Vethathiriya SKY Lead

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்:

கேள்வி:
சுவாமிஜி, சுவாமிஜி, “முப்பூ” என்றால் என்ன?

வேதாத்திரி மகரிஷியின் பதில்:
உடலை கல்பமாக்க (உறுதியாக்க) சித்த வைத்திய முறையில் மூன்று விதமான உப்புக்களை சித்தர்கள் கண்டார்கள். அதற்கு முப்பூ என்று பெயர். அந்த முப்பூவைச் சரியாக எடுத்து முடித்துக் கொண்டால் மரணமே வராது என்று சொல்லக் கூடியது. அது சரியான முறையில் தயாரிக்கப்படும் பொழுது தாமிரத்தில் உள்ள களிம்பை எடுத்து விட்டு பொன்னாகக் கூட மாற்றக் கூடிய வல்லமை பெற்றது. அதை (Alchemy) இரசவாதம் என்றார்கள்.
இந்த மூன்றும் “பொன்னிறமான பூமியில் ஒன்று, கண்ணிறமான பூமியில் ஒன்று, கடலில் ஒன்று, மின்னெனப் பூக்கும் மின்னலில் ஒன்றும்” உள்ளது. ஒரு சில இடங்களில், பூமியில் பூப்பது பூநாதம் எனும் பூநீர். ஒரு குறிப்பிட்ட காலங்களில் மல்லிகைப் பூ போல பூத்து வரும். அதை தண்ணீரில் கரைத்துக் காய்ச்சினால் உப்பாகி விடும். கடலின் பூப்பது கடல் நுரை, மின்னலில் பூப்பது காளான். இதை வைத்து சில முறைகளில் சித்தர்கள் செய்ததைச் சாப்பிட்டால் உடலிலிருந்து உயிர் பிரியாது.
அதுதான் முப்பூ. இதை (Philosopher’s Stone) என்பார்கள். அதை மேல் நாட்டில் “வாலண்டின்” என்ற ஒரு அறிஞர் செய்துள்ளார். நம் நாட்டில் சித்தர்கள் எல்லோரும் இதை அறிந்திருந்தனர்.

வாழ்க வளமுடன்!!

4 days ago | [YT] | 225