நிகழ்வு ஓர் அற்புதம்

புது பாதையோ, புது தேடலோ,
புது நகரமோ, புது முகமோ,
புது நினைவோ, புது வனமோ,

எதுவாக இருந்தாலும் ஆனந்தமே..!

பயணப்படும் அந்த நிமிடத்தில்...!

பாதையும்,
பகிரும் துணையும்
நம்மை ஆட்கொள்வதில்லை - சில நேரங்களில்!
தனிமையே துணையாய் ஆட்கொள்கிறது - பல நேரங்களில்!!

இருளில் தொலைந்து போகாமல்
காக்கும் நினைவுகளைத் தேடி
பயணப்படும் பாதைகளே
நிலைக்கிறது நினைவுகளை சுமந்து....!

அதற்காக
பன்னாட்டு பயணம் தேவையில்லை;

யாரோ ரசித்த நினைவுகளும்
பகிரும் உணர்வுகளும் கூட
தேடலை ஆழப்படுத்தும் அற்புதமே...

அற்புதமே... அற்புதமே....
எந்த நிகழ்வும் ஓர் அற்புதமே...!

பயணப்பட்டால் பாதை தானாய் வழிகொடுக்கும்,
பிரபஞ்சமும் தென்றலாய் வருடிக் கொடுக்கும்.... உன்னதனமாய்!!