காணலாம் கற்கலாம்

இந்த ஆண்டு +2 எழுதிய மாணவர்களில் பல பேர் தமிழ் வினாத்தாள் கடினம் என்று சொன்னார்கள். என்னிடம் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழில் மதிப்பெண் குறைவதாக வருந்தினார்கள். அப்போது எனக்கு உதித்தது தான் இந்த "காணலாம், கற்கலாம்" என்ற காணொளி தொடங்கும் யோசனை. முப்பது ஆண்டு காலம் மேல்நிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றிய நான், எத்தனையோ மாணவர்களை அதிகப்பட்ச மதிப்பெண் பெற வைத்த நான், என் கல்விப் பணியைத் தொடரவும், விரிவுபடுத்தவும் இது நல்ல சந்தர்ப்பம் என்று தோன்றியது. என் கற்பித்தல் அறிவு ஏன் என் சமுதாயத்திற்கு பயன்படக்கூடாது என்ற எண்ணம் என்னை மீண்டும் மீண்டும் தாக்கியது. அதன் விளைவே இந்த காணொளி. என் மாணவமணிகளுக்குத் தமிழ் வகுப்பை அவர்கள் இல்லத்திற்கே கொண்டு செல்ல முடிவு செய்தேன். தமிழை அவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் எளிமையாகவும் தெளிவாகவும் நடத்த முடிவு செய்தேன். அதன் விளைவே இந்த காணலாம், கற்கலாம் என்ற கல்விக் காணொளி. என் முயற்சித்திருவினையாகும் என்று நம்புகிறேன்.

முனைவர். சித. இராஜவல்லி M. A., B. Ed., M. Phil