Jayapataka Swami Tamil



Jayapataka Swami Tamil

தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமி குரு மகராஜாவின் உடல் நிலை குறித்த அறிவிப்பு
முகாம்: ஹிராநந்தனி, சென்னை
செப்டம்பர் 12, 2023


ஹரே கிருஷ்ணா,
தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமி குரு மகராஜாவின் அன்பான சீடர்கள் மற்றும் நலன் விரும்பிகளே!

எங்கள் பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே!
எல்லா புகழும் குரு மகாராஜாவுக்கே


இன்று, 45 நாட்களுக்குப் பிறகு, ஸ்ரீல குரு மகராஜா நீர் நிலை சிகிச்சையை மீண்டும் தொடங்கினார், மேலும் 40 நாட்களுக்குப் பிறகு ஜன்மாஷ்டமி அன்று அவர் இஸ்கான் சென்னை கோவிலுக்குச் சென்றார்.

முதலில் தரிசனம் செய்ய மட்டுமே திட்டம் இருந்தது ஆனால் வழக்கம் போல் குரு மகராஜர் ஒரு குறுகிய சொற்ப்பொழிவு ஆற்ற முடிவு செய்தார். 15 நிமிடம் பேசிவிட்டு தனது இல்லத்துக்குத் திரும்பினார்.

குரு மகராஜர் தனது உடல் வலிமையின் அளவீடுகள் சீராக ஆனால் மெதுவாக முன்னேறுவதை நன்றாக உணர்கிறார்.

குரு மகராஜாவின் உடலின் கீழ் பாதியில் சுரந்திருந்தத நீர் தற்போது நீர் நிலை சிகிச்சையால் குறைந்துள்ளது.

சிறுநீரகம் தொடர்பான இரத்தப் பரிசோதனைகள் சில லேசான சரிவைக் காட்டியுள்ளன, ஆனால் அவை விரைவில் முன்னேற்றத்தைக் காண்பிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

குரு மகராஜாவின் ஆக்ஸிஜன் அளவு இன்னும் எல்லையில் உள்ளது. அவரது இரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்து வருகிறது, இதனை இயல்பு நிலைக்கு கொண்டு வர மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

குரு மகராஜாவின் உடல்நிலை விரைவில் குணமடைந்து அவர்
ஸ்ரீல பிரபுபாதரின் கட்டளைகளை தொடர்ந்து நிறைவேற்ற நீங்கள் அனைவரும் உங்கள் பிரார்த்தனைகளை தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


உங்கள் அனைவருக்கும் நன்றி.

ஜேபிஎஸ் மருத்துவ குழு மற்றும் ஜேபிஎஸ் சேவா குழு, சார்பில்

மஹாவராஹ தாஸ்

2 years ago | [YT] | 5

Jayapataka Swami Tamil

தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமி குரு மகராஜரின் உடல் நிலை அறிவிப்பு


முகாம்: ஹிராநந்தானி, சென்னை
18 ஆகஸ்ட் 2023

தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமி குரு மகராஜரின் அன்பான சீடர்களே! மற்றும் நலம் விரும்பிகளே!!

எங்கள் பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
எல்லா புகழும்
ஸ்ரீல பிரபுபாதருக்கே!
எல்லாப் புகழும் குரு மற்றும் கௌரங்கருக்கே!! !

குரு மஹராஜாவுக்கு செந்நிற இரத்த அணு
(haemoglobin) குறைவாக இருந்ததால், இரும்புச்சத்து
பெறுவதற்காக 16/8/23 அன்று ரேலா மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
அவர் ரேலா மருத்துவமனையில் இரும்புச்சத்து சிகிச்சையின் எந்தவித சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக முடித்தார். குரு மகராஜர் சிகிச்சை முடிந்தவுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். வரவிருக்கும் வாரங்களில் அவருக்கு இன்னும் சில முறை இதே சிகிச்சை தேவைப்படும், மேலும் இது அவரது செந்நிற இரத்த அணு(haemoglobin) அளவையும் அதிகரிக்கும் மேலும் குரு மகராஜர் கூறுவதை போல் சோர்வாக உணர்வதும் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

புதிய மருந்துகளால் குரு மகராஜாவின் ரத்த தட்டுகளின் (Blood Platelets) அளவு அதிகரித்துள்ளதால் மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குரு மகராஜரின் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களில் ஒருவரான சந்திரசேகரை சந்தித்தார். அவர் வீட்டில் குரு மகராஜாவை மதிப்பீடு செய்து மேலும் சில பரிசோதனைகளை பரிந்துரைத்தார்.

சிறுநீரகம் தொடர்பான இரத்தப் பரிசோதனைகள் மெதுவாக மேம்பட்டு வருகின்றன, ஆனால் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

குரு மஹராஜாவின் மார்பின் ஊடு கதிர் (x-ray) நுரையீரலில் சிறிது நீர் கட்டியுள்ளதை காட்டியது, இதன் காரணமாக அவரது ஆக்ஸிஜன் அளவு சிறிது குறைந்துள்ளது மற்றும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த நீர் கட்டை அகற்றுவதற்கான மருந்துகளை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்.

குரு மகராஜரின் உடல்நிலை விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் அனைவருக்கும் நன்றி,

ஜேபிஎஸ் மருத்துவ குழு ஜேபிஎஸ் சேவை குழு சார்பாக
மஹாவராஹ தாஸ்

2 years ago | [YT] | 1

Jayapataka Swami Tamil

தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமி மகராஜரின் உடல்நிலைகூறித்த அறிக்கை
29 ஜூலை 2023

தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமியின் அன்பான சீடர்களே மற்றும் நலம் விரும்பிகளே!

இடம் - மாயாபூர்
முகாம் - ரேலா மருத்துவமனை, சென்னை

எங்கள் பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
எல்லா புகழும்
ஸ்ரீல பிரபுபாதருக்கே!.
எல்லாப் புகழும் குரு மற்றும் கௌரங்கருக்கே!!.

குருமகராஜர் ஜூலை 27ம் தேதி மாலை சென்னை ரேலா மருத்துவமனைக்கு வந்தார்.

அவர் வந்தவுடன் நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotics) ஊசியைத் தொடர்ந்தார் மற்றும் பல்வேறு மருத்துவர்களைச் சந்தித்தார்.
பல வழக்கமான நுண்ணுயிர்க்கொல்லிகளைஎதிர்க்கும் நுண்ணுயிரியால் ஏற்பட்ட சிறுநீர் தொற்று குரு மஹராஜுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மருந்துகளால் குணமடைவதாக தெரிகிறது.

இரத்த சோகை சற்று மேம்பட்டுள்ளது, ஆனால் இரத்தம், இரத்தத்தட்டு அளிக்கப்படுவதன் அவசியம் உள்ளது.
சிறுநீரகத்தின் செயல்பாடு இன்னும் கவலையளிப்பதால். சிறுநீரக மருத்துவர் சிறுநீரகத்தின் திசு ஆய்வு செய்ய (பயாப்ஸி) பரிசீலிக்கிறார்.
இது ஒரு அறுவை சிகிச்சையை உள்ளடக்கியது என்பதால், குரு மஹராஜர் இந்த செயல்முறையை மேற்கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறாரா? என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.

குரு மஹராஜரின் மருத்துவ குழுவும் ரேலா மருத்துவமனையின் குழுவுக்கும் இடையே பல சோதனைகள் மற்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன, இன்னும் சில நாட்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை கூறித்து தெரியவரும்.
இவை அனைத்திற்கும் இடையிடையே குரு மஹாராஜர் இடைவிடாமல் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்களையும், மருத்துவர்களையும் ஹரே கிருஷ்ணா ஜபிக்க ஊக்குவித்து வருகிறார். அவர் மருத்துவமனையில் இருந்துகொண்டே தனது மற்ற சேவைகளையும் தொடர்கிறார்.

நீங்கள் அனைவரும் உங்கள் பிரார்த்தனைகளைத் தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம், மேலும் எங்களிடம் சில குறிப்பிடத்தக்க தகவல்கள் கிடைக்கும்போது நாங்கள் உடனுக்குடன் அனுப்புவோம் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்

உங்கள் அனைவருக்கும் நன்றி.

குரு மஹராஜரின் மருத்துவ குழு மற்றும் சேவா குழு சார்பாக
மஹாவராஹ தாஸ்

2 years ago | [YT] | 2