மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் போது ஆடி வீதியில் உள்ள திருக்குறள் மண்டபத்தில் திருக்குறள் பற்றி தேவர் பேசுவதைப் பார்த்து சான்றோர்கள் பலரும் ஆச்சரியப் பட்டனர்..அரசியலில் முடி சூடா மன்னராகத் திகழ்ந்த முத்துராமலிங்கத் தேவருக்கு திருக்குறளைப் பற்றி என்ன தெரியும்? இந்தப் பாரத புண்ணிய பூமியில் முழு அரசியல் பற்றியும்-ஓரளவு ஆன்மீகம் பற்றியும் சொற்பொழிவு ஆற்றியவர்.குறளைப் பற்றி என்ன பேசி விடப் போகிறார் என்று அமர்ந்த அனைவரும் மெய் மறந்தனர். அரசியல்வாதியான அவர் திருக்குறளின் மூலை முடுக்கெல்லாம் சென்று திருக்குறளுக்குப் புத்தம் புதிய விளக்கத் தை தந்தது வியப்பு.அன்று அவர் பேசிய பேச்சுக்களை குறிப்பெடுக்கும் வசதியும்-வழக்கமும் இல்லாமல் போய் விட்டன.ஆனால் அனைவரது ஞாபகத்தில் இருந்து தேவர் பேசிய பேச்சின் சாரம்... (தேவர் பேச்சு ஆரம்பம்) "கற்றறிந்த பல அறிஞர் பெருமக்கள் இந்தச் சபையிலே வீற்றிருப்பதைப் பார்க்கிறேன். திருக்குறளில் ...
"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலிதரும்"
என்பது ஒரு அரிய குறள்.திருக்குறளுக்கு உரை சொல்லுகின்றவர்கள் முதலில் ஆன்மீகத்தை ஒத்துக் கொள்ளாவிட்டால் பல குறள்களுக்குப் பொருள் தெரியாமல் அல்லது பொருந்தாமல் போய்விடும். அல்லது தவறான பொருளைக் கூற வேண்டி வரும்.
நான் மெத்தப் படித்தவன் அல்ல.தமிழ் மொழி ஒரு அளப்பரும் சலதியாகும்.. எவ்வளவு தான் கற்றாலும் அது கைமண்ணளவேதான் ஆகும்..நான் சிறையில் இருந்த காலத்தில் எனக்குச் சிறிது ஓய்வு கிடைத்தது. அந்த நேரத்தில் திருக்குறளைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது சில குறள்களுக்குத் தவறான உரைகள் சொல்லியிருப்பதைப் பார்க்க முடிந்தது.
நாம் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் குறள் "ஊள்வினை உடைமை" என்ற அதிகாரத்தில் உள்ளது. திருவள்ளுவர் ஒரு உலக மகா கவி. உலகில் உள்ள கவிஞர்களில் தலை சிறந்தவர்.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதியார் வள்ளுவனை வானத்திற்கே கொண்டு போனார். இது முற்றிலும் சரியே.வள்ளுவர் உள்ளத்தில் இருந்து தோன்றிய கருத்துக்கள் அருள்வாக்குகள் அமுத வாக்குகள் ஆகும். அவை மக்கள் எல்லோரையும் கவரும் தன்மை உடையவை. அந்தக் கருத்துக்களின் நுட்பத்தையும் -திட்பத்தையும் -மாண்பையும் எண்ணி எண்ணி வியக்காமல் எவரும் இருக்க முடியாது. அவர் கூறிய மொழிகள் அனைத்தும் பொன் மொழிகளாகும். எந்த நாட்டிற்கும், எக் காலத்திற்கும், எந்த மக்களுக்களுக் கும் திருக்குறள் என்ற இந்த நூல் முழுக்க முழுக்கப் பொருத்த முடையது.இதனால் இந்த அரிய திருக்குறள் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இரட்டை வரிப் பாக்கலிலே , ஏழு சொல்லிலே இந்த உலகத்தையே வள்ளுவப் பெருந்தகை அடக்கி இருக்கிறார்.
"நற்பலகை யொக்க இருக்க உருத்திர சன்மரெனவுரைத்து வானில் ஒருக்க ஓ வென்றதோர் சொல்" என்ற இந்த திருவாக்கு விண்ணில் இருந்து வள்ளுவப் பெருந்தகையை பாராட்டி அசரீரியாக வந்தது..
இங்கே இவைகளை எடுத்துக் காட்டுவது அடியேனுடைய புலமையை எடுத்து காட்ட அல்ல.வள்ளுவர் எத்தகைய அறிஞர்- புலவர்- சிந்தனையாளர் என்பதை எடுத்துக் காட்டவே
இங்கு கூடியிருப்பவர்களே.... ! இத்தகைய வள்ளுவப் பெருந்தகை "தெய்வத்தால் ஆகாதெனினும" என்று எழுதி இருப்பாரா? என்பதை அறிஞர் பெருமக்களாகிய உங்களையெல்லாம் சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறேன்..
தெய்வத்தால் ஆகாது எனினும் என்று வள்ளுவர் பாடியிருப்பார் என்று அடியேன் ஒருபோதும் எண்ணவில்லை. நீங்களும் அப்படியே எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகாதது என்று ஒன்று உலகத்தில் இருக்குமா? உண்டா?
புலவர் பெருமக்களே! சிந்தியுங்கள்.. ! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவப் பெருமான் காலத்தில் இன்று உள்ளது போல காகிதம்,பேனா,பென்சில் இருக்கவில்லை. ஆயினும் நம் முன்னோர்கள் தங்களது சிந்தனைக் கருத்துக்களை ,ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதியுள்ளார்கள். எழுத்தாணியைப் பாராத இளைஞர்கள் பலர் இங்கு இருக்கக் கூடும். எழுத்தாணி இருந்தாலும் எழுத்தாணியைப் பிடித்து எல்லோரும் எழுதி விட முடியாது. இதற்கு நல்ல பயிற்சி வேண்டும். ஒருவர் சொல்ல மற்றொருவர் எழுத்தாணி பிடித்து ஏட்டில் எழுதுவார். அவ்வாறு எழுதியவர் செய்த தவறுதான் என்று அடியேன் இதனைக் கருதுகிறேன்.. படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது போல.
இந்தக் குறளை வள்ளுவர் பெருமான் இவ்வாறு தான் பாடியிருக்கக் கூடும் என்று மெத்தப் பணிவுடன் கூறுகிறேன். உலகில் சர்வ வல்லமை உள்ள தெய்வத்தால் ஆகாத செயல் ஒன்று இருக்க முடியுமா? இறைவன் மிகப்பெரிய வன்.அவனின்றி ஓரணுவும் அசையாத காரணத்தால் சர்வேஸ்வரன் என்று அழைக்கிறோம்.
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்திக் கூலிதரும்"
"ஆகா" என்பதைப் புலவர்கள் ஆ + கா என்று பிரித்து..நேர்,நேர் என்று தேமா என்று வாய்ப்பாடு கூறுவர்..
"ஆகும்" என்ற சொல்லையும் ஆ கும் பிரித்தால் நேர்,நேர் என்றும் கூறலாம்.. மா முன் நிரை அசை வரும் வாயப்பாடு ஆகும். ஆகவே தளையும் தட்டவில்லை . தெய்வத்தால் ஆகும் என்ற முடிவிற்கு நீங்களும் வருவீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகும் என்பதே சரி .தெய்வத்தால் ஆகும் என்ற கருத்தே வள்ளுவப் பெருந்தகைக்கு ஏற்புடையதாகும் என நினைக்கிறேன் என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தனது உரையை முடிக்கிறார்..
வள்ளுவரை வைத்து அரசியல்-மத சாயம் பூசுவோர்களே! வள்ளுவன் உலகோர்க்குச் சொந்தம்.. தமிழினம் பெருந்தன்மையோடு வழங்கிய கொடை ஆகும் வள்ளுவர்..
Thevar Tube
#திருவள்ளுவர் மற்றும் #திருக்குறள் பற்றி #தேவர் திருமகனார்:
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் போது ஆடி வீதியில் உள்ள திருக்குறள் மண்டபத்தில் திருக்குறள் பற்றி தேவர் பேசுவதைப் பார்த்து சான்றோர்கள் பலரும் ஆச்சரியப் பட்டனர்..அரசியலில் முடி சூடா மன்னராகத் திகழ்ந்த முத்துராமலிங்கத் தேவருக்கு திருக்குறளைப் பற்றி என்ன தெரியும்? இந்தப் பாரத புண்ணிய பூமியில் முழு அரசியல் பற்றியும்-ஓரளவு ஆன்மீகம் பற்றியும் சொற்பொழிவு ஆற்றியவர்.குறளைப் பற்றி என்ன பேசி விடப் போகிறார் என்று அமர்ந்த அனைவரும் மெய் மறந்தனர். அரசியல்வாதியான அவர் திருக்குறளின் மூலை முடுக்கெல்லாம் சென்று திருக்குறளுக்குப் புத்தம் புதிய விளக்கத் தை தந்தது வியப்பு.அன்று அவர் பேசிய பேச்சுக்களை குறிப்பெடுக்கும் வசதியும்-வழக்கமும் இல்லாமல் போய் விட்டன.ஆனால் அனைவரது ஞாபகத்தில் இருந்து தேவர் பேசிய பேச்சின் சாரம்...
(தேவர் பேச்சு ஆரம்பம்) "கற்றறிந்த பல அறிஞர் பெருமக்கள் இந்தச் சபையிலே வீற்றிருப்பதைப் பார்க்கிறேன். திருக்குறளில் ...
"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலிதரும்"
என்பது ஒரு அரிய குறள்.திருக்குறளுக்கு உரை சொல்லுகின்றவர்கள் முதலில் ஆன்மீகத்தை ஒத்துக் கொள்ளாவிட்டால் பல குறள்களுக்குப் பொருள் தெரியாமல் அல்லது பொருந்தாமல் போய்விடும். அல்லது தவறான பொருளைக் கூற வேண்டி வரும்.
நான் மெத்தப் படித்தவன் அல்ல.தமிழ் மொழி ஒரு அளப்பரும் சலதியாகும்.. எவ்வளவு தான் கற்றாலும் அது கைமண்ணளவேதான் ஆகும்..நான் சிறையில் இருந்த காலத்தில் எனக்குச் சிறிது ஓய்வு கிடைத்தது. அந்த நேரத்தில் திருக்குறளைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது சில குறள்களுக்குத் தவறான உரைகள் சொல்லியிருப்பதைப் பார்க்க முடிந்தது.
நாம் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் குறள் "ஊள்வினை உடைமை" என்ற அதிகாரத்தில் உள்ளது. திருவள்ளுவர் ஒரு உலக மகா கவி. உலகில் உள்ள கவிஞர்களில் தலை சிறந்தவர்.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதியார் வள்ளுவனை வானத்திற்கே கொண்டு போனார். இது முற்றிலும் சரியே.வள்ளுவர் உள்ளத்தில் இருந்து தோன்றிய கருத்துக்கள் அருள்வாக்குகள் அமுத வாக்குகள் ஆகும். அவை மக்கள் எல்லோரையும் கவரும் தன்மை உடையவை. அந்தக் கருத்துக்களின் நுட்பத்தையும் -திட்பத்தையும் -மாண்பையும் எண்ணி எண்ணி வியக்காமல் எவரும் இருக்க முடியாது. அவர் கூறிய மொழிகள் அனைத்தும் பொன் மொழிகளாகும். எந்த நாட்டிற்கும், எக் காலத்திற்கும், எந்த மக்களுக்களுக் கும் திருக்குறள் என்ற இந்த நூல் முழுக்க முழுக்கப் பொருத்த முடையது.இதனால் இந்த அரிய திருக்குறள் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இரட்டை வரிப் பாக்கலிலே , ஏழு சொல்லிலே இந்த உலகத்தையே வள்ளுவப் பெருந்தகை அடக்கி இருக்கிறார்.
"கடுகைத் துளைத்தேழ் கடலைப்புகட்டிக் குறுகத் தரித்த குறள். அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் " என்று திருக்குறள் பெருமையுடன் பேசப்படுகிறது..
"நற்பலகை யொக்க இருக்க உருத்திர சன்மரெனவுரைத்து வானில் ஒருக்க ஓ வென்றதோர் சொல்" என்ற இந்த திருவாக்கு விண்ணில் இருந்து வள்ளுவப் பெருந்தகையை பாராட்டி அசரீரியாக வந்தது..
இங்கே இவைகளை எடுத்துக் காட்டுவது அடியேனுடைய புலமையை எடுத்து காட்ட அல்ல.வள்ளுவர் எத்தகைய அறிஞர்- புலவர்- சிந்தனையாளர் என்பதை எடுத்துக் காட்டவே
இங்கு கூடியிருப்பவர்களே.... ! இத்தகைய வள்ளுவப் பெருந்தகை "தெய்வத்தால் ஆகாதெனினும" என்று எழுதி இருப்பாரா? என்பதை அறிஞர் பெருமக்களாகிய உங்களையெல்லாம் சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறேன்..
தெய்வத்தால் ஆகாது எனினும் என்று வள்ளுவர் பாடியிருப்பார் என்று அடியேன் ஒருபோதும் எண்ணவில்லை. நீங்களும் அப்படியே எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகாதது என்று ஒன்று உலகத்தில் இருக்குமா? உண்டா?
புலவர் பெருமக்களே! சிந்தியுங்கள்.. !
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவப் பெருமான் காலத்தில் இன்று உள்ளது போல காகிதம்,பேனா,பென்சில் இருக்கவில்லை. ஆயினும் நம் முன்னோர்கள் தங்களது சிந்தனைக் கருத்துக்களை ,ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதியுள்ளார்கள். எழுத்தாணியைப் பாராத இளைஞர்கள் பலர் இங்கு இருக்கக் கூடும். எழுத்தாணி இருந்தாலும் எழுத்தாணியைப் பிடித்து எல்லோரும் எழுதி விட முடியாது. இதற்கு நல்ல பயிற்சி வேண்டும். ஒருவர் சொல்ல மற்றொருவர் எழுத்தாணி பிடித்து ஏட்டில் எழுதுவார். அவ்வாறு எழுதியவர் செய்த தவறுதான் என்று அடியேன் இதனைக் கருதுகிறேன்.. படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது போல.
இந்தக் குறளை வள்ளுவர் பெருமான் இவ்வாறு தான் பாடியிருக்கக் கூடும் என்று மெத்தப் பணிவுடன் கூறுகிறேன். உலகில் சர்வ வல்லமை உள்ள தெய்வத்தால் ஆகாத செயல் ஒன்று இருக்க முடியுமா? இறைவன் மிகப்பெரிய வன்.அவனின்றி ஓரணுவும் அசையாத காரணத்தால் சர்வேஸ்வரன் என்று அழைக்கிறோம்.
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்திக் கூலிதரும்"
"ஆகா" என்பதைப் புலவர்கள் ஆ + கா என்று பிரித்து..நேர்,நேர் என்று தேமா என்று வாய்ப்பாடு கூறுவர்..
"ஆகும்" என்ற சொல்லையும் ஆ கும் பிரித்தால் நேர்,நேர் என்றும் கூறலாம்..
மா முன் நிரை அசை வரும் வாயப்பாடு ஆகும். ஆகவே தளையும் தட்டவில்லை . தெய்வத்தால் ஆகும் என்ற முடிவிற்கு நீங்களும் வருவீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகும் என்பதே சரி .தெய்வத்தால் ஆகும் என்ற கருத்தே வள்ளுவப் பெருந்தகைக்கு ஏற்புடையதாகும் என நினைக்கிறேன் என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தனது உரையை முடிக்கிறார்..
வள்ளுவரை வைத்து அரசியல்-மத சாயம் பூசுவோர்களே! வள்ளுவன் உலகோர்க்குச் சொந்தம்.. தமிழினம் பெருந்தன்மையோடு வழங்கிய கொடை ஆகும் வள்ளுவர்..
வாழ்க வள்ளுவர்..! வளர்க வள்ளுவர் புகழ்!.
5 years ago | [YT] | 67