Theneer Neram Deviyin Kadhaigal

தேநீர் நேரமும் தேவியின் கதைகளும்!

Audio Books, Audio novels, Podcast and shorts.

Your comments and feedbacks are welcome.




Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/1pedPAi54Fo
தேவி மனோகரனின், "சாதகப் பட்சிகள்!"

உங்கள் இடைவெளி நேரங்களையும் வேலைக்கு இடையேயான நேரங்களையும் இனிதாக்க, தேநீர் நேரத்தில் கூடுதல் சுவையூட்டும் இது நம்ம தேநீர் நேரம் தேவியின் கதைகள் சேனல். எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும், இஷ்டம்போல் கதைகள் உங்கள் செவிகளில் இனிமை சேர்க்க கேளுங்கள் தேநீர் நேரம் தேவியின் கதைகள்!

கதையின் தலைப்பு. சாதகப் பட்சிகள்

கதை வெளியான ஆண்டு ஜூன் 2022.

“காதல் ஓர் அடக்கப்படாத சக்தி. அதனை அடக்க நினைக்கையில் அழித்து விடுகிறது, அதை சிறைப்பிடிக்க நினைக்கையில், அடிமைப்படுத்தி விடுகிறது, புரிந்துக் கொள்ள நினைக்கையில், புரியாத நிலைக்கு தள்ளி விடுகிறது" என்கிறார் பாவ்லோ கொய்லோ.

மதுமிதாவுக்கு ராகவன் மீதான காதல் அப்படித்தான். அடக்கி, அடிமை செய்து, சிறைப்பட்டு என்று அவள் காதல் எப்படி என்று ஒரு வகைப்படுத்த முடியாது.
காயப்பட்டு, காயப்படுத்தி கற்றுக் கொண்ட காதல் அவளுடையது!

காதலிக்க நேரமில்லை என்று புலம்பும் ஒரு மயக்க மருத்துவனின் மயக்கும் காதல் கதை, சாதகப் பட்சிகள்.

கேட்டு மகிழுங்கள்.

இது தேநீர் நேரம் தேவியின் கதைகள், நான் உங்கள் RJ தேவி

2 days ago | [YT] | 53

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/6VQYcrxxxpA
தேவி மனோகரனின், "முதற்கனவே"

முதற்கனவு எல்லோருக்கும் நினைவில் நிற்குமா? சிலருக்கு இருக்கலாம். சிலருக்கு இல்லாமல் போகலாம்.

ஆனால், முதல் காதல் பிடித்தாலும், பிடிக்கா விட்டாலும், பிரிந்தாலும், முதல் என்பதாலேயே முதலாய் நிற்கும்.

சிலருக்கு அது இனிமையான பயணமாகத் தொடரும். சிலருக்கு அது எச்சரிக்கையாக, ஏமாற்றமாக மாறிப் போயிருக்கும். எப்படியாகினும், முதல் என்பது அனுபவத்தின் ஆதியாகி விடுகிறது.

இது வினீத் வாசுதேவனின் முதற்கனவு, முதற்காதல்.
அமலாவின் மேலான அவன் நேசம், கனவென கலையும் என நினைத்த வினீத் வாசுதேவனின் காதலை கேட்டு மகிழுங்கள்.
கதை கேட்டு மகிழுங்கள் ❤


RJ மதி ராஜின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

2 weeks ago | [YT] | 51

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/NnOnJA8Rhs8
தேவி மனோகரனின், "சாதகப் பட்சிகள்!"

உங்கள் இடைவெளி நேரங்களையும் வேலைக்கு இடையேயான நேரங்களையும் இனிதாக்க, தேநீர் நேரத்தில் கூடுதல் சுவையூட்டும் இது நம்ம தேநீர் நேரம் தேவியின் கதைகள் சேனல். எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும், இஷ்டம்போல் கதைகள் உங்கள் செவிகளில் இனிமை சேர்க்க கேளுங்கள் தேநீர் நேரம் தேவியின் கதைகள்!

கதையின் தலைப்பு. சாதகப் பட்சிகள்

கதை வெளியான ஆண்டு ஜூன் 2022.

“காதல் ஓர் அடக்கப்படாத சக்தி. அதனை அடக்க நினைக்கையில் அழித்து விடுகிறது, அதை சிறைப்பிடிக்க நினைக்கையில், அடிமைப்படுத்தி விடுகிறது, புரிந்துக் கொள்ள நினைக்கையில், புரியாத நிலைக்கு தள்ளி விடுகிறது" என்கிறார் பாவ்லோ கொய்லோ.

மதுமிதாவுக்கு ராகவன் மீதான காதல் அப்படித்தான். அடக்கி, அடிமை செய்து, சிறைப்பட்டு என்று அவள் காதல் எப்படி என்று ஒரு வகைப்படுத்த முடியாது.
காயப்பட்டு, காயப்படுத்தி கற்றுக் கொண்ட காதல் அவளுடையது!

காதலிக்க நேரமில்லை என்று புலம்பும் ஒரு மயக்க மருத்துவனின் மயக்கும் காதல் கதை, சாதகப் பட்சிகள்.

கேட்டு மகிழுங்கள்.

இது தேநீர் நேரம் தேவியின் கதைகள், நான் உங்கள் RJ தேவி



அன்பின் வாசகர்களுக்கு,

எல்லா கதைகளுக்கு பின்னாலும் நிச்சயம் ஒரு கதையிருக்கும். ஆனால், சாதகப் பட்சிகள் கதையின் பின்னே பல கதைகள் உண்டு. உதய ராகம் தொடங்கி, பிரியங்கள் புதிது வரை கேட்டால் மட்டுமே இந்தக் கதையை உங்களால் உள்வாங்கி ரசிக்க முடியும். இதை தனிக் கதையாக கேட்டாலும், சுவாரசியம் குறையாது என்றாலும், முந்தைய கதைகளை கேட்டு விட்டு, இக்கதையை கேட்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தொகுப்பிற்கு மித்ர விலாசம் என்று பெயர். மித்ர விலாசம் தொகுப்பில் வரும் கதைகளின் பெயர்கள். வரிசைப்படி சொல்கிறேன். அதன்படி கதைகளை கேட்டு மகிழுங்கள்.

உதயராகம் உதய் ராகவியின் கதை.https://youtu.be/moX8zj_seoo
மந்தமாருதன் வீரசிவம் பனிமலர் கதை.https://youtu.be/7GGk47w6g2I
பரிபூரணி சுஹாசினி விக்ரம் தேசாய் கதை https://youtu.be/STuWb2ZcXHA
பிரியங்கள் புதிது செல்வா சக்தியின் கதை https://youtu.be/IWixWMqUv-M
இறுதியாக சாதகப் பட்சிகள் ராகவன் மதுமிதாவின் கதை. https://youtu.be/NnOnJA8Rhs8
இந்தக் கதையின் முடிவுரையில் நிரஞ்சன் நந்தனா இருவரும் வருவார்கள். அவர்களின் கதை, “இனியொரு பிரிவேது”.

இப்போ சாதகப் பட்சிகள் கதைக்கு வருவோம்.
ஒரு மயக்க மருத்துவனின் வேலையை, வாழ்க்கையை சரியாக புரிந்து அதை எழுத்தில் வடிக்க எனக்கு உதவிய மருத்துவர், எழுத்தாளர் அகிலாண்ட பாரதி அவர்களுக்கு எனது அன்பும், நன்றியும்.

சாதகப் பட்சிகள் கதை நிறைவு பெற்றதும் அதைத் தொடர்ந்து, நண்பர்கள் அனைவருக்குமான முடிவுரை “மித்ரவிலாசம்” என்ற பெயரில் சில அத்தியாயங்கள் வரும். நண்பர்களின் கதைகளை கேட்டிருந்தால் அந்தப் பகுதிகளை நிச்சயம் உங்களால் ரசிக்க முடியும்.

நாவல் எழுதுவதும், வாசிப்பதும் மாதக்கணக்கில் ஓர் அழியா பெருங்கனவை காண்பது போல என்பார்கள்.
“மித்ரவிலாசம்” எனக்கு அப்படி ஓர் அனுபவம். இரண்டு வருடங்கள் இந்தக் கதைகளும், கதாபாத்திரங்களும் என்னோடு கலந்திருந்தனர். எழுதிய எனக்கு சிறு புன்னகையை, பெரும் நிறைவை இக்கதைகள் நல்கின.

இதை கேட்கும் உங்களுக்கும் அப்படி ஓர் அழகிய அனுபவமாக இது இருக்க வேண்டும் என்று ஆவல் கொள்கிறேன்.

நம்மோடு பிறக்கா விட்டாலும் உறவாக இல்லாவிட்டாலும், அனுதினமும் நம்முடன் பிணைந்திருக்கும் நண்பர்களுக்கு இக்கதை சமர்ப்பணம்!

வாசகத் தோழமைகள் உங்களால் மட்டுமே இக்கதைகள் சாத்தியப்பட்டது. அனைவருக்கும் அன்பும், நன்றியும்.

கதை கேட்டு மகிழுங்கள்! உங்கள் கருத்துகளை மறவாமல் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.

நன்றி.

பிரியங்களுடன்,
தேவி மனோகரன்.

RJ தேவியின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

1 month ago | [YT] | 76

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/STuWb2ZcXHA
தேவி மனோகரனின், "பரிபூரணி!"
If I know what love is, it is because of you" Hermann Hesse.
ஏதோ ஒரு காதல், ஏதோ ஒரு நட்பு, நம் வாழ்க்கையை புரட்டி போடும்!
ஷரவன், இவன் காதலின் பரிசு. ஷ்ரவனையும், விக்ரமையும் முன் பின் பார்க்காத சுஹாசினி திருமண மேடையில் தன் திருமணத்தை நிறுத்துகிறாள்.
சுஹாசினியின் வாழ்வை ஒரு காதல் மாற்றுகிறது, எங்கோ இருக்கும் விக்ரம் தேசாயின் வாழ்வோடு இணைக்கிறது.
பரிபூரணமாக ஒரு காதல்!
ஒரு வாழ்க்கை!

கதை கேட்டு மகிழுங்கள்!
தேவி மனோகரன்.

1 month ago | [YT] | 90

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/2QqEcbdGLDw
தேவி மனோகரனின், "நற்காதல் நெய்திடவா!" RJ கிருத்திகா ராஜின் குரலில்...

ஒருவரை முதல் முறை, முதல் பார்வையில், முதல் சந்திப்பில் பிடிக்காமல் போகுமா? போகும்!
அப்படி பிடிக்காமல் போனவரை மீண்டும் பிடிக்குமா?
பிடிக்கும்? மிகவும் பிடிக்கும்!

அதுவும் எப்படி? எல்லாமுமாக பிடிக்கும்!

வேதாவுக்கு வெற்றியை அப்படித்தான் பிடித்தது. முதலில் அவன் கொடுத்த புத்தகம் பிடித்தது, அடுத்து அவனை பிடித்தது! புத்தகம் போல அவனை கையில் எடுத்து பொத்தி வைத்து காலமெல்லாம் காதலுடன் உடனிருக்க பிடித்தது.
ஆனால், அவனை முதலில் பிடிக்கவில்லைதானே? விசித்திரம்தான் இல்லையா?

ஆம், காதலில் எல்லாமே விசித்திரம்தானே?
நற்காதல் நெய்திடவா அப்படியான ஒரு கதை!
கேட்டு மகிழுங்கள்.

2 months ago | [YT] | 81

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/1zqm5w20CaU
தேவி மனோகரனின், "காதலதிகாரம் இரண்டு!"

காதல் எப்படி இருக்க வேண்டும்?
எப்படியிருந்தாலும் காதல் என்றென்றும் இருக்க வேண்டும்!
இதுதான் காதலின் அவா!
நிரந்தரமாய் ஒரு நேசம்.

ஆனால், நேசம் நித்தம் வளரும், சில நேரம் குறையும், குறுகும். இருந்தும் நேசம் நீண்டிருக்கவே நேசம் கொண்ட மனம் விரும்பும்.
நேசம் வளர, நேசித்த மனங்கள் வளர வேண்டும். குறைகள் களையப்பட்டு, ஏற்கப்பட்டு நிறைகள் நிரப்பப்பட வேண்டும்.

காதல் கை கூடி, கணவனோடு நேசம் வளர்த்து இரண்டு குழந்தைகளின் தாயான வானதிக்கு வாழ்க்கையில் வெற்றிடமிருக்கிறது. அது அவள் கணவன் இளங்கோவின் வெற்றிகளால் நிரம்பிடுமா? வானதியின் வெற்றிடம் இளங்கோவிடம் பிரதிபலிக்க, அவர்கள் நேசத்தின் இரண்டாம் அத்தியாயத்தை யார் தொடங்குவார்கள்?

சுயத்தின் இயல்பை அப்படியே ஏற்று, அதனை இன்னும் சுதந்திரமாய் வளர்த்திடும் நேசங்கள் காலங்கள் கடக்கும், காதலால் நிறையும்!

அப்படியொரு காதல் இளங்கோ வானதியின் காதல், மீண்டுமொரு மறுமலர்ச்சியாய் உங்கள் முகத்தில் மலர்ச்சியை நிறைக்கும் காதலதிகாரம் இரண்டு!

கதை கேட்டு மகிழுங்கள் ❤


RJ கிருத்திகா ராஜின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

3 months ago (edited) | [YT] | 124

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/moX8zj_seoo
தேவி மனோகரனின். "உதய ராகம்" RJ தேவியின் குரலில்...
நாம் போகிற போக்கில் வாழ்க்கையை வேடிக்கை பார்த்து விட முடியுமா? என்று
நா. முத்துக்குமார் சொல்வது போல, நாம் வாழ்க்கையை தள்ளி இருந்து வேடிக்கைப் பார்க்கையில் நம் முடிவுகள் மாறுமோ?

பிரிவை சந்தித்த உதய் - ராகவி எப்படி தங்கள் வாழ்வில் சேரப் போகிறார்கள்?
யாரோ ஒருவர் எங்கிருந்தோ வந்து எதையாவது நம் வாழ்வில் செய்து விடுவார்கள்.
ரோஜாவின் வாழ்க்கையில் வரும் ராஜாவும் அப்படியே!!!

இதமாய் இனிதாய் இதோ உதயராகம் உங்கள் செவிகளில் இனிமை சேர்க்க வருகிறது!

அன்புடன்,
தேவி மனோகரன்.

3 months ago | [YT] | 47

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/IWixWMqUv-M
தேவி மனோகரனின். "பிரியங்கள் புதிது" RJ சீதா பாரதியின் குரலில்...
பிரிவின் காரணம் சில நேரம் புரியாதிருக்கலாம்.
புரிந்ததால் இருக்கலாம்.
புரிந்தும், புரியாமலும் பிரிந்த இருவருக்கும் பிரியம் புதிதாய் பூத்தால்?
பிரியங்கள் புதிது, புதிதாய் ஒரு புரிதலை, தெரிதலை,
பிரியத்தை நல்கும்!!!

அன்புடன்,
தேவி மனோகரன்.

4 months ago | [YT] | 29

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/AX13CLO70kE
தேவி மனோகரனின், "மௌன மனங்கள்" RJ தேவியின் குரலில்...
தேவி மனோகரனின், "மெளன மனங்கள்" திருமணத்திற்கு பின்னான காதலையும், புரிதலையும் பற்றி பேசும் கதை.

RJ தேவியின் குரலில்.. முழுக் கதையும் இப்பொழுது கேட்டு மகிழுங்கள்.

நன்றி
தேவி மனோகரன்.

4 months ago | [YT] | 38

Theneer Neram Deviyin Kadhaigal

https://youtu.be/IWixWMqUv-M
தேவி மனோகரனின். "பிரியங்கள் புதிது" RJ சீதா பாரதியின் குரலில்...
பிரிவின் காரணம் சில நேரம் புரியாதிருக்கலாம்.
புரிந்ததால் இருக்கலாம்.
புரிந்தும், புரியாமலும் பிரிந்த இருவருக்கும் பிரியம் புதிதாய் பூத்தால்?
பிரியங்கள் புதிது, புதிதாய் ஒரு புரிதலை, தெரிதலை,
பிரியத்தை நல்கும்!!!

அன்புடன்,
தேவி மனோகரன்.

4 months ago | [YT] | 29