DK FOOD JUNCTION

பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 11
கெட்ட நேரத்திலும் நல்ல நேரம்.... 👍👍👍

2010_11
ஆனது...
சுவாரஸ்யத்துக்காக
நான்
கூட்டவும்
இல்லை
கழிக்கவும்
இல்லை...
காரணம்
இது
கதையல்ல
நிஜம்...

மீண்டும்
ஆம்பூரில்
வாட்ச்மேன்
வேலை
மாதம்
3000
சம்பளம்....

கை
நிறைய
காசு
பார்த்த
கை...
வெறும்
கை
ஆனது.,..

நியாயத்தை
பேச
போய்
அநியாயமாக
வேலையை
விட்டுட்டியே
என
எனக்குள்
எள்ளி
நகையாடும்
மனசாட்சி....

இருந்தாலும்
உனக்கு
இது
வேணும்
கொஞ்ச
நஞ்சப்
பேச்சா..
பேசுற....

என
பண
முடக்கம்
வரும்
போது....
தன்னைத்தானே
தூற்றியும்
கொள்ளும்....

ஆனாலும்....

உழைப்பு
வீண்
போகாது...

"உண்மை"
துரோகம்
செய்யாது....
என
தேற்றியும் கொள்ளும்.....

அப்பா...அப்பப்பா...
இருக்கும்
இடம்
தெரியாத
மனதிற்குள்
இத்தனை
போராட்டமா....!!

இது
இன்னும்
கொஞ்சம்
வேண்டுமென
இதயம்
பாராட்டுமா?

15...20
நாட்கள்
இருக்கும்...

கேரளா
மாஸ்டரிடம்
இருந்து
ஒரு
போன்....

மாஸ்டர்
சிதம்பரத்தில்
ஒரு
வேலை
இருக்கு...

கடை
பெயர்
M. M raja...
சிதம்பர
பேருந்து
நிலையத்திலேயே
இருக்கு...

நானே
கூட
வருகிறேன்....
வேலைக்கு
சேர்த்து
விடுகிறேன்...
என
வரச் சொன்னார்....

அப்படியே
தில்லை
நகர்...
வந்தேன்
முதல்
முறையாக....

அது
மாடியின்
படியை
விட
ஒரு
சுற்று...
பெரிய
சமையல்
அறை...

அதுவும்
விறகு
அடுப்பு..

விறகு
கொஞ்சம்
நாம்
கொஞ்சம்
சேர்ந்து
எரிந்தால்
தான்....

பிரியாணி
தயாராகும்....

வாழ்வில்
நாம்
கற்க
வேண்டிய
பாடம்...
இது...
இருக்கும்
வேலை
உதருவது
எளிது...

இன்னும்
ஒரு
வேலையை
பிடிப்பது...
அது...
பிடிப்பது
போல்
நடிப்பது....
கடினம்..!

சரி
எதுவாக
இருந்தால்
என்ன!?
பிரியாணி
செய்தாக
வேண்டும்...
செய்தேன்
பிடித்தது...
அவர்களுக்கு..

பிடிக்கவில்லை
எனக்கு....

இஞ்சியும்
பூண்டும்
தோல்
உரித்து
அரைத்து
இருக்க
வேண்டும்...
என்றேன்...

அது
பேருந்து
நிலைய
வியாபாரம்....
பெரிதாய்
அவர்கள்
கண்டு
கொள்ளவில்லை....

நாளை
சரி
செய்கிறோம்
என்றனர்...

சரி
நாளை
பார்க்கலாம்..
என
அன்று
மாலை
படம்
பார்க்க
போனேன்....

என்ன
படம்
தெரியுமா???

"மைனா"
நல்ல படம்...

இரவு
முழுதும்
மா..மழை..

மாடிப்படியில்
சமையல்
கட்டு...

நான்
கழுவச்
சொல்லாமலே
தண்ணீர்
ஊற்றி
மெழுகி
விட்டான்...
வருண
பகவான்....

சரி
அடுப்பைத்தான்
கழுவினான்
பரவாயில்லை...

கடமை
உணர்ச்சிக்கு
அளவே
இல்லை....

விறகை
கூட
விட்டு
வைக்காமல்
விடிய
விடிய
தண்ணீர்
ஊற்றி
அழம்பி
இருக்கிறான்...
இந்த
வருண
அம்பி...

சரி
சொட்ட
சொட்ட
நனைந்த
விறகு...

ஈரம்
காயாத
அடுப்பு...

அடுப்பு
இருப்பதோ
இடுக்கு...

எப்படி
அழைப்பது
அக்னி
பகவானை...
அழைத்தாலும்
வந்த
பாடில்லை....

திறந்த நிலை
அடுப்பு...
எனக்கு
மண்ணெண்ணை
இருந்தால்
நன்றாக
இருக்கும்....
என
கேட்டேன்...

அவர்களிடம்
இல்லை...
சரி
இஞ்சி
பூண்டு
தோல்
உரித்தார்களா
அதுவும்
இல்லை.....

விறகாவது
வேறு
கிடைக்குமா
என்றேன்...
அதுவும்
இல்லை ...

தூது
வந்த
கண்ணன்
போல்
என்
நிலை...

எதுவும்
இல்லை
என்றால்
எப்படி!

அது
எங்களுக்கு
தெரியாது...
என
அங்கிருந்தவர்கள்
சொல்ல..

வேண்டுமானால்
முதலாளியிடம்
பேசிக்
கொள்ளுங்கள்
என்றனர்...

மனம்
நகரத்
தொடங்கியது
மெல்ல....

நல்ல
வேலை
கடையின்
அருகிலேயே
பேருந்து
நிலையம்
என்ன
செய்வது
என
தெரியாத
வயது....

மைனா
படம்
பார்த்த
திருப்தியோடு
தில்லை
நகரை
விட்டு
வந்தவாசி
அக்கா
வீடு
நோக்கி
பயனித்தேன்...

ஒரு
நாள்
முதல்வரை
போல....

இது
என்னை
சிறந்தவனாய்
காட்டும்
கதையல்ல...

நடந்தது
இதுதான்...

வேலைக்கு
சேர்த்து
விட்டவரிடம்
நடந்ததை
விரிவாக
போனில்
சொல்லிவிட்டு
நகரத்
தொடங்கிவிட்டேன்
நகரை விட்டு.....

என்னடா
இது...
என
ஒரு
வித
அழுப்பு..
காரணம்
வாய்
கொழுப்பு...

புதுப்பெண்
கோபித்து
கொண்டால்
அம்மா
வீட்டிற்கு
செல்வதை
போல்....

வாட்ச்மேன்
வேலை
எனக்கு...
ஆனால்
இந்தமுறை
தான்
கடைசி முறையாக
சல்யூட்
அடிக்கும்
வேலையில்
சேர்ந்தேன்...
நின்றேன்....

ஆம்
அடுத்த பாகம் நாகப்பட்டினம் வந்த கதை...
மிக‌ மிக சுவாரஸ்யமாக இருக்கும்...
வாசிக்க தவறாதீர்...🥰❣️🙏

3 weeks ago | [YT] | 24