Our Temples - Rangarajan Narasimhan

எனக்கென்ன போச்சு என்று நான் இருக்கலாம். ஆனால் இப்படி "நன்கு கற்றவர்கள்" என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் கூட, தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு அவர்களுக்கு அஹங்காரம் அதிகமாக இருப்பது வேதனை!!

ஸ்ரீரங்கத்து "பெரியவர்கள்" இவர்கள். சிலர் இதில் "ஆசார்ய புருஷர்கள்". பெரிய பெருமாள், நம்பெருமாள் பற்றி "நன்றாக" உபன்யாசம் செய்வாரகள். இந்த கூட்டத்திலும் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று வழக்கம் போல ஊருக்கு உபதேசித்தவர்கள்!!

இந்த புகைப்படத்தில் உள்ள பிழை என்ன என்று தெரிகிறதா? அதெப்படி தெரியும். நான் எல்லோரையும் குறை சொல்கிறேன் என்றல்லவா நீங்கள் சொல்வீர்கள்!!

எம்பெருமானார் அதாவது ஸ்வாமி ராமாநுஜர் எழுந்தருளி இருக்க, அவர் முன் முதுகையும் பின் பக்கத்தையும் காட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்ற இந்த "ஸ்ரீ வைஷ்ணவர்கள்" ஊருக்கு உபதேசித்தால் நாடு எப்படி உறுப்படும்?!!!

இந்த அழகில் இவர்கள், ஆசார்யர்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்று விளக்குகின்றனர். ஏழை மக்கள் இவர்களை ஏதோ அறிவார்ந்தவர்கள் என்று நினைத்து கேள்விகளும் கேட்கின்றனர்.

ஓட்டை ஓடத்தோடு ஒழுகலோடம் என்று சொல்வர்.

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயதத்தின் அடிப்படையே ஜ்ஞானமும் அநுட்டானமும்.

ஜெய் ஸ்ரீ ராம்!

3 months ago | [YT] | 148