ச. லெட்சுமி நாராயணன்

youtube.com/shorts/XZhSl_YvOE...

செங்கோல் சிறப்பு :

சிவ. ச. லெட்சுமி நாராயணன்
திருவாரூர்

1947 ம் ஆண்டு ஆகத்து 15 அன்று நம் நாடு சுதந்திரம் பெற்றது நாம் அறிந்ததே

ஆனால் எப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்று தெரியுமா?

விடுதலைப் பெறும் போது பாரம்பரிய அடையாளம் இருக்க வேண்டும் என்று எண்ணிய ஜவஹர்லால் நேரு அவர்கள் ராஜகோபாலாச்சாரியாரை அனுக அவர் திருவாவடுதுறை ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானங்களிடம் விடையத்தை
விவரித்தார்

புரிந்து கொண்டு சந்நிதானகள் உத்தரவு படி சென்னையில்
உம்மிடி பங்காரு செட்டியார் நகைக் கடையில் சைவ சின்னமாம் ரிஷப சின்னத்துடன் கூடிய செங்கோல் தயாரிக்கப்படுகிறது

சந்நிதானங்கள் உடல் நிலை சரியில்லாததால் தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆதீன நாதஸ்வர வித்துவான் திரு. ராஜரத்தினம் பிள்ளை இருவரையும் செங்கோல் உடல் டெல்லி அனுப்புகிறார்கள்

குறித்த அந்த நேரத்தில் இரவு ( 11:30 மணிக்கு மேல் 14/08/1947)
லாட். மவுன்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து பெற்று புனித நீர் தெளித்து
திருஞானசம்பந்த பெருமான் அருளிய கோளறு திருப்பதிகம் ஒலிக்க அதில் "ஆன சொல்மாலை ஓதும் அடியார் வானில் அரசுசாள்வார் ஆனை நமதே" என்ற
வரிகள் மிகுந்து ஒலிக்க
குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் நேரு அவர்களிடம் செங்கோல் வழங்கியருளினார்கள்

{நம் தமிழ் மன்னர்கள் செங்கோல் வழுவாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்ற மரபு சங்க காலத்தில் முதற்கொண்டு இருந்து வருகிறது
அதாவது ஒரு மன்னன் நீதி நெறி தவறாது வலையாது

மாநிலங்கா வலனாவான்
    மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு
   தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால்
   கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த்
   தறங்காப்பா னல்லனோ

என்று தெய்வச்சேக்கிழார் பெரியபுராணத்தில் காட்டுவது போல்

அரசருக்கு செங்கோல் வழுவாத தன்மை வளியுருத்தப் படுகிறது இதுவே அன்றைய அவர்களுக்கு செங்கோல் வழங்க காரணமாக ஆயிற்று}

இந்நிலையில் மதிப்பிற்குரிய நம் பாரத பிரதமர் அவர்களின் சீர்மிகு ஆட்சியில் திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்

மக்களவை சபாநாயகர் இருக்கையில் அருகில் நிறுவப்பட உள்ளது

என்று செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்

"வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்."

எல்லாம் எம்பெருமான் ஸ்ரீ தியாகேசர் திருவருள் குருவருள் கருணை

#ஆரூரா_தியாகேசா_போற்றி_போற்றி

🙏🙏🙏🙏

‪@திருவாவடுதுறைஆதீனசமயச்சொற்பொழி‬ ‪@thiruvavaduthuraiadheenam4699‬ ‪@NarendraModi‬

2 years ago | [YT] | 6