Thanks for 1k heart's♡


Murugan Kc

நான் 1938 இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த பத்து நாட்களில் அதைத் திரும்பவும் எழுதி விட்டேன். இரண்டாவது தடவை எழுதியது பல அனாவசியமான பகுதிகளை அகற்றவும் நாவலைச் சுருக்கமாக எழுதவும் எனக்குப் பயன்பட்டது. இந்நாவலில் வரும் கதையோ சம்பவங்களோ ஜோசியமோ முக்கியமல்ல. ஆனால் குணச் சித்திரங்கள், மனப்போராட்டம், உலகமே ஒரு குடும்பம் என்கிற சித்தாந்தம் இவற்றில் நம்பிக்கை வைத்து நான் எழுதிய நாவல் 'சர்மாவின் உயில்' எனக்குத் திருப்தி தந்த முதல் நாவல் இது -க. நா. சு.

மேற்கூறியிருப்பது போல் இப்படி இந்த நாவலின் ஆசிரியர் க.நா.சு ஆரம்பத்திலே சொல்லிவிடுவதால் எனக்கு இந்நாவலில் குறை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. முன்னுரையில் அவர் கூறியிருக்கும் விஷயத்தை நீங்கள் ஒரு disclaimer ஆக மனதில் நிறுத்திக்கொண்டு இந்த நாவலை வாசித்தால் நிச்சயம் இது உங்களுக்கும் பிடித்த ஒரு நாவல் என்கிற பட்டியலில் சேரலாம்.

க. நா. சுப்ரமண்யம் மொழிப்பெயர்ப்பில் இதற்குமுன் ஒருசில மகத்தான படைப்புகளை நான் வாசித்திருந்தாலும் இப்போது தான் முதன்முதலில் அவரது சொந்த நாவலை படிக்கிறேன் எனக்கு இது ஒரு நாவல் என்கிற வடிவில் முழுமையாக இருப்பதாகவே தோன்றுகிறது அப்படித்தான் உணர்கிறேன். வாசிப்பு பிரியர்கள் அனைவருமே இதை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.
சர்மாவின் உயில் - Interesting novel ❤️📚✒️

Check out Murugan k : 👇👇
Follow insta: @murugan_dir for more updates

______புத்தக அறிமுகம்_____

#travel #travelphotography #bookstagram #books #literature #booklover #writing #bookworm #tamil #periyar #ambedkar #karlmarx #cheguevara

3 years ago | [YT] | 2

Murugan Kc

All the request of friends - Now I joined clubhouse 😊 (@murugan_dir)
Link :
www.clubhouse.com/@murugan_dir
#clubhouse #cinema #books #art #films

4 years ago | [YT] | 1

Murugan Kc

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கலைஞன் விவேக். நகைச்சுவையில் அறிவு சார்ந்த கேள்விகளை எழுப்பியவர் பகுத்தறிவை தனது கலையின் வழியாய் மக்களிடம் சேர்த்தவர். சுற்றுசூழல் ஆர்வலராய் பல லட்சம் மரக்கன்றுகளை இப்பூமியில் நட்டவர் இன்று அனைவரிடமிருந்தும் விடைபெற்று கொண்டார். இவரை போன்ற கலைஞன் எல்லாம் தமிழ் சமூகத்திற்கு மீண்டும் கிடைப்பது கேள்விக்குறி தான். வணங்குகிறேன் விவேக் 💔
Check out Murugan k : 👇👇
instagram: instagram.com/murugan_dir

4 years ago | [YT] | 1

Murugan Kc

The painted veil (2006) ❤️🎬
Directed by John Curran
The painted veil என்கிற நாவலை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் இது. ஒரு பெண்ணின் மனப்போராட்டமே இந்த படம் என்று சொல்லலாம். திருமணத்திற்கு பிறகு கிட்டி தனது கணவர் மூலம் அறிமுகம் ஆகும் சார்லி மீது காதல் வயப்படுகிறாள் அவரோ ஏற்கனவே திருமணம் முடிந்தவர் அது தெரிந்தும் இருவருக்குள்ளும் பரஸ்பர உறவு தொடர்கிறது. குறுகிய காலத்தில் இது கிட்டியின் கணவனுக்கு தெரிய வர பிறகு என்ன நிகழ்கிறது இதனை கிட்டியின் கணவன் எப்படி எதிர்கொள்கிறான் அதற்கு கிட்டியிடம் இருந்து வரும் எதிர்வினை என்ன என்பதே இப்படத்தின் மீதி கதை. படத்தில் Walter யின் காதலை பற்றிய புரிதல் மிகவும் நெகிழ வைக்கிறது மேலும் உண்மை காதல் என்பதும் கூட அதுவாகவே இருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது.
Check out Murugan k : 👇👇
instagram: instagram.com/murugan_dir

4 years ago | [YT] | 2

Murugan Kc

எனது பரிந்துரைகள் 📚❤️✒️
General books
1) பெண் ஏன் அடிமையானாள்
2) அழியட்டும் பெண்மை
3) இந்துத்துவா என்றால் என்ன
4) RSS அறிந்துகொள்வோம்
5) இந்தியாவில் சாதிகள்
6) ஆயுத வியாபாரத்தின் அரசியல்
7) புத்தம் சரணம்
8) புத்தரும் அவர் தம்மமும்
Novel
9) வெண்ணிற இரவுகள்
10) வெக்கை
11) வாடிவாசல்
12) பசி
13) அஞ்சல் நிலையம்
14) உறுபசி
15) ஜமீலா
16) கடலும் கிழவனும்
17) தண்ணீர்
18) பெத்தவன்
19) ரஸவாதி
20) லாக்கப்
Cinema
21) ஷாட் பை ஷாட்
22) 101 திரைக்கதை எழுதும் கலை
23) Zero budget filmmaking
24) இவன்தான் பாலா
25) வேடிக்கை பார்ப்பவன்
Short stories
26) விலைக்கு வந்த வாழ்வு
27) தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
28) வருவதற்கு முன்பிருந்த வெயில்
Poetry
29) சிச்சிலி
30) மழைப் பேச்சு
Psychology
31) காமத்தில் இருந்து கடவுளுக்கு
32) அர்த்தமுள்ள அந்தரங்கம்
33) உயிர்மொழி
34) The book of women
35) Ikigai
வாசிப்போம் அதனை பகிர்வோம் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவோம். அனைவர்க்கும் நன்றி.
Check out Murugan k : 👇👇
instagram: instagram.com/murugan_dir
twitter: twitter.com/Murugankc5

4 years ago | [YT] | 1

Murugan Kc

ஜமீலா ❤️
மிகவும் இறுக்கமான மொழிநடையால் எழுதப்பட்டிருக்கும் குறுநாவல் இது. மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு இது ஒரு காதல் கதையாக மட்டுமே தெரிய வாய்ப்பு இருக்கிறது ஆனால் எழுத்தாளர் பின்னணியில் வேறு ஒரு பாதிப்பை பற்றியும் பதிவு செய்கிறார். சிறுதும் சலுப்பு தட்டாமல் முழுமூச்சாக வாசித்து முடித்தேன். இது என்னை இந்நூலின் ஆசிரியரான சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவரின் இன்னபிற நூல்களையும் அடுத்தது தொடர்ந்து வாசிக்க உந்தியிருக்கிறது. இயல்புக்கும் எதார்த்தத்திற்கும் அழகியலுக்கு சற்றும் குறைவில்லாத குறுநாவல் இது.

4 years ago | [YT] | 1

Murugan Kc

எந்த ஒரு நல்ல படைப்பும் நம்மை அடுத்ததை நோக்கி எளிதில் நகரவிடாது என்பார்கள். அதற்கான உதாரணம் தான் இந்த #சிச்சிலி கவிதை தொகுப்பு புத்தகம். இதில் நிறைய கவிதைகள் என்னை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தது. ஒரு மாத காலமாய் தீர்ந்து போக கூடாதென ஒவ்வொரு முறையும் மிச்சம் வைத்து கொஞ்ச கொஞ்சமாய் வாசித்தேன் இன்று அது நிறைவு பெற்றதில் தான் சிறுது சோகம். இதில் நிறைய கவிதைகள் எனது வாசிப்பை தொடரவிடாமல் தொந்தரவு செய்தது. அது மீட்டெடுக்கும் நினைவுகள் பல நம்மை மகிழ, ரசிக்க, ஏங்க வைப்பதோடு மட்டுமல்லாமல் நம்மை தொடர்ந்து அதுகுறித்து சிந்திக்க வைப்பதும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுமாய் இருக்கிறது. நான் இது வரையில் வாசித்த கவிதை தொகுப்புகளில் இதுதான் மிகச்சிறந்தது என்று இதனை பகிர தோன்றுகிறது.
சிச்சிலி - லீனா மணிமேகலை ❤️

4 years ago | [YT] | 1