@Agatdeepam

கந்தசஷ்டி விரதம் இருக்கும் முறைகள்

தண்ணீர் விரதம் - தண்ணீர் விரதத்தில் நாள் -

*முழுக்க தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு விரதம் இருப்பது ஒரு முறை.

பால் விரதம் - நிறைய பேர் இருக்கும் விரதமாக

இந்த பால் விரதம் தான் இருக்கிறது. 'இதில் காலையும் மாலையும் பால் குடித்து விரதம் இருப்பார்கள்.

திரவ விரதம், - இந்த திரவ விரதத்தில் பால்

மட்டுமின்றி தண்ணீர், பழச்சாறுகள் உள்ளிட்ட திரவ உணவுகளை எடுத்துக் கொண்டு ஆறு நாட்களும் விரதங்கள் இருப்பார்கள்.

பால் பழ விரதம்.- மேற்கண்ட விரதங்கள் கொஞ்சம்

கடினமாக இருப்பவர்கள் பாலுடன் பழங்களும் சேர்த்து எடுத்துக் கொள்வார்கள்.

மிளகு விரதம் - விரதத்தை மிக மிகக் கடுமையாக

கடைபிடிப்பவர்கள் இந்த மிளகு விரதத்தைத் தான் கடைபிடிப்பார்கள். இதில் முதல் நாள் ஒரே ஒரு மிளகு, அடுத்த நாள் இரண்டு மிளகு என்கிற விகிதத்தால் ஆறாவது நாள் ஆறு மிளகு வரை சாப்பிட்டு, தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டிருப்பார்கள்.

இளநீர் விரதம் -இந்த விரதத்தில் தண்ணீர் மற்றும் இளநீரை மட்டும் ஆறு நாட்கள் குடித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆறு நாள் முடிந்தபிறகு ஏழாவது நாள் குளித்து, பூஜை செய்துவிட்டு பின் வழக்கம்போல சாப்பிடலாம்.
‪@Agatdeepam-v5u‬

2 months ago | [YT] | 73