Our Temples - Rangarajan Narasimhan

எனக்கென்ன போச்சு என்று நான் இருக்கலாம். ஆனால் இப்படி "நன்கு கற்றவர்கள்" என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் கூட, தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு அவர்களுக்கு அஹங்காரம் அதிகமாக இருப்பது வேதனை!!

ஸ்ரீரங்கத்து "பெரியவர்கள்" இவர்கள். சிலர் இதில் "ஆசார்ய புருஷர்கள்". பெரிய பெருமாள், நம்பெருமாள் பற்றி "நன்றாக" உபன்யாசம் செய்வாரகள். இந்த கூட்டத்திலும் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று வழக்கம் போல ஊருக்கு உபதேசித்தவர்கள்!!

இந்த புகைப்படத்தில் உள்ள பிழை என்ன என்று தெரிகிறதா? அதெப்படி தெரியும். நான் எல்லோரையும் குறை சொல்கிறேன் என்றல்லவா நீங்கள் சொல்வீர்கள்!!

எம்பெருமானார் அதாவது ஸ்வாமி ராமாநுஜர் எழுந்தருளி இருக்க, அவர் முன் முதுகையும் பின் பக்கத்தையும் காட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்ற இந்த "ஸ்ரீ வைஷ்ணவர்கள்" ஊருக்கு உபதேசித்தால் நாடு எப்படி உறுப்படும்?!!!

இந்த அழகில் இவர்கள், ஆசார்யர்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்று விளக்குகின்றனர். ஏழை மக்கள் இவர்களை ஏதோ அறிவார்ந்தவர்கள் என்று நினைத்து கேள்விகளும் கேட்கின்றனர்.

ஓட்டை ஓடத்தோடு ஒழுகலோடம் என்று சொல்வர்.

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயதத்தின் அடிப்படையே ஜ்ஞானமும் அநுட்டானமும்.

ஜெய் ஸ்ரீ ராம்!

3 months ago | [YT] | 148



@vanamalik3989

கற்ற கல்வி மேலோட்டமானதாக இருந்தால் யாருக்கும் உபயோகப்படாது. கல்வி என்பதே ஆழமானது. ஆஜீவனம் அதில் அமிழ வேண்டும். அப்பொழுதான் தத்துவங்களின் ஸத்யமும் ஹித புருஷார்த்தங்களின் மேன்மையும் ஸ்வார்த்த நிரபேக்ஷ பரோபகார கைங்கர்யங்களும் ருசிக்கும். எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் எம்பெருமான் இந்த கருவியுடன் கூட நின்று காத்து வழி நடத்துவான் என்ற மஹா விஸ்வாசமும் பிறக்கும். இவற்ருக்கு விரோதி கீர்த்தி லாப லக்ஷியங்கள். என்ன செய்வது. பணமும் புகழும் மிகப் பெரிய போதையாயிற்றே. அதுவும் ஆஸ்டிக முத்திரை குத்தப்பட்ட போதையென்றால் கேடக வேண்டுமா. இன்றைய கால கட்டத்தில் மைக்கை பிடித்துக் கொண்டு தத்துவ ஹித புருஷார்த்தங்களை விளக்குவதாக சொல்லிக் கொண்டு, மனம் போன போக்கில் கேட்பவர்கள் ரசிப்பதற்காகவே அல்லவா விபரீதங்களை கடந்து போகிறார்கள். கொடுமை.

3 months ago | 1

@anandbaskar5734

இவர் யூடியூபில் வைஷ்ணவம் பற்றி அப்படி பேசுவார். எல்லாம் பொழுது போக்காக ஆகிவிட்டது வைஷ்ணவம். சமூக வலை தள விளம்பரமாக போலி பெருமையாகி விட்டது. விகல்பம் இல்லாத பக்தன் உள்ளான?

3 months ago | 1

@ganesangirisundaram879

ஸத்யமான வார்த்தைகள். 🙏🙏

3 months ago | 5

@rangamaniravi1584

With due respect and humble attitude, I would like to suggest 1 thing. Spelling of உருப்படுமா... I understand there are many things here to worry about not this. I suggested as I respect your thinking and the efforts you take to reflect upon it along with your deep devoted service to temples.

3 months ago | 1

@raghavanramasubramanian6162

Unfortunate situation we are facing.

3 months ago | 3

@baladhandayuthamparamasiva1427

பரம பாகவதாளுக்கு எங்கு போவது ஐயா

3 months ago | 3

@jayanthisuresh7215

உண்மைதான் ஸ்வாமின்.😮

3 months ago | 1

@anuradha6311

God will give a befitting punishment for the wrong doers

3 months ago | 3

@deshbandhu60

Srivaishnavas should show utmost respect to acharyas. If paramaacharyas like Bhagavad Ramanuja is disrespected what is the value of upadesams of these people?

3 months ago | 2

@venkatdvr9509

இது தவறுதான்.

3 months ago | 1

@yesodhasrirangam

🙏🙏🙏🙏🙏🙏

3 months ago | 2

@kannank4379

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் ஸ்வாமி நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

3 months ago | 2

@nallaram1964

ஆக மொத்தம் இங்க யாருமே சரியில்லை.

3 months ago | 1

@-_.0O

அதில் பேசுறவர் ஒரு வீடியோ ல ஏன் ஸ்ரீ வைஷ்ணவன் சிவன் கோவிலுக்கு போ கூடாது னு வக்கணையாக வ்யாக்யானம் பேசிருக்கார்

3 months ago | 1

@Geeky9065

Sincere request to also post it in english for agnaanis like adiyen.

3 months ago | 1

@SarojaKannan-b9n

Respect is shown just as a lipservice NOT by heart (which is reflected in photos) - hope thats the message

3 months ago | 2

@sarathyche6574

பத்து திசையிலும் இருப்பவர் பெருமாள் முக்தாத்மாக்கள். எம்பெருமானார் திருவடியில் உறைபவர்கள் இவர்கள். குழந்தை தாய் உறவு.

3 months ago | 0

@regunathansrinivasan3338

அட போ ஓய் 😄😄

3 months ago | 7

@thangarajm5532

நாராயணனை பாடும் வாயால் அடுத்த வர்களை நாயென்றும் பேயென்றும் நக்கு நக்கு என்று கத்துவது எதில் சேர்த்தி

3 months ago | 5

@sr.sathishprabu7422

பெருமான் / தேவியர் / ஆழ்வார் / ஆச்சார்யர்களை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு போகும் பொழுது முன்பு செல்லும் ஸ்ரீ பாதம் தாங்கிகள் எந்த திசையில் தன்னை வழி நடத்தி செல்கிறார்கள் ? அவர்கள் பெருமானை அவமதிக்கும் பொருட்டா தன் முதுகை பெருமானுக்கு காட்டிக்கொண்டு நடக்கிறார்கள் ? ஸ்ரீ ராமாநுஜர் - செயலை விட செயலின் நோக்கத்தை நிச்சயம் காண்பார் என்று நான் நம்புகிறேன், அவர் இந்த ஆச்சார்யர்கள் தன்னை அவமதிக்கும் பொருட்டே இப்படி செய்கிறார்கள் என்று நம்புவார்கள் என்று நான் நம்பவில்லை.

3 months ago (edited) | 0