V bakiyalakshmi
சாம்பார் பொடி.....தேவையான பொருட்கள் 20நிமிடங்கள்1/2கப் மல்லி விதை1ஸ்பூன் மிளகு1ஸ்பூன் சீரக ம்1/2ஸ்பூன் கடுகு1/2ஸ்பூன் வெந்தயம்2டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு2டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு2டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு15-20காஷ்மீரி மிளகாய்1கப் கறிவேப்பிலை1ஸ்பூன் உப்பு1ஸ்பூன் மஞ்சள் தூள்1ஸ்பூன் பெருங்காயத்தூள்சமையல் குறிப்புகள்தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.வெறும் வாணலியில் மல்லி விதை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.பின்,மிளகு சேர்த்து வறுபட்டதும்,கடுகு சேர்த்து வறுக்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம் சேர்த்து வறுத்து,இவற்றையும் மல்லியுடன் சேர்க்கவும்.பின்,துவரம் பருப்பு,கடலை பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.பின் காஷ்மீரி மிளகாய் சேர்த்து சூடாகி,புகை வரும்போது எடுத்து விடவும்.பின்,நன்கு கழுவிய ஈரப்பதம் இல்லாத கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.வறுத்த அனைத்தையும் ஆறவிட்டு அதனுடன் மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.உப்பு சேர்ப்பதால் சாம்பார் பொடி நீண்ட நாட்களுக்கு கேட்டு போகாமல் இருக்கும்.அரைத்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து,சாம்பார் செய்யும் பொழுது 150கி பருப்புக்கு 2-3ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.அவ்வளவுதான். மணமணக்கும் சாம்பார் பொடி ரெடி....
3 months ago | [YT] | 4
V bakiyalakshmi
சாம்பார் பொடி.....
தேவையான பொருட்கள்
20நிமிடங்கள்
1/2கப் மல்லி விதை
1ஸ்பூன் மிளகு
1ஸ்பூன் சீரக ம்
1/2ஸ்பூன் கடுகு
1/2ஸ்பூன் வெந்தயம்
2டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
2டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
2டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
15-20காஷ்மீரி மிளகாய்
1கப் கறிவேப்பிலை
1ஸ்பூன் உப்பு
1ஸ்பூன் மஞ்சள் தூள்
1ஸ்பூன் பெருங்காயத்தூள்
சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெறும் வாணலியில் மல்லி விதை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
பின்,மிளகு சேர்த்து வறுபட்டதும்,கடுகு சேர்த்து வறுக்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம் சேர்த்து வறுத்து,இவற்றையும் மல்லியுடன் சேர்க்கவும்.
பின்,துவரம் பருப்பு,கடலை பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு இவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
பின் காஷ்மீரி மிளகாய் சேர்த்து சூடாகி,புகை வரும்போது எடுத்து விடவும்.
பின்,நன்கு கழுவிய ஈரப்பதம் இல்லாத கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
வறுத்த அனைத்தையும் ஆறவிட்டு அதனுடன் மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.
உப்பு சேர்ப்பதால் சாம்பார் பொடி நீண்ட நாட்களுக்கு கேட்டு போகாமல் இருக்கும்.
அரைத்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து,சாம்பார் செய்யும் பொழுது 150கி பருப்புக்கு 2-3ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான். மணமணக்கும் சாம்பார் பொடி ரெடி....
3 months ago | [YT] | 4