2024 புதிய ஆண்டு புதிய துவக்கம் புதிய கனவுகள் அத்துடன் நேர்மை.
ஆரம்பத்தில் எல்லோருமே நேர்மையாளர்கள் தான்.
ஆனால் அந்த நேர்மையான வாழ்க்கை சுடும் போது, எதிர்பார்த்த பணம் வராத போது, கனவுகள் நிகழ தாமதமாகும் போது, கொஞ்சம் கூட யோசிக்காமல் நேர்மையின் கழுத்தில் கத்தியை வைத்துவிடுகிறோம். பணத்தை, புகழை தேர்ந்தெடுத்து கொள்கிறோம்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்...
நேர்மையாக இருந்தால் புகழ் மழையில் பணம் கொட்டும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று இருந்தால் இந்த உலகில் உள்ள எந்த மனிதன் தான் நேர்மையை தேர்ந்தெடுக்காமல் இருப்பான்?
நேர்மையாக இருப்பது எளிதல்ல, சவாலானது.
நேர்மையாக இருப்பவர்கள் வாழ்க்கையில் பல சாகசங்கள் செய்ய வேண்டி இருக்கும்,
மிகுந்த தைரியமும் உறுதியான மனமும் வேண்டும், கோழைகளுக்கு அது சாத்தியமில்லை.
அதனால் தான் அவர்கள் என்றைக்கும் "ஹீரோ" க்களாக இருக்கிறார்கள்.
மாறாக நிறைய பணம் இருந்தாலும், பல வண்ண கார்களில் வலம் வந்தாலும் கொடூர மனம் கொண்ட ஏமாற்றுகாரர்கள் எப்போதும் இந்த சமூகத்தின் "வில்லன்" களாக தான் கவனிக்க படுகிறார்கள்.
வாழ்க்கையில் நடைபெறும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மனநிலை தான் நேர்மையாக இருப்பதற்கான அடிப்படை தேவை.
மற்றவர் வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பதும், அவர்கள் படும் துன்பங்களை பார்த்து இன்பம் கொள்வதையும், பேறுகளை கண்டு பொறாமை கொள்வதையும் குறித்து நான் இங்கு நான் பேசவில்லை, அது ஒரு குரூர மனநிலை, அதனை ஆதரிக்கும் பதிவு அல்ல இது.
நமது சொந்த வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை வேடிக்கை பார்க்க கற்று கொள்ள வேண்டும்.
அதெப்படி...
என் வாழ்க்கை அல்லவா? நான் தானே ஓட வேண்டும், வேடிக்கை பார்ப்பதற்காகவா வாழ்க்கை என உங்கள் மூளையில் பல்பு எரியலாம்.
உண்மை தான்.
உங்கள் வாழ்க்கை தான், நீங்கள் தான் ஓட வேண்டும், உழைக்க வேண்டும், விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் கூறுவது "பாசிட்டிவ் சைடு".
நான் அதனுடைய "நெகடிவ் சைடு" பற்றி பேசுகிறேன்.
நம்முடைய செயல்கள் வெற்றியடைந்துவிட்டால், குதூகலிக்கிறோம், வானத்தில் பறக்கிறோம்.
தோல்வி அடைந்துவிட்டால்.... ?!
யார் தலையில் கட்டலாம் என ஆள் தேடுகிறோம்.அந்த தோல்வியை மறைக்க அல்லது இழப்பில் இருந்து மீண்டு வர, நம்மை வெற்றியாளனாக இந்த உலகின் முன்பாக நிலைநிறுத்தி கொள்ள எந்த எல்லைக்கும் செல்கிறோம்.
தொழிலில், அடுத்தவர் பாக்கெட்டில் உள்ள பணத்தை நம்முடைய பாக்கெட்டிற்கு கொண்டு வருவதை பெரிய வெற்றியாக நினைக்கிறோம். பொய்களை அள்ளி விடுவது, தன்னால் செய்ய முடியாது என தெரிந்தும் கம்மிட் செய்வது என பலவற்றை செய்கிறோம். அதனை திறமை என பீற்றி கொள்கிறோம்.
ஏன்?
ஏனென்றால், வெற்றி என்பது பணம், புகழ் சம்பாதிப்பது மட்டும் தான் என நமது பொதுபுத்தியில் பதிந்து வைத்திருக்கிறோம். என்ன விலை கொடுத்தும் வெற்றி பெற துடிக்கிறோம்.
தோல்வியை ஏற்று கொள்ள மறுக்கிறோம்.
தோல்வியில் இருந்து பாடங்களை பெற்று மீண்டு வருவோம் என நேர்மறையாக சிந்திப்பதில்லை. குறுக்கு வழிகளை தேடி ஓடுகிறோம்.
இவை எல்லாமே வேடிக்கை பார்க்கும் மனதை வளர்த்து கொள்ளாததன் விளைவு தான்.
ஒரு தோல்வி ஏற்பட்டுவிட்டதா? அதனை வேடிக்கை பாருங்கள். அதனை உங்களோடு இணைத்து கொள்ளாதீர்கள். சற்று தள்ளி நில்லுங்கள்.
நிதானம் கொள்ளுங்கள்.
பல நேரங்களில் நாம் அடையும் தோல்வி நமக்கு தகுதிக்கு ஒப்பாத விடயங்களை நம்மைவிட்டும் விலக்க கூடியதாக இருக்கலாம்.
அதாவது, ஒரு சிறிய விடயத்தில் ஏற்பட்ட அந்த தோல்வியே உங்களின் பிரமாண்டமான எதிர்கால வெற்றிக்குரிய விடயங்களுக்கு உங்களை இட்டு செல்லும் காரணியாக இருக்கலாம்.
தோல்வியை ஏற்று கொண்டு அடுத்து என்ன செய்யலாம்? என சிந்தியுங்கள்.
மாறாக, தோல்வியை நினைத்து நம்மை நாமே அழித்து கொள்வதும், அந்த தோல்வியை அடுத்தவன் தலையில் கட்டி அவனை அழிப்பதும், அதற்காக உங்களின் நேர்மையை பழி கொடுத்து உங்களுக்குள் இருக்கும் ஹீரோவை கொலை செய்வதும் வேண்டாம்..!
மனதில் சலனமற்று உங்கள் வாழ்க்கையை நீங்கள் வேடிக்கை பார்க்க கற்று கொள்ளுங்கள்.
நீங்கள் துரத்திய வெற்றி உங்களை தேடி வந்தடையும்.
2024 புதிய ஆண்டு அழைக்கிறது
நமக்கு ஒரு புதிய துவக்கம் காத்திருக்கிறது
பெரிய பெரிய கனவுகள் செய்வோம்
நேர்மை எனும் சிறகுகள் பூட்டி வானில் பறப்போம்.
புதிய புதிய உச்சங்கள் தொடுவோம்..!
எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்
அன்புடன் M. அகமது இஸ்மாயீல்.BSc.MBA.LLB அட்வகேட்- திருநெல்வேலி 8124499188
Intell Times - தமிழ்
2024
புதிய ஆண்டு
புதிய துவக்கம்
புதிய கனவுகள்
அத்துடன் நேர்மை.
ஆரம்பத்தில் எல்லோருமே நேர்மையாளர்கள் தான்.
ஆனால் அந்த நேர்மையான வாழ்க்கை சுடும் போது, எதிர்பார்த்த பணம் வராத போது, கனவுகள் நிகழ தாமதமாகும் போது, கொஞ்சம் கூட யோசிக்காமல் நேர்மையின் கழுத்தில் கத்தியை வைத்துவிடுகிறோம். பணத்தை, புகழை தேர்ந்தெடுத்து கொள்கிறோம்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்...
நேர்மையாக இருந்தால் புகழ் மழையில் பணம் கொட்டும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று இருந்தால் இந்த உலகில் உள்ள எந்த மனிதன் தான் நேர்மையை தேர்ந்தெடுக்காமல் இருப்பான்?
நேர்மையாக இருப்பது எளிதல்ல, சவாலானது.
நேர்மையாக இருப்பவர்கள் வாழ்க்கையில் பல சாகசங்கள் செய்ய வேண்டி இருக்கும்,
மிகுந்த தைரியமும் உறுதியான மனமும் வேண்டும், கோழைகளுக்கு அது சாத்தியமில்லை.
அதனால் தான் அவர்கள் என்றைக்கும் "ஹீரோ" க்களாக இருக்கிறார்கள்.
மாறாக நிறைய பணம் இருந்தாலும், பல வண்ண கார்களில் வலம் வந்தாலும் கொடூர மனம் கொண்ட ஏமாற்றுகாரர்கள் எப்போதும் இந்த சமூகத்தின் "வில்லன்" களாக தான் கவனிக்க படுகிறார்கள்.
வாழ்க்கையில் நடைபெறும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மனநிலை தான் நேர்மையாக இருப்பதற்கான அடிப்படை தேவை.
மற்றவர் வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பதும், அவர்கள் படும் துன்பங்களை பார்த்து இன்பம் கொள்வதையும், பேறுகளை கண்டு பொறாமை கொள்வதையும் குறித்து நான் இங்கு நான் பேசவில்லை, அது ஒரு குரூர மனநிலை, அதனை ஆதரிக்கும் பதிவு அல்ல இது.
நமது சொந்த வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை வேடிக்கை பார்க்க கற்று கொள்ள வேண்டும்.
அதெப்படி...
என் வாழ்க்கை அல்லவா?
நான் தானே ஓட வேண்டும், வேடிக்கை பார்ப்பதற்காகவா வாழ்க்கை என உங்கள் மூளையில் பல்பு எரியலாம்.
உண்மை தான்.
உங்கள் வாழ்க்கை தான், நீங்கள் தான் ஓட வேண்டும், உழைக்க வேண்டும், விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் கூறுவது "பாசிட்டிவ் சைடு".
நான் அதனுடைய "நெகடிவ் சைடு" பற்றி பேசுகிறேன்.
நம்முடைய செயல்கள் வெற்றியடைந்துவிட்டால், குதூகலிக்கிறோம், வானத்தில் பறக்கிறோம்.
தோல்வி அடைந்துவிட்டால்.... ?!
யார் தலையில் கட்டலாம் என ஆள் தேடுகிறோம்.அந்த தோல்வியை மறைக்க அல்லது இழப்பில் இருந்து மீண்டு வர, நம்மை வெற்றியாளனாக இந்த உலகின் முன்பாக நிலைநிறுத்தி கொள்ள எந்த எல்லைக்கும் செல்கிறோம்.
தொழிலில், அடுத்தவர் பாக்கெட்டில் உள்ள பணத்தை நம்முடைய பாக்கெட்டிற்கு கொண்டு வருவதை பெரிய வெற்றியாக நினைக்கிறோம்.
பொய்களை அள்ளி விடுவது, தன்னால் செய்ய முடியாது என தெரிந்தும் கம்மிட் செய்வது என பலவற்றை செய்கிறோம். அதனை திறமை என பீற்றி கொள்கிறோம்.
ஏன்?
ஏனென்றால், வெற்றி என்பது பணம், புகழ் சம்பாதிப்பது மட்டும் தான் என நமது பொதுபுத்தியில் பதிந்து வைத்திருக்கிறோம். என்ன விலை கொடுத்தும் வெற்றி பெற துடிக்கிறோம்.
தோல்வியை ஏற்று கொள்ள மறுக்கிறோம்.
தோல்வியில் இருந்து பாடங்களை பெற்று மீண்டு வருவோம் என நேர்மறையாக சிந்திப்பதில்லை. குறுக்கு வழிகளை தேடி ஓடுகிறோம்.
இவை எல்லாமே வேடிக்கை பார்க்கும் மனதை வளர்த்து கொள்ளாததன் விளைவு தான்.
ஒரு தோல்வி ஏற்பட்டுவிட்டதா? அதனை வேடிக்கை பாருங்கள். அதனை உங்களோடு இணைத்து கொள்ளாதீர்கள். சற்று தள்ளி நில்லுங்கள்.
நிதானம் கொள்ளுங்கள்.
பல நேரங்களில் நாம் அடையும் தோல்வி நமக்கு தகுதிக்கு ஒப்பாத விடயங்களை நம்மைவிட்டும் விலக்க கூடியதாக இருக்கலாம்.
அதாவது, ஒரு சிறிய விடயத்தில் ஏற்பட்ட அந்த தோல்வியே உங்களின் பிரமாண்டமான எதிர்கால வெற்றிக்குரிய விடயங்களுக்கு உங்களை இட்டு செல்லும் காரணியாக இருக்கலாம்.
தோல்வியை ஏற்று கொண்டு அடுத்து என்ன செய்யலாம்? என சிந்தியுங்கள்.
மாறாக, தோல்வியை நினைத்து நம்மை நாமே அழித்து கொள்வதும், அந்த தோல்வியை அடுத்தவன் தலையில் கட்டி அவனை அழிப்பதும், அதற்காக உங்களின் நேர்மையை பழி கொடுத்து உங்களுக்குள் இருக்கும் ஹீரோவை கொலை செய்வதும் வேண்டாம்..!
மனதில் சலனமற்று உங்கள் வாழ்க்கையை நீங்கள் வேடிக்கை பார்க்க கற்று கொள்ளுங்கள்.
நீங்கள் துரத்திய வெற்றி உங்களை தேடி வந்தடையும்.
2024
புதிய ஆண்டு அழைக்கிறது
நமக்கு ஒரு புதிய துவக்கம் காத்திருக்கிறது
பெரிய பெரிய கனவுகள் செய்வோம்
நேர்மை எனும் சிறகுகள் பூட்டி வானில் பறப்போம்.
புதிய புதிய உச்சங்கள் தொடுவோம்..!
எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்
அன்புடன்
M. அகமது இஸ்மாயீல்.BSc.MBA.LLB
அட்வகேட்- திருநெல்வேலி
8124499188
1 year ago (edited) | [YT] | 1