"மனிதனாய் பிறந்ததே நன்மை செய்யத்தான்"
சுயநலத்திலும் கொஞ்சம் பொதுநலம் செய்வோமே...
இந்த சேனலில மூலம் மக்களின் அறியாமை நீக்கும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடுகள் சந்தேகங்கள் பற்றியும் வீடியோக்கள் வெளியிடப்படும். சட்டதிட்டங்கள்/அரசு நலத்திட்டங்கள்/குறித்த பல பதிவுகளும் வெளியிடப்படும்..
Common Man
https://youtu.be/sZO30njGIxw
1 week ago | [YT] | 4
View 0 replies
Common Man
https://youtu.be/Ndfv7h35-u4
☝️☝️☝️☝️☝️
2 weeks ago | [YT] | 50
View 0 replies
Common Man
வீரர்கள் விட்டுச் சென்ற சுவாசம்,
நம்மை வாழச் செய்த உறவாசம்;
கைவிட்டு போகாத சிந்தனைக்கே,
கைவிடப் போவதில்லை நாமே..!
என்றும் தியாகச் சீலர்களின் நினைவில் Common Man YouTube
#ஜெய்ஹிந்த்🇮🇳❤️
3 weeks ago | [YT] | 68
View 2 replies
Common Man
*கிராம சபைக்குத் தயாராவோம்!*
வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கின்ற *சுதந்திர தின கிராம சபையில்....*
** தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்வது எப்படி?
** 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான எந்தெந்த தகவல்களைக் கேட்டுப் பெற வேண்டும்?
** மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் -- நமது ஊர் நிலையை அறிந்து கொள்வது எப்படி?
** நம் அனைவரையும் பாதிக்கும் மரபணு திருத்தப்பட்ட அரிசி வகை குறித்து கிராம சபையில் நாம் பேச வேண்டியது என்ன?
எனப் பல விஷயங்களை விரிவாக அலச உள்ளோம்! *அவசியம் இணையுங்கள்!*
*நாள்:* 13.08.2025, புதன்
*நேரம்:* மாலை 7 மணி
*இணைப்பு:* meet.google.com/aqt-kekd-egu
3 weeks ago | [YT] | 60
View 3 replies
Common Man
https://youtu.be/zwZUL92ZaKc
3 weeks ago | [YT] | 4
View 0 replies
Common Man
மிரட்டிய RTI ஆர்வலர்கள்...
ஸ்தம்பித்தது தமுக்கம்..
5000 ஆர்டிஐ மனுக்கள்..
20 தீர்மானங்கள்...
200 RTI ஆர்வலர்களுக்கு விருது
என அரங்கமே கலைகட்டியது..
3500 RTI ஆர்வலர்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்ட முதல் நிகழ்வாக இது இருக்கும்..
இதற்கென்று உழைத்த இதற்கென்று கொடுத்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கும், சிரமம் பார்க்காமல் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்து கலந்து கொண்ட சொந்தங்களுக்கும்,
தமிழ்நாடு ஆர்டிஐ ஆர்வலர்கள் இயக்கம்
நன்றி சொல்ல கடன்பட்டுள்ளது...
3 weeks ago (edited) | [YT] | 380
View 39 replies
Common Man
youtube.com/live/O14xuzE4-P0?feature=share
☝️☝️☝️☝️☝️☝️☝️
மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று ஆகஸ்ட் 10 நடைபெறுகிற RTI மாநாடு முழுமையாக நமது சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது..
4 weeks ago | [YT] | 170
View 12 replies
Common Man
youtube.com/live/O14xuzE4-P0?feature=share
☝️☝️☝️☝️☝️☝️☝️
மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று ஆகஸ்ட் 10 நடைபெறுகிற RTI மாநாடு முழுமையாக நமது சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது..
4 weeks ago | [YT] | 68
View 3 replies
Common Man
மனிதம் தொலைத்த மனிதன் 🤔
உலகப் புகழ்பெற்ற
இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலைக்கும் இப்படமே காரணமாகிவிட்டது...
கெவின் கார்ட்டர்-
உலக புகழ் பெற்ற
புகைப்படக்காரர்.
இவர் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் அதிகம் கொண்டவர்,
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில்
சிக்கித் தவித்துக்
கொண்டு இருந்தது.
குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள்
உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி,
தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை
சென்றார்.
இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு தேடியலைந்து கொண்டிருந்த போது ஒரு காட்சி தென்பட்டது;
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சான் நிலையில்
உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல
ஊர்ந்து செல்வதைக் கண்டார்.
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின்
சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.
தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்குப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக் கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர்
பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச்
சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமராவில்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’செய்தார்.
இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.
இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்து; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை
‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்றும்
விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம்
நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்தை, தொடர்பு கொண்டு,,
ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் யாரிடமும் இல்லை.
1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான
அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதைப் பெற்றார்,
இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் வல்பரிசுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களில் கெவின்
பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்...
ஏன்?????
கெவின் உள்பட எல்லோரையும் யோசிக்க வைக்கும்படி ஒரு கருத்து வெளியாகியிருந்தது...
கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல் பட்டுள்ளனர்.
‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுணர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; இல்லை யாரையாவது அழைத்து விட்டு இருக்கலாம்,
ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார், இதில் பாராட்டும்படி என்ன இருக்கிறது, என்று ஒருவர், அவர் மீது குற்றம் சாட்டியதுதான்...
இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு
அருகில் அவரது காரில்
பிணமாகக் கிடந்தார்.
கெவின் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு
ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.
முதல் வரி
#I_am_Really_Really_Sorry...
நாம் எவராக இருந்தாலும்
சரி நம்மிடம் மனிதநேயம் இல்லையெனில்
நாமும் மிருகத்திற்கே
ஒப்பாவோம்...
#படித்ததில்_வலித்தது.
4 weeks ago | [YT] | 40
View 1 reply
Common Man
மதுரை மாநகரில் ஆகஸ்ட் 10 2025 அன்று தமுக்கம் மாநாட்டு அரங்கில் நடைபெற உள்ள தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மாநாட்டிற்கு வருகை தரக்கூடிய சட்ட ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் தமுக்கம் மாநாட்ட அரங்கிற்கு வரவேண்டிய வழித்தடம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய அன்பர்கள் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் வந்தடைந்த பின், மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் முதல் பெரியார் நிலையம் மற்றும் பெரியார் நிலையம் வழியாக செல்லக்கூடிய பேருந்து ஏறி *தமுக்கம்* என கேட்டு இறங்கிக் கொள்ள வேண்டும். வழித்தடம் எண் 5, 48y, 700,
எம்ஜிஆர் பேருந்து நிலையம் முதல் ஆரப்பாளையம் வரை செல்லக்கூடிய பேருந்து வழித்தடம் எண் : 77B, தமுக்கம் பேருந்து நிறுத்தம்.
மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து வரக்கூடிய அன்பர்கள் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்குள்ள நகரப் பேருந்துகள் வழித்தடம் எண் : 66J, 77B, இரண்டு பேருந்தகளில் மட்டுமே ஏறி *தமுக்கம்* பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
ரயில் மூலமாக வரக்கூடிய அன்பர்கள் ரயில் நிலையத்தின் வெளிப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வழித்தடம் எண் : 5, 23, 24, 44, 48y, 66, 75, 700 ஆகிய பேருந்துகளில் ஏறி *தமுக்கம்* என சொல்லி இறங்கவேண்டும்.
தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மாநாடு ஞாயிறன்று மதுரையில் ஆகஸ்ட்- 10 2025 காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெற இருக்கிறது இந்நிலையில் மாநாட்டினை சிறப்புற அமைய மாநாட்டை நடத்துவதற்கான சில பணிகள் ஒதுக்கப்பட்டு தன்னார்வலர்களாக வரக்கூடிய Rti ஆர்வலர்கள் 8- 8-2025 வெள்ளிக்கிழமை இரவு வரை மதுரை ரயில் நிலையத்திற்கு எதிரே மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியில் அமைந்துள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மாநாட்டினை சிறப்புற அமைவதற்கு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் 9-8-2025 சனிக்கிழமை முழுவதும் காந்தி மியூசியம் அருகே அமைந்துள்ள முருகன் கோயில் மண்டபத்தில் ஏற்பாடுகள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ஆகவே அன்பர்கள் காந்தி மியூசியம் அருகில் உள்ள முருகன் கோவில் மண்டபத்திற்கு சனிக்கிழமை வந்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு: தமிழ்நாடு ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் இயக்கம்.
4 weeks ago | [YT] | 73
View 21 replies
Load more