Nalla Oorum Naalu Perum

அன்பு தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்🙏
நல்ல ஊரும் நாலு பேரும் யூடியூப் சேனலின் நோக்கம் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறைகள்,கோவில்கள்,ஆன்மீகம்,கதைகள், உணவுகள் மற்றும் பலவற்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கான ஒரு சிறு முயற்சி! எங்கள் முயற்சிக்கு உங்கள் ஆதரவு கரங்களை தாருங்கள்..!

Dear Tamil Natives🙏
Nalla Oorum Naalu Perum YouTube Channel aims to be a small effort to bring to the masses the lifestyles, temples, spirituality, stories, food and more of the villagers! Please lend your support to our effort..!

Contact us:
nallaoorumnaaluperum@gmail.com


Nalla Oorum Naalu Perum

அரிய மஞ்சள் செடி பூவின் ஆச்சரியம் மூட்டும் தகவல்கள்:
மஞ்சள் பூக்கள் குர்குமின் காரணமாக ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகளைவழங்குகின்றன .
இது தென்கிழக்கு ஆசிய உணவு வகைகளில் (சாலடுகள், சூப்கள்) பாரம்பரியமாக குணப்படுத்துதல், பிரசவத்திற்குப் பிந்தைய மீட்பு மற்றும் வயதான எதிர்ப்பு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது நுட்பமான மிளகு சுவை மற்றும் மிருதுவான அமைப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் செரிமானத்தை ஆதரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நன்மைகள்:
குர்குமின் நிறைந்தது: குர்குமின் உள்ளது, இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை அளிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: நோயெதிர்ப்பு உயிரணு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
செரிமான உதவி:
செரிமான நொதிகளைத் தூண்டுகிறது, குடல் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் வாயுவை நீக்குகிறது.
வயதான எதிர்ப்பு:
ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு நடவடிக்கை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது, ஆக்ஸிஜனேற்ற சேதத்தைக் குறைக்கிறது.
காயம் குணமாகும்:
தோல் பழுதுபார்க்க கொலாஜன் தொகுப்பு மற்றும் செல் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது.
ஒவ்வாமை நிவாரணம்:
இது ஒரு இயற்கையான ஆண்டிஹிஸ்டமைனாக செயல்படுகிறது, ஒவ்வாமை எதிர்வினைகளைக் குறைக்கிறது.
சமையல் பயன்கள்:
சுவை விவரக்குறிப்பு: நுட்பமான இனிப்பு, மிளகு சுவையை வழங்குகிறது.
பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு: தாய்மார்கள் குணமடைய உதவும் வகையில் சில கலாச்சாரங்களில் உட்கொள்ளப்படுகிறது.
மூளை ஆரோக்கியம்:
மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி (BDNF) ஐ அதிகரிக்கலாம் மற்றும் நினைவாற்றல்/கவனத்தை மேம்படுத்தலாம் .
இதய ஆரோக்கியம்:
எண்டோடெலியல் செயல்பாட்டை மேம்படுத்தி, இதய நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.
எப்படி உபயோகிப்பது:
நன்கு கழுவி, கடினமான பச்சை நிறத் துண்டுகளை அகற்றி, வண்ணமயமான இதழ்கள் மற்றும் உள் பகுதிகளைப் பயன்படுத்தவும்.
புதிய சாலடுகள், சூப்கள், பொரியல் அல்லது மூலிகை தேநீர்களில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி..!

1 week ago | [YT] | 13

Nalla Oorum Naalu Perum

111 அடி உயரமும், 35 அடி உயர பீடமும் கொண்ட (மொத்தம் 146 அடி) உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை..!

2 weeks ago | [YT] | 15

Nalla Oorum Naalu Perum

💫மறைந்து போன மாவளி💫 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மாவளி சுற்றுதல் வெறும் 20 ஆண்டுகளில் முற்றிலும் மறைந்து போனது ஏனோ?

'மாவளி' என்பது பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பாரம்பரியத் தமிழர் விளையாட்டையும் குறிக்கிறது.

சங்க இலக்கியங்களான நற்றிணை, பரிபாடல், புறநானூறு போன்றவற்றில் கார்த்திகை தீபத் திருவிழா பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தத் திருவிழாவின் போது, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு பாரம்பரிய விளையாட்டாக 'மாவளி சுற்றுதல்' நிகழ்த்தப்பட்டது.

பனை மரத்தின் ஆண் பூக்களை எரித்து தயாரிக்கப்பட்ட கரியை பருத்தி துணியில் சுற்றி கொண்டு பனைமட்டையில் வைத்து எரியச் செய்து சுழற்றுவார்கள். இது ஒருவகையான அழகிய வானவேடிக்கை போன்ற ஒளியை உருவாக்கும்.

காலப்போக்கில், இந்தத் தொன்மையான விளையாட்டு மறைந்துபோன தமிழர் விளையாட்டுகளில் ஒன்றாக மாறிவிட்டது..!

2 weeks ago (edited) | [YT] | 7

Nalla Oorum Naalu Perum

அனைத்து உயிர்களும் வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் அதற்கான ஞானத்தையும் செல்வச் செழிப்பையும் வழங்க வேண்டி சிவசக்தியின் மகனிடம் மனதார வேண்டி கொள்கிறோம்..!
நல்ல ஊரும் நாலு பேரும்
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..!

3 months ago | [YT] | 8

Nalla Oorum Naalu Perum

தீமைகள் அகல பாரெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க. ஏற்ற தாழ்வுகள் அகல இந்நன்னாளில் தீபாவளியை கொண்டாட வாழ்த்துக்கள்..!🪷🪷🪷

1 year ago | [YT] | 15

Nalla Oorum Naalu Perum

முனீஸ்வரன் ஈசன் அம்சமாக கருதப்படுவர் ஆவார். முனிவர்களுக்கு எல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் என பொருள்படும் மேலும் முனீஸ்வரன் வழிபாடு என்பது இன்று நேற்று அல்ல பண்டைய காலத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டு இருக்கிறது கிராம காவல் தெய்வமாக மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியப்பனி, முனியப்பர் எனவும் அழைத்து வழிபடுகின்றனர்

முனி என்றால் "ரிக் வேதத்தில்" "தெய்வ ஆவேசம் படைத்தவர்" என்றும், பயமற்றவர் என்றும் பொருள், நாட்டார் தெய்வங்களில் முனி என்பது காவல் தெய்வத்தின் பெயர்"பஞ்ச முனிகள்" அதாவது ஐந்து முனிகள், பச்சை அம்மனுக்கு காவலாக பூலோகம் வந்ததாக வரலாறு உண்டு. சில இடங்களில் சப்த முனிகள் உண்டு. ஈஸ்வர பட்டம் பெற்றவர் முனீஸ்வரர் ஆவர் இந்த முனீஸ்வரன், சிவ அம்சம் கூடியவர்.

முன்னொரு காலத்தில் "அந்தகாசுரன்" என்னும் அசுரன் தேவர்களையும், மக்களை வதைத்து, இடையூறு செய்து வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தங்களை காக்கும் படி அன்னை பராசக்தியை அனைவரும் வேண்டினர், பார்வதி அம்மன் "காத்தாயி" என்ற பெயரில் பூமியில் அவதரித்து அசுரனை அழிக்க காத்தாயி அம்மன் லடாமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி, கும்பமுனி, வாழ்முனி,சட்டைமுனி, என்று ஏழு முனிகளை உருவாக்கி, அந்த ஏழு முனிகளும் சேர்ந்து அந்த நரகாசுரனை அடக்கி வதம் செய்தனர், பின்பு முனிகள் அனைவரும் ஒரே வடிவமாக மக்களை காக்க பூமிக்கு வந்தனர்.

பொதுவாக மக்களுக்கு முனீஸ்வரனை பற்றி நிறைய குழப்பங்களும் சந்தேகங்களும் உண்டு, இதில் உண்மை எது பொய் எது என்றும் குழப்பங்களும் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் நம்மை மற்றும் பூலோகம் உயிரினங்கள் - புல் முதல் அண்டசராசரம் வரை படைத்த இறைவன் ஈஸ்வரன் ஆவான். பரமாத்மாவில் இருந்தே ஜீவாத்மா பிரிந்தது. அதுபோல் தான் முனீஸ்வரன் சாட்சாத் ஈஸ்வரனின் அம்சமே. கலியுகத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கவும் மக்களை காக்கவும் வீர ஆவேசமாக அவதரித்தவரே "முனீஸ்வரன்" .

முனீஸ்வரன் வழிபாடு என்பது நம்மை காக்கும், ஆண்டி முதல் அரசன் வரை பாகுபாடின்றி வழிபாடும் தெய்வம் முனீஸ்வரன். கலியுகத்தில் ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் படியும் அவர்களுக்கு வழிபாடு செய்ய கூடிய எளிய முறை உள்ள ஒரே வழிபாடு முனீஸ்வரன் வழிபாடு மட்டும் தான்.

எல்லா தரப்பு மக்களும் வழிபாடு செய்யவே கிராமங்கள் தோறும் சிறு ஆலயங்களிலும் முனிகள் வீற்றிருக்கின்றனர்.

சிவன, பெருமாள், அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு , இவர் தான் காவலர் ஆவார். பெரிய ராஜகோபுரம் உள்ள கோவில்களிலும் முனீஸ்வரர்க்கு தனி சன்னதி உண்டு உதாரணமாக ஸ்ரீரங்கம் திருதலத்தில் ராஜா கோபுரத்தில் முனீஸ்வரர் சன்னதி உள்ளது. பல பெரிய தனி சன்னதிகளும் முனீஸ்வரன் காட்சி தருவதும் உண்டு இப்படி எல்லா இடங்களிலும் முனீஸ்வரன் வழிபாடு உண்டு.

இவர் கனல் வீசும் கண் உடையவர், அருள் ஒளிரும் மேனி உடையவர், சகல சௌபாக்கியமும் தருபவர், நள்ளிரவில் கண்ட நெடிய வெண்புகை வடிவத்தில் வலம்வருபவர் என்று பல நம்பிக்கைகள் உண்டு. "நம்பினார் கெடுவதில்லை" என்ற வாக்கின் அடிப்படையில் நம்பி வழிபட்ட பலருக்கு முனீஸ்வரன் இப்படி காட்சி தந்த வரலாறுகள் நமது கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான கதைகள் உண்டு.

நமது நாட்டில் மட்டுமல்ல "பர்மா" என்று அழைக்கப்பட்ட தற்போதைய "மியான்மர்" என்ற நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பு பல லட்சம் தமிழர்கள் வசித்தனர். "ரங்கூன்" என்று அழைக்கப்பட்ட "யாங்கூன்" இருந்து சுமார் 1 மணி நேரப்பயணம் வருகிற ஊர் "பிலிக்கான்" அங்கே முனீஸ்வரர்க்கு அற்புதமான ஆலயம் உள்ளது. நீதி, நியாயம் இவற்றை மக்களுக்கு வழங்கி வருவதால் இந்த தேசத்து மக்கள் இவரை"ஜட்க் ஐயா" என்றே அழைக்கிறார்கள்.

பர்மா மட்டுமல்ல மலேஷியா, சிங்கப்பூர் சீனா, ஜப்பானிலும் முனீஸ்வரன் வழிபாடு உள்ளது..!

1 year ago | [YT] | 19