திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 29 இல்லே எனும்

🦜அறியாமையை பொறுத்தருள் முருகா🦜

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே!



இல்வாழ்க்கை என்னும் மாய வாழ்வில் அடியேனைச் சிக்கவைத்துள்ள தேவரீர் கொடியவனாகிய அடியேனது அறியாமையைப் பொறுத்து மன்னித்தருளவில்லையே! மற்போர் செய்வதற்குரிய பன்னிரண்டு தோள்களிலும் அடியேனின் சொற்களாலாகிய பாடல்களையே மாலைகளாக அணிந்துகொள்ளும் ஒளிவீசும் வேலாயுதரே!

1 week ago | [YT] | 78