UDHAYA GEETHAM ( உதய கீதம்)

அந்தி மாலையில்
அன்புத்தலைவன்
புகழ் பாட முந்திக் கொண்டது
மல்லியும் முல்லையும் 💞💞💞💞


சரித்திரத்தில்
பொறித்து வைக்கும் சம்பங்கியின் அழகியல்
கோர்வையும்🪷🪷🪷


காந்தனும் வனிதையும் கண்ட
கவினுறும் இணைப்பைப் போல்
காட்சிக்கு அழகாகும் 🙏

அறுவகை மலர்கள் சூழ
ஆதிசேஷன் உவகையும்
மனத்துள்ளே
மௌன இசையோடு
பெரும் நடனம் 🐍🐍🐍


பொன்னம்பலத்தை
உள்ளத்துள்ளே கண்டுவிட்ட
பெருமிதத்தை
தந்துவிட்டதோ
புதன் இரவு ☀️☀️☀️


பொன்னவன் குருவின் அருளை
புகழ்ந்து பாடிட
புதுமை வார்த்தைகளை
புகுத்துவிக்கும்🏵️🏵️🏵️


கன்னியில்
உச்சம் பெற்ற
கவியின் நண்பன்
நெஞ்சகத்தில் என்றும்
இனியதாய் மலர்வான்.. 🌿🌿🌿.



காற்றின் கணிதத்தை
அறிந்த உள்ளம்
காலத்தின் கணிதத்தையும்
அறிய வைத்த உன் பெருமிதம்...🌎🌎



சங்கடங்கள் விலகி
சபையோர் உள்ளம் நிறைந்து
சரித்திர இயக்கமாய்
சமத்துவ சத்குருவின்
சத்சங்கத்தை உயர்த்தும் 🌿🌿🌿


#பதஞ்சலி

1 week ago | [YT] | 15