MAHA YOGI

இன்று யோகம் தரும் வெள்ளிக்கிழமை பிரதோஷம் ! சிவன் கோவிலில் எப்படி வளம் வந்து சிவபெருமானை வணங்குவது ? விரதமிருப்பது எவ்வாறு ?
பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுஷ்டிக்கப்படும் விரதமாகும்.
பிரதோச விரதம் அநுஷ்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போசனம் செய்தல் வேண்டும்.

6 years ago | [YT] | 5