திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 33 சிந்தா ஆகுல


🦜பந்தத்தின்று எனைக் காவாய்🦜

சிந்தா ஆகுலம் இல்லோடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப்பெறுவேன்?
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே!


கங்கை நதி ஈன்ற வரத மூர்த்தியே! கந்தப்பெருமானே! திருமுருகப்பெருமானே! கருணைக்கு இருப்பிடமானவரே! மனத்துக்கு வருத்தம் தரும் இல்லற வாழ்க்கையுடன் செல்வம் என்னும் விந்தியமலைக்காடு போன்ற சிக்கல் நிறைந்த சூழலை அடியேன் என்று விட்டு விலகுவேன்?

3 days ago | [YT] | 128