THIRUVARUL MEENAKSHI VENKATESAN

WE DELIVER A PERFECT SOLLUTION TO ALL PROBLEMS

அனுபவ பராம்பரிய ஜோதிடர். ஜோதிட கலைமாமணி, ஜோதிட கலையரசி, திருவருள்.திருமதி. மீனாட்சி வெங்கடேசன் B.sc.D.Astro. ஈரோடு,
அலுவலகம் ;-
திருமகள் திருமண மண்டபம்,
நசியனூர் ரோடு,
சம்பத் நகர் நால்ரோடு, ஈரோடு- 11

📲 9095521564 , 7397727102...,

ஆன்லைனில் ஜாதகம் பார்க்கப்படும்.
ஜாதகம் இல்லாதவர்களுக்கு வெற்றிலை பிரச்சனம் பார்க்கப்படும்.
ஜோதிடம் சார்ந்த உங்கள் கேள்விகளுக்கு பிரச்சன முறையில் தீர்வுகள் பெற்றுக்கொள்ளலாம்.
உங்களுடைய கருத்துக்களை காமெண்ட் பாக்ஸில் கேளுங்கள்.உங்கள் சந்தேகங்களுக்கும் பதில் தருகிறேன்.

பிரபஞ்சத்திற்கு நன்றிகள் 🙏🙏😊

நவகிரகமும், பஞ்சபூதமும் எனது வழித்துணையாக இருந்து, என்னை நாடிவரும் அனைத்து அன்பர்களுக்கு அருள் மழை பொழியட்டும்...,🙏💐


THIRUVARUL MEENAKSHI VENKATESAN

*🙏நவபாஷாண சிலை போன்றே அஷ்ட லவணத்தால் உருவான அற்புத சிவலிங்கம்!*🌹


ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. ராவணனைக் கொன்ற பாவம் தீர, ஸ்ரீராமன் வழிபட்ட இடம் தலம். அம்பாள் பர்வதவர்த்தினி. ஈசனின் திருநாமம் இராமநாத சுவாமி. இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட, பாவங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காசிக்கு நிகராகப் போற்றப்படும் ராமேஸ்வரம் கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையது. ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதை தனது கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்தார். அக்னியின் சூடு அந்த அக்னி பகவானாலேயே தாங்க முடியாததாக இருந்ததால், அவர் கடலில் மூழ்கி தனது உடல் வெப்பத்தை தணித்துக் கொண்டார் என்றும், அந்த கடல்தான் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அக்னி தீர்த்தம் என்றும் கூறப்படுகிறது.

சீதை அமைத்த மணல் லிங்கம்: இக்கோயிலில் பல லிங்கங்கள் இருந்தாலும், சீதை அமைத்த மணல் லிங்கம், ஸ்படிக லிங்கம், காசி லிங்கம் மற்றும் உப்பு லிங்கம் ஆகிய நான்கும் அற்புத லிங்கங்களாக விளங்குகின்றன. சக்தி பீடங்களில் ஒன்றான பர்வதவர்த்தினி அம்பிகையின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. சீதை அமைத்த மணல் லிங்கம்தான் இந்தக் கோயிலில் மூலவராக இன்றும் உள்ளது.


காசி லிங்கம்: ராவணனை வதம் செய்ததால் உண்டான பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்தார் ஸ்ரீராமர். ஸ்ரீராமரின் ஆணைக்கிணங்க காசியில் இருந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம்தான் இந்த காசிலிங்கம். இன்றும் ராமேஸ்வரம் கோயிலில் இது அமைந்துள்ளது.

ஸ்படிக லிங்கம்: ராமேஸ்வரம் கோயிலில் ஆதிசங்கரரால் கர்ப்ப கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. இதற்கு தினமும் காலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை பாலாபிஷேகம் நடைபெறுகிறது.

அஷ்ட லவணங்களால் அமைக்கப்பட்ட உப்பு லிங்கம்: ‘லவணம்’ என்றால் உப்பு. அஷ்ட லவணம் என்று அழைக்கப்படும் எட்டு விதமான உப்புக்களிலிருந்து சாறு எடுத்து பின்பு அவற்றை உப்பு படிகங்களாக மாற்றி அமைக்கப்பட்டது இந்த லிங்கம். காசிக்கு நிகராகத் திகழும் ராமேஸ்வரம் கோயிலில் சீதை உருவாக்கிய ராமலிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம், அது தவிர அபூர்வமான பாஸ்கர்ராயர் உருவாக்கிய உப்பு லிங்கமும் உள்ளது.

உப்பு லிங்கத்திற்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டாலும் பெரும்பாலான பக்தர்களுக்கு இதைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. ஒரு சமயம், ‘கருவறையில் உள்ள மணல் லிங்கம் மணலால் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி செய்திருந்தால் அபிஷேகம் செய்யும்போது கரைந்து போயிருக்கும்’ என்ற வாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த பாஸ்கர்ராயர் என்ற அம்பாள் உபாசகர், ‘இது மணலால்தான் செய்யப்பட்டது’ என்று வாதம் செய்ய, மற்றவர்கள் அதை நம்ப மறுத்தனர்.

அவர்களின் சந்தேகம் தீர்ப்பதற்கு உப்பு வாங்கி வரச் செய்து அதில் சிவலிங்கம் ஒன்றை செய்து பிரதிஷ்டை செய்தார். அத்துடன் அதற்கு அபிஷேகமும் செய்து காண்பிக்க, அந்த லிங்கம் கரையாமல் அப்படியே இருந்தது. உப்பு என்றால் கடல் உப்பு அல்ல. நவபாஷாணம் என்பது போல், ‘அஷ்ட லவணம்’ என்று அழைக்கப்படும் எட்டு விதமான உப்புக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட உப்புக்கட்டே இந்த லிங்கமாகும். நவபாஷாணம் போன்றே அஷ்ட லவணங்களால் செய்யப்பட்ட சிலைகளும் மருத்துவ குணம் நிறைந்தவை. இன்றும் சுவாமி சன்னிதிக்கு பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. வலிமைமிக்க இந்த லிங்கத்திற்கு 'வஜ்ராயுத லிங்கம்' என்று பெயர். இதனை தரிசிக்க நோய் தீர்ந்து மனம் மற்றும் உடல் பலம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.🌹

சிவனின் திருப்பாதங்களில் மீனாட்சி வெங்கடேசன்..,🙏💐🙇‍♀

9 hours ago | [YT] | 6

THIRUVARUL MEENAKSHI VENKATESAN

*🙏நவபாஷாண சிலை போன்றே அஷ்ட லவணத்தால் உருவான அற்புத சிவலிங்கம்!*🌹


ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. ராவணனைக் கொன்ற பாவம் தீர, ஸ்ரீராமன் வழிபட்ட இடம் தலம். அம்பாள் பர்வதவர்த்தினி. ஈசனின் திருநாமம் இராமநாத சுவாமி. இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட, பாவங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காசிக்கு நிகராகப் போற்றப்படும் ராமேஸ்வரம் கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையது. ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதை தனது கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்தார். அக்னியின் சூடு அந்த அக்னி பகவானாலேயே தாங்க முடியாததாக இருந்ததால், அவர் கடலில் மூழ்கி தனது உடல் வெப்பத்தை தணித்துக் கொண்டார் என்றும், அந்த கடல்தான் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அக்னி தீர்த்தம் என்றும் கூறப்படுகிறது.

சீதை அமைத்த மணல் லிங்கம்: இக்கோயிலில் பல லிங்கங்கள் இருந்தாலும், சீதை அமைத்த மணல் லிங்கம், ஸ்படிக லிங்கம், காசி லிங்கம் மற்றும் உப்பு லிங்கம் ஆகிய நான்கும் அற்புத லிங்கங்களாக விளங்குகின்றன. சக்தி பீடங்களில் ஒன்றான பர்வதவர்த்தினி அம்பிகையின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. சீதை அமைத்த மணல் லிங்கம்தான் இந்தக் கோயிலில் மூலவராக இன்றும் உள்ளது.


காசி லிங்கம்: ராவணனை வதம் செய்ததால் உண்டான பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்தார் ஸ்ரீராமர். ஸ்ரீராமரின் ஆணைக்கிணங்க காசியில் இருந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம்தான் இந்த காசிலிங்கம். இன்றும் ராமேஸ்வரம் கோயிலில் இது அமைந்துள்ளது.

ஸ்படிக லிங்கம்: ராமேஸ்வரம் கோயிலில் ஆதிசங்கரரால் கர்ப்ப கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. இதற்கு தினமும் காலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை பாலாபிஷேகம் நடைபெறுகிறது.

அஷ்ட லவணங்களால் அமைக்கப்பட்ட உப்பு லிங்கம்: ‘லவணம்’ என்றால் உப்பு. அஷ்ட லவணம் என்று அழைக்கப்படும் எட்டு விதமான உப்புக்களிலிருந்து சாறு எடுத்து பின்பு அவற்றை உப்பு படிகங்களாக மாற்றி அமைக்கப்பட்டது இந்த லிங்கம். காசிக்கு நிகராகத் திகழும் ராமேஸ்வரம் கோயிலில் சீதை உருவாக்கிய ராமலிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம், அது தவிர அபூர்வமான பாஸ்கர்ராயர் உருவாக்கிய உப்பு லிங்கமும் உள்ளது.

உப்பு லிங்கத்திற்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டாலும் பெரும்பாலான பக்தர்களுக்கு இதைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. ஒரு சமயம், ‘கருவறையில் உள்ள மணல் லிங்கம் மணலால் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி செய்திருந்தால் அபிஷேகம் செய்யும்போது கரைந்து போயிருக்கும்’ என்ற வாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த பாஸ்கர்ராயர் என்ற அம்பாள் உபாசகர், ‘இது மணலால்தான் செய்யப்பட்டது’ என்று வாதம் செய்ய, மற்றவர்கள் அதை நம்ப மறுத்தனர்.

அவர்களின் சந்தேகம் தீர்ப்பதற்கு உப்பு வாங்கி வரச் செய்து அதில் சிவலிங்கம் ஒன்றை செய்து பிரதிஷ்டை செய்தார். அத்துடன் அதற்கு அபிஷேகமும் செய்து காண்பிக்க, அந்த லிங்கம் கரையாமல் அப்படியே இருந்தது. உப்பு என்றால் கடல் உப்பு அல்ல. நவபாஷாணம் என்பது போல், ‘அஷ்ட லவணம்’ என்று அழைக்கப்படும் எட்டு விதமான உப்புக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட உப்புக்கட்டே இந்த லிங்கமாகும். நவபாஷாணம் போன்றே அஷ்ட லவணங்களால் செய்யப்பட்ட சிலைகளும் மருத்துவ குணம் நிறைந்தவை. இன்றும் சுவாமி சன்னிதிக்கு பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. வலிமைமிக்க இந்த லிங்கத்திற்கு 'வஜ்ராயுத லிங்கம்' என்று பெயர். இதனை தரிசிக்க நோய் தீர்ந்து மனம் மற்றும் உடல் பலம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.🌹

சிவனின் திருப்பாதங்களில் மீனாட்சி வெங்கடேசன்.,🙏🙇‍♀

9 hours ago | [YT] | 5

THIRUVARUL MEENAKSHI VENKATESAN

*🌹நமசிவாய என்பதன் பொருள்...!!!*

☘️அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து.☘️

*நமசிவாய என்பதன் பொருள் அறியாதவர் சைவ சமயியாக இருப்பதில் பயன் இல்லை நமசிவாய என்பதன் பொருள் என்னவென்று நாம் பார்த்தால் பஞ்சாசாரம் ஆகும் .*

*பஞ்சாசாரம் ஐந்து சாரங்கள் , ஐந்து கரு பொருட்கள் பஞ்சசீலம் என்பதாகும்.*

*அதன் முதல் எழுத்தின் பொருள் உயிர்களை கொல்லாதே என்பதே ஆகும்.*

*இரண்டாவது எழுத்து குறிப்பது பிறர் பொருளுக்கு ஆசை கொள்ளாதே மூன்றாவது எழுத்து குறிப்பது முறையற்ற சிற்றின்பம் இருக்கவே கூடாது கணவன் மனைவி உறவு விடுத்து முறையற்ற விதத்தில் இருக்கும் உறவு . நான்காவது மது மயக்கம் இருக்க கூடாது இதில் மது மற்றும் அடங்காது எங்கள் மதியை மயக்கும் அனைத்தும் இதில் அடங்கும் இறுதியான ஒன்று நேர்மையை சொல்லும் .*

*இவ்வாறு அனைத்தையும் சரிவர கடை பிடித்தால் தான் பஞ்சாசர ஓதுவதற்கான நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்*

*நாம் இந்த தகுதிகளை வளர்த்து கொண்டு நமசிவாய மந்திரத்தை ஓதுதல் மிக நல்லது.*

🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. சிவனே சரணாகதி . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷

🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺

🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி மீனாட்சி வெங்கடேசன்...,

1 day ago | [YT] | 5

THIRUVARUL MEENAKSHI VENKATESAN

*🙏அமானுஷ்யம்- 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி துண்டுகளாக வெடிக்கும் லிங்கம்!*🌹

இந்தியாவில் அதிசயம் நடக்கும் பல கோவில்கள் உண்டு. கோவில்களுக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி துண்டுகளாக வெடிக்கும் லிங்கம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

இப்படிப்பட்ட அதிசய நிகழ்வு நடக்கும் கோவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிஜிலி என்ற மலைமீது மகாதேவ் ஆலயம் ஒன்றில் நடக்கிறது. இது மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகும். இக்கோவில் கருவறையில் உள்ள லிங்கத்திற்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்னல் தாக்கும். இந்த நவீன யுகத்தில் இது மிகவும் ஆச்சர்யமான விஷயம் தான்.

இக்கோவிலைப் பற்றி ஒரு புராணக் கதையும் சொல்லப் படுகிறது. குலந்த் எனும் அரக்கன் மலைப் பாம்பு வடிவம் எடுத்து பூமியில் உள்ள அனைவரையும் துன்புறுத்தி வந்தான். இவன் மத்தனா என்ற கிராமத்திற்கு வந்து அங்கு பாயும் வ்யாஸ் நதியைத் தடுத்து நிறுத்தி விட்டான். இதனால் பல உயிர்கள் நீரில் மூழ்கி மாண்டன. இதனால் கோபமடைந்த சிவபெருமான் அரக்கனை வதம் செய்கிறார். உடனே அரக்கன் பிஜிலி மலையாக மாறியதாகவும், அதன் மீது மகாதேவ் கோவில் கட்டப்பட்டது என்றும் தெரிகிறது.

பிறகு சிவபெருமான் இந்திரனை அழைத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கோவில் லிங்கத்தை மின்னல் காக்குமாறு கட்டளையிட்டார். மின்னலின் தாக்குதலால் லிங்கம் மட்டும் தான் உடையும் கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படாது!

இக்கோவில் புரோகிதர்கள் உடைந்த லிங்கத் துண்டுகளை சேகரித்து அதோடு கடலைமாவு, பருப்பு மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணை இவற்றை பசை மாதிரி ஆக்கி உடைந்த லிங்கத்தை ஒன்று சேர்த்து பூசுகின்றார்கள். இது காய்ந்ததும் பழைய லிங்கமாக மாறிவிடும். மின்னல் தாக்கியதும் கோவிலை கொஞ்ச நாட்கள் திறக்க மாட்டார்கள்.

லிங்கம் நன்றாகக் காய்ந்ததும் பழையபடி அபிஷேகம், ஆராதனை செய்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் லிங்கம் உடைந்த சுவடே தெரியாது. 🌹

ஜோதிடர் மீனாட்சி வெங்கடேசன் ஈரோடு..,
📲-7708791654.,

3 days ago | [YT] | 3

THIRUVARUL MEENAKSHI VENKATESAN

அதிசயம்..!!
பிரசாதமாக வரும் நெய், வெண்ணெயாக மாறும் அதிசயம்.
நெய் அபிஷேகம் செய்தால் வெண்ணையாக மாற்றி தரும் லிங்கம்!!!
பெங்களூரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் சிவகங்கா என்கிற கிராமம்.
அங்கு சிவபெருமான் மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க ரூபத்தில் குடி கொண்டுள்ளார்.
ஐந்து அடி உயர, நல்ல பருமனான லிங்கம்.சுவாமியின் மிக அருகிலிருந்து தரிசனம் செய்யலாம்.
கவிகங்காதீஸ்வரர் என்று இறைவன் பெயர்.
ஆச்சரியம் என்னவென்றால், அந்த கோவிலில் நெய் அபிஷேகத்துக்கு விற்கிறார்கள்.
அதை வாங்கி, அபிஷேகத்தின் போது பூசாரியிடம் கொடுத்தால், அவர் மந்திரம் சொல்லி அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக திருப்பி தருவார்.
நெய்...அபிஷேகம் செய்தால் வெண்ணை ஆக மாறும் அதிசய சிவன் கோவில்.

3 days ago | [YT] | 6

THIRUVARUL MEENAKSHI VENKATESAN

கடன் தீர்க்கும் சக்தி வாய்ந்த தேவாரபதிகம் :

1. பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
கூரி தாய அறிவுகை கூடிடும்
சீரி யார்பயில் சேறையுடண செற்நெறி
நாரி யாகன்றன் நாம நவிலவே.

2. என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.

3. பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங் கின்பம் வந் தெய்திடும்
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.

4. மாடு தேடி மயங்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே

5. எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

6. தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

7. வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
அத்தர் தாமுள ரஞ்சுவ தென்னுக்கே.

8. குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே.

9. பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
விழவிடா விடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே.

10. பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.

4 days ago | [YT] | 6

THIRUVARUL MEENAKSHI VENKATESAN

🌹நாகலிங்கப் பூ ஏன் இனிய சிவனுக்கு உகந்தது என்று கூறுகிறார்கள் தெரியுமா?*


சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் பொற் பாதங்கள் சரணம்🔥

வில்வம்’ எப்படி சிவனுக்கு உகந்ததோ அதேபோல நாகலிங்கப்பூவும் சிவனுக்கு மிகவும் பிடித்த பூவாகும். இந்த அதிசய மலர் பார்ப்பதற்கு சிவலிங்கத்தின் மீது ஐந்துதலை நாகம் படம் எடுத்து குடை பிடிப்பது போல அமைந்திருக்கும். இதன் காய்கள் பார்ப்பதற்கு பந்துகள் போல இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.

நாகலிங்கப்பூவை வைத்து சிவனுக்கு பூஜை செய்யும் போது பல பிரதோஷங்கள் பூஜை செய்த பலன் கிடைக்குமாம். 21 நாகலிங்கப்பூக்களை பூஜைக்கு கொடுத்துவிட்டு 21 பேருக்கு அன்னதானம் செய்தால் முழுபலனும் கிடைக்கும். இந்த பூ செடியில் பூப்பதில்லை அதற்கு மாறாக வேர்ப்பகுதிக்கு மேலேயும், கிளைப்பகுதிக்கு கீழேயும் தானாக ஒரு கிளையை உருவாக்கி அதில் பூக்கிறது. இந்த பூ கடவுளுக்காக படைக்கப்பட்டது அல்லாமல், இந்த பூவே கடவுளாகும். நாகலிங்க பூவிற்கு 21 மகரிஷிகள் தங்கள் தவ ஆற்றலை அளித்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

நாகலிங்கப் பூவை தொட வேண்டும் என்றால் சிவபஞ்சாக்ஷரத்தை 1001 முறை சொன்ன பிறகே தொட வேண்டும். ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் 1000 மலர்கள் வரை பூக்குமாம். நாகலிங்கப்பூவை சிவனுக்கு சூடிய பிறகும் அது வாடினால் நாம் குளித்துவிட்டு தான் அந்த வாடிய மலரையும் தொட வேண்டும். என்னதான் வாடியிருந்தாலும், அந்த மலருக்கான சக்தி அதில் அப்படியே இருக்குமாம். காய்ந்த நாகலிங்கப் பூவை ஓடும் ஆற்றில் விடவேண்டும். இந்த மரம் தமிழ்நாட்டில் சில கோவில்களிலும், மேற்கு தொடர்ச்சிமலையிலும் காணப்படுகிறது

சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது.நாக லிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.நீண்ட கால் நோய் தீர சிவமந்திரத்தையும், தேவாரப் பாடல்களையும் பாடி வழிபட வேண்டும்.

நாகலிங்கப்பூவை நுகரும்போது நுரையீரல் தொற்று குணமாகும். இயற்கையாகவே இந்த பூவிற்கு வியர்வை துர்நாற்றத்தை போக்கக்கூடிய சக்தி உண்டு. இந்த பூவிலிருந்து சாறு எடுத்து வாசனை திரவியங்கள் தயாரிக்கிறார்கள். ஆண் மலடு, பெண் மலடு இரண்டையுமே நீங்க கூடிய சக்தி இந்த பூவிற்கு உண்டு. வெள்ளைப்படுதல், அதிக ரத்தப்போக்கு, PCOD ஆகியவை குணமாகும்.

காற்றுமாசு அதிகமாக இருக்கும் இடத்தில் நாகலிங்க மர இலைகள் உதிர்ந்து விடுமாம். அதை வைத்து காற்றிலுள்ள மாசை அறிந்து கொள்ளலாம். நாகலிங்க மலர் செல்வ செழிப்பை தரும், கெட்ட சக்திகளை நீக்கும் என்றும் நம்பப்படுகிறது.

பெரும்பாலும் நாகலிங்க மரத்தை கோவில்களிலேயே அதிகம் காணலாம். இதன் இலைகள் தோல்நோயை குணப்படுத்த பயன்படுகிறது. இந்த மரத்துடைய பட்டைகள் காய்ச்சலை குணப்படுத்த பயன்படுகிறது. இந்த பூக்களிலிருந்து எடுக்கப்படும் தைலம் வயிற்றுக்கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது. இந்த நாகலிங்க மரத்திலும், பூவிலும் நிறைய மருத்துவ குணம் இருப்பதால், இதை ஒரு அதிசய மரமாகவே கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

🍁🍁🍁


**சிவாய நம🙇 சிவமே தவம் .சிவனே சரணாகதி*

*அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி*

🌹சித்தமெல்லாம்🌹
🌹சிவ மயமே🌹

4 days ago | [YT] | 4

THIRUVARUL MEENAKSHI VENKATESAN

*சுமங்கலிகளின்_சக்தி_குங்குமத்தில்_உள்ளது* !!!

குங்குமம், லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது.

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம், சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.


3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை, தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை,நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து, இன்னும் மங்களகரமாக இருக்க, உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்.

5 days ago | [YT] | 4

THIRUVARUL MEENAKSHI VENKATESAN

கடன் பிரச்சனையில்
இருந்து மீண்டு வர!

ஒருவருடைய சுய ஜாதகத்தில் கன்னி ராசியும், ஜென்ம லக்கினத்தில் இருந்து 6ம் வீடும் பாதிக்கபட்டு இருந்தால் ஜாதகர் கடன் வாங்கும் நிலை அமைந்துவிடும், மேலும் ஜாதகரின் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை புத்திகள் சாதகமாக இல்லை என்றால் ஜாதகர்,, தனது உழைப்பு மற்றும் வருமானம் அனைத்தும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே கழிக்க நேரிடும்.

6 days ago | [YT] | 4

THIRUVARUL MEENAKSHI VENKATESAN

*🙏🌹வைகாசி விசாக மகிமைகள்... பராசர முனிவரின் மகன்களுக்கு அருளிய செந்தூர் முருகன்*🌺

தினத்தந்தி

திருச்செந்தூர் முருகன் கோவில் 4 யுகங்களிலும் நடந்த பல்வேறு சிறப்பான நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டதாகும். நான்கு யுகங்களில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்துள்ளன. அதிலும் முனிவர்கள் கொடுத்த சாபங்களும் அதில் இருந்து விமோசனம் பெற்ற புராண வரலாறுகளும் இன்றும் பதிவுகளாக உள்ளன. அதில் துவாபர யுகத்தில் நடந்த ஒரு புராண நிகழ்ச்சி இன்றும் திருச்செந்தூர் ஆலயத்தில் வைகாசி மாதத்தில் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.

பராசரரின் மகன்கள்

வசிஷ்ட முனிவர் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். மிகப்பெரிய சக்தி வாய்ந்த முனிவர். இவரது பேரன் பராசர முனிவர். இவரும் தாத்தாவுக்கு நிகரான ஆற்றல்கள் கொண்டவர். மகரிஷி என்று போற்றப்பட்ட இவர் ஏராளமான இந்து புராண நூல்களின் தொடக்கத்துக்கு வித்திட்டவர். விஷ்ணு புராணத்தை முதல் முதலில் தொகுத்து எழுதியவர் இவர்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. இவரது மகன் வியாசர். இவர் பராசர முனிவருக்கும் சத்தியவதி என்ற பெண்ணுக்கும் மகனாக பிறந்தவர் ஆவார். பிற்காலத்தில் தந்தை பராசர முனிவரின் குறிப்புகளை வைத்து வியாசர் வேதங்களில் சிறப்பு பெற்றார் என்பார்கள். இதன் காரணமாகவே வேத வியாசர் என்ற சிறப்பு பெயர் அவருக்கு ஏற்பட்டது.

துவாபர யுகத்தில் வாழ்ந்த முனிவர்களில் முதன்மை முனிவராக திகழ்ந்த பராசர முனிவர் ஜோதிட நூல்கள் எழுதுவதிலும் புகழ் பெற்று இருந்தார். இவரது ஜோதிட குறிப்புகளை இன்றும் ஜோதிடர்கள் பின்பற்றுகிறார்கள்.

எச்சரிக்கை

இத்தகைய சிறப்புடைய பராசர முனிவருக்கு தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி என்று மேலும் 6 மகன்கள் இருந்தனர். இந்த 6 மகன்களும் மிக மிக சுட்டித்தனம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் குறும்பு செய்வது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது.

ஒருதடவை அவர்கள் 6 பேரும் குளம் ஒன்றில் இறங்கி நீராடினார்கள். அந்த குளத்தில் குளிப்பது அவர்களுக்கு சுகமாக இருந்ததால் பல்வேறு வடிவம் எடுத்து விளையாடினார்கள். இதன் காரணமாக அந்த குளத்தின் தண்ணீர் கடுமையாக மாசுப்பட்டது. அந்த குளத்தில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் உள்பட நீர்வாழ் உயிரினங்கள் மிகவும் அவதிக்குள்ளாகின. சில மீன்கள் அசுத்தமான தண்ணீர் காரணமாக செத்தும் விழுந்தன. என்றாலும் பராசர முனிவரின் 6 மகன்களும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அந்த சமயத்தில் பராசர முனிவர் அந்த குளத்தில் நீராடுவதற்காக வந்து கொண்டு இருந்தார். தனது 6 மகன்களும் அந்த குளத்தை பாழ்ப்படுத்தி விட்டதை நேரில் பார்த்து கடும் கோபம் அடைந்தார். உடனே தனது 6 மகன்களையும் எச்சரித்தார். "இந்த குளத்தின் நீரானது கங்கை நீருக்கு சமமாகும். சிவபெருமானின் தலையில் இருந்து உற்பத்தியாகி நாட்டு மக்களுக்கு பாவங்களை போக்கும் சக்தி கொண்ட அந்த புனித நீரை கெட்டுப்போகும் வகையில் செயல்படுவது மிகப்பெரிய பாவம் ஆகும். எனவே இனி இந்த குளத்தை அசுத்தப்படுத்தாதீர்கள். குளித்தது போதும். வெளியே வாருங்கள்" என்று மகன்களிடம் பராசர முனிவர் கூறினார்.

சாபம் கொடுத்த முனிவர்

ஆனால் பராசர முனிவரின் 6 மகன்களும் குளிப்பதில் இருந்த சுகம் காரணமாக தந்தையின் சொல்லை செவி கொடுத்து கேட்கவில்லை. தந்தை சொல்லை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து குளத்தில் ஆட்டம் போட்டபடி இருந்தனர். அவர்கள் போட்ட ஆட்டத்தில் மேலும் பல மீன்கள் செத்து மிதந்தன. இதை கண்டதும் பராசர முனிவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். மீன்களின் அழிவுக்கு காரணமான தனது 6 மகன்களுக்கும் அவர் சாபம் கொடுத்தார்.

'இந்த குளத்தில் உள்ள மீன்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு வேதனை அடைந்ததோ அதை உணரும் வகையில் 6 பேரும் மீனாக மாறுங்கள்' என்று கோபத்தில் அவர் சாபமிட்டார். அடுத்த நிமிடம் அவரது 6 மகன்களும் மீன்களாக மாறினார்கள். திடீரென தங்களது உருவம் மாறிப் போனதை உணர்ந்த 6 பேரும் மிகவும் வருந்தினார்கள். தந்தையின் சொல்லை கேட்காமல் விளையாடியதால் ஏற்பட்ட விபரீதத்தை அறிந்து தங்கள் தவறை உணர்ந்தனர். தங்கள் தந்தையிடம் அவர்கள் 6 பேரும் மன்றாடினார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். அதோடு தாங்கள் மீனாக மாறியதற்கு காரணமான சாபத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழியையும் சொல்லுமாறு கெஞ்சி கேட்டனர்.

இதனால் அவர்கள் 6 பேர் மீதும் பராசர முனிவருக்கு இரக்கம் ஏற்பட்டது. அவர் தனது மகன்களிடம், "நீங்கள் தொடர்ந்து இந்த குளத்திலேயே வாழ்ந்து வாருங்கள். பார்வதிதேவியின் அருளால் குறிப்பிட்ட காலத்தில் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து 6 பேரும் அந்த நீர்நிலையிலேயே வாழ்ந்து வந்தனர். எப்படியும் தங்களுக்கு பார்வதி தேவியின் கருணை பார்வை கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

சாப விமோசனம்

இதற்கிடையே சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிப்பட்ட 6 தீப்பொறிகள் மூலம் உருவான கந்த பெருமானை பார்வதிதேவி வளர்த்து வந்தார. ஒருநாள் பார்வதி தேவி சிவலோகத்தில் முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஞானப்பாலில் இருந்து ஒரு துளி சிதறியது. அந்த துளி அளவு பால் பூலோகத்தில் பராசர முனிவரின் 6 மகன்களும் 6 மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது.

அந்த துளி அளவு பாலை 6 மீன்களும் அருந்தின. அடுத்த வினாடி 6 மீன்களும் சாப விமோசனம் பெற்றன. அந்த மீன்கள் மீண்டும் பராசர முனிவரின் மகன்களாக மாறினார்கள். அதோடு பார்வதி தேவியின் ஞானப்பாலை அருந்திய காரணத்தால் அந்த 6 பேருக்கும் முனிவர்களுக்குரிய ஆற்றல் கிடைத்தது. 6 பேரும் முனிவர்களாக வெளியில் வந்தனர். தங்களுக்கு சாப விமோசனம் வழங்கிய சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் நன்றி செலுத்த முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சிறப்பு ஹோமங்கள் வளர்த்து சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் பூஜைகள் செய்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. "நீங்கள் 6 பேரும் திருச்செந்தூர் தலத்துக்கு சென்று உரியமுறையில் வழிபாடுகள் செய்து தவம் செய்யுங்கள். உங்கள் தவத்தை மேம்படுத்தும் வகையில் திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு அருள்புரிவார்" என்று அசரீரி கேட்டது.

திருச்செந்தூரில் சேவை

இதையடுத்து 6 பேரும் திருச்செந்தூர் சென்றனர். அங்கு முருகனை தியானித்து நீண்ட தவம் இருந்தனர். அவர்களது தவத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்த முருகப்பெருமான் வைகாசி விசாக தினத்தன்று அந்த 6 பேருக்கும் நேரில் காட்சி கொடுத்தார்.

அதோடு திருச்செந்தூர் தலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு உதவும்படி அருளாசி புரிந்தார். அதை ஏற்று அந்த 6 பேரும் திருச்செந்தூரில் சேவை செய்து வருகிறார்கள். இதை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா திருச்செந்தூரில் 10 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவின் 10-வது நாள் அதாவது வைகாசி விசாகம் தினத்தன்று முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தி காட்டப்படுகிறது. துவாபர யுகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று பல ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் திருச்செந்தூரில் நடத்திக் காட்டப்படுவது தனித்துவம் கொண்டதாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான இந்த நிகழ்ச்சி, திருச்செந்தூர் தலத்தில் வருகிற 9-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடத்திக் காட்டப்பட உள்ளது. அன்று திருச்செந்தூர் கோவில் மண்டபத்தில் நீர்த்தொட்டி அமைக்கப்படும். அந்த நீர்த் தொட்டியில் 6 மீன் பொம்மைகளை மிதக்க விடுவார்கள்.

அங்கு ஜெயந்திநாதர் எழுந்தருள்வார். திருச்செந்தூர் முருகனின் உற்சவர்களில் ஒருவரான ஜெயந்திநாதர் பார்வதிதேவி வழங்கிய ஞானப்பாலை குடிக்கும்போது ஒரு துளி சிந்துவது போல காட்சி அமைக்கப்படும். அந்த ஒருதுளி பாலை 6 மீன்களும் குடிப்பது போன்றும் பக்தர்களுக்கு காண்பிக்கப்படும். ஞானப்பாலை அருந்தும் மீன்கள் 6 முனிவர்களாக மாறுவதும் நடத்திக் காட்டப்படும்.

அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

பாவங்கள் விலகும்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த புராண நிகழ்வை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள். பராசர முனிவர் மகன்கள் சாப விமோசனம் பெறும் நிகழ்ச்சியை திருச்செந்தூர் தலத்தில் நேரில் கண்டுகளித்து முருகனை வழிபட்டால் நம் வாழ்வில் ஏற்பட்ட முன்வினை பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி முன்வினை பாவங்களால் உருவாகும் துன்பங்களை முருகன் நிவர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

சாபங்கள் காரணமாக எத்தனையோ பேர் தங்களையும் அறியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு சாபம் இருக்கிறது என்பதைக்கூட உணராதவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் நம்பிக்கையோடு திருச்செந்தூர் தலத்துக்கு சென்று இந்த புராண நிகழ்வை நேரில் கண்டால் அவர்களின் நிச்சயம் ஆத்மா சுத்தப்படும் என்பது ஐதீகம்.

இந்த நிகழ்ச்சியை பார்க்க செல்பவர்கள் அன்றைய தினம் முருகனை மனதில் நிறுத்தி விரதம் இருப்பது மிக மிக நல்லது. திருச்செந்தூர் முருகனை நம்பி விரதம் இருந்து வைகாசி விசாக நிகழ்ச்சிகளை கண்டுகளித்தால் நிச்சயம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். வைகாசி விசாகம் விரதம் இருக்கும் நாளில் திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் மற்றும் திருச்செந்தூர் தலம் மீது பாடப்பட்டு இருக்கும் பாடல்களை மன முருகி பாடினால் சாபங்கள் விலகி குலம் தழைக்கும். சகல செல்வங்களும் தேடி வரும் என்பது நம்பிக்கை.

வாய்ப்பு இருப்பவர்கள் அன்றைய தினம் முருகப் பெருமானுக்கு சிவப்பு அரளி அல்லது செம்பருத்தி மலர்களை வழங்கி வழிபடலாம். வீட்டில் முருகன் படத்தின் முன்பு பாசிப் பருப்பு பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு.🌹

1 week ago | [YT] | 2