LAW IS SUPREME (சட்டம் மேலானது)

சட்டம் தொடர்பான சந்தேகங்கள், முன் தீர்ப்புகள், சட்ட நுணுக்கங்கள் மற்றும் விளக்கங்கள் கொண்ட பகுதியாக இது இருக்கும்.
தொடர்புக்கு

ப. தனேஷ் பாலமுருகன், வழக்கறிஞர்,
திருநெல்வேலி
Mobile No. 8870009240, 9360314094,

ப. ராஜதுரை, வழக்கறிஞர்,
சென்னை.
Mobile No. 7299703493




LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Date:9-9-2021.
Justice: S. Ananthi.
C.R.P.(PD) (MD)No. 1257/2021.
Senthilkumar v Alageshwari and Others

ஒரு பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நீதிமன்றத்தால் நம்பர் செய்யப்படும் நிலையில் வாரிசு சான்றிதழ் கேட்டு ரிட்டர்ன் போடக் கூடாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

செந்தில்குமார் எதிர் அழகேஸ்வரி [C.R.P.(PD) (MD) No. 1257/2021] வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, பாகப்பிரிவினை வழக்கின் ஆரம்பக் கட்டத்தில் வாரிசு சான்றிதழ் கட்டாயமில்லை என்று தீர்ப்பளித்தது. நீதிபதி எஸ். ஆனந்தி அளித்த இந்தத் தீர்ப்பு, கீழமை நீதிமன்றம் வழக்கைத் திருப்பி அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, உடனடியாக எண் கொடுத்து விசாரணையைத் தொடங்குமாறு அறிவுறுத்தியது. இந்தத் தீர்ப்பின் முழு விவரங்களை சென்னை உயர்நீதிமன்ற

In the case of Senthilkumar v. Alageshwari and Others [C.R.P.(PD) (MD)No. 1257/2021], the Madurai Bench of the Madras High Court, presided over by Justice S. Ananthi, issued a judgment on September 9, 2021, addressing procedural requirements for filing partition suits.

Case Summary
Issue: The petitioner challenged the return of their partition suit by the Principal Subordinate Judge, Pudukkottai. The lower court had refused to number the suit because the plaintiff had not filed a Legal Heir Certificate at the time of filing.

Ruling: Justice S. Ananthi set aside the lower court's return orders, ruling that a trial court cannot insist on the production of a Legal Heir Certificate as a precondition for numbering a suit.
Key Legal Point: At the numbering stage, the court's role is strictly confined to examining jurisdictional aspects. Substantive documents like a Legal Heir Certificate are matters of evidence and should not prevent the registry from numbering the plaint if it is otherwise in order.

Outcome: The Civil Revision Petition was disposed of with a direction to the Principal Subordinate Judge, Pudukkottai, to number the suit (O.S.(S.R).No. 4003 of 2021) without further delay.

2 weeks ago | [YT] | 9

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

செந்தமிழ் நாடு எனும் போதினிலே - இன்பத்
தேன் வந்துப் பாயுது காதினிலே"

பாவம் மகாகவி பாரதியார், நல்லவேளை இன்று உயிரோடு இல்லை.

தமிழ் நாட்டைப் பற்றி என்னென்ன கனவு கண்டார், கண்டிருப்பார், எவ்வளவு உயர்வாக எண்ணி இருந்தார். இப்படி, ஒரு சினிமா நடிகரைப் பார்க்கப் போய் உயிரை விடுவார்கள் என்று கனவில் கூட கற்பனை செய்திருக்கமாட்டார். ஓர் உயிர் போனாலே துயரம், நாற்பத்தியோர் உயிர் அநியாயமாகப் போய்விட்டதே. யாரை குற்றம் சொல்வது? உயிர் போய்விட்டதே என வருந்துவதா? இல்லை இப்படி உயிர்போய் விட்டதே என்று வருந்துவது?

நம் சமுதாயம் மற்றும் கலாச்சாரம், சீரழிவதற்கு (சாராயம், போதை, வன்முறை, ரௌடியிசம், பாலியல் வன்கொடுமை இன்னும் பல) முக்கியமானக் காரணம் இந்த சினிமாவும், சினிமா மோகமும் தான். சினிமாவில் நடித்து பிரபலமாகி விட்டால், தாங்கள் தான் மற்ற எல்லோரை விடவும் மிகவும் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு பல நடிகர் நடிகைகளுக்கு. அப்படிப்பட்ட சினிமா நடிகர் நடிகைகள் மீது, நம் மக்களுக்கு ஏனி இப்படிப்பட்ட ஒரு ஈர்ப்பு? ஏன் இந்த சினிமா மாயையில் கிடந்து உழல்கிறார்கள்? அவர்களும் நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர்கள் தானே? அவர்களும் வாயால் தானே சாப்பிடுகிறார்கள். அவர்கள் வியர்வை மட்டும் இனிக்குமா இல்லை மணக்குமா? அவர்கள் என்ன தேவதூதர்களா இல்லை வானில் இருந்து நேரடியாக குதித்து வந்தவர்களா? அவர்களைக் காண ஏன் இத்தனை ஆர்வம்? அவர்களை நேரில் கண்டுவிட்டால் உங்கள் வாழ்க்கை நோக்கம் நிறைவேறி விட்டதா? பிறந்த பலனை அடைந்துவிட்டீர்களா? என்ன ஒரு கேவலமான நிலைமையில் இருக்கிறார்கள் நம் தமிழ் மக்கள், குறிப்பாக இளவயதினர்?

இதனால் தான் கத்துக்குட்டி நடிகர்களில் இருந்து வெத்துவேட்டு நடிகர்கள் வரை அனைவரும் இரண்டு படங்கள் வெற்றிப் பெற்றுவிட்டால், அடுத்த முதல்வராக தங்களை எண்ணிக்கொள்கிறார்கள். சினிமாவில் நல்லவனாக நடிப்பதைத் தவிர வேறு என்ன நல்லது செய்திருப்பார்கள், இந்த நடிகர்கள் நாட்டு மக்களுக்கு? பின் எவ்வாறு அவர்களை இப்படி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.
எனக்கு சினிமாவின் மீதோ அல்லது சினிமா நடிகர் நடிகைகள் மீதோ எந்த வெறுப்பும், பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.

நானும் சினிமா பார்ப்பவன் தான், எனக்கும் சில நடிகர்களைப் பிடிக்கும், அதற்காக அவர்களே கதி என்று இருப்பதா? அவர்களுக்கு அது தொழில் நடிக்கிறார்கள் அதற்கான ஊதியத்தை, அதுவும் மற்ற எல்லா பணிகளில் கிடைக்கும் ஊதியத்தை விடவும் அதிகமாகப் பெற்றுக்கொள்கிறார்கள், அவ்வளவு தான். ஆனால் அந்த நடிகர் நடிகைகளை, உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை விடவும், உங்கள் குடும்பத்தினரை விடவும் உயர்வாக எண்ணி ஏன் நீங்கள் இப்படிக் கொண்டாடிக் களிக்கிறீர்கள். பொன்னான நேரத்தையும் அருமையான வாழ்க்கையும் அழிக்கிறீர்கள். சினிமா பார்க்கும் அந்த 2 அல்லது 3 மணி நேரம் மகிழ்ச்சியாக இருந்தீர்களா, நல்லது, அதற்கு மேல் அதை விட்டுவிட வேண்டாமா? உங்கள் வாழ்க்கையில் அல்லவா கவனம் செலுத்த வேண்டும், அதை விட்டுவிட்டு இப்படியா போய் இந்த அரிய உயிரை விடுவது?

சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களில், தமிழகத்தைப் பெரும்பாலும் ஆண்டது, திரைத்துறை சார்ந்தவர்கள் தான். இந்தியாவில், ஏன் உலகிலேயே வேறு எங்கும் இந்த நிலை கிடையாது. அந்த அளவிற்கு சினிமா நம்மை வசியப்படுத்தி புத்தியை மழுங்கடித்து வைத்திருக்கிறது. மாயவலையில் சிக்க வைத்து மதி மயக்கியிருக்கிறது.

சினிமா வந்தப் புதிதில் சினிமா நடிகர் நடிகைகள் மீது இந்த ஈர்ப்பு, கவர்ச்சி இருந்தது என்றால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தப் பின்னும், இன்னும் அப்படியே இருக்கிறோம் என்றால் எங்கோ தவறு இருக்கிறது என்று தானே பொருள்? நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம். சினிமாவில் கதாநாயகனாக நடித்த கையுடன் மாநிலத்தை ஆளும் முதல் அமைச்சராக ஆவதற்கு எல்லோரும் எம்ஜியார் அவர்கள் கிடையாது. அந்தக் காலம் வேறு, இப்பொழுது நாம் 2026 ஆம் ஆண்டை நோக்கி நடைப்போட்டுக்கொண்டு இருக்கிறோம். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கி கால் நூற்றாண்டு முடியப் போகிறது, ஆனால் நாம் இன்னும் திரையில் பார்த்த நடிகர் நடிகைகளே நேரில் பார்க்க அலைந்து, அவர்கள் பின்னால் ஓடி உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி?

மற்ற மாநிலங்களை விட மிகவும் முன்னேறிய மாநிலம் என்று நம் தமிழ்நாட்டைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறோம், கர்வம் அடைகிறோம், ஆனால் மற்ற மாநிலங்களில், நம்மைப் போல சினிமா நடிகர்கள் பின் சென்று உயிரைத் தொலைத்தவர்கள் யாரும் இல்லை. அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மதிப்பைக் கொடுக்கிறார்கள், வைக்க வேண்டிய இடத்தில் வைக்கிறார்கள். ஆனால், எதற்கெடுத்தாலும், வடக்கனஸ், பீடாவாயன், பானிப்பூரி விக்கிறவன் என்று எப்பொழுதும் வட மாநில மக்ககளைக் கேலிப் பேசுகிறவர்கள், எந்த வட மாநிலத்திலாவது, ஒரு நடிகரைப் பார்க்கப் போய் விலைமதிப்பில்லாத 41 உயிர்களை இழந்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டமுடியுமா? "தமிழண்டா..." "சிங்கம்டா...", மற்ற மாநிலங்களை விடவும் தொழில் வளர்ச்சியிலும், கல்வியிலும் சிறந்த மாநிலம் என்று பெருமைக் கொள்கிறோம், ஆனால் அப்படிப்பட்ட மாநிலத்தில் தான் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் மடிகிறார்கள், குடியிலும்/போதையிலும் தள்ளாடுகிறார்கள், குடிநீரில் மலம் கலக்குகிறார்கள், பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே பாலியல் வன்கொடுமை, நடக்கிறது இது எவ்வளவு பெரிய அசிங்கம்.

கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடிக்க முடிந்த நடிகர்களுக்கு, ஒரு சண்டைக்காட்சியில் நடிக்க வேறு ஒரு நபர் "டூப்"பாக நடிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் டூப்பாக நடிப்பவர்கள் உயிர் பெரிதில்லை, அவர்கள் காயம் அடைந்தால், அதைப் பற்றி ஒன்றும் கவலையில்லை, இத்தனைக்கும், அந்த டூப் நடிகர்கள் கோடியில் சம்பளம் வாங்குவதில்லை. அவ்வளவு வீரமானவர்கள்/விவரமானவர்கள் நம் கதாநாயகர்கள். இவர்களைத் தான் நாம் நிஜ ஹீரோக்கள் என்று தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம், ஆனால் அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் கால்தூசி தான். இல்லையென்றால் இத்தனை அசம்பாவிதங்கள் நடந்தப் பின்னரும் ஒரு மனிதாபிமானம் இல்லாமால், ஆறுதல் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அவ்வளவு விரைவாக சென்றிருப்பாரா? இது போன்ற சூழ்நிலையில் துணை நின்று உதவி செய்பவன் தானே தலைவன்? உங்களால் ஏற்பட்ட இந்த ஓர் இக்கட்டான நிலைமையில், துணிந்து முடிவு எடுக்கத் தெரியாதவர், முடியாதவர் எப்படி முதலமைச்சர் ஆகி, மற்ற முக்கியாமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும்?

சிந்தித்து செயல்படுங்கள்.. உங்கள் வாக்குகளை கவனமாக செலுத்துங்கள்.

1 month ago | [YT] | 16

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

பதிவு செய்யப்படாத ஆவணம்
பதிவு செய்யப்படாத, முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தப்படாத ஒரு ஆவணத்தை துணை நோக்கங்கள் உள்பட எந்த ஒரு காரணத்திற்காகவும் குறியீடு செய்ய முடியாது என மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
Lakshmanan Vs Palani (2012-1-LW-469)

5 months ago | [YT] | 35

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுவை , நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிரூபிக்கவில்லை என்ற ஒரே காரணத்தை கூறி தள்ளுபடி செய்ய முடியுமா? என்பதற்கான விடை இந்த வழக்கில் தீர்மானிக்கப்பட்டது.

(இந்த வழக்கில் கண்ட மனுதாரர் தனக்கு மஞ்சள் காமாலை நோய் என்று கூறி மனுத்தாக்கல் செய்தார் என்பதை நினைவில் கொள்ளவும்)

இப்போது காலதாமதம் குறித்தான மனுக்களில் காலதாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஒவ்வொரு நாளிற்கும் (Each and every day's delay) எதனால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டுமென சட்டம் எதிர்பார்ப்பதில்லை.

உச்சநீதிமன்றம் "ஓரியண்டல் அரோமா கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் Vs குஜராத் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (2010-4-MLJ-141)" என்ற வழக்கில், காலவரையறைச் சட்டம் என்பது ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். அந்த சட்டத்தை இயற்றியவர்கள் வழக்கு நடத்துபவர்களின் உரிமைகளை அழிப்பதற்காக ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் வழக்கு நடத்துவதை வேண்டுமென்றே காலதாமதப்படுத்தக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்டது. அதன் பின்னணி என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட காலம்வரை சட்டத்தின்படி தங்களுக்குரிய பரிகாரத்தை கேட்க வேண்டும் என்பதற்காக தான். ஒருவேளை குறித்த காலத்தில் தங்களுக்குரிய பரிகாரங்களை நீதிமன்றத்தில் கோர முடியாது போகும் நிலையில் அந்த காலதாமதத்தை மன்னிக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் பெற்றுள்ளது. காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ல் "போதிய காரணம் " என கூறப்பட்டுள்ளது எதற்காக என்றால் நீதிமன்றம் அந்த பிரிவினை அர்த்தமுள்ள வகையில் நீதியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை கடுமையான நோக்கில் விசாரிக்காமல் குறைவான காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

"கலெக்டர், லேண்ட் அக்யுசேசன் Vs காட்ஜி (1987-2-SCC-107)"

N. பாலகிருஷ்ணன் Vs M. கிருஷ்ணமூர்த்தி (1998-7-SCC-123)"

வேதாபாய் Vs சாந்தாராம் (2001-9-SCC-106)"

ஆகிய வழக்குகளில் இது குறித்து தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

"ராம்நாத் Vs கோபர்தான் (AIR-2002-SC-1201)" என்ற வழக்கில், ஒவ்வொரு காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுவில் வழக்கு நடத்துபவர்களின் குறைபாடும் அதிலிருக்கும் தவறான எண்ணத்துடன் வழக்கை காலதாமதம் செய்யும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படவில்லை எனில் அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். தவறான நோக்கத்தில் அத்தகைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதென கருதினால் அந்த மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை, மேலும் காலதாமத மனுக்களை விசாரிக்கும் போது எதிர்மனுதார்களின் நலத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மேலே சொன்ன தீர்ப்புகளின் அடிப்படையில் பாரத்தால் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை இப்படித்தான் தீர்மானிக்க வேண்டுமென எந்த விதிமுறைகளும் இல்லை என்பது தெரியவரும்.

எனவே குறைவாக காலதாமதம் உள்ள வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 1479/2012

G. நாராயணன் Vs G. மோகன் மற்றும் பலர்

2012-4-MLJ-CIVIL-356

5 months ago | [YT] | 21

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுவை , நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிரூபிக்கவில்லை என்ற ஒரே காரணத்தை கூறி தள்ளுபடி செய்ய முடியுமா? என்பதற்கான விடை இந்த வழக்கில் தீர்மானிக்கப்பட்டது.

(இந்த வழக்கில் கண்ட மனுதாரர் தனக்கு மஞ்சள் காமாலை நோய் என்று கூறி மனுத்தாக்கல் செய்தார் என்பதை நினைவில் கொள்ளவும்)

இப்போது காலதாமதம் குறித்தான மனுக்களில் காலதாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஒவ்வொரு நாளிற்கும் (Each and every day's delay) எதனால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டுமென சட்டம் எதிர்பார்ப்பதில்லை.

உச்சநீதிமன்றம் "ஓரியண்டல் அரோமா கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் Vs குஜராத் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (2010-4-MLJ-141)" என்ற வழக்கில், காலவரையறைச் சட்டம் என்பது ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். அந்த சட்டத்தை இயற்றியவர்கள் வழக்கு நடத்துபவர்களின் உரிமைகளை அழிப்பதற்காக ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் வழக்கு நடத்துவதை வேண்டுமென்றே காலதாமதப்படுத்தக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்டது. அதன் பின்னணி என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட காலம்வரை சட்டத்தின்படி தங்களுக்குரிய பரிகாரத்தை கேட்க வேண்டும் என்பதற்காக தான். ஒருவேளை குறித்த காலத்தில் தங்களுக்குரிய பரிகாரங்களை நீதிமன்றத்தில் கோர முடியாது போகும் நிலையில் அந்த காலதாமதத்தை மன்னிக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் பெற்றுள்ளது. காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ல் "போதிய காரணம் " என கூறப்பட்டுள்ளது எதற்காக என்றால் நீதிமன்றம் அந்த பிரிவினை அர்த்தமுள்ள வகையில் நீதியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை கடுமையான நோக்கில் விசாரிக்காமல் குறைவான காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

"கலெக்டர், லேண்ட் அக்யுசேசன் Vs காட்ஜி (1987-2-SCC-107)"

N. பாலகிருஷ்ணன் Vs M. கிருஷ்ணமூர்த்தி (1998-7-SCC-123)"

வேதாபாய் Vs சாந்தாராம் (2001-9-SCC-106)"

ஆகிய வழக்குகளில் இது குறித்து தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

"ராம்நாத் Vs கோபர்தான் (AIR-2002-SC-1201)" என்ற வழக்கில், ஒவ்வொரு காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுவில் வழக்கு நடத்துபவர்களின் குறைபாடும் அதிலிருக்கும் தவறான எண்ணத்துடன் வழக்கை காலதாமதம் செய்யும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படவில்லை எனில் அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். தவறான நோக்கத்தில் அத்தகைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதென கருதினால் அந்த மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை, மேலும் காலதாமத மனுக்களை விசாரிக்கும் போது எதிர்மனுதார்களின் நலத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மேலே சொன்ன தீர்ப்புகளின் அடிப்படையில் பாரத்தால் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை இப்படித்தான் தீர்மானிக்க வேண்டுமென எந்த விதிமுறைகளும் இல்லை என்பது தெரியவரும்.

எனவே குறைவாக காலதாமதம் உள்ள வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 1479/2012

G. நாராயணன் Vs G. மோகன் மற்றும் பலர்

2012-4-MLJ-CIVIL-356

5 months ago | [YT] | 12

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுவை , நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிரூபிக்கவில்லை என்ற ஒரே காரணத்தை கூறி தள்ளுபடி செய்ய முடியுமா? என்பதற்கான விடை இந்த வழக்கில் தீர்மானிக்கப்பட்டது.

(இந்த வழக்கில் கண்ட மனுதாரர் தனக்கு மஞ்சள் காமாலை நோய் என்று கூறி மனுத்தாக்கல் செய்தார் என்பதை நினைவில் கொள்ளவும்)

இப்போது காலதாமதம் குறித்தான மனுக்களில் காலதாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஒவ்வொரு நாளிற்கும் (Each and every day's delay) எதனால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டுமென சட்டம் எதிர்பார்ப்பதில்லை.

உச்சநீதிமன்றம் "ஓரியண்டல் அரோமா கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் Vs குஜராத் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (2010-4-MLJ-141)" என்ற வழக்கில், காலவரையறைச் சட்டம் என்பது ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். அந்த சட்டத்தை இயற்றியவர்கள் வழக்கு நடத்துபவர்களின் உரிமைகளை அழிப்பதற்காக ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் வழக்கு நடத்துவதை வேண்டுமென்றே காலதாமதப்படுத்தக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்டது. அதன் பின்னணி என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட காலம்வரை சட்டத்தின்படி தங்களுக்குரிய பரிகாரத்தை கேட்க வேண்டும் என்பதற்காக தான். ஒருவேளை குறித்த காலத்தில் தங்களுக்குரிய பரிகாரங்களை நீதிமன்றத்தில் கோர முடியாது போகும் நிலையில் அந்த காலதாமதத்தை மன்னிக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் பெற்றுள்ளது. காலவரையறைச் சட்டம் பிரிவு 5 ல் "போதிய காரணம் " என கூறப்பட்டுள்ளது எதற்காக என்றால் நீதிமன்றம் அந்த பிரிவினை அர்த்தமுள்ள வகையில் நீதியை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை கடுமையான நோக்கில் விசாரிக்காமல் குறைவான காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

"கலெக்டர், லேண்ட் அக்யுசேசன் Vs காட்ஜி (1987-2-SCC-107)"

N. பாலகிருஷ்ணன் Vs M. கிருஷ்ணமூர்த்தி (1998-7-SCC-123)"

வேதாபாய் Vs சாந்தாராம் (2001-9-SCC-106)"

ஆகிய வழக்குகளில் இது குறித்து தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

"ராம்நாத் Vs கோபர்தான் (AIR-2002-SC-1201)" என்ற வழக்கில், ஒவ்வொரு காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுவில் வழக்கு நடத்துபவர்களின் குறைபாடும் அதிலிருக்கும் தவறான எண்ணத்துடன் வழக்கை காலதாமதம் செய்யும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படவில்லை எனில் அந்த மனுவை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். தவறான நோக்கத்தில் அத்தகைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதென கருதினால் அந்த மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை, மேலும் காலதாமத மனுக்களை விசாரிக்கும் போது எதிர்மனுதார்களின் நலத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மேலே சொன்ன தீர்ப்புகளின் அடிப்படையில் பாரத்தால் காலதாமதத்தை மன்னிக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை இப்படித்தான் தீர்மானிக்க வேண்டுமென எந்த விதிமுறைகளும் இல்லை என்பது தெரியவரும்.

எனவே குறைவாக காலதாமதம் உள்ள வழக்குகளில் எளிமையாகவும், மிகவும் அதிகமாக காலதாமதம் ஏற்பட்டிருக்கும் வழக்குகளில் கடுமையாகவும் நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 1479/2012

G. நாராயணன் Vs G. மோகன் மற்றும் பலர்

2012-4-MLJ-CIVIL-356

5 months ago | [YT] | 28

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub-Registrar Office) பத்திரங்கள் பதிவு செய்யும் போது பல்வேறு புத்தகங்கள் (Register Books) பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு புத்தகமும் தனித்தனி வகையான பத்திரங்களை பதிவு செய்யும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறது. கீழே அவை பற்றிய விரிவான விவரம்:

சார் பதிவாளர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான புத்தக வகைகள்:

புத்தக எண் புத்தகத்தின் பெயர் பயன்பாடு

Book 1
(Register of Non-Testamentary Documents relating to Immovable Property)
நிலம் மற்றும் அசைவற்ற சொத்துகள் தொடர்பான ஒப்பந்தங்கள் (Sale, Mortgage, Lease, Partition, Settlement, Gift deeds) பதிவுக்கு.
உதாரணம் EC இல் வரும் அனைத்து ஆவணங்களும்

Book 2

Index registrar ஆவணம் தாக்கல் செய்யப்படும் பொழுது ஆவண பதிவிற்கான மறுப்பதற்கான விவரங்களை எழுதி வைக்கும் புத்தகம்

Book 3 பிரதிகள் புத்தகம் (Register of Wills and Authorities to Adopt - kept in original form) உயில்களின் அசல் பிரதிகள் தனியாக வைத்திருக்கும் பதிவு புத்தகம்.

Book 4 References / Miscellaneous Register பிற குறிப்புகள், குறிப்பாக non-testamentary documents that do not relate to immovable property. உதா: Power of Attorney, Agreement for Hire, etc.

Book 5
குறிப்பாக "உயில்களின் வைப்புத்தொகைப் பதிவேட்டை" குறிக்கிறது. இந்தப் பதிவேடு பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது மற்றும் பாதுகாப்பாக வைப்பதற்காக உயில்களின் வைப்புத்தொகையைப் பதிவு செய்யப் பயன்படுகிறது.

இந்த புத்தகங்கள் அனைத்தும் Indian Registration Act, 1908 மற்றும் தமிழ்நாடு Registration Rules அடிப்படையில் பராமரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பதிவுக்கும் Document Number, Volume Number, மற்றும் Page Number ஆகியவை உண்டு.

பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை எதிர்காலத்தில் பெற, இந்த பதிவுகளின் அடிப்படையில் Certified Copy (சான்றுப் பிரதிகள்) வழங்கப்படும்

இவை அனைத்தும் அரசு பதிவு அலுவலகத்தில் உள்ள பதிவாளர்கள் மற்றும் பொதுமக்கள் சரிவர புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களாகும்.

5 months ago | [YT] | 35

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

சென்னை உயர்நீதிமன்றம் " இலட்சுமிபதி மற்றுமொருவர் Vs A. M. சக்கரபாணி ரெட்டியார் (2001-1-CTC-112)" என்ற வழக்கில், கூட்டு பங்குரிமையாளர்கள் அசையாச் சொத்துக்களை வாய்மொழியாக பாகம் பிரித்து கொள்ளலாம் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். இருத்தபோதிலும் அந்தப் பாகப்பிரிவினை குறித்து ஓர் ஆவணம் எழுதப்பட்டிருந்தால், அதனை பதிவுச் சட்டம் பிரிவு 17 ன்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத ஓர் ஆவணத்தை பாகப்பிரிவினையை நிரூபிப்பதற்காக பயன்படுத்த முடியாது. ஆனால் அந்த ஆவணத்தை துணை நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே வாய்மொழியாக ஏற்பட்ட பாகப்பிரிவினையை பதிவு செய்து எழுதப்பட்ட ஆவணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் உரிய முத்திரைக் கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்படாத பாகப்பிரிவினை ஆவணத்தை துணை நோக்கங்களுக்காக சான்றாவணமாக குறியீடு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

A. S. No - 1039/2007

Dt - 5.1.2017

M.சென்னியப்பன் மற்றுமொருவர் Vs M. இரங்கநாதன் மற்றுமொருவர்

2017-3-MWN-CIVIL-74

6 months ago | [YT] | 45

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

நேற்றைய என்னுடைய வீடியோ பதிவுக்கு ஒருவர், நான் விளம்பரம் செய்வதாகவும், ஆன்லைன் கன்சல்டிங்க்கு பணம் கேட்பதாகவும் கமெண்ட் செய்துள்ளார்.

நான் எந்த காலத்திலும் ஆன்லைன் கன்சல்டிங் பண்ணுவதில்லை. பணமும் பெறுவதில்லை. நான் வியாபார ரீதியாகவோ, விளம்பர நோக்கிலோ யூப்டியூப் சேனல் நடத்தவில்லை. பொதுமக்கள் மற்றும் ஜீனியர் வழக்கறிஞர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். மேலும் எனக்கு பயன்படும் என்ற வகையிலும் செயல்படுத்துகிறேன்.

நான் practicing advocate ஆவேன். யூப்டியூப் தொழில் அல்ல. என்னை ஊக்கப்படுத்தும் வகையில் கமெண்ட் பண்ணுங்க. அதனை விடுத்து தவறான தகவலை கூறி கமெண்ட் பண்ணாதீங்க.

நன்றி

அன்புடன்
ப. தனேஷ் பாலமுருகன்
அட்வகேட்

7 months ago | [YT] | 103

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

ஒருவர் பெயருக்கு உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்று 1995 ல் உச்சநீதிமன்றம் கீழே கண்ட வழக்கில் அருமையான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றம் " Kasi Bai Vs Parvathy Bai (1995 - 6 - SCC - 213) என்ற வழக்கின் பத்தி 10 ல்" சட்டப்படி சான்றொப்பமிட வேண்டிய ஆவணம் குறித்து இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 68 ல் கூறப்பட்டுள்ளது. கட்டாயமாக சான்றொப்பமிட வேண்டிய ஆவணங்களில் ஒரு ஆவணமாக உயிலும் உள்ளது. அவ்வாறு கட்டாயமாக சான்றொப்பமிட வேண்டிய ஒரு ஆவணத்தை நிரூபிப்பதற்கு சான்றொப்பமிட்டுள்ள சாட்சிகளில் குறைந்தபட்சம் ஒருவரையாவது விசாரித்து, அந்த ஆவணம் எழுதப்பட்டுள்ளதை நிரூபிக்க வேண்டும். பிரிவு 68 ஐ படித்து பார்க்கும் பொழுது, சான்று கையொப்பமிடுதல் மற்றும் எழுதி வைத்தல் (Attestation and Execution) ஆகிய இரண்டும் வெவ்வேறான செயல்கள் என்பதும், அவை ஒன்றையொன்று பின்பற்றி நடைபெறக்கூடிய செயல்கள் என்பதும் தெரிய வருகிறது.

சட்டப்படி சான்றொப்பமிட வேண்டிய ஒரு ஆவணத்தில் சான்றொப்பம் இடப்படவில்லை என்றாலும், அவ்வாறு சான்றொப்பம் இடப்பட்டிருந்து, அந்த சான்றொப்பமிட்டிருப்பது நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அந்த ஆவணம் சட்டப்படி செல்லாது.

இந்திய வாரிசுரிமை சட்டம் பிரிவு 63(c) ல் உயில் ஆவணம் குறித்து சில விதிமுறைகள் உள்ளது. அதன்படி ஓர் உயில் ஆவணமானது இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட சாட்சிகளால் கட்டாயமாக சான்றொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

ஆகவே உயிலானது கட்டாயமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் சான்றொப்பம் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் ஒருவரை வைத்து அந்த உயில் எழுதப்பட்டதை மெய்பிக்க வேண்டும். அப்படியென்றால்தான் அந்த உயில் செல்லும்.

8 months ago | [YT] | 58