Thevar Tube

இன்று ஒண்டி வீரன் நினைவு நாள்

தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தை சார்ந்த ஒண்டிவீரன் என்பவர் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் ஒற்றர் படையை சேர்ந்தவர்.

இரண்டுமுறை பூலித்தேவரிடம் தோற்று ஓடிய வெள்ளையர் படை திரும்ப முற்றுகை இட யாருக்கும் தெரியாமல் பூலித்தேவன் சீமை அருகில் முகாமிட்டிருந்தனர். அவர்களின் பலம் என்ன என்பதை அறிந்து பூலித்தேவனுக்கு சொல்ல வெள்ளைக்காரன் முகாமில் உளவு பார்க்க ஒண்டிவீரன் சென்றபோது வீரர்கள் குதிரையில் வரும் சத்தம் கேட்டு குதிரைகள் கட்டும் இடத்தில் மறைந்தார்.

தனது மேல் குதிரைக்கும் வைக்கும் செடிகளை அள்ளி போட்டுக்கொண்டார். அப்போ ஒரு போர் வீரன் தான் வந்த குதிரையை கட்டிப்போட ஈட்டி போன்ற ஒரு நெடிய முளைக்குச்சி போன்ற ஆயுதத்தை தரையில் சொருகினார். அது எதர்ச்சியாக ஒண்டிவீரனின் கை மீது பாய்ந்துவிட்டது. அந்த வலியை பொறுத்துக்கொண்டு வெள்ளையர்கள் சென்ற பிறகு தனது கையை எடுக்க முடியாமல் தவித்தார் ஒண்டிவீரன். வேறு வழி இல்லாத காரணத்தால் தனது கையை வெட்டிக்கொண்டு பூலித்தேவரிடம் செய்தியை தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை அறிந்த அரசபையோரும் , நாட்டு மக்களும் ஒண்டிவீரா " உனக்கு அங்ககை போனால் என்ன பூலித்தேவர் மகராசா தங்க கையே கொடுப்பார்" என்று பாடினர். இன்றும் இந்த வரலாறு நெல்லை மக்களிடையே நாட்டுப்புற பாட்டாக வழக்கில் இருக்கு .

மேலும் ஒண்டி வீரன் என ஒருவன் இந்த உலகில் பிறக்கவில்லை மாமன்னர் பூலித்தேவரின் உண்மையான வரலாற்று பூா்வமான தளபதி ஈஸ்வரத்தேவரின் வரலாற்றை போர்வையாக போத்தி வாழும் பொய் உருவம் தான் ஒண்டி வீரன் என்ற வரலாறும் ஒரு பக்கம் உண்டு

யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு பெரும் ஆபத்தை அறிந்துக்கொண்டு மன்னரிடம் சொன்ன ஒண்டிவீரனுக்கு இந்திய விடுதலை வரலாற்றில் நிச்சயம் ஒரு இடம் உண்டு. வாழ்க அவர் தியாகம். அவரின் நாட்டுப்பற்றை போற்றுவோம்.🙏

5 years ago | [YT] | 22