இறைவன் இந்த உலக வாழ்வில் 'வாழ்வதை' நம் மீது கடமையாக்கியிருக்கின்றான். உணவு, ஜீரணம், கழிவு நீக்கம், பொருளீட்டுதல், பயணங்கள், அனுபவங்கள், கற்றல்கள், சிந்தனைகள், ஓய்வு, உறக்கம், உறவுகள், ஆன்மிக நிலைப்பாடுகள், மரணம் போன்றவை நமது வாழ்வின் அம்சங்களாக இருக்கின்றன. இந்த வாழ்வியல் அம்சங்களில் நாம் எப்படி நல்ல முறைகளில் நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல்களையும், எப்படி வாழக்கூடாது என்ற அறிவுறுத்தல்களையும், சில நேரங்களில் எச்சரிக்கைகளையும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் உணர்வாக படைப்பாளனாகிய இறைவன் அறிவித்த வண்ணமே இருக்கின்றான். இருந்தாலும் மனிதன் தவறுகள் செய்யக்கூடிய இயல்பைக் கொண்டவனாகவும், பலகீனனனாகவுமே இருக்கின்றான். வாழ்வியல் அம்சங்களிலிருந்து மனிதன் அவனது அறிவைக்கொண்டும், அறியாமையைக்கொண்டும் பலமுறைகள் தவறுகின்றான், நோய்களிலும், துன்பங்களிலும், வறுமையிலும் அவன் விழுகின்றான். இறை வழிகாட்டல்களைப் புறக்கணித்து வாழ்வியல் அம்சங்களிலிருந்து தவறும் போதெல்லாம் மனிதனுக்கு நோய்களும் துன்பங்களும் ஏற்படுகின்றன. வாழ்வியல் நெறிகளிலிருந்து பிறழ்ந்து தவறும் மனிதர்களுக்கு 'மருத்துவம்' என்பது தேவையாக ஆகின்றது.
ஒரு நல்ல மருத்துவம் என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? வாழ்வியல் அம்சங்களிலிருந்து தவறி நோயின் வேதனையில் சிக்கியிருக்கும் மனிதனை, அவனது வலிகளிலிருந்து மீட்டு, வாழ்வியல் அம்சங்களை அவனுக்குள் உறுதியாக நினைவூட்டி, அதில் அவனை உறுதியாகப் பொருத்தி, இன்னும் அதில் அவனை உறுதியாக நிலைபெற வைக்கக்கூடியதாக, அதாவது மீண்டும் அவன் மருத்துவம் தேவைப்படக்கூடிய மனிதனாக ஆகிவிடாமல் அவனை ஆக்கக்கூடிய ஒன்றாக ஒரு மருத்துவ வழிமுறை இருக்க வேண்டும். அதுவே 'நல்ல மருத்துவம்'.
நாம் அனைவரும் நம் உள்ளத்தின் இறை வழிகாட்டல்களை செவியேற்று, வாழ்வியல் தெளிவுகளோடு, மருத்துவம் தேவைப்படாத மனிதர்களாக வாழ வேண்டும். அதற்காக நம் இறைவன் நமக்கு உதவி செய்வானாக! ஆனால் நாம் வாழ்வியல் நெறிகளிலிருந்து தவறி, மருத்துவம் தேவைப்படக்கூடிய மனிதர்களாக இருந்து கொண்டிருக்கின்றோமெனில், நாம் மிகவும் தெளிவுடன், மேற்சொன்ன 'நல்ல மருத்துவத்தை' தேர்ந்தெடுத்து நமது நோய்களிலிருந்து நாம் மீண்டு ஆரோக்கியம் பெற்றுவிட வேண்டும், மற்றும் அந்த ஆரோக்கியத்தில் நிலைபெற்றும் விட வேண்டும்.
அந்த 'நல்ல மருத்துவம்' என்று நான் இங்கே குறிப்பிடுவது அக்குபங்சர் மருத்துவத்தை. நிறைவான வாழ்வியல் தெளிவுகளையும், வலிமை மிக்க மருத்துவ நுட்பங்களையும் கொண்ட ஒரு அற்புதமான மனித வாழ்வியல் ஞானமாக அக்குபங்சர் மருத்துவம் அமைந்திருக்கின்றது. அக்குபங்சர் மருத்துவம் என்பது இறைவன் மனிதர்களை அன்பாக மன்னிக்கக்கூடிய ஒரு வழிமுறை. ஏற்கனவே சொன்னபடி, நீங்கள் மருத்துவம் தேவைப்படக்கூடிய ஒருவராக இருந்து கொண்டிருக்கின்றீர்கள் என்றால், நிச்சயமாக அக்குபங்சர் எனும் நல்ல மருத்துவத்தை நாடுங்கள். அதன் வழிமுறைகள் உங்களுக்கு உதவ முடியுமா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
நோய்களும், மருந்துகளும், பக்கவிளைவுகளும், அறுவை சிகிச்சைகளும், உறுப்பு நீக்கங்களும், நோய்களைப் பற்றிய பயமும், அந்த பயத்தின் விளைவால் அவசரமும், குழப்பமும், இன்னும் இதுவே ஒரு சுழற்றியாகவும் இன்றைக்கு மனிதர்களுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இது நமக்கு வேண்டாம். யாருக்கும் வேண்டாம். இந்த கெட்ட சுழற்சியில் நாம் சிக்கியிருந்தாலும், மீட்சி உண்டு என்பதை நம்பிக்கை கொள்வோம். அந்த நம்பிக்கையில் நிலைத்திருப்போம். அக்குபங்சர் எனும் நல்ல மருத்துவம் நமக்கு ஆகுமாக வேண்டும் என்ற பிரார்த்தனை கொள்வோம்.
அக்குபங்சர் மருத்துவத்தின் மூலம் சுகமான நோய் நிவாரணங்களைத் பெற்றுக்கொள்வதோடு, மனித வாழ்வியல் குறித்த உறுதியான தெளிவுகளைப் பெற்று, அதில் உங்களை உறுதிப்படுத்தி, மருத்துவமே தேவைப்படாத ஒரு மகத்துவ வாழ்வை வாழ உறுதியாக நீங்கள் விரும்புகின்றீர்களா? அப்படியெனில், அக்குபங்சர் வாழ்க்கை அறிவியலையும், அதன் மருத்துவ நுட்பங்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான அதன் மருத்துவ அணுகுமுறைகளையும் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். இது ஒரு முக்கியமான முடிவாக அமையட்டும். உங்களுக்காக மட்டுமல்லாமல், உங்கள் குடும்பத்திற்காகவும், உங்கள் சந்ததிகளுக்காகவும் அந்த முடிவை நீங்கள் மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே அக்குபங்சர் மருத்துவராக ஆகிவிடுங்கள். உயர்வான பாதுகாப்பு அரணில் நீங்கள் புகுந்து விடுங்கள். உங்கள் குடும்பத்தினரையும் அதில் புகுத்தி விடுங்கள்.
அக்குபங்சர் வாழ்க்கை அறிவியல் மற்றும் அதன் மருத்துவ நுட்பங்கள் பற்றிய நான்கு மாத இணையவழி பயிற்சி வகுப்பை நாங்கள் துவங்கவிருக்கின்றோம். அக்குபங்சர் போன்ற ஆழமான மருத்துவக் கோட்பாடுகளை, அதன் விளக்கங்களை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடத்திட்டங்களும், கற்பித்தல் முறைகளும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அடிப்படையில் இது தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் ஒரு சுய விழிப்புணர்விற்கான வகுப்பு. கல்வித்தகுதிதிகள் என்று எதுவும் தேவையில்லை. பொதுவான புரிதல் திறனும், ஆர்வமும் விருப்பமும் உள்ள அனைவரும் இந்த மனித வாழ்வியல் ஞானத்தைக் கற்றுக் கொள்ளலாம். ஒரே அனுமதிச்சீட்டில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து படிக்கலாம். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து படிப்பதால் இன்னுமே எளிமையாகவும் தெளிவுடனும் புரிதலுடனும் நம் குடும்பங்களின் ஆரோக்கியத்தைப் பேண முடியும். தவறவிடக்கூடாத ஒரு முக்கிய கற்றல் வாய்ப்பு இது. இன்னும் எங்கெங்கு இந்த வாய்ப்பு கிடைக்கின்றதோ, அவைகளையெல்லாம் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கின்றேன். இறைவன் அருளால் வாழ்வியல் ஞானங்களும், நன்மையான மருத்துவ வழிகாட்டல்களும் நமக்குக் கிடைத்து, நம் வாழ்வில் அமைதியும், சமாதானமும், ஆரோக்கியமும் நிலைபெறட்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
ArunCJ Academy
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
இறைவன் இந்த உலக வாழ்வில் 'வாழ்வதை' நம் மீது கடமையாக்கியிருக்கின்றான். உணவு, ஜீரணம், கழிவு நீக்கம், பொருளீட்டுதல், பயணங்கள், அனுபவங்கள், கற்றல்கள், சிந்தனைகள், ஓய்வு, உறக்கம், உறவுகள், ஆன்மிக நிலைப்பாடுகள், மரணம் போன்றவை நமது வாழ்வின் அம்சங்களாக இருக்கின்றன. இந்த வாழ்வியல் அம்சங்களில் நாம் எப்படி நல்ல முறைகளில் நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல்களையும், எப்படி வாழக்கூடாது என்ற அறிவுறுத்தல்களையும், சில நேரங்களில் எச்சரிக்கைகளையும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் உணர்வாக படைப்பாளனாகிய இறைவன் அறிவித்த வண்ணமே இருக்கின்றான். இருந்தாலும் மனிதன் தவறுகள் செய்யக்கூடிய இயல்பைக் கொண்டவனாகவும், பலகீனனனாகவுமே இருக்கின்றான். வாழ்வியல் அம்சங்களிலிருந்து மனிதன் அவனது அறிவைக்கொண்டும், அறியாமையைக்கொண்டும் பலமுறைகள் தவறுகின்றான், நோய்களிலும், துன்பங்களிலும், வறுமையிலும் அவன் விழுகின்றான். இறை வழிகாட்டல்களைப் புறக்கணித்து வாழ்வியல் அம்சங்களிலிருந்து தவறும் போதெல்லாம் மனிதனுக்கு நோய்களும் துன்பங்களும் ஏற்படுகின்றன. வாழ்வியல் நெறிகளிலிருந்து பிறழ்ந்து தவறும் மனிதர்களுக்கு 'மருத்துவம்' என்பது தேவையாக ஆகின்றது.
ஒரு நல்ல மருத்துவம் என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? வாழ்வியல் அம்சங்களிலிருந்து தவறி நோயின் வேதனையில் சிக்கியிருக்கும் மனிதனை, அவனது வலிகளிலிருந்து மீட்டு, வாழ்வியல் அம்சங்களை அவனுக்குள் உறுதியாக நினைவூட்டி, அதில் அவனை உறுதியாகப் பொருத்தி, இன்னும் அதில் அவனை உறுதியாக நிலைபெற வைக்கக்கூடியதாக, அதாவது மீண்டும் அவன் மருத்துவம் தேவைப்படக்கூடிய மனிதனாக ஆகிவிடாமல் அவனை ஆக்கக்கூடிய ஒன்றாக ஒரு மருத்துவ வழிமுறை இருக்க வேண்டும். அதுவே 'நல்ல மருத்துவம்'.
நாம் அனைவரும் நம் உள்ளத்தின் இறை வழிகாட்டல்களை செவியேற்று, வாழ்வியல் தெளிவுகளோடு, மருத்துவம் தேவைப்படாத மனிதர்களாக வாழ வேண்டும். அதற்காக நம் இறைவன் நமக்கு உதவி செய்வானாக! ஆனால் நாம் வாழ்வியல் நெறிகளிலிருந்து தவறி, மருத்துவம் தேவைப்படக்கூடிய மனிதர்களாக இருந்து கொண்டிருக்கின்றோமெனில், நாம் மிகவும் தெளிவுடன், மேற்சொன்ன 'நல்ல மருத்துவத்தை' தேர்ந்தெடுத்து நமது நோய்களிலிருந்து நாம் மீண்டு ஆரோக்கியம் பெற்றுவிட வேண்டும், மற்றும் அந்த ஆரோக்கியத்தில் நிலைபெற்றும் விட வேண்டும்.
அந்த 'நல்ல மருத்துவம்' என்று நான் இங்கே குறிப்பிடுவது அக்குபங்சர் மருத்துவத்தை. நிறைவான வாழ்வியல் தெளிவுகளையும், வலிமை மிக்க மருத்துவ நுட்பங்களையும் கொண்ட ஒரு அற்புதமான மனித வாழ்வியல் ஞானமாக அக்குபங்சர் மருத்துவம் அமைந்திருக்கின்றது. அக்குபங்சர் மருத்துவம் என்பது இறைவன் மனிதர்களை அன்பாக மன்னிக்கக்கூடிய ஒரு வழிமுறை. ஏற்கனவே சொன்னபடி, நீங்கள் மருத்துவம் தேவைப்படக்கூடிய ஒருவராக இருந்து கொண்டிருக்கின்றீர்கள் என்றால், நிச்சயமாக அக்குபங்சர் எனும் நல்ல மருத்துவத்தை நாடுங்கள். அதன் வழிமுறைகள் உங்களுக்கு உதவ முடியுமா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
நோய்களும், மருந்துகளும், பக்கவிளைவுகளும், அறுவை சிகிச்சைகளும், உறுப்பு நீக்கங்களும், நோய்களைப் பற்றிய பயமும், அந்த பயத்தின் விளைவால் அவசரமும், குழப்பமும், இன்னும் இதுவே ஒரு சுழற்றியாகவும் இன்றைக்கு மனிதர்களுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இது நமக்கு வேண்டாம். யாருக்கும் வேண்டாம். இந்த கெட்ட சுழற்சியில் நாம் சிக்கியிருந்தாலும், மீட்சி உண்டு என்பதை நம்பிக்கை கொள்வோம். அந்த நம்பிக்கையில் நிலைத்திருப்போம். அக்குபங்சர் எனும் நல்ல மருத்துவம் நமக்கு ஆகுமாக வேண்டும் என்ற பிரார்த்தனை கொள்வோம்.
அக்குபங்சர் மருத்துவத்தின் மூலம் சுகமான நோய் நிவாரணங்களைத் பெற்றுக்கொள்வதோடு, மனித வாழ்வியல் குறித்த உறுதியான தெளிவுகளைப் பெற்று, அதில் உங்களை உறுதிப்படுத்தி, மருத்துவமே தேவைப்படாத ஒரு மகத்துவ வாழ்வை வாழ உறுதியாக நீங்கள் விரும்புகின்றீர்களா? அப்படியெனில், அக்குபங்சர் வாழ்க்கை அறிவியலையும், அதன் மருத்துவ நுட்பங்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான அதன் மருத்துவ அணுகுமுறைகளையும் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். இது ஒரு முக்கியமான முடிவாக அமையட்டும். உங்களுக்காக மட்டுமல்லாமல், உங்கள் குடும்பத்திற்காகவும், உங்கள் சந்ததிகளுக்காகவும் அந்த முடிவை நீங்கள் மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே அக்குபங்சர் மருத்துவராக ஆகிவிடுங்கள். உயர்வான பாதுகாப்பு அரணில் நீங்கள் புகுந்து விடுங்கள். உங்கள் குடும்பத்தினரையும் அதில் புகுத்தி விடுங்கள்.
அக்குபங்சர் வாழ்க்கை அறிவியல் மற்றும் அதன் மருத்துவ நுட்பங்கள் பற்றிய நான்கு மாத இணையவழி பயிற்சி வகுப்பை நாங்கள் துவங்கவிருக்கின்றோம். அக்குபங்சர் போன்ற ஆழமான மருத்துவக் கோட்பாடுகளை, அதன் விளக்கங்களை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடத்திட்டங்களும், கற்பித்தல் முறைகளும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அடிப்படையில் இது தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் ஒரு சுய விழிப்புணர்விற்கான வகுப்பு. கல்வித்தகுதிதிகள் என்று எதுவும் தேவையில்லை. பொதுவான புரிதல் திறனும், ஆர்வமும் விருப்பமும் உள்ள அனைவரும் இந்த மனித வாழ்வியல் ஞானத்தைக் கற்றுக் கொள்ளலாம். ஒரே அனுமதிச்சீட்டில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து படிக்கலாம். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து படிப்பதால் இன்னுமே எளிமையாகவும் தெளிவுடனும் புரிதலுடனும் நம் குடும்பங்களின் ஆரோக்கியத்தைப் பேண முடியும். தவறவிடக்கூடாத ஒரு முக்கிய கற்றல் வாய்ப்பு இது. இன்னும் எங்கெங்கு இந்த வாய்ப்பு கிடைக்கின்றதோ, அவைகளையெல்லாம் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கின்றேன். இறைவன் அருளால் வாழ்வியல் ஞானங்களும், நன்மையான மருத்துவ வழிகாட்டல்களும் நமக்குக் கிடைத்து, நம் வாழ்வில் அமைதியும், சமாதானமும், ஆரோக்கியமும் நிலைபெறட்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
1 year ago | [YT] | 12