எழுத்தாளர் தம்பி "சேரன் செங்குட்டுவன்" எழுதிய "சோணாடு கொண்டான்" என்ற நாவலின் முதல் பாகமான "மணிமுடி"-யின் முதல் படலமான "ஜெயங்கொண்ட பரகேசரியார் படலம்" என்ற புத்தகத்தை படித்தேன்.
முதலில் ஒரு நாவலை படலங்களாக பிரித்து கொண்டு வந்ததே பாராட்ட வேண்டிய ஒன்று. அதன் பின் முன் கதை சுருக்கம் என்று கூறுவது போல் இக்கதை துவங்கும் முன் வரலாற்று சம்பவங்களை சொல்லிவிட்டு, இச்சம்பவங்களை மீண்டும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் இக்கதை புரியும் என்று எழுத்தாளர் கூறியது எதார்த்தம்.
அனைவரும் சோழர்கள் என்று சொன்னாலே ஒரு சில சோழ மன்னர்களை பற்றி மட்டும் கதையை எழுதுவார்கள். அப்படி எழுதப்படும் சோழ மன்னர்களில் மூன்றாம் குலோத்துங்கனை பற்றி எழுதப்படும் கதைகள் மிகவும் குறைவு. அதோடு சோழத்தின் வீழ்ச்சியை பற்றி கூறும் கதைகள் மிகவும் அரிதிலும் அரிது. அப்படி அரிதான கதைக்களத்தை மிக எளிமையாகவும் அழகாகவும் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் சேரன் செங்குட்டுவன். அதற்காக எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்.
நான் படித்த நாவல்களிலேயே அதிகமாக கோடிட்ட புத்தகம் இதுதான். ஏனெனில் இப்புத்தகத்தில் வரக்கூடிய வரலாற்றில் வாழ்ந்த மக்களின் பெயர்களும், கப்பல் கட்டுமானத்தை பற்றி சொல்லக்கூடிய இடங்களும், சில வழக்கில் இல்லா தமிழ் வார்த்தைகளும் புதிதாக இருந்தது. இக்கதை ஆரம்பிக்கும் முன்பு எழுத்தாளர் தன்னுடைய முன்னுரையில் இது வரலாற்று புதினம் தான், ஆனால் வரலாற்றுத் தரவுகளை வைத்து நான் சிறிதாக கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறேன் என்று கூறியிருப்பார். எழுத்தாளரின் உரையை படிக்கும் போது இது அனைத்து புதினம் எழுதும் எழுத்தாளரும் கூறுவது தானே என்று நினைத்தேன். ஆனால், "சிரா, உன் எண்ணம் தவறு" என்று இப்புத்தகமும் இப்புத்தகத்தில் வந்த கதைக்களமும் என்னிடம் வந்து உரக்கச் சொல்லியது போல் இருந்தது. இதை படித்து முடித்த பின் எனக்கு வந்த அனுபவம். எழுத்தாளர் சேரன் செங்குட்டுவனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
இப்புத்தகத்தை பற்றி நிறைய பேசுவதை விட நீங்கள் இதை வாங்கி படித்துவிட்டு உணர்ந்தால் அது உங்களுக்கு வேறொரு அனுபவத்தை தரும். இப்புத்தகத்திற்கு இன்னும் இரு படலங்கள் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக படித்து விட்டு உங்களோடு பகிர்கிறேன்.
Indian Histropedia
Book no:07/2025
எழுத்தாளர் தம்பி "சேரன் செங்குட்டுவன்" எழுதிய "சோணாடு கொண்டான்" என்ற நாவலின் முதல் பாகமான "மணிமுடி"-யின் முதல் படலமான "ஜெயங்கொண்ட பரகேசரியார் படலம்" என்ற புத்தகத்தை படித்தேன்.
முதலில் ஒரு நாவலை படலங்களாக பிரித்து கொண்டு வந்ததே பாராட்ட வேண்டிய ஒன்று. அதன் பின் முன் கதை சுருக்கம் என்று கூறுவது போல் இக்கதை துவங்கும் முன் வரலாற்று சம்பவங்களை சொல்லிவிட்டு, இச்சம்பவங்களை மீண்டும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் இக்கதை புரியும் என்று எழுத்தாளர் கூறியது எதார்த்தம்.
அனைவரும் சோழர்கள் என்று சொன்னாலே ஒரு சில சோழ மன்னர்களை பற்றி மட்டும் கதையை எழுதுவார்கள். அப்படி எழுதப்படும் சோழ மன்னர்களில் மூன்றாம் குலோத்துங்கனை பற்றி எழுதப்படும் கதைகள் மிகவும் குறைவு. அதோடு சோழத்தின் வீழ்ச்சியை பற்றி கூறும் கதைகள் மிகவும் அரிதிலும் அரிது. அப்படி அரிதான கதைக்களத்தை மிக எளிமையாகவும் அழகாகவும் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் சேரன் செங்குட்டுவன். அதற்காக எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்.
நான் படித்த நாவல்களிலேயே அதிகமாக கோடிட்ட புத்தகம் இதுதான். ஏனெனில் இப்புத்தகத்தில் வரக்கூடிய வரலாற்றில் வாழ்ந்த மக்களின் பெயர்களும், கப்பல் கட்டுமானத்தை பற்றி சொல்லக்கூடிய இடங்களும், சில வழக்கில் இல்லா தமிழ் வார்த்தைகளும் புதிதாக இருந்தது. இக்கதை ஆரம்பிக்கும் முன்பு எழுத்தாளர் தன்னுடைய முன்னுரையில் இது வரலாற்று புதினம் தான், ஆனால் வரலாற்றுத் தரவுகளை வைத்து நான் சிறிதாக கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறேன் என்று கூறியிருப்பார். எழுத்தாளரின் உரையை படிக்கும் போது இது அனைத்து புதினம் எழுதும் எழுத்தாளரும் கூறுவது தானே என்று நினைத்தேன். ஆனால், "சிரா, உன் எண்ணம் தவறு" என்று இப்புத்தகமும் இப்புத்தகத்தில் வந்த கதைக்களமும் என்னிடம் வந்து உரக்கச் சொல்லியது போல் இருந்தது. இதை படித்து முடித்த பின் எனக்கு வந்த அனுபவம். எழுத்தாளர் சேரன் செங்குட்டுவனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
இப்புத்தகத்தை பற்றி நிறைய பேசுவதை விட நீங்கள் இதை வாங்கி படித்துவிட்டு உணர்ந்தால் அது உங்களுக்கு வேறொரு அனுபவத்தை தரும். இப்புத்தகத்திற்கு இன்னும் இரு படலங்கள் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக படித்து விட்டு உங்களோடு பகிர்கிறேன்.
-சிரா
புத்தகத்தின் பெயர்: சோணாடு கொண்டான், பாகம் 1 - மணிமுடி.
"ஜெயங்கொண்ட பரகேசரியார் படலம்"
எழுத்தாளர்: சேரன் செங்குட்டுவன்
பதிப்பாளர்: பர்ப்பிள் புக் ஹவுஸ்
விலை: 299/- ரூபாய்.
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_4 #சோணாடுகொண்டான் #சேரன்செங்குட்டுவன் #பர்ப்பிள்புக்ஹவுஸ்
4 months ago | [YT] | 19