LAW IS SUPREME (சட்டம் மேலானது)

சட்டம் தொடர்பான சந்தேகங்கள், முன் தீர்ப்புகள், சட்ட நுணுக்கங்கள் மற்றும் விளக்கங்கள் கொண்ட பகுதியாக இது இருக்கும்.
தொடர்புக்கு

ப. தனேஷ் பாலமுருகன், வழக்கறிஞர்,
திருநெல்வேலி
Mobile No. 8870009240, 9360314094,

ப. ராஜதுரை, வழக்கறிஞர்,
சென்னை.
Mobile No. 7299703493




LAW IS SUPREME (சட்டம் மேலானது)

பதிவு செய்யப்படாத ஆவணம்
பதிவு செய்யப்படாத, முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தப்படாத ஒரு ஆவணத்தை துணை நோக்கங்கள் உள்பட எந்த ஒரு காரணத்திற்காகவும் குறியீடு செய்ய முடியாது என மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
Lakshmanan Vs Palani (2012-1-LW-469)

3 months ago | [YT] | 35

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுவை , நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிரூபிக்கவில்லை என்ற ஒரே காரணத்தை கூறி தள்ளுபடி செய்ய முடியுமா? என்பதற்கான விடை இந்த வழக்கில் தீர்மானிக்கப்பட்டது.

(இந்த வழக்கில் கண்ட மனுதாரர் தனக்கு மஞ்சள் காமாலை நோய் என்று கூறி மனுத்தாக்கல் செய்தார் என்பதை நினைவில் கொள்ளவும்)

இப்போது காலதாமதம் குறித்தான மனுக்களில் காலதாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஒவ்வொரு நாளிற்கும் (Each and every day's delay) எதனால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டுமென சட்டம் எதிர்பார்ப்பதில்லை.

உச்சநீதிமன்றம் "ஓரியண்டல் அரோமா கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் Vs குஜராத் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (2010-4-MLJ-141)" என்ற வழக்கில், காலவரையறைச் சட்டம் என்பது ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். அந்த சட்டத்தை இயற்றியவர்கள் வழக்கு நடத்துபவர்களின் உரிமைகளை அழிப்பதற்காக ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் வழக்கு நடத்துவதை வேண்டுமென்றே காலதாமதப்படுத்தக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்டது. அதன் பின்னணி என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட காலம்வரை சட்டத்தின்படி தங்களுக்குரிய பரிகாரத்தை கேட்க வேண்டும் என்பதற்காக தான். ஒருவேளை குறித்த காலத்தில் தங்களுக்குரிய பரிகாரங்களை நீதிமன்றத்தில் கோர முடியாது போகும் நிலையில் அந்த காலதாமதத்தை மன்னிக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் பெற்றுள்ளது. காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ல் "போதிய காரணம் " என கூறப்பட்டுள்ளது எதற்காக என்றால் நீதிமன்றம் அந்த பிரிவினை அர்த்தமுள்ள வகையில் நீதியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை கடுமையான நோக்கில் விசாரிக்காமல் குறைவான காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

"கலெக்டர், லேண்ட் அக்யுசேசன் Vs காட்ஜி (1987-2-SCC-107)"

N. பாலகிருஷ்ணன் Vs M. கிருஷ்ணமூர்த்தி (1998-7-SCC-123)"

வேதாபாய் Vs சாந்தாராம் (2001-9-SCC-106)"

ஆகிய வழக்குகளில் இது குறித்து தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

"ராம்நாத் Vs கோபர்தான் (AIR-2002-SC-1201)" என்ற வழக்கில், ஒவ்வொரு காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுவில் வழக்கு நடத்துபவர்களின் குறைபாடும் அதிலிருக்கும் தவறான எண்ணத்துடன் வழக்கை காலதாமதம் செய்யும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படவில்லை எனில் அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். தவறான நோக்கத்தில் அத்தகைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதென கருதினால் அந்த மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை, மேலும் காலதாமத மனுக்களை விசாரிக்கும் போது எதிர்மனுதார்களின் நலத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மேலே சொன்ன தீர்ப்புகளின் அடிப்படையில் பாரத்தால் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை இப்படித்தான் தீர்மானிக்க வேண்டுமென எந்த விதிமுறைகளும் இல்லை என்பது தெரியவரும்.

எனவே குறைவாக காலதாமதம் உள்ள வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 1479/2012

G. நாராயணன் Vs G. மோகன் மற்றும் பலர்

2012-4-MLJ-CIVIL-356

4 months ago | [YT] | 21

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுவை , நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிரூபிக்கவில்லை என்ற ஒரே காரணத்தை கூறி தள்ளுபடி செய்ய முடியுமா? என்பதற்கான விடை இந்த வழக்கில் தீர்மானிக்கப்பட்டது.

(இந்த வழக்கில் கண்ட மனுதாரர் தனக்கு மஞ்சள் காமாலை நோய் என்று கூறி மனுத்தாக்கல் செய்தார் என்பதை நினைவில் கொள்ளவும்)

இப்போது காலதாமதம் குறித்தான மனுக்களில் காலதாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஒவ்வொரு நாளிற்கும் (Each and every day's delay) எதனால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டுமென சட்டம் எதிர்பார்ப்பதில்லை.

உச்சநீதிமன்றம் "ஓரியண்டல் அரோமா கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் Vs குஜராத் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (2010-4-MLJ-141)" என்ற வழக்கில், காலவரையறைச் சட்டம் என்பது ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். அந்த சட்டத்தை இயற்றியவர்கள் வழக்கு நடத்துபவர்களின் உரிமைகளை அழிப்பதற்காக ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் வழக்கு நடத்துவதை வேண்டுமென்றே காலதாமதப்படுத்தக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்டது. அதன் பின்னணி என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட காலம்வரை சட்டத்தின்படி தங்களுக்குரிய பரிகாரத்தை கேட்க வேண்டும் என்பதற்காக தான். ஒருவேளை குறித்த காலத்தில் தங்களுக்குரிய பரிகாரங்களை நீதிமன்றத்தில் கோர முடியாது போகும் நிலையில் அந்த காலதாமதத்தை மன்னிக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் பெற்றுள்ளது. காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ல் "போதிய காரணம் " என கூறப்பட்டுள்ளது எதற்காக என்றால் நீதிமன்றம் அந்த பிரிவினை அர்த்தமுள்ள வகையில் நீதியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை கடுமையான நோக்கில் விசாரிக்காமல் குறைவான காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

"கலெக்டர், லேண்ட் அக்யுசேசன் Vs காட்ஜி (1987-2-SCC-107)"

N. பாலகிருஷ்ணன் Vs M. கிருஷ்ணமூர்த்தி (1998-7-SCC-123)"

வேதாபாய் Vs சாந்தாராம் (2001-9-SCC-106)"

ஆகிய வழக்குகளில் இது குறித்து தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

"ராம்நாத் Vs கோபர்தான் (AIR-2002-SC-1201)" என்ற வழக்கில், ஒவ்வொரு காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுவில் வழக்கு நடத்துபவர்களின் குறைபாடும் அதிலிருக்கும் தவறான எண்ணத்துடன் வழக்கை காலதாமதம் செய்யும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படவில்லை எனில் அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். தவறான நோக்கத்தில் அத்தகைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதென கருதினால் அந்த மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை, மேலும் காலதாமத மனுக்களை விசாரிக்கும் போது எதிர்மனுதார்களின் நலத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மேலே சொன்ன தீர்ப்புகளின் அடிப்படையில் பாரத்தால் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை இப்படித்தான் தீர்மானிக்க வேண்டுமென எந்த விதிமுறைகளும் இல்லை என்பது தெரியவரும்.

எனவே குறைவாக காலதாமதம் உள்ள வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 1479/2012

G. நாராயணன் Vs G. மோகன் மற்றும் பலர்

2012-4-MLJ-CIVIL-356

4 months ago | [YT] | 12

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுவை , நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிரூபிக்கவில்லை என்ற ஒரே காரணத்தை கூறி தள்ளுபடி செய்ய முடியுமா? என்பதற்கான விடை இந்த வழக்கில் தீர்மானிக்கப்பட்டது.

(இந்த வழக்கில் கண்ட மனுதாரர் தனக்கு மஞ்சள் காமாலை நோய் என்று கூறி மனுத்தாக்கல் செய்தார் என்பதை நினைவில் கொள்ளவும்)

இப்போது காலதாமதம் குறித்தான மனுக்களில் காலதாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஒவ்வொரு நாளிற்கும் (Each and every day's delay) எதனால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டுமென சட்டம் எதிர்பார்ப்பதில்லை.

உச்சநீதிமன்றம் "ஓரியண்டல் அரோமா கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் Vs குஜராத் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (2010-4-MLJ-141)" என்ற வழக்கில், காலவரையறைச் சட்டம் என்பது ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். அந்த சட்டத்தை இயற்றியவர்கள் வழக்கு நடத்துபவர்களின் உரிமைகளை அழிப்பதற்காக ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் வழக்கு நடத்துவதை வேண்டுமென்றே காலதாமதப்படுத்தக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்டது. அதன் பின்னணி என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட காலம்வரை சட்டத்தின்படி தங்களுக்குரிய பரிகாரத்தை கேட்க வேண்டும் என்பதற்காக தான். ஒருவேளை குறித்த காலத்தில் தங்களுக்குரிய பரிகாரங்களை நீதிமன்றத்தில் கோர முடியாது போகும் நிலையில் அந்த காலதாமதத்தை மன்னிக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் பெற்றுள்ளது. காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ல் "போதிய காரணம் " என கூறப்பட்டுள்ளது எதற்காக என்றால் நீதிமன்றம் அந்த பிரிவினை அர்த்தமுள்ள வகையில் நீதியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை கடுமையான நோக்கில் விசாரிக்காமல் குறைவான காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

"கலெக்டர், லேண்ட் அக்யுசேசன் Vs காட்ஜி (1987-2-SCC-107)"

N. பாலகிருஷ்ணன் Vs M. கிருஷ்ணமூர்த்தி (1998-7-SCC-123)"

வேதாபாய் Vs சாந்தாராம் (2001-9-SCC-106)"

ஆகிய வழக்குகளில் இது குறித்து தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

"ராம்நாத் Vs கோபர்தான் (AIR-2002-SC-1201)" என்ற வழக்கில், ஒவ்வொரு காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுவில் வழக்கு நடத்துபவர்களின் குறைபாடும் அதிலிருக்கும் தவறான எண்ணத்துடன் வழக்கை காலதாமதம் செய்யும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படவில்லை எனில் அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். தவறான நோக்கத்தில் அத்தகைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதென கருதினால் அந்த மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை, மேலும் காலதாமத மனுக்களை விசாரிக்கும் போது எதிர்மனுதார்களின் நலத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மேலே சொன்ன தீர்ப்புகளின் அடிப்படையில் பாரத்தால் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை இப்படித்தான் தீர்மானிக்க வேண்டுமென எந்த விதிமுறைகளும் இல்லை என்பது தெரியவரும்.

எனவே குறைவாக காலதாமதம் உள்ள வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 1479/2012

G. நாராயணன் Vs G. மோகன் மற்றும் பலர்

2012-4-MLJ-CIVIL-356

4 months ago | [YT] | 28

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub-Registrar Office) பத்திரங்கள் பதிவு செய்யும் போது பல்வேறு புத்தகங்கள் (Register Books) பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு புத்தகமும் தனித்தனி வகையான பத்திரங்களை பதிவு செய்யும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறது. கீழே அவை பற்றிய விரிவான விவரம்:

சார் பதிவாளர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான புத்தக வகைகள்:

புத்தக எண் புத்தகத்தின் பெயர் பயன்பாடு

Book 1
(Register of Non-Testamentary Documents relating to Immovable Property)
நிலம் மற்றும் அசைவற்ற சொத்துகள் தொடர்பான ஒப்பந்தங்கள் (Sale, Mortgage, Lease, Partition, Settlement, Gift deeds) பதிவுக்கு.
உதாரணம் EC இல் வரும் அனைத்து ஆவணங்களும்

Book 2

Index registrar ஆவணம் தாக்கல் செய்யப்படும் பொழுது ஆவண பதிவிற்கான மறுப்பதற்கான விவரங்களை எழுதி வைக்கும் புத்தகம்

Book 3 பிரதிகள் புத்தகம் (Register of Wills and Authorities to Adopt - kept in original form) உயில்களின் அசல் பிரதிகள் தனியாக வைத்திருக்கும் பதிவு புத்தகம்.

Book 4 References / Miscellaneous Register பிற குறிப்புகள், குறிப்பாக non-testamentary documents that do not relate to immovable property. உதா: Power of Attorney, Agreement for Hire, etc.

Book 5
குறிப்பாக "உயில்களின் வைப்புத்தொகைப் பதிவேட்டை" குறிக்கிறது. இந்தப் பதிவேடு பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது மற்றும் பாதுகாப்பாக வைப்பதற்காக உயில்களின் வைப்புத்தொகையைப் பதிவு செய்யப் பயன்படுகிறது.

இந்த புத்தகங்கள் அனைத்தும் Indian Registration Act, 1908 மற்றும் தமிழ்நாடு Registration Rules அடிப்படையில் பராமரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பதிவுக்கும் Document Number, Volume Number, மற்றும் Page Number ஆகியவை உண்டு.

பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை எதிர்காலத்தில் பெற, இந்த பதிவுகளின் அடிப்படையில் Certified Copy (சான்றுப் பிரதிகள்) வழங்கப்படும்

இவை அனைத்தும் அரசு பதிவு அலுவலகத்தில் உள்ள பதிவாளர்கள் மற்றும் பொதுமக்கள் சரிவர புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களாகும்.

4 months ago | [YT] | 35

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

சென்னை உயர்நீதிமன்றம் " இலட்சுமிபதி மற்றுமொருவர் Vs A. M. சக்கரபாணி ரெட்டியார் (2001-1-CTC-112)" என்ற வழக்கில், கூட்டு பங்குரிமையாளர்கள் அசையாச் சொத்துக்களை வாய்மொழியாக பாகம் பிரித்து கொள்ளலாம் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். இருத்தபோதிலும் அந்தப் பாகப்பிரிவினை குறித்து ஓர் ஆவணம் எழுதப்பட்டிருந்தால், அதனை பதிவுச் சட்டம் பிரிவு 17 ன்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத ஓர் ஆவணத்தை பாகப்பிரிவினையை நிரூபிப்பதற்காக பயன்படுத்த முடியாது. ஆனால் அந்த ஆவணத்தை துணை நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே வாய்மொழியாக ஏற்பட்ட பாகப்பிரிவினையை பதிவு செய்து எழுதப்பட்ட ஆவணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் உரிய முத்திரைக் கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்படாத பாகப்பிரிவினை ஆவணத்தை துணை நோக்கங்களுக்காக சான்றாவணமாக குறியீடு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

A. S. No - 1039/2007

Dt - 5.1.2017

M.சென்னியப்பன் மற்றுமொருவர் Vs M. இரங்கநாதன் மற்றுமொருவர்

2017-3-MWN-CIVIL-74

5 months ago | [YT] | 45

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

நேற்றைய என்னுடைய வீடியோ பதிவுக்கு ஒருவர், நான் விளம்பரம் செய்வதாகவும், ஆன்லைன் கன்சல்டிங்க்கு பணம் கேட்பதாகவும் கமெண்ட் செய்துள்ளார்.

நான் எந்த காலத்திலும் ஆன்லைன் கன்சல்டிங் பண்ணுவதில்லை. பணமும் பெறுவதில்லை. நான் வியாபார ரீதியாகவோ, விளம்பர நோக்கிலோ யூப்டியூப் சேனல் நடத்தவில்லை. பொதுமக்கள் மற்றும் ஜீனியர் வழக்கறிஞர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். மேலும் எனக்கு பயன்படும் என்ற வகையிலும் செயல்படுத்துகிறேன்.

நான் practicing advocate ஆவேன். யூப்டியூப் தொழில் அல்ல. என்னை ஊக்கப்படுத்தும் வகையில் கமெண்ட் பண்ணுங்க. அதனை விடுத்து தவறான தகவலை கூறி கமெண்ட் பண்ணாதீங்க.

நன்றி

அன்புடன்
ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்

5 months ago | [YT] | 103

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

ஒருவர் பெயருக்கு உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்று 1995 ல் உச்சநீதிமன்றம் கீழே கண்ட வழக்கில் அருமையான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றம் " Kasi Bai Vs Parvathy Bai (1995 - 6 - SCC - 213) என்ற வழக்கின் பத்தி 10 ல்" சட்டப்படி சான்றொப்பமிட வேண்டிய ஆவணம் குறித்து இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 68 ல் கூறப்பட்டுள்ளது. கட்டாயமாக சான்றொப்பமிட வேண்டிய ஆவணங்களில் ஒரு ஆவணமாக உயிலும் உள்ளது. அவ்வாறு கட்டாயமாக சான்றொப்பமிட வேண்டிய ஒரு ஆவணத்தை நிரூபிப்பதற்கு சான்றொப்பமிட்டுள்ள சாட்சிகளில் குறைந்தபட்சம் ஒருவரையாவது விசாரித்து, அந்த ஆவணம் எழுதப்பட்டுள்ளதை நிரூபிக்க வேண்டும். பிரிவு 68 ஐ படித்து பார்க்கும் பொழுது, சான்று கையொப்பமிடுதல் மற்றும் எழுதி வைத்தல் (Attestation and Execution) ஆகிய இரண்டும் வெவ்வேறான செயல்கள் என்பதும், அவை ஒன்றையொன்று பின்பற்றி நடைபெறக்கூடிய செயல்கள் என்பதும் தெரிய வருகிறது.

சட்டப்படி சான்றொப்பமிட வேண்டிய ஒரு ஆவணத்தில் சான்றொப்பம் இடப்படவில்லை என்றாலும், அவ்வாறு சான்றொப்பம் இடப்பட்டிருந்து, அந்த சான்றொப்பமிட்டிருப்பது நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அந்த ஆவணம் சட்டப்படி செல்லாது.

இந்திய வாரிசுரிமை சட்டம் பிரிவு 63(c) ல் உயில் ஆவணம் குறித்து சில விதிமுறைகள் உள்ளது. அதன்படி ஓர் உயில் ஆவணமானது இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட சாட்சிகளால் கட்டாயமாக சான்றொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

ஆகவே உயிலானது கட்டாயமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் சான்றொப்பம் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் ஒருவரை வைத்து அந்த உயில் எழுதப்பட்டதை மெய்பிக்க வேண்டும். அப்படியென்றால்தான் அந்த உயில் செல்லும்.

6 months ago | [YT] | 58

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

இந்த வழக்கில் கண்ட நாகராஜன் என்பவர் தனக்கு வர வேண்டிய பணம் ரூ. 18 லட்சத்தை வட்டியுடன் வசூலிக்க கனகராஜ் என்பவர் மீது ஒரு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிக்கப்பட்டு வழக்கறிஞர்களின் வாதத்திற்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் நாகராஜனின் வழக்கறிஞர் கவனக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே கீழமை நீதிமன்றம் சாட்சியங்களை பரிசீலித்து நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்து விட்டார் . அதனை எதிர்த்து நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.

வழக்கை நீதிபதி திரு. M. M. சுந்தரேஷ் மற்றும் N. பால் வசந்தகுமார் ஆகியோர்கள் அடங்கிய அமர்வு விசாரித்தது.

உச்சநீதிமன்றம் "மல்கெய்ட் சிங் Vs ஜோகிந்தர் சிங் (1997-3-CTC-SC-619)" என்ற வழக்கில் பத்தி 7ல், ஒரு வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் வழக்கறிஞரை நியமித்து முறையாக வழக்கு நடத்தி வரும் நிலையில் அவர்களுடைய வழக்கறிஞர்கள் வழக்கு நடத்துவதிலிருந்து விலகிக் கொண்டால் (Reported No Instructions) வழக்கு நடத்துபவர்களுக்கு (Parties to the Suit) ஒரு அறிவிப்பினை நீதிமன்றம் அனுப்ப வேண்டும். அவ்வாறு அறிவிப்பு அனுப்பாமல் வழக்கினை மேற்கொண்டு நடத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் "சண்டிகர் அரசு Vs ரகுராஜ் (AIR-2009-SC-514)" என்ற வழக்கில், வழக்கு சம்மந்தப்பட்டவர் தன்னுடைய வழக்கை நடத்துவதற்கு வழக்கறிஞரை நியமித்து விட்டால் அந்த வழக்கறிஞரின் அந்த வழக்கில் ஆஜராக தவறிவிட்டால் அதற்காக வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆஜராக தவறிவிட்டால் பிரதிவாதிக்கு நீதிமன்றம் ஒரு அறிவிப்பை அனுப்ப வேண்டும், மாறாக விசாரித்து அல்லது பரிசீலித்து வழக்கில் தீர்ப்பளிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

O. S. A. NO - 391/2011

A. நாகராஜன் Vs P. P. M. கனகராஜ்

2013-1-MWN-CIVIL-867

6 months ago | [YT] | 45

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

சொத்து லட்சுமணனுக்கு பாத்தியப்பட்ட பூர்வீகச் சொத்து. அவர் அந்த சொத்தை அனுபவித்து வந்து தனது ஒரே மகனான மாடசாமியை வாரிசாக வைத்து விட்டு இறந்து போகிறார். தந்தை இறந்த சமயத்தில் மாடசாமிக்கு திருமணம் ஆகவில்லை.

பின்னர் சில ஆண்டுகள் கழித்து மாடசாமி திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கு முதல் மனைவி மூலம் ஒரு குழந்தையும், இரண்டாவது மனைவி மூலம் மூன்று குழந்தைகளும் பிறக்கிறார்கள். இந்நிலையில் மாடசாமி எவ்வித ஆவணங்களும் எழுதி வைக்காமல் தனது 4 குழந்தைகளை மட்டும் வாரிசுகளாக வைத்து விட்டு இறந்து போகிறார். அவர் மனைவிகள் இருவரும் மாடசாமி இறப்பதற்கு முன்பாகவே இறந்து போகிறார்கள்.

இப்போது இந்த சொத்து மாடசாமியின் சுய சம்பாத்திய சொத்தா? அல்லது மாடசாமியின் பூர்வீகச் சொத்தா?

மாடசாமி இறந்து விட்டதால் அந்த சொத்து இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 8 ன்படி குழந்தைகளுக்கு போய்ச் சேருமா? அல்லது பிரிவு 6 ன்படி குழந்தைகளுக்கு போய்ச் சேருமா?

பிரிவு 8 என்பது ஒரு இந்து ஆணின் தனிப்பட்ட சொத்தை பொறுத்தது ஆகும்.

பிரிவு 6 பூர்வீகச் சொத்தை பொறுத்தது ஆகும்.

கமெண்ட்ஸ் வரவேற்கப்படுகின்றது.

.............................................................................

கேள்விகளுக்கான விளக்கங்கள் :

1. சொத்து மாடசாமியின் சுய சம்பாத்திய சொத்தா? அல்லது மாடசாமியின் பூர்வீகச் சொத்தா?

லட்சுமணனுக்கு பாத்தியப்பட்ட பூர்வீகச் சொத்து, அவரது ஒரே மகனான மாடசாமிக்கு வாரிசுரிமையாகக் கிடைத்துள்ளது. இந்து சட்டத்தின்படி, ஒரு இந்து ஆண், தனது தந்தை, தந்தைவழித் தாத்தா அல்லது தந்தைவழி முப்பாட்டனாரிடமிருந்து பெறும் சொத்து பூர்வீகச் சொத்தாகவே கருதப்படும். மாடசாமிக்கு இந்தச் சொத்து கிடைக்கும்போது திருமணமாகாமல் இருந்தாலும், பிற்காலத்தில் அவருக்குக் குழந்தைகள் பிறந்தவுடன், அவர்களுக்கும் அந்தப் பூர்வீகச் சொத்தில் பிறப்புரிமை உண்டாகும்.
மாடசாமி அந்தச் சொத்தை தனியாகப் பிரித்துக்கொண்டு, தனது குழந்தைகளிடமிருந்து தனிப்பட்ட சொத்தாக மாற்றிக்கொண்டதாக எந்தத் தகவலும் இல்லை. எனவே, லட்சுமணனிடமிருந்து மாடசாமிக்குக் கிடைத்த அந்தச் சொத்து, மாடசாமியின் கைகளிலும் பூர்வீகச் சொத்தாகவே தொடர்ந்தது. மாடசாமியின் குழந்தைகள் பிறந்த பின்னர், அவர்கள் அந்தப் பூர்வீகச் சொத்தில் அவருடன் கூட்டுரிமைதாரர்கள் (coparceners) ஆனார்கள்.
ஆகவே, இந்தச் சொத்து மாடசாமியின் பூர்வீகச் சொத்து ஆகும்.

2. மாடசாமி இறந்து விட்டதால் அந்த சொத்து இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 8 ன்படி குழந்தைகளுக்கு போய்ச் சேருமா? அல்லது பிரிவு 6 ன்படி குழந்தைகளுக்கு போய்ச் சேருமா?

மாடசாமி இறக்கும்போது எந்த உயிலும் எழுதி வைக்கவில்லை. அவரது மனைவிகள் இருவரும் அவருக்கு முன்பே இறந்துவிட்டனர். அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் பிரிவு 6:

இது இந்து கூட்டுக்குடும்பத்தின் பூர்வீகச் சொத்தில் ஒரு கூட்டுரிமைதாரரின் (coparcener) பங்கு எவ்வாறு பிரிக்கப்படும் என்பதை விளக்குகிறது. 2005 ஆம் ஆண்டு திருத்தத்திற்குப் பிறகு, மகன்களைப் போலவே மகள்களுக்கும் பூர்வீகச் சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இந்து ஆண் கூட்டுரிமைதாரர் இறக்கும்போது, கூட்டுக்குடும்பச் சொத்தில் அவருக்கிருந்த பிரிக்கப்படாத பங்கு அவரது வாரிசுகளுக்கு (பிரிவு 6-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி) சேரும். இதில் அவரது குழந்தைகள், மனைவி மற்றும் தாய் ஆகியோர் அடங்குவர். இந்த வழக்கில், மாடசாமியின் மனைவிகள் இல்லாததால், அவரது நான்கு குழந்தைகளும் அவரது வாரிசுகளாகின்றனர்.

இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் பிரிவு 8:

இது ஒரு ஆண் இந்துவின் தனிப்பட்ட (சுய சம்பாத்திய) சொத்து அல்லது கூட்டுக்குடும்பத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவரின் சொத்து எவ்வாறு பிரிக்கப்படும் என்பதற்கான பொதுவான விதிகளைக் கூறுகிறது. பூர்வீகச் சொத்து இல்லாதபட்சத்தில் அல்லது பூர்வீகச் சொத்து ஏற்கனவே பிரிக்கப்பட்டு தனிப்பட்ட சொத்தாக மாறியிருந்தால் பிரிவு 8 பொருந்தும்.
மேற்கண்ட விளக்கத்தின்படி, லட்சுமணனிடமிருந்து மாடசாமிக்குக் கிடைத்த சொத்து பூர்வீகச் சொத்து என்பதாலும், மாடசாமியின் குழந்தைகள் அதில் பிறப்புரிமை கொண்ட கூட்டுரிமைதாரர்கள் என்பதாலும், மாடசாமி இறந்த பிறகு அந்தச் சொத்து அவரது குழந்தைகளுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 6-இன்படி போய்ச் சேரும்.
மாடசாமிக்கு அந்தப் பூர்வீகச் சொத்தில் இருந்த பிரிக்கப்படாத பங்கு, அவரது நான்கு குழந்தைகளுக்கும் சமமாகப் பிரிக்கப்படும். பிரிவு 8 இங்கு நேரடியாகப் பொருந்தாது, காரணம் இது முதன்மையாக பூர்வீகச் சொத்தின் வாரிசுரிமை சம்பந்தப்பட்டது. ஒருவேளை மாடசாமிக்கு ஏதேனும் சுய சம்பாத்திய சொத்துக்கள் இருந்திருந்தால், அந்தச் சொத்துக்கள் பிரிவு 8-இன்படி அவரது குழந்தைகளுக்குச் சென்றடையும். ஆனால் கேள்வி பூர்வீகச் சொத்தைப் பற்றியது என்பதால், பிரிவு 6 முதன்மையாகப் பொருந்தும்.

சொத்தின் தன்மை மற்றும் பிரிவு 6-இன் கீழ் பிறப்புரிமை:

லட்சுமணனிடமிருந்து மாடசாமிக்குக் கிடைத்த சொத்து பூர்வீகச் சொத்து. மாடசாமிக்கு அந்தச் சொத்து கிடைத்தபோது, அவர் திருமணமாகாமல் இருந்தார்.
மாடசாமிக்கு முதல் மனைவி மூலம் குழந்தை பிறந்தவுடன், அந்தக் குழந்தை பிறப்பின் அடிப்படையில் (by birth) அந்தப் பூர்வீகச் சொத்தில் உரிமை பெறுகிறது. இது இந்து வாரிசுரிமைச் சட்டம், பிரிவு 6-இன் கீழ் வரும். அதாவது, மாடசாமி மற்றும் அவரது முதல் மனைவியின் குழந்தை ஆகியோர் கூட்டுக் குடும்ப சொத்தின் பங்காளிகள் (coparceners) ஆகின்றனர்.
இதன் மூலம், சொத்து இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பாதி முதல் மனைவியின் குழந்தைக்கும், மீதி பாதி மாடசாமிக்கும் உரியது என்ற வாதம் சரியல்ல. பூர்வீகச் சொத்தில் பிறப்பால் உரிமை கிடைத்தாலும், தந்தை (மாடசாமி) உயிருடன் இருக்கும்வரை, சொத்து பிரிக்கப்படாமல் கூட்டுக் குடும்ப சொத்தாகவே நீடிக்கும். முதல் மனைவியின் குழந்தைக்கு பிறப்பிலேயே உரிமை இருந்தாலும், அது உடனடியாக தனிப்பட்ட பாகமாக பிரியாது. மாடசாமியின் பங்காகக் கருதப்படும் சொத்தும் பூர்வீகச் சொத்தின் தன்மையையே கொண்டிருக்கும்.

இரண்டாம் மனைவி குழந்தைகள் மற்றும் சட்டபூர்வமான நிலை:

இந்து திருமணச் சட்டம், 1955-இன்படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது செய்யப்படும் இரண்டாம் திருமணம் செல்லாத திருமணமாகும் (void marriage).
இருப்பினும், இந்து திருமணச் சட்டம், பிரிவு 16-இன்படி, செல்லாத மற்றும் செல்லாததாக்கக்கூடிய திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகள் சட்டபூர்வமான குழந்தைகளாகவே (legitimate children) கருதப்படுவார்கள். அவர்களுக்கு தங்கள் பெற்றோரின் சொத்தில் உரிமை உண்டு.
முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இத்தகைய குழந்தைகள் (செல்லாத திருமணம் மூலம் பிறந்தவர்கள்) தங்கள் பெற்றோரின் சுய சம்பாத்திய சொத்தில் மட்டுமின்றி, அவர்களின் பூர்வீகச் சொத்திலும் பங்கு கோர உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. அவர்கள் மற்ற சட்டபூர்வமான வாரிசுகளுக்கு இணையாகவே கருதப்படுவார்கள்.
சொத்து எவ்வாறு பிரிக்கப்படும்:

பூர்வீகச் சொத்தின் தன்மை:

மாடசாமியின் கைகளில் இருந்த முழு சொத்தும் பூர்வீகச் சொத்துதான். அது அவரது சுய சம்பாத்திய சொத்தாக மாறவில்லை.

பிரிவு 6-இன் தாக்கம்: மாடசாமி 2005-ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தத்திற்குப் பிறகு இறந்திருந்தால் (அல்லது அதற்கு முன் இறந்திருந்தாலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு), அவரது பூர்வீகச் சொத்தானது அவரது அனைத்து சட்டபூர்வமான வாரிசுகளுக்கும் (அனைத்து குழந்தைகளுக்கும்) சென்றடையும். 2005 சட்டதிருத்தத்தின்படி, மகள்களுக்கும் பூர்வீக சொத்தில் மகன்களைப் போலவே சம உரிமை உள்ளது.
மாடசாமிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் (முதல் மனைவி மூலம் ஒரு குழந்தை, இரண்டாம் மனைவி மூலம் மூன்று குழந்தைகள்). இந்த நான்கு குழந்தைகளும் சட்டப்படி அவரது வாரிசுகளே. எனவே, மாடசாமியின் பூர்வீகச் சொத்து, அவரது நான்கு குழந்தைகளுக்கும் சமமாகப் பிரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் சொத்தில் 1/4 பங்கு கிடைக்கும்.

பிரிவு 8 எப்போது பொருந்தும்?:

ஒரு இந்து ஆணின் தனிப்பட்ட சொத்து (சுய சம்பாத்தியம்) அல்லது அவர் கூட்டுக் குடும்பத்தில் தனக்குக் கிடைத்த பங்கை பிரித்துக்கொண்டு அது அவரது தனிப்பட்ட சொத்தாக மாறியிருந்தால், அவர் உயில் எழுதாமல் இறக்கும் பட்சத்தில் அந்தச் சொத்து பிரிவு 8-இன் கீழ் பிரிக்கப்படும். ஆனால், இந்த வழக்கில், மாடசாமியின் சொத்து அவரது மரணம் வரை பூர்வீகச் சொத்தாகவே இருந்துள்ளது. மேலும், அவர் தனது பங்கை பிரித்துக்கொண்டு அதை தனிப்பட்ட சொத்தாக மாற்றியதற்கான எந்தத் தகவலும் இல்லை. எனவே, சொத்து பிரிவு 6-இன் படியே பிரிக்கப்படும்.

முதல் மனைவியின் குழந்தைக்கு பிறப்புரிமை இருப்பதால் சொத்தின் ஒரு பகுதி அவருக்குச் சென்று, மீதமுள்ள மாடசாமியின் பங்கு அவரது தனிப்பட்ட சொத்தாகி, அது பிரிவு 8-இன் கீழ் பிரிக்கப்பட வேண்டும் என்பது சட்டப்படி சரியான அணுகுமுறை அல்ல.

மாடசாமியின் அனைத்து குழந்தைகளும் (நான்கு பேரும்) சட்டபூர்வமான வாரிசுகளாகக் கருதப்பட்டு, அவரது முழு பூர்வீகச் சொத்தும் இந்து வாரிசுரிமைச் சட்டம், பிரிவு 6-இன் கீழ் நான்கு சம பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பங்கு வழங்கப்படும். இரண்டாம் மனைவி மூலம் பிறந்த குழந்தைகள் சட்டவிரோதமான குழந்தைகள் (illegitimate children) என்ற வாதமும், அதனால் அவர்களுக்கு மாடசாமியின் தனிப்பட்ட சொத்தில் மட்டுமே பங்குண்டு என்ற வாதமும் தற்போதைய சட்டத்தின்படி ஏற்கத்தக்கதல்ல. அவர்கள் சட்டபூர்வமான குழந்தைகளாகவே கருதப்பட்டு, தந்தையின் பூர்வீகச் சொத்திலும் சம உரிமை பெறுவார்கள்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் ஒரு இந்து ஆண் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்தால், அந்த இரண்டாம் திருமணம் சட்டப்படி செல்லாத திருமணமாகும் (void marriage).குழந்தைகளின் நிலை: இங்குதான் இந்து திருமணச் சட்டம், 1955-இன் பிரிவு 16 முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தப் பிரிவின்படி
செல்லாத (void) அல்லது செல்லாததாக்கக்கூடிய (voidable) திருமணம் மூலம் பிறந்த குழந்தைகள், அந்தத் திருமணம் செல்லாது என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, சட்டபூர்வமான குழந்தைகளாகவே (deemed legitimate) கருதப்படுவார்கள். அதாவது, சட்டம் அவர்களை சட்டபூர்வமான குழந்தைகளின் தகுதியிலேயே அங்கீகரிக்கிறது.
சொத்துரிமை (இது மிக முக்கியமானது)
பெற்றோரின் சொத்தில் உரிமை: பிரிவு 16-இன் கீழ் சட்டபூர்வமானதாகக் கருதப்படும் இந்தக் குழந்தைகள், தங்கள் பெற்றோரின் சொத்தில் மட்டுமே உரிமை கோர முடியும்.

பூர்வீகச் சொத்து மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு:

முன்னர், இத்தகைய குழந்தைகள் தங்கள் தந்தையின் சுய சம்பாத்திய சொத்தில் மட்டுமே பங்குபெற முடியும், பூர்வீகச் சொத்தில் (coparcenary property) பிறப்பால் வரும் கூட்டுரிமை (coparcenary rights) அவர்களுக்குக் கிடையாது என்ற கருத்து நிலவியது. ஆனால், ரேவண்ணா சித்தப்பா மற்றும் பலர் எதிர் மல்லிகார்ஜுன் மற்றும் பலர் (Revanasiddappa & Anr. vs.

Mallikarjun & Ors.) (2011) மற்றும் அதன் மீதான புனர்ஆய்வு மனுவில் உச்ச நீதிமன்றம் 2023-இல் வழங்கிய மிக முக்கியமான தீர்ப்பின்படி, பிரிவு 16-இன் கீழ் சட்டபூர்வமானதாகக் கருதப்படும் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் பூர்வீகச் சொத்திலும் பங்கு கோர உரிமை உண்டு என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மற்ற சட்டபூர்வமான வாரிசுகளுக்கு இணையாகவே கருதப்படுவார்கள்.
அதாவது, தந்தை ஒரு இந்து கூட்டுக் குடும்பத்தின் (HUF) உறுப்பினராக இருந்து, அவருக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு இருந்தால், செல்லாத திருமணம் மூலம் பிறந்த சட்டபூர்வமான குழந்தைக்கும் அந்தப் பங்கில் உரிமை உண்டு. அவர்கள் பிற சட்டபூர்வமான குழந்தைகளுடன் சேர்ந்து தங்கள் தந்தைக்குக் கிடைக்கக்கூடிய பங்கைப் பிரித்துக் கொள்வார்கள்.

7 months ago | [YT] | 56