Part 3 தற்போது, ஆண்டுக்கு ஒருமுறைதான் அதுவும் மஹாசிவராத்திரி எனப்படும் மாசி மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மட்டுமே குலதெய்வம் கோவிலுக்குச் செல்கிறார்கள்;
ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும்; நான்கு ஜாமப் பூஜைகள் சிவராத்திரி இரவில் நடைபெறும்; இதையே நான்கு காலப் பூஜை என்றும் அழைக்கின்றனர்;
முதல் ஜாமப்பூஜை என்ற முதல் கால பூஜை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை செய்வர்;
இரண்டாம் ஜாமப்பூஜை என்ற இரண்டாம் கால பூஜை இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 மணி வரை செய்வர்;
மூன்றாம் ஜாமப்பூஜை என்ற மூன்றாம் கால பூஜை நள்ளிரவு மணி 12.01 முதல் பின்னிரவு 3.00 மணி வரை செய்வர்;
நான்காம் ஜாமப்பூஜை என்ற நான்காம் கால பூஜை பின்னிரவு மணி 3.01 முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை செய்வர்;
சிவராத்திரி இரவு முழுவதும் சிவாலயம் அல்லது குலதெய்வம் கோவிலில் பின்வரும் மந்திரங்களை ஜபிக்க வேண்டும்; சிவராத்திரிக்கு மறுநாள் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும்; அப்படி இருந்தால் மட்டுமே சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிட்டும்; எத்தனையோ தருணங்களில் பல்வேறு சொந்த வேலையாக பல நாட்கள் இரவுகளில் இரவு முழுவதும் விழித்திருக்கிறோம்; ஆனால், சிவராத்திரியில் விழித்திருப்பதில்லை; காரணம் சிவராத்திரியின் மகிமையை எடுத்துச் சொல்ல ஆளே இல்லாமல் போய்விட்டனர்;
நமது தெருவில் யார் யாரோடு__________ அல்லது நமது அலுவலகத்தில் யார் யாரோடு ___________ என்று புறங்கூறுவதையே பெருமையாக நினைக்கிறோமே ஒழிய, சிவராத்திரியின் பெருமைகளைப் பற்றியும், எப்படி சிவராத்திரி பூஜை இருப்பது? என்று எந்த மாத இதழ்களிலாவது வருகிறதா? ம்கூம்!
முதல் கால பூஜை:- --------------------------------
(சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) பசும்பால் (கிராமங்களில் தேடிப்பார்த்து வாங்குங்கள்; பாக்கெட் பால் உண்மையான பால் அல்ல); தேன், பசுநெய், பசும் சாணம், கோஜலம் (பசுவின் சிறுநீர்) இவைகள் ஐந்துமே பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது; சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள்; சிவலிங்கத்திற்கு சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; இதனால், வேத நாயகனின் ஆசி கிட்டும்; பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும்; இதனால், பெரும் புண்ணியம் கிட்டும்; இதனால், அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்; எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்;
பஞ்சகவ்யம் வாங்கித்தர இயலாதவர்கள், சிவராத்திரி பூஜைக்கு உங்களால் முடிந்த உதவிகளை அருகில் உள்ள சிவாலயங்களுக்கு கொடுக்கலாம்;
இந்த முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; ரிக் வேதம் சொல்லத் தெரியாவிட்டால், ரிக் வேதிகளை அழைத்து வந்து ஓதச் சொல்லலாம்;
அதுவும் இயலாதவர்கள் "ஓம்-நமசிவாய" என்ற ஸ்தூல பஞ்சாட்சரத்தை இந்த முதல் ஜாமம் முழுவதும் ஜபிக்க வேண்டும்; இதனால், ஸ்ரீ ருத்ரம், ரிக் வேதம், சாம வேதம் சொன்ன பலன் கிட்டும்;
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின் ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய்ப் புணர்ந்த பின் ஓம்நமச்சிவாயமே உணர்ந்து உட்கலந்து நிற்குமே!
***************************
இரண்டாம் ஜாம(கால)பூஜை:- ----------------------------------------------------
(இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)
இரண்டாம் ஜாமத்தில் ஈசனை தரிசித்தால், நம்முடைய பிறவி முடிந்து, மீண்டும் மறுபிறவி எடுத்த பலன் கிட்டுகின்றது;
பால், தேன், சர்க்கரை, நெய், தயிர் கலந்த ரச பஞ்சாமிர்தம் ஆகும்; ஈசனாகிய சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்; இந்த அபிஷேகத்திற்கு, பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள், தாய்ப்பால் பெறுவாள்; சுத்தமான பசும்பாலில் தான் அபிஷேகம் செய்ய வேண்டும்; காரம்பசுவின் பால் எனில் மிகவும் சிறப்பு; கிறிஸ்தவ ஆங்கிலேயனின் 300 ஆண்டுச் சதிகளால் மாவட்டத்திற்கு ஒரு ஊரில் தான் காரம்பசுவே இருக்கின்றது;
சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது; தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல, செல்வம் பெருகும்;
சிவலிங்கத்திற்கு அகில் குழம்பு பூச்சு சார்த்த வேண்டும்; இதனால், லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள்; தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும்; நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்; இதன் மூலமாக நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும்;
இந்த இரண்டாம் கால பூஜை சமயத்தில் (இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை) யஜீர் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; க்ருஷ்ண யஜீர், சுக்ல யஜீர் என்று இரு பெரும் யஜீர் வேதப்பிரிவுகள் இருக்கின்றன; இருவருமே கூடி அவரவர் யஜீர் வேதத்தை ஓத வேண்டும்; இதனால், நாடு சுபிட்சமடையும்; நாமும் நன்றாக இருப்போம்; இன்று தேசபக்தியுடன் கூடிய தெய்வபக்திதான் தேவை;
ஒருவேளை, யஜீர் வேதம் தெரியாவிட்டால் அல்லது யஜீர் வேதம் தெரிந்தவர்கள் கிடைக்காவிட்டால் வருத்தப்படவேண்டியதில்லை; "சிவாய-நம" என்ற சூக்சும பஞ்சாட்சரத்தை இந்த இரண்டாம் காலம் முழுவதும் ஜபிக்க வேண்டும்;
இதையே நமது தாத்தா பாட்டிகள் பழமொழியாக எழுதி வைத்துள்ளனர்; சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு ஒரு நாளும் துன்பமில்லை;
மூன்றாம் ஜாம(கால) பூஜை:- --------------------------------------------------
(நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3.00 மணி வரை)
இந்த காலத்தில் சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்; சிவலிங்கத்திற்கு மேல் பூச்சு அரைத்த பச்சைக் கற்பூரம் சார்த்த வேண்டும்; வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும்;
சாம வேதம் பாடவேண்டும்; சாமவேதம் தெரியாவிட்டால், "சிவயசிவ" காரண பஞ்சாட்சரத்தை நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3 மணி வரை ஜபிக்க வேண்டும்;
போகின்ற உயிரை நிறுத்தவும், விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும்;
இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர்; இந்த நேரத்தில் யார் "சிவய-சிவ; சிவய-சிவ" என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதுகிறார்களோ, அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்;
நான்காம் ஜாம(கால) பூஜை:- ---------------------------------------------------
(பின்னிரவு 3.01 முதல் மறுநாள் காலை 6 மணி வரை)
கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் சிவலிங்கத்திற்குச் செய்ய வேண்டும்; மேல் பூச்சு அரைத்த குங்குமப்பூ பூச வேண்டும்; வில்வத்தாலும், நீலோற்பவ மலர்களாலும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்; இன்று நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும்; பச்சரிசி சாதம் வடித்து, அதில் குறைந்தது இரண்டு கரண்டி பசுநெய் விடவேண்டும்; இதுவே சுத்த அன்னம் இடவேண்டும்;
அதர்வண வேதம் பாடவேண்டும்; அதர்வண வேதத்தை எட்டு வருடங்கள் குரு அருகில் இருந்தே ஜபித்துப் பழகவேண்டும்; குரு அருகில் இல்லாமல் இந்த அதர்வண வேதத்தின் ரகசிய மந்திரத்தை ஜபித்தால்,உடனே உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும்;
அதர்வண வேதம் தெரியாவிட்டால், பின்வரும் திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடினால் போதுமானது;
இதையும் பாட இயலாதவர்கள் "சிவசிவ" என்ற அதி சூக்சும பஞ்சாட்சரத்தை ஜபித்தாலே போதுமானது; பின்னிரவு 3 மணி முதல் விடிகாலை 6 மணி வரை இப்படி ஜபிக்க வேண்டும்;
இவ்வாறு நான்கு ஜாம(கால) பூஜைகளையும், சிவராத்திரி விரதங்களை யாரொருவர் ஆண்டுகள் செய்கின்றார்களோ, அவர்கள் இறுதியாக வேதியர்களுக்கு ஸ்வர்ண தானம், பூ தானம், கோதானங்களை அன்புடன் செய்ய வேண்டும்; அனைவருக்கும் அன்னதானம் போன்ற தான தருமங்களைச் செய்ய வேண்டும். அதுவும் சிவ தலங்களில் அன்னதானம் செய்ய வேண்டும்; இப்படிச் செய்து முடிப்பவர்கள் முக்தி அடைவார்; அவர்களின் பரம்பரையும் அகத்தியர் பெருமானின் குருவருளோடு சொர்க்கத்தை அடைவார்கள்;
சிவராத்திரியின் மகிமையை சுக்ரதேசாத்திரியில் சாஸ்திரம் கூறுகின்றது; இதன் படி, மகாசிவ ஆகமங்களும், சிவபுராணங்களும் விவரிக்கின்றன; சிவராத்திரி மகிமைகளைக் கேட்டவர் சிவனாய் ஆவார்; சொன்னவர் சிவன் நாமத்தில் என்றும் திளைப்பார்; கேட்டு மகிழ்கின்றவரும் சிவனாய் ஆவார்; இதனைச் செய்கின்றவர்களுக்கு சிவலோகப் பிராப்தம் உண்டு;
அபூர்வ சிவ பஞ்சாட்சர மந்திரம்:- ----------------------------------------------------------
ராவனேஸ்வரன் சிவபூஜையில் கூறிய அபூர்வ அனைத்து வல்லமைகளையும் கொடுக்க கூடிய சிவ பஞ்சாக்சர மந்திரம்.
(இந்த மந்திரத்தை 1008 முறை சிவராத்திரி இரவில் சிவன் சந்நிதியில் ஜெபித்தால் கேட்ட வரத்தை உடனே சிவபெருமான் அருள்வார் என.... கரூர் மாந்திரிகம் என்ற நூலில் கரூர் சித்தர் கூறியுள்ளார். அவசியம் நம் வாட்சப்குழுவில்இருக்கும் அன்பர்கள் எல்லோரும் ஜெபம் செய்யுங்கள். 24 மணி நேரத்துக்குள் கேட்ட பிரார்த்தனை நிறைவேறும். இது கருவூர் சித்தர் வாக்கு.)
saavbtrust
Part 3
தற்போது, ஆண்டுக்கு ஒருமுறைதான் அதுவும் மஹாசிவராத்திரி எனப்படும் மாசி மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மட்டுமே குலதெய்வம் கோவிலுக்குச் செல்கிறார்கள்;
ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும்; நான்கு ஜாமப் பூஜைகள் சிவராத்திரி இரவில் நடைபெறும்; இதையே நான்கு காலப் பூஜை என்றும் அழைக்கின்றனர்;
முதல் ஜாமப்பூஜை என்ற முதல் கால பூஜை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை செய்வர்;
இரண்டாம் ஜாமப்பூஜை என்ற இரண்டாம் கால பூஜை இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 மணி வரை செய்வர்;
மூன்றாம் ஜாமப்பூஜை என்ற மூன்றாம் கால பூஜை நள்ளிரவு மணி 12.01 முதல் பின்னிரவு 3.00 மணி வரை செய்வர்;
நான்காம் ஜாமப்பூஜை என்ற நான்காம் கால பூஜை பின்னிரவு மணி 3.01 முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை செய்வர்;
சிவராத்திரி இரவு முழுவதும் சிவாலயம் அல்லது குலதெய்வம் கோவிலில் பின்வரும் மந்திரங்களை ஜபிக்க வேண்டும்; சிவராத்திரிக்கு மறுநாள் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும்; அப்படி இருந்தால் மட்டுமே சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிட்டும்; எத்தனையோ தருணங்களில் பல்வேறு சொந்த வேலையாக பல நாட்கள் இரவுகளில் இரவு முழுவதும் விழித்திருக்கிறோம்; ஆனால், சிவராத்திரியில் விழித்திருப்பதில்லை; காரணம் சிவராத்திரியின் மகிமையை எடுத்துச் சொல்ல ஆளே இல்லாமல் போய்விட்டனர்;
நமது தெருவில் யார் யாரோடு__________ அல்லது நமது அலுவலகத்தில் யார் யாரோடு ___________ என்று புறங்கூறுவதையே பெருமையாக நினைக்கிறோமே ஒழிய, சிவராத்திரியின் பெருமைகளைப் பற்றியும், எப்படி சிவராத்திரி பூஜை இருப்பது? என்று எந்த மாத இதழ்களிலாவது வருகிறதா? ம்கூம்!
முதல் கால பூஜை:-
--------------------------------
(சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) பசும்பால் (கிராமங்களில் தேடிப்பார்த்து வாங்குங்கள்; பாக்கெட் பால் உண்மையான பால் அல்ல); தேன், பசுநெய், பசும் சாணம், கோஜலம் (பசுவின் சிறுநீர்) இவைகள் ஐந்துமே பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது; சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள்;
சிவலிங்கத்திற்கு சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; இதனால், வேத நாயகனின் ஆசி கிட்டும்; பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும்; இதனால், பெரும் புண்ணியம் கிட்டும்; இதனால், அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்; எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்;
பஞ்சகவ்யம் வாங்கித்தர இயலாதவர்கள், சிவராத்திரி பூஜைக்கு உங்களால் முடிந்த உதவிகளை அருகில் உள்ள சிவாலயங்களுக்கு கொடுக்கலாம்;
இந்த முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; ரிக் வேதம் சொல்லத் தெரியாவிட்டால், ரிக் வேதிகளை அழைத்து வந்து ஓதச் சொல்லலாம்;
அதுவும் இயலாதவர்கள் "ஓம்-நமசிவாய" என்ற ஸ்தூல பஞ்சாட்சரத்தை இந்த முதல் ஜாமம் முழுவதும் ஜபிக்க வேண்டும்; இதனால், ஸ்ரீ ருத்ரம், ரிக் வேதம், சாம வேதம் சொன்ன பலன் கிட்டும்;
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய்ப் புணர்ந்த பின்
ஓம்நமச்சிவாயமே உணர்ந்து உட்கலந்து நிற்குமே!
***************************
இரண்டாம் ஜாம(கால)பூஜை:-
----------------------------------------------------
(இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)
இரண்டாம் ஜாமத்தில் ஈசனை தரிசித்தால், நம்முடைய பிறவி முடிந்து, மீண்டும் மறுபிறவி எடுத்த பலன் கிட்டுகின்றது;
பால், தேன், சர்க்கரை, நெய், தயிர் கலந்த ரச பஞ்சாமிர்தம் ஆகும்; ஈசனாகிய சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்;
இந்த அபிஷேகத்திற்கு, பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள், தாய்ப்பால் பெறுவாள்; சுத்தமான பசும்பாலில் தான் அபிஷேகம் செய்ய வேண்டும்; காரம்பசுவின் பால் எனில் மிகவும் சிறப்பு; கிறிஸ்தவ ஆங்கிலேயனின் 300 ஆண்டுச் சதிகளால் மாவட்டத்திற்கு ஒரு ஊரில் தான் காரம்பசுவே இருக்கின்றது;
சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது; தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல, செல்வம் பெருகும்;
சிவலிங்கத்திற்கு அகில் குழம்பு பூச்சு சார்த்த வேண்டும்; இதனால், லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள்; தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும்; நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்; இதன் மூலமாக நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும்;
இந்த இரண்டாம் கால பூஜை சமயத்தில் (இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை) யஜீர் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; க்ருஷ்ண யஜீர், சுக்ல யஜீர் என்று இரு பெரும் யஜீர் வேதப்பிரிவுகள் இருக்கின்றன; இருவருமே கூடி அவரவர் யஜீர் வேதத்தை ஓத வேண்டும்; இதனால், நாடு சுபிட்சமடையும்; நாமும் நன்றாக இருப்போம்; இன்று தேசபக்தியுடன் கூடிய தெய்வபக்திதான் தேவை;
ஒருவேளை, யஜீர் வேதம் தெரியாவிட்டால் அல்லது யஜீர் வேதம் தெரிந்தவர்கள் கிடைக்காவிட்டால் வருத்தப்படவேண்டியதில்லை; "சிவாய-நம" என்ற சூக்சும பஞ்சாட்சரத்தை இந்த இரண்டாம் காலம் முழுவதும் ஜபிக்க வேண்டும்;
செம்பு பொன்னாகும் சிவாயநம வென்னீற்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும்,கிரீயுமெனச்
செம்பு பொன்னான திரு அம்பலமே!
இதையே நமது தாத்தா பாட்டிகள் பழமொழியாக எழுதி வைத்துள்ளனர்; சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு ஒரு நாளும் துன்பமில்லை;
மூன்றாம் ஜாம(கால) பூஜை:-
--------------------------------------------------
(நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3.00 மணி வரை)
இந்த காலத்தில் சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்;
சிவலிங்கத்திற்கு மேல் பூச்சு அரைத்த பச்சைக் கற்பூரம் சார்த்த வேண்டும்; வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும்;
சாம வேதம் பாடவேண்டும்; சாமவேதம் தெரியாவிட்டால், "சிவயசிவ" காரண பஞ்சாட்சரத்தை நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3 மணி வரை ஜபிக்க வேண்டும்;
போகின்ற உயிரை நிறுத்தவும், விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும்;
இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர்; இந்த நேரத்தில் யார் "சிவய-சிவ; சிவய-சிவ" என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதுகிறார்களோ, அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்;
நான்காம் ஜாம(கால) பூஜை:-
---------------------------------------------------
(பின்னிரவு 3.01 முதல் மறுநாள் காலை 6 மணி வரை)
கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் சிவலிங்கத்திற்குச் செய்ய வேண்டும்; மேல் பூச்சு அரைத்த குங்குமப்பூ பூச வேண்டும்; வில்வத்தாலும், நீலோற்பவ மலர்களாலும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்; இன்று நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும்; பச்சரிசி சாதம் வடித்து, அதில் குறைந்தது இரண்டு கரண்டி பசுநெய் விடவேண்டும்; இதுவே சுத்த அன்னம் இடவேண்டும்;
அதர்வண வேதம் பாடவேண்டும்; அதர்வண வேதத்தை எட்டு வருடங்கள் குரு அருகில் இருந்தே ஜபித்துப் பழகவேண்டும்; குரு அருகில் இல்லாமல் இந்த அதர்வண வேதத்தின் ரகசிய மந்திரத்தை ஜபித்தால்,உடனே உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும்;
அதர்வண வேதம் தெரியாவிட்டால், பின்வரும் திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடினால் போதுமானது;
சிவசிவ என் கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்றிட சிவகதி தானே!
இதையும் பாட இயலாதவர்கள் "சிவசிவ" என்ற அதி சூக்சும பஞ்சாட்சரத்தை ஜபித்தாலே போதுமானது; பின்னிரவு 3 மணி முதல் விடிகாலை 6 மணி வரை இப்படி ஜபிக்க வேண்டும்;
இவ்வாறு நான்கு ஜாம(கால) பூஜைகளையும், சிவராத்திரி விரதங்களை யாரொருவர் ஆண்டுகள் செய்கின்றார்களோ, அவர்கள் இறுதியாக வேதியர்களுக்கு ஸ்வர்ண தானம், பூ தானம், கோதானங்களை அன்புடன் செய்ய வேண்டும்; அனைவருக்கும் அன்னதானம் போன்ற தான தருமங்களைச் செய்ய வேண்டும். அதுவும் சிவ தலங்களில் அன்னதானம் செய்ய வேண்டும்; இப்படிச் செய்து முடிப்பவர்கள் முக்தி அடைவார்; அவர்களின் பரம்பரையும் அகத்தியர் பெருமானின் குருவருளோடு சொர்க்கத்தை அடைவார்கள்;
சிவராத்திரியின் மகிமையை சுக்ரதேசாத்திரியில் சாஸ்திரம் கூறுகின்றது; இதன் படி, மகாசிவ ஆகமங்களும், சிவபுராணங்களும் விவரிக்கின்றன;
சிவராத்திரி மகிமைகளைக் கேட்டவர் சிவனாய் ஆவார்;
சொன்னவர் சிவன் நாமத்தில் என்றும் திளைப்பார்;
கேட்டு மகிழ்கின்றவரும் சிவனாய் ஆவார்;
இதனைச் செய்கின்றவர்களுக்கு சிவலோகப் பிராப்தம் உண்டு;
அபூர்வ சிவ பஞ்சாட்சர மந்திரம்:-
----------------------------------------------------------
ராவனேஸ்வரன் சிவபூஜையில் கூறிய அபூர்வ அனைத்து வல்லமைகளையும் கொடுக்க கூடிய சிவ பஞ்சாக்சர மந்திரம்.
அறி ஓம் ஐயும் கிலியும்
சௌவும் றீயும் ஸ்ரீயும்
நமசிவய மசிவயந
சிவயநம வயநமசி
யநமசிவ ஸ்வாஹா....
(இந்த மந்திரத்தை 1008 முறை சிவராத்திரி இரவில் சிவன் சந்நிதியில் ஜெபித்தால் கேட்ட வரத்தை உடனே சிவபெருமான் அருள்வார் என.... கரூர் மாந்திரிகம் என்ற நூலில் கரூர் சித்தர் கூறியுள்ளார். அவசியம் நம் வாட்சப்குழுவில்இருக்கும் அன்பர்கள் எல்லோரும் ஜெபம் செய்யுங்கள். 24 மணி நேரத்துக்குள் கேட்ட பிரார்த்தனை நிறைவேறும். இது கருவூர் சித்தர் வாக்கு.)
1 year ago | [YT] | 1