Mythology World Tamil

அவகீர்ண தீர்த்தம்
திருதராஷ்டிரன் ஒரு யாகம் செய்தான். யாகத்தின் முடிவில் மகரிஷிகள் யாகத்திற்கான தட்சணையைக் கேட்டார்கள். அவன் அவர்களை இகழ்ச்சியாகப் பேசினான். முனிவர்கள் கோபம் கொண்டார்கள். கடும்கோபம் கொண்ட ஒரு ரிஷி அருகில் இருந்த தீர்த்தத்தில் தனது உடலிலிருந்து சதையை அறுத்து எடுத்து ஹோமம் செய்தார். இதனால் திருதராஷ்டிரனது நாடு சிறிது சிறிதாக அழிந்தது.தனது தவறை உணர்ந்த திருதராஷ்டிரன் மகரிஷிகளிடம் மன்னிப்புக் கேட்டான். அவர்கள் கேட்டதைவிட அதிகமான அளவு தட்சணையை அளித்தான். முனிவர்கள் சாந்தமடைந்து அவனை மன்னித்து இனிமேல் சாதுக்களை அவமதிக்காமல் இருக்குமாறு உபதேசித்தனர். அவர்கள் ஹோமம் செய்து அளித்த தீர்த்தத்தில் அரசனை குளிக்கும்படிக் கூறினர். அந்த தீர்த்தமே அவகீர்ண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

2 years ago (edited) | [YT] | 0