பன்னீரில் குளிக்க வைத்து பட்டாடை உடுத்தி வைத்து சந்தனத்தில் சாந்தெடுத்து அங்கமெல்லாம் பூசி வைத்து நீர்ப்பூசி திலகம் வைத்து அன்று பூத்த மலராய் உன்னை அர்ச்சிப்போம் வருவாய் அப்பனே முருகா.... #ஓம்_முருகா
சில விநாடிகளுக்குப் பிறகு, "பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!" என்றார் கிருஷ்ணர்.
அடுத்த விநாடியே,"ஆமாம்.....ஆமாம் ...அது பருந்து தான்.!" என்று சொன்னான் அர்ஜுனன்.
மேலும் சில விநாடிகள் கழித்து "அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.!" கிருஷ்ணர் சொல்ல,
கொஞ்சமும் தாமதிக்காமல் ," தாங்கள் சொல்வது சரிதான்...அது கிளி தான் .!" என பதிலளித்தான் அர்ஜுனன்.
இன்னும் கொஞ்சம் நேரமானதும், "அர்ஜுனா,முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.
அது ஒரு காகம்.!" கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்.
"நிஜம் தான் கிருஷ்ணா...அது காகமே தான்...சந்தேகமே இல்லை.!" பதிலளித்தான் அர்ஜுனன்.
" என்ன நீ ,நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.! உனக்கென்று எதுவும் யோசிக்கத் தெரியாதா.?" கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.
"கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச் சொன்னால் ,அது பருந்தோ,காகமோ, புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.
அதனால் நீ என்ன சொல்கிறாயோ,அப்படித் தானே அது இருக்க முடியும். தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்.?" அமைதியாகச் சொன்னான் ,அர்ஜுனன்.
இந்த நம்பிக்கை தான் பகவானை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.
God_Murugan_Video_Tamil 🐓🦚
ஓம் எனும் பிரணவ மந்திர கந்தனே
என் முருகனே!
யாவும் நீயென யாக்கை உனக்கென
நாளும் காத்திடு குமரனே!
அழகு என்றால் முருகு எந்தன்
ஆதி தமிழன் தெய்வமே!
அறுபடைக்கும் முதல்வன் நீயே
செந்தில் ஆண்டவ தெய்வமே!
1 month ago | [YT] | 392
View 2 replies
God_Murugan_Video_Tamil 🐓🦚
உந்தன் முகம் காண
ஓடி வந்தேன்!
எந்தன் குறை சொல்ல
தேடி வந்தேன்!
உனது முகம் பார்த்து
சொல்ல மறந்தேன்!
பின்பு உணர்ந்தேன் எந்தன்
சுமை தாங்கினாய் முருகா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
1 month ago | [YT] | 559
View 7 replies
God_Murugan_Video_Tamil 🐓🦚
ஆராவமுதென அருள்மழை பெய்யும்…
ஆராவமுதென அருள்மழை பெய்யும்…
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்…
ஓராறு முகமும் ஈராறு கரமும்…
தீராத வினைதன்னைத் தீர்க்கும்...
1 month ago | [YT] | 701
View 7 replies
God_Murugan_Video_Tamil 🐓🦚
பன்னீரில் குளிக்க வைத்து
பட்டாடை உடுத்தி வைத்து
சந்தனத்தில் சாந்தெடுத்து
அங்கமெல்லாம் பூசி வைத்து
நீர்ப்பூசி திலகம் வைத்து
அன்று பூத்த மலராய் உன்னை
அர்ச்சிப்போம் வருவாய்
அப்பனே முருகா....
#ஓம்_முருகா
2 months ago | [YT] | 582
View 8 replies
God_Murugan_Video_Tamil 🐓🦚
கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்!
வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்!
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் காலடியை வணங்குங்கள்
🦚🐓🦚🐓🦚🐓🦚🐓
2 months ago | [YT] | 664
View 4 replies
God_Murugan_Video_Tamil 🐓🦚
தோலொடு மூடிய கூரையை நம்பிப்
பாவையர் தோதக லீலைநி ரம்பிச்
சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் ...... புதிதான
தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்
கோவையு லாமடல் கூறிய ழுந்தித்
தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் ...... கலமாருங்
காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
கோளனை மானமி லாவழி நெஞ்சக்
காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் ...... புலையேனைக்
காரண காரிய லோகப்ர பஞ்சச்
சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்
காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் ...... றருளாதோ
பாலன மீதும னான்முக செம்பொற்
பாலனை மோதப ராதன பண்டப்
பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் ...... றமராடிப்
பாவியி ராவண னார்தலை சிந்திச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் ...... கினியோனே
சீலமு லாவிய நாரதர் வந்துற்
றீதவள் வாழ்புன மாமென முந்தித்
தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய்
சேலொடு வாளைவ ரால்கள்கி ளம்பித்
தாறுகொள் பூகம ளாவிய இன்பச்
சீரலை வாய்நகர் மேவிய கந்தப் ...... பெருமாளே🙏
#murugan #thirupugal
3 months ago | [YT] | 1,191
View 18 replies
God_Murugan_Video_Tamil 🐓🦚
Murugaaa 💥🦚🐓
🐓🦚💥
💥🦚🐓
4 months ago | [YT] | 13
View 1 reply
God_Murugan_Video_Tamil 🐓🦚
சுழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்ப மின்பங்
கழித்தோடு கின்றதெக் காலநெஞ்சே கரிக் கோட்டு முத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்
கிழித்தோடு வேலென் கிலையெங்ங னேமுத்தி
4 months ago | [YT] | 1,485
View 18 replies
God_Murugan_Video_Tamil 🐓🦚
கடவுள் மேல் சந்தேகம் இல்லாமல், நம்பிக்கை வையுங்கள்.
ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.
கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார்.
"அர்ஜுனா,அது புறா தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
" ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!" என்றான் அர்ஜுனன்.
சில விநாடிகளுக்குப் பிறகு,
"பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!" என்றார் கிருஷ்ணர்.
அடுத்த விநாடியே,"ஆமாம்.....ஆமாம் ...அது பருந்து தான்.!"
என்று சொன்னான் அர்ஜுனன்.
மேலும் சில விநாடிகள் கழித்து
"அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.!"
கிருஷ்ணர் சொல்ல,
கொஞ்சமும் தாமதிக்காமல் ," தாங்கள் சொல்வது சரிதான்...அது கிளி தான் .!" என பதிலளித்தான் அர்ஜுனன்.
இன்னும் கொஞ்சம் நேரமானதும்,
"அர்ஜுனா,முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.
அது ஒரு காகம்.!" கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்.
"நிஜம் தான் கிருஷ்ணா...அது
காகமே தான்...சந்தேகமே இல்லை.!"
பதிலளித்தான் அர்ஜுனன்.
" என்ன நீ ,நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.! உனக்கென்று எதுவும் யோசிக்கத்
தெரியாதா.?"
கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.
"கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச்
சொன்னால் ,அது பருந்தோ,காகமோ,
புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.
அதனால் நீ என்ன சொல்கிறாயோ,அப்படித் தானே அது இருக்க முடியும்.
தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்.?" அமைதியாகச் சொன்னான் ,அர்ஜுனன்.
இந்த நம்பிக்கை தான் பகவானை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.
4 months ago | [YT] | 1,282
View 17 replies
God_Murugan_Video_Tamil 🐓🦚
#ஓம்முருகா
ஒன்றுக்கும் பற்றாத நாயேன்
குன்றுவிட்டுநீ குளக்கரை தனில்வதியத்
தோன்றாத் துணையாய்
நின்றிடும்
உன்முன்
கற்றாவின் அகமன்னக் கசிந்துருகிக்
கண்ணைப் பறிக்கும்
கட்டழகன் உனைக்கண்டு
கண்டதே காட்சியென்று கொண்டதே கோலமாகிக்
கண்ணீர்வார மெய்ம்மயிர் சிலிர்ப்பக்
கண்ணுக்குக் கண்ணாய்ப் போற்றிக்
கண்கண்ட தெய்வமாய்க்
கொண்டேனே
வேல் முருகா..
4 months ago | [YT] | 1,722
View 20 replies
Load more