்து விசேஷங்களும், சுவாமிகளின் அபிஷேகம் மற்றும் அலங்கார வீடியோக்களும் இதில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நமது நட்பு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் இந்த சேனலை subscribe செய்து இந்த YouTube சேனல் பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்து அருள்பெருங்கள்.

உலகிலுள்ள நம் சிவ சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய மகா சிவராத்திரி (சிவன் ராத்திரி) திருநாள் நல்வாழ்த்துக்கள்.

#அகத்தியமகரிஷி_அருளிய_சிவராத்திரி_விரதம்_இருக்கும்_முறை!!!

(காலத்தால் மறைக்கப்பட்ட அபூர்வ சிவராத்திரி ரகசியங்கள்.)*
---------------------------------------------------------------
*(இந்த பதிவை முழுமையாக படியுங்கள். இன்றைய 8ம் தேதி வெள்ளிக்கிழமையில் வரும் மஹா சிவராத்திரியானது அகத்தியர் பெருமான் அருளால் உங்கள் தலையெழுத்தயே மாற்ற கூடிய அபூர்வ சிவராத்திரி. கடந்த சில வருடங்களுக்கு முன் என் ஆன்மீக குருநாதர் ஶ்ரீம்.மிஸ்டிக் செல்வம் சுவாமிகள் கூறிய (அருளிய) கருத்துக்களை இன்று உங்களுடன் சிவராத்திரி ரகசியங்கள் பற்றிய அபூர்வ சித்த குறிப்புகளை தொகுத்து பகிர்கிறேன்.*

*இன்று முழுமையான சிவனருளை பெற*

*அனைவருக்கும் பகிருங்கள், இந்த அற்புத பகிர்வை நன்மைகள் கோடி பெற...)*

சித்தர்களின் தலைவராக இருப்பவரும், தமிழ் மொழியை ஈசனிடம் இருந்து பெற்று பூமிக்குக் கொண்டு வந்தவரும், ஜோதிடத்தின் தந்தையும், சித்த மருத்துவத்தின் தந்தையும், மந்திரங்களின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷியின் அருளால் இந்த பதிவினை

இன்று உங்களுக்கு வழங்குகிறோம்;

தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும்; அதுவும் எப்படி? இதுவரையிலும் நாம் எத்தனை ஆயிரம் முறை அல்லது எத்தனை லட்சம் முறை மனிதப் பிறவி எடுத்திருப்போம் என்று நமக்குத் தெரியாது; அத்தனை மனிதப் பிறவியிலும் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும்; அப்படி கரைந்து காணாமல் போவதால், அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்தரகசியம் ஆகும்;

பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும்; ஏனென்றால், பல சதுர்யுகங்கள் முடிந்து, பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள்; ஆகவே, சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி; ஆலமரத்தடியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி யோகத்தில் அமர்ந்திருப்பதற்குக் காரணமே சிவராத்திரி மகிமையை எடுத்துச் சொல்வதற்காகத்தான்;

வெள்ளிக்கிழமையன்று திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேர்த்து வந்தால், அதாவது ஒரே நாளில் பிரதோஷமும் மஹா சிவராத்திரியும் சேர்ந்து வந்தால் அது யோக சிவராத்திரி ஆகும்; அதாவது,யோகியர் மறந்திடாத அபூர்வ சிவராத்திரி ஆகும்;

தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே பட்ச சிவராத்திரி ஆகும்; ஒரு (தமிழ்)வருடத்திற்கு 12 மாதங்கள்! ஒரு மாதத்திற்கு இரண்டு சிவராத்திரிகள்! ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள்! அவை வளர்பிறை சதுர்த்தசி,தேய்பிறை சதுர்த்தசி ஆகும்; இது நித்திய சிவராத்திரி ஆகும்;

மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும். மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது; சிவராத்திரிகள் இப்படி ஐந்து விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன; ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன;

இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும்; மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என விளக்குகிறார் சித்தர்களின் தலைவரும், தமிழ் மொழியை பூமிக்குக் கொண்டு வந்தருமான அகத்தியர்!!!

ஒரு மனிதன் சதுர்த்தசி திதியில் இயற்கையான முறையில் இறந்து, அமாவாசையன்று தகனம் செய்தால், அந்த ஆன்மா சிவலோகத்தில் சிவகணமாக உயர்ந்த நிலையை அடைவார்; ஈசனை முழு முதற்கடவுளாக பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் இதைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை!

சில நேரங்களில் சிவராத்திரி திதி பகலிலும் வரும்; அப்படி வந்தால், அந்த சிவராத்திரி பூஜையை பகலில்தான் செய்ய வேண்டும்; சதுர்த்தசி திதி நேரத்தில் தான் சிவராத்திரி வரும்; மதியம் வரை திரயோதசி திதி இருந்து, அதன் பிறகு, சதுர்த்தசி திதி துவங்கினால், மதியத்திற்குள் உணவு உண்டுவிடவேண்டும்; மதியம் சதுர்த்தசி திதி ஆரம்பித்ததும், சிவராத்திரி பூஜைகளைச் செய்ய வேண்டும்; சிவராத்திரி என்பது இரவில் தான் வரவேண்டும் என்பது அல்ல;

இந்த சிவராத்திரி பூஜையால் கொடிய பாவங்கள் என்று நம் நூல்களில் சொல்ல படுகின்ற பெண்களுக்கு இழைத்த துரோகம்; பெண்களுக்கு செய்த சாபம்; பெண்களுக்கு இழைத்த கொடுமைகள் நீங்கும்; அதே போல, ஒரு பெண் தனது கணவனுக்கு துரோகம் செய்திருந்தால், தவறை உணர்ந்து திருந்தி, இந்த சிவராத்திரி பூஜையைச் செய்தால்,கணவனுக்கு செய்த துரோகம் மறைந்துவிடும்; என அகத்தியர் கூறுகிறார்.

மாதமும் சிவராத்திரியும்:-
---------------------------------------------

அனைத்து புண்ணியப் பலன்களையும் இந்த வருடம் வரும் யோக சிவராத்திரி பூஜை தந்துவிடும்; அறிந்து பாவங்கள் செய்திருந்தாலும், அறியாமல் பாவங்கள் செய்திருந்தாலும் அனைத்து பாவங்களையும், கர்மவினைகளையும் அழித்துவிடும் இந்த மாத சிவராத்திரி.

சித்திரை மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரிகளிலும் ஒருவன்/ஒருத்தி தனது ஆயுள் முழுவதும் செய்து வந்தால், அங்கங்களின் குறைகள் நீங்கும்; உடலின் குறைகள் நீக்கப்பட்டு, ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்;

வைகாசி மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நாம் சாப்பிடுகின்ற மருந்து நம் உடலில் ஒட்டும்; சாப்பிடுகின்ற மருந்து உடலில் ஒட்டினால் தான் நம் நோய் நீங்கி ஆரோக்கியம் வரும்;

ஆனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், தேவதைகள் எல்லாம் நடனம் ஆடி நம்மை வணங்கி தேவலோகத்திற்கு அழைப்பார்கள்:

ஆடி மாதத்தில் வரும் இரு சிவராத்திகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்;

ஆவணி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை செய்தால் வேதம் ஓதிய பலன் கிட்டும்; பூணூல் அணிந்து வேதம் ஓதிய பலன் கிட்டும்;மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்:

புரட்டாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,செல்வம் பெருகும்;

ஐப்பசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,நாம் என்றுமே பசியால் வாடித் தவித்து அலைய மாட்டோம்; வாழ்நாள் முழுவதும் பசியால் அவதிப்படமாட்டோம்; அதாவது உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது;

சிவபக்தன் என்று சொல்லிக் கொள்கின்ற ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டியது, கார்த்திகை மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளிலும் பூஜைகள் செய்திடவேண்டும்; சிவராத்திரி விரதம் இருந்திடல் வேண்டும்; கார்த்திகை மாதத்து சிவராத்திரி பூஜையைப் பற்றி விவரிக்க ஒரு 100 ஆண்டுகள் போதாது;

மார்கழி மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால், பிறருக்காக தவறுகள் செய்ய மாட்டார்கள்: ஒரு மனிதன் அதுவரை செய்த அனைத்துவிதமான தவறுகளையும் அழிக்கின்ற சிவராத்திரி மார்கழியில் வரும் சிவராத்திரியாகும்;

தை மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,நெல் முதலான தானியங்கள் நன் கு விளையும்;அள்ளி வழங்கிய தானப் பலன் கிடைக்கும்;

1 year ago | [YT] | 4

saavbtrust

SrimMahesh Samyji #om_siva_siva_om

#ஓம்_ஸ்ரீ_குருப்யோ_நமஹ

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

மகா சித்தர் தவ பீடத்தை வலைத்தளம் மூலமாக தொடர்புகொள்ளவும்

www.saavbtrust.org/

youtube.com/channel/UCglDk4K1...

இந்த YouTube சேனல் நமது பீடத்திற்காக உருவாக்கி உள்ளோம் இந்த சேனலில் தூத்துக்குடி நமது பீடத்தில் நடைபெறும் அனைத்து விசேஷங்களும், சுவாமிகளின் அபிஷேகம் மற்றும் அலங்கார வீடியோக்களும் இதில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நமது நட்பு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் இந்த சேனலை subscribe செய்து இந்த YouTube சேனல் பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்து அருள்பெருங்கள்.

#வருகின்ற_சிவன்_ராத்திரி_அபூர்வ_சிவராத்ரி*

300 வருடங்க ளுக்குப் பிறகு; இந்த வருடம் அபூர்வ மகா சிவராத்திரி; நினைத்தது நடக்க
6 எளிய வழி பாடுகள் !

*2024 மகா சிவ ராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன.*

விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விவரிக்கின்றன.

மகா சிவராத்திரி அன்று ஈசனைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர்,
சங்கல்பம் செய்தவர் எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி வெள்ளிக் கிழமை மகா சிவராத்திரி வரவுள்ளது. அன்று இரவு 8 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 4 கால பூஜைகள் நடைபெற உள்ளன.

அப்போது சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனை, ஆராதனைகள், முற்றோதல்கள் போன்ற வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். கூடவே ஐந்து யோகங்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்வும் ஜோதிட ரீதியாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது 300 ஆண்டு களுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.

ஜோதிட சாஸ்திரங்களின்படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன.

*இந்த மகா சிவராத்திரியில் விரதமிருந்து கண் விழித்து சிவ தியானம் செய்திட எல்லா காரியங் களிலும் வெற்றி உண்டாகும். வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும்.*

மகா சிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து செல்வவளம் சேரும்.

சர்வார்த்த ஸித்தி யோகம் என்றால் உங்களுடைய எல்லா விருப்பங் களையும் நிறை வேற்றி வைக்கும் யோகம். இந்த யோக நாளில் ஈசனை வழிபட காரியத் தடைகள் அகன்று எண்ணியவை எளிதாக நிறைவேறும்.

*சிவ யோகம் என்றால் தியானிக்கும் வேளை. இந்நாளில் செய்யப்படும் யோகா, தியானம், பிராணாயாமம், மந்திர ஜபம் ஆகியவைகளால் பன்மடங்கு பலன் கிடைக்கும்.*

*2024 மகா சிவராத்திரி நாளன்று முழுவதுமாக சிவ யோகம் எனும் அற்புத வேளை கூடி வருகின்றது.*

*ஷிரவண நட்சத்திரம் சனி பகவானுக்கு உரியது.*

*இந்த நட்சத்திரத்தில் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது மங்களகரமாக முடியும். இந்த மகா சிவராத்திரி நாளில் சனி பகவானையும், அவரை வழிநடத்தும் ஈசனையும் வழிபட்டால் உங்கள் தொழில், வியாபாரம், பதவி உயர்வு போன்ற விஷயங்கள் திருப்தியாக அமையும். மேலும் உங்கள் ஜாதகத்தில் உள்ள எல்லா விதமான நவகிரக தோஷங்களும் நீங்கி விடும்.*

*ஐந்து யோகங்களும் ஒன்று கூடும் இந்த அபூர்வ மகா சிவராத்திரி* நாளில் சிவ வழிபாடு செய்யத் தவறாதீர்கள்.

சிவ யோக வேளையில் நீங்கள் செய்யும் வழிபாடு ஈசனின் பரிபூரண அருளை பெற்றுத் தரும். உங்கள் வீட்டை பாது காப்பாக வைத்திருக்கும். உங்கள் வாரிசுகள் நலமோடு வாழ்வார்கள்.

சித்த யோகம் கூடி வருவதால் விநாயகப் பெருமானையும் இந்நாளில் வணங்கிட வேண்டும். இதனால் தொடங்கப்படும் சுப காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

இந்த மகா சிவராத்திரி காலத்தில் நீங்கள் இருக்கும் விரதம் உங்களையும் உங்கள் சுற்றத்தையும் செல்வ வளமாக்கும்.

மகா சிவராத்திரி இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வருவதால் சுக்கிர பிரதோஷம் என்கிறோம்.

இந்த நாளில் ஈசனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நீங்காத துன்பம், தீராத வியாதிகள், குறையாத கடன்கள், அனைத்தும் தீர்ந்து விடும். குடும்ப ஒற்றுமை மேலோங்கி வாழ்வில் இனிமையும், மகிழ்ச்சியும் நீடிக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

வீட்டில் மகா சிவராத்திரி எப்படி வழிபட வேண்டும்?

மகா சிவராத்திரி யன்று அதி காலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகள் போன்றவற்றை செய்த பின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசிக்க வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்.

அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால வழிபாடுகளை முடித்துவிட்டு சிவ பூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, வைக்க வேண்டும்.

மாலை நேர வழிபாட்டை முடித்து விட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்து வழிபட வேண்டும்.

அன்று இரவு முழுவதும் கண் விழித்து வழிபாடு செய்ய முடியா விட்டாலும், ‘ *லிங்கோற்பவ* ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும்.

இது தவிர இந்த ஆண்டு விசேஷ ஐந்து யோகம் கூடும் நாள் என்பதால் முக்கியமாக இந்த 6 எளிய வழி பாட்டையும் செய்ய வேண்டும்.

(01) விநாயகருக்கு அருகம்புல் சாத்தி அவரை முதலில் வணங்கினால் சித்த யோகம் உங்களை சிறப்பாக்கும்.

(02) சனீஸ்வரருக்கு எள்எண்ணெய் தீபம் ஏற்றி இந்நாளில் வணங்க ஷிரவண நட்சத்திர வேளை உங்களுக்கு சுபயோகத்தைக் கொண்டு வரும்.

(03) சுக்கிர பிரதோஷம் மகா சிவராத்திரி நாளில் வருவதால் நந்தியெம்பெருமான் வழிபாடும் நலம் சேர்க்கும்.

(04) சர்வார்த்தி ஸித்தி யோக நாள் என்பதால் இந்நாளில் குலதெய்வ வழிபாடும் செய்து பித்ருக்களின் ஆசியால் வெற்றி பெறலாம்.

(05) மகா சிவராத்திரி நாளில் இடர் களையும் பதிகங்கள் பாடி ஈசனைத் தொழ வந்த தீ வினைகள் நீங்கும். வர விருப்பவை நலமாக அமையும்.

(06) சர்வ யோகங்களையும் அருளும் இந்நாளில் 4 கால பூஜை களையும் கண்டு தரிசித்தால் இக, பர இன்பங்கள் யாவும் சேரும்.

மேலும் மகா சிவராத்திரி அன்று அகோராஸ்திர பூஜை செய்தால் உங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக சிறப்புடன் அமையும்.

#வாழ்க_வளமுடன்

#ஸ்ரீம்_மகேஷ்_சுவாமி_ஜீ

#ஓம்_சிவ_சிவ_ஓம்

#திருச்சிற்றம்பலம்

#வாழ்க_பைரவர்_அருளுடன்

#வளர்க_வாராஹி_அருளுடன்

#நலமுடன்_வாழ்க_பல்லாண்டு

1 year ago | [YT] | 6

saavbtrust

SrimMahesh Samyji #0m_siva_siva_om

#ஒம்_ஸ்ரீ_குருப்யோ_நமஹ

#வராஹ_சம்ஹார_மூர்த்தி🥀

இரணியாக்கன் எனும் அசுரன் பிரமனை நோக்கி தவமிருந்தான், அவனது தவத்திற்கு மெச்சிய பிரமன் அவன் கேட்ட அனைத்து வரங்களையும் கொடுத்தார். இதனால் அந்த அசுரன் உலகை பாய்போல் சுருட்டி கடலில் சென்று மறைந்தான்.

தேவர்கள் இதனால் செய்வதறியாது திகைத்தனர். பின் திருமாலிடம் முறையிட்டனர்.
திருமாலும் அனைவரது ஆசியுடன் கருடவாகனத்தில் சென்று வைகுண்டம் தாண்டியதும் வராக உருவம் கொண்டார்.

அது மலையை விட உயரமாகவும். ஒவ்வொரு காலுக்கிடையே ஆயிரக்கணக்கான மைல் இடைவெளியும். அதன் வால் அசைவு எட்டுத் திக்கையும் தொட்டு அதன் மூச்சுக்காற்றின் வெப்பத்தினால் உலகமே குலுங்குகிறது. இப்படியாக பயங்கரமான உருவம் கொண்ட திருமால் கடலையே புரட்டிப்போட்டு அசுரனைக் கண்டுபிடித்தார்.

அவனை தன் கொம்பினால் கொன்று, உலகை மீட்டு ஆதிசேஷனிடம் ஒப்படைத்தார்.
பின் அவ்வராகம் பெரும் கர்வமுடன் எதிர்வந்த அனைத்து உயிர்களையும் கொன்று தின்றது. இதன் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகவே பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்த அவர் வேட வடிவம் கொண்டு வராகத்தை தன் சூலாயுதத்தால் கொன்று, அதன் ஒரு கொம்பொடித்து தன்மேனியில் ஆபரணமாக்கினார்.

அதனால் வராகத்தின் அகந்தை ஒழிந்தது. சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டியது. இதனால் அதனுடைய மற்றொரு கொம்பு பிழைத்தது. பின்னர் சிவனருளால் வராக உருவம் நீங்கி பழைய உருவம் அடைந்ததும் அனைவருக்கும் வராக புராணம் கூறி வைகுந்தம் சென்றார்.

திருமால் தேவர்கள் துயர்துடைக்க வராகத்தை அழிக்க சிவபெருமான் கொண்ட கோலமே வராக சம்ஹார மூர்த்தி யாகும்.

#வாழ்க_வளமுடன்

#ஸ்ரீம்_மகேஷ்_சுவாமி_ஜீ

#ஓம்_சிவ_சிவ_ஓம்

#திருச்சிற்றம்பலம்

#வாழ்க_பைரவர்_அருளுடன்

#வளர்க_வாராஹி_அருளுடன்

#நலமுடன்_வாழ்க_பல்லாண்டு

1 year ago | [YT] | 1