Sri Sathya Sai Yugam

LOVE ALL SERVE ALL

Welcome to Sri Sathya Sai Yugam! This channel lovingly shares the divine glories, teachings, and boundless love of Bhagawan Sri Sathya Sai Baba in the Tamil language. It is dedicated to serving Sai devotees and aims to reach every Tamil speaking heart with Baba's message. Specifically, we serve with the primary responsibility of presenting Baba’s glory through video content in a way that appeals to today’s younger generation and suits their preferences.

This is an independent devotional channel and is not officially affiliated with or authorized by any Sathya Sai Institutions or organisations.

We do not generate any income from YouTube videos or any other revenue sources. 'Sri Sathya Sai Yugam' is a purely service oriented, collective Seva initiative, not the work of any one individual.

For any video issues or feedback, kindly email us at: SathyaSaiYugam@gmail.com


Sri Sathya Sai Yugam

🌼 Part Time பக்தி அல்ல, பரிபூரண பக்தி வேண்டும்!

பலர் கடவுளிடம்
பகுதி நேர பக்தர்கள்,
தேவை வந்தால் வணக்கம்,
தேவை தீர்ந்தால் மறதி.

ஆனால் சத்ய சாயிபாபா
அவர் தேவைக்கான தெய்வம் அல்ல,
அவரே தேவையின் மூலமே,
சகலத்திற்கும் உச்சபட்சமே.

அவரை நினைத்தால் நெஞ்சம் தெளியும்,
அவரை வணங்கினால் வாழ்வு நலமாகும்,
அவர் சரணம் என்றால்
சுகமும் துக்கமும் சமமாகும்.

கேட்கும்போது மட்டும் அல்ல,
கிடைக்கும்போதும் மட்டுமல்ல
எந்நேரமும் அவரே எல்லாம்
என்று உணர்வதே உண்மை பக்தி.

சத்ய சாயி இருக்க,
என்ன குறை?
அவர் இருக்க,
வாழ்க்கையே ஒரு ஆசீர்வாதம்.

–ஜெகன், திண்டிவனம்

*ஸ்ரீ சத்யசாயி யுகம் வாட்ஸ்அப் குரூப்ஸ்*
linktr.ee/SriSathyaSaiYugam

2 days ago | [YT] | 857

Sri Sathya Sai Yugam

ஸ்ரீமத் தம்மபதம் -17
(பேரிறைவன் புத்த பகவான் வாய் மொழியில் சாயி ஞானம்)

22. *கவனித்திருந்தே இந்திரன் தேவர்களின் அரசனானான்!* *கவனித்திருப்பது தான் எவ்வளவு பிரமாதம்! தூங்கிக் கிடப்பது தான் எவ்வளவு முட்டாள்தனம்!*

விளக்கம்:-

கவனிக்க வேண்டும் இந்த ஞான வாசகத்தை! கவனித்திருந்தே இந்திரன் தேவர்களின் தலைவனானான் என்கிறார் பேரவதார புத்தர்! தலைமை பண்பு எப்போது வரும்? பிறரை அல்ல தன்னை தனக்குள் கவனிக்கும் போது வரும்! *சுயநலமே இல்லாதவன் தான் தலைவன்! தனது பிறந்தநாள் விழாவில் ராட்சச மாலையை தோளில் அணிபவன் தற்குறி - பிறருக்காக சிலுவை சுமக்கிறவன் எவனோ அவனே தலைவன்!* இதை நாம் கவனிக்க வேண்டும்! நமக்கு கவனம் போதவில்லை! *வெறும் உணர்ச்சிமயம் ஆன்மிகம் அல்ல! அது வெறும் உலகாயதம்!* மனதில் எளிதாக ஒரு விஷயத்தில் புகுத்தி எளிதாக வெளியே வரத் தெரிய வேண்டும்! எண்ணெய் தடவி *பிசின் ஒட்டாமல் எடுக்கப்படும் பலாச்சுளை போல கவனம் மேவி ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து - அவ்வினை முடிந்த உடன் அதை விட்டு மனதை வெளி இழுக்க நமக்கு தெரிந்திருக்க வேண்டும்!* வினை என்கிற செயல் புரியாமல் உலகமில்லை - வாழ்க்கை இல்லை! ஆனால் செயல் முடிந்த பிறகும் அதையே நினைத்துக் கொண்டிருப்பது அறிவீனம்! நல்லதோ தீயதோ செய்தவனே அனுபவிக்க வேண்டும்! கவனித்திருப்பது மிகவும் முக்கியம்! மனம் சோகமாக இருக்கிறதா? கண் மூடி கவனியுங்கள் ஏன் சோகமாக இருக்கிறது? என்ன விஷயம்? என்ன தடுமாற்றம்? உள்ளே ஆழ்ந்து உணர முற்படுங்கள்! அப்போது இவ்வளவு தானா!! என்று விளங்கும்! நாம் உள்ளே ஆழாமல் வெளியே அதற்கான விடையை தேடுகிறோம்! சோகம் என்றால் பேரிறைவன் பாபா திருப்படம் முன் புலம்புகிறோம்! அது தான் பிரச்சனை! *என்ன பிரச்சனை என்று நமக்குள்ளே ஆழமாக உணர முற்பட்டால் தான் புரியவரும் அது ஒரு பிரச்சனையே இல்லை என்று!* அவ்வளவு தான்! உதாரணமாக - நமக்கு புண் ஏற்பட்டால் - சொறிய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும் - அந்த நேரம் அதற்கு மருந்து தான் தடவ வேண்டும்! சொறிதல் கூடாது! அதைப் போல் பிரச்சனை வந்தால் நமக்குள் ஆழ்ந்து கண்மூடி அந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று பார்க்க வேண்டும் - இது தான் மருந்து தடவுதல் போல்! அதை விட்டுவிட்டு *பிரச்சனை வந்துவிட்டதே என்று வேதனைப்படுவது இன்னொரு பிரச்சனை - புலம்புவது மற்றொரு பிரச்சனை - எரிந்து விழுவது மூன்றாவது பிரச்சனை!* சொறிந்தால் புண் ஆறுவதில்லை அது வளர்கிறது! *துயரம் எண்ணி துயரப்பட்டால் அது மேலும் துயரப்படுத்துகிறது!* புரிகிறதா? கவனித்து இதை இன்னொரு முறை ஆழமாக உணர முற்படுங்கள்! *உண்மையில் எதுவும் பிரச்சனை இல்லை - உங்களின் சொந்த எண்ணம் தான் உங்களுக்குப் பிரச்சனை!* கவனித்தால் எண்ணம் நீங்க ஆரம்பிக்கிறது! கவனித்திருப்பது அவ்வளவு பிரமாதமானது என்கிறார் புத்தர்! ஆகவே கவனியுங்கள் - அதுவே வழிபாடு! தூங்குவது முட்டாள்தனம் - இங்கே தூங்குவது என்பது அறியாமை! *கவனித்திருப்பதே வழிபாடு! வேறெந்த வழிபாடும் முழுமையான பலனை தருவதில்லை!* கவனியுங்கள்! எண்ணங்களை கவனியுங்கள்! அது ஒன்றே தவம்! உங்களை உங்களுக்குள்ளே கவனிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்! அது ஒன்றே பிரார்த்தனை! *கவலைப்படுவதால் எதுவும் நடப்பதில்லை - உள்ளே உற்று கவனிப்பதால் பிரபஞ்ச இயக்கத்தையே புரிந்து கொள்ள முடிகிறது!*

பக்தியுடன்🙏🏻
#வைரபாரதி💎✍🏻

2 days ago | [YT] | 275

Sri Sathya Sai Yugam

வெள்ளி மாலை வணக்கம்!
#SriSathyaSaiYugam

2 days ago | [YT] | 392

Sri Sathya Sai Yugam

🌼 கோகுல பாலனே கொல்லபள்ளி வந்தார்!

தத் தகிட தத் தகிட
சந்தமுடன் ஆடி
நர்த்தமிடு கோபாலன்
பர்த்திபுரி வந்தார்

இத்தரையில் சத்தியமும்
தர்மமுடன் கூடி
பற்றிவரும் அன்புடனே
பக்தர் மனம் நின்றார்

சுற்றிடும் நல் கரமசைவில்
சூழ் பிணிகள் போக்கி
ஒற்றிடும் ஓர் கண்ணசைவில்
உள்ளம் கவர்ந்தார்

பற்றிடவும் பொன்னடிகள்
துன்பம் பிணி நீக்கி
உற்ற பெரும் துணையாகி
உயிர்காத்து நின்றார்

கற்றிடவே என் வாழ்வு
கற்றுக்கொள் என்றார்
பெற்றிடுவாய் பேரின்பம்,அது
பிறப்புரிமை என்றார்

உற்றதொரு அன்பாலே
உள்ளம் கவர்ந்தார்
பெற்ற தனித் தாயாக
பாசம் பொழிந்தார்

சிற்றடியால் சீரிய நல் உபதேசம் செய்தார்
பற்றிட ஓர் கொழுவாக
பக்கத்தில் நின்றார்

கற்றிடவே உயர் ஞான
கற்பகமாய் வந்தார்
உற்றதொரு குருவாகி
உபதேசம் ஈந்தார்

இத்தரையில் இவர்போல
அவதாரம் உண்டோ
ஏழைப் பங்காளர்
வேறெவரும் உண்டோ

பர்த்திபுரி போல ஒரு
வைகுண்டம் உண்டோ
பாபாவின் திருவடிபோல்
பாவனங்கள் உண்டோ

சாயி நற்காலை
வணக்கம்
-NKP

*ஸ்ரீ சத்யசாயி யுகம் வாட்ஸ்அப் குரூப்ஸ்*
linktr.ee/SriSathyaSaiYugam

3 days ago | [YT] | 145

Sri Sathya Sai Yugam

சாயி சமிதி நடத்தும்
ஸ்ரீ சக்கரை அம்மாவுக்கு
கும்பாபிஷேகம் இன்று

பத்தாண்டுத் தவம்
பக்குவ பக்தி!

அஷ்டமா ஸித்தி
அனைத்தும் பெற்றும்
அதன்மேல் அக்கறையே காட்டாத
கலங்கரை விளக்கம்!

மழை ஆயினும்
மாதேவன் கோவிலை
நனைந்தே வலம் வந்த
பெண் நந்தி!

கைம்பெண் ஆயினும்
அலுக்காத
சலிக்காத
கர்மாவை நினைத்து
ஆதங்கப்படாத
ஆனந்தப் பெருவெளி!

செய்தால் செய்ய வேண்டும்
அம்மை போல் தவம்
எனும் படியான
ஏகாந்த ஜோதி!

காவி கட்டிய
பெண் வள்ளலார்!

பிரித்துப் படிக்க வேண்டிய
பகவத் கீதை!
அலசி ஆழவேண்டிய
அஷ்டாவக்ர கீதை!

ஆன்மிக வானில் பறந்த
லஹிமா காற்றலை!

பரமனோடு ஐக்கியமாகவே
பிரார்த்தனை புரிந்த
பாரிஜாதம்!

அகந்தையால்
அதரம் திறந்து
சிரிக்காத மனிதர் மத்தியில்
சிரிப்பில் ஸ்வரம் எழுதி
புன்னகையால் பூபாளம்
இசைத்த இறைவி!

தனது கோவிலில்
சாயிக்கு சமிதி ஈந்த
சம்பூர்ணம்!

அகத்தில் ஞானம்‌ மொய்த்த சக்கரை
இகத்தில் வானம் தோய்த்த
அக்கறை
தியானப் படகில் சேர்ப்பாளிவள்
அக்கரை!

இதயம் அனுதினமும் புரிவது
சுவாசாபிஷேகம்!
இன்றைக்கு என்னம்மைக்கோ
கும்பாபிஷேகம்!

பக்தியுடன் 🙏🏻
#வைரபாரதி💎✍🏻

3 days ago | [YT] | 375

Sri Sathya Sai Yugam

வெள்ளி காலை வணக்கம்
#SriSathyaSaiYugam

3 days ago | [YT] | 138