👉 “Naam ungaludaiya kadaisi samudhaayam”

🇮🇳 தமிழ்நாடு & இந்தியா — ஒரு மாற்றத்திற்கான என் கனவு!

நான் இக்ராம் அஹ்மத், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய குடிமகன்.

இன்றைய அரசியல் சூழ்நிலையையும், நம் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சினைகளையும் மக்கள் சிந்தித்து கேள்வி கேட்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அரசியல்
தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை மக்கள் விழிப்புடன் கவனித்து, நல்லது எது? தவறு எது? என்பதை கேள்வி கேட்க வேண்டும்.
அதனால், என் வாழ்நாளில் சமூகத்திற்கும் மக்களுக்கும் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். தவறு என்று நான் நினைப்பதை மரியாதையுடனும் உண்மையான தகவல்களுடனும் சுட்டிக்காட்டுவேன். எந்த ஒரு தனிநபரையும் வெறுப்பதற்காக அல்ல; நல்லாட்சி, நேர்மை, நீதி மற்றும் மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பதே என் நோக்கம்
இன்ஷா அல்லாஹ் 🤲, ஒருநாள் இந்தியாவில் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்.

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த நீதி, நேர்மை, இரக்கம், பொறுப்பு மற்றும் மனிதநேயத்தின் வழிகாட்டுதல்களை நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்.

🇮🇳 மாற்றம் ஒருவரிடமிருந்து தொடங்குகிறது.
நான் தொடங்குகிறேன.
.