புது பாதையோ, புது தேடலோ,
புது நகரமோ, புது முகமோ,
புது நினைவோ, புது வனமோ,
எதுவாக இருந்தாலும் ஆனந்தமே..!
பயணப்படும் அந்த நிமிடத்தில்...!
பாதையும்,
பகிரும் துணையும்
நம்மை ஆட்கொள்வதில்லை - சில நேரங்களில்!
தனிமையே துணையாய் ஆட்கொள்கிறது - பல நேரங்களில்!!
இருளில் தொலைந்து போகாமல்
காக்கும் நினைவுகளைத் தேடி
பயணப்படும் பாதைகளே
நிலைக்கிறது நினைவுகளை சுமந்து....!
அதற்காக
பன்னாட்டு பயணம் தேவையில்லை;
யாரோ ரசித்த நினைவுகளும்
பகிரும் உணர்வுகளும் கூட
தேடலை ஆழப்படுத்தும் அற்புதமே...
அற்புதமே... அற்புதமே....
எந்த நிகழ்வும் ஓர் அற்புதமே...!
பயணப்பட்டால் பாதை தானாய் வழிகொடுக்கும்,
பிரபஞ்சமும் தென்றலாய் வருடிக் கொடுக்கும்.... உன்னதனமாய்!!
Shared 4 months ago
282 views
Shared 10 months ago
1 view
Shared 1 year ago
86 views
Shared 1 year ago
103 views
Shared 1 year ago
66 views
Shared 1 year ago
259 views
Shared 1 year ago
131 views
Shared 1 year ago
34 views
Shared 1 year ago
855 views
Shared 1 year ago
138 views
Shared 2 years ago
63 views
Shared 2 years ago
42 views
Shared 2 years ago
54 views