بسم الله الرحمن الرحيم

لا اله إلا الله محمد رسول الله

இஸ்லாமிய மார்க்கம் இஸ்லாமிய தஃவா இஸ்லாம் கூறும் ஹலால் ஹராம் இஸ்லாமிய கேள்வி-பதில் இனிய மார்க்கம் இஸ்லாம்

حسبنا الله نعم الوكيل

Islamic Question Answer Islam is Best Rules Allah Is Great Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam

لا حول ولا قوة إلا بالله العلي العظيم


FAHMI CHANNEL

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
2️⃣8️⃣➖0️⃣1️⃣➖2️⃣6️⃣
ஷஃபான் பிறை 8️⃣
☪️☪️☪️☪️☪️☪️🤲🤲🤲🤲🤲அல்ஹம்து வில்லாஹில்லதீ அஹ்யானா ப அஃத மாஅமாத்தனா வ இலைஹின் நுஷுர்

அஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ்!

மனஅமைதியை உருவாக்குபவனே!
என்னுடைய காரியங்கள் சீராக நிகழ்வதற்கு உன்னையே பொருப்பேற்பவனாக ஆக்கிவிட்டேன்
என்னுடைய கவலைகளை உன்னிடமே ஒபபடைத்து விட்டேன்.

என் உள்ளத்தில் குதூகலத்தையும்,சந்தோஷத்தையும் கொண்டுவருபவைகளை நற்செய்தியாக அறிவிப்பாயாக!

என்னை நோக்கி என்னென்ன நிகழ்வுகள்
வர இருக்கின்றன என்பது எனக்குத்
தெரியாது.

ஆனால் என்னைப்படைத்தவன் மீது
நான் வைத்திருக்கும் நம்பிக்கை
எனக்குப் போதும்.

யா அல்லாஹ்! என்னுடைய வாழ்வின்
அனைத்துக் காரியங்களையும் உன்னிடமே
ஒப்படைக்கிறேன்.

அவற்றை நீ உன்னுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்தும்
ஷைத்தானின் தீங்கிலிருந்தும்
என்னுடைய நப்ஸுடைய தீங்கிலிருந்தும் பாதுகாப்பாயாக!

எதிர்பாராத விபத்துகளிலிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்த்தாரையும் காப்பாயாக

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”. 59:10
யா ரப்பல் ஆலமீன்

ஸல்லல்லாஹு அலா கைர கல்கிஹி முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்ம ஈன்.
வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
ஆமீன்...

4 hours ago | [YT] | 24

FAHMI CHANNEL

*அல்ஹம்து வில்லாஹில்லதீ அஹ்யானா ப அஃத மாஅமாத்தனா வ இலைஹின் நுஷுர்*

*அஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ்!*

மனஅமைதியை உருவாக்குபவனே!
என்னுடைய காரியங்கள் சீராக நிகழ்வதற்கு உன்னையே பொருப்பேற்பவனாக ஆக்கிவிட்டேன்
என்னுடைய கவலைகளை உன்னிடமே ஒபபடைத்து விட்டேன்.

என் உள்ளத்தில் குதூகலத்தையும், சந்தோஷத்தையும் கொண்டுவருபவைகளை நற்செய்தியாக அறிவிப்பாயாக!

என்னை நோக்கி என்னென்ன நிகழ்வுகள்
வர இருக்கின்றன என்பது எனக்குத்
தெரியாது.

ஆனால் என்னைப்படைத்தவன் மீது
நான் வைத்திருக்கும் நம்பிக்கை
எனக்குப் போதும்.

யா அல்லாஹ்! என்னுடைய வாழ்வின்
அனைத்துக் காரியங்களையும் உன்னிடமே
ஒப்படைக்கிறேன்.

அவற்றை நீ உன்னுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்தும்
ஷைத்தானின் தீங்கிலிருந்தும்
என்னுடைய நப்ஸுடைய தீங்கிலிருந்தும் பாதுகாப்பாயாக

*رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ*

“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”. 59:10

*யா ரப்பல் ஆலமீன்*

*ஸல்லல்லாஹு அலா கைர கல்கிஹி முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்ம ஈன்.*
*வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.*

*🤲❤️ஆமீன்❤️🤲*

16 hours ago | [YT] | 8

FAHMI CHANNEL

28.01.2026 WEDNESDAY

Sha'ban 08, 1447 - INDIA
Sha'ban 09, 1447 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم

அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

யா அல்லாஹ்!உயர்வான நண்பன் என எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உன்னைப் பற்றி சொல்லியுள்ளார்கள்

எங்களைப் படைத்தவனாகவும்.எங்களின் பாதுகாவலனாகவும் எங்களின் நண்பனாகவும் இருக்கும் என் ரஹ்மானே!

உன் ரஸூல்ﷺ அவர்கள் மூலம் நீ வாக்களித்தவற்றை நிறைவேற்றுவாயாக!

எங்களின் தவறுகளை மறைப்பாயாக!அதனை வெளிப்படுத்தி எங்களை இம்மையிலும் மறுமையிலும் கேவலப்படுத்தி விடாதே!

ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்து எங்களைக்காப்பாற்றுவாயாக!

முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக அணி திரட்டுகிறார்கள்

எங்கள் நபி அவர்கள் கேட்ட துஆ வையே நாங்கள் கேட்கிறோம்

எதிரிகளின் கூட்டணியை முறியடிப்பாயாக!

ஏகஇறைமறுப்பாளருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!

எங்களின் உள்ளங்களை இணைப்பாயாக!எங்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவாயாக!

எங்கள் சமுதாய தலைவர்களுக்குத் தூய்மையான எண்ணத்தைத் தருவாயாக!

அவர்களுக்கிடையே உள்ள ஈகோ வை ஒழித்து சமுதாய நலனைமட்டுமே சிந்திக்க தவ்பீக் செய்வாயாக!

யா அல்லாஹ்!

எங்களின் இந்த துஆவை ஏற்றுக்கொள்வாயாக !

உன்னையையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்.

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆமீன்..

17 hours ago | [YT] | 4

FAHMI CHANNEL

நாளும் ஓர் நல்லதொரு துஆ (பிரார்த்தனை)

ஹிஜ்ரி 1447 , ஷஃபான் பிறை 08

(28-01-2026 , புதன்க்கிழ‌மை)

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின்,
கமா சல்லைத்த அலா இப்ராஹீம, வ அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின்
கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம
இன்னக்க ஹமீதுன் மஜீத்.

லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினழ் ழாலிமீன் ...

அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ...

பிஸ்மில்லாஹில்லதி லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன்ஃபில் அர்ளி வலா ஃபஸ்ஸமாயி வஹுவஸ்ஸமீஉல்அலீம்.

யா முகல்லிபல் குலூப் தப்பித் கல்பி அலா தீனிக்.

(யா அல்லாஹ் உள்ளங்களை புரட்டுபவனே
உன்னுடைய தீனின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக )

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி அதத ஹல்கிஹி ,வரிழா நஃப்ஸிஹி,வஸினத அர்ஷிஹி,வமிதாத கலிமாத்திஹி....

யா அவ்வலல் அவ்வலீன்
யா ஆகிரல் ஆகிரீன்
யா தல் குவ்வதின் மதீன்
யா ராஹிமல் மஸாகீன்
யா அர்ஹமர் ராஹிமின்...

அல்லாஹும்ம மர்ஹம்னீ பி ரஹ்மத்திகா அர்ஹமர்ராஹிமீன்.

(யா அல்லாஹ் உன் பேரருளைக்கொண்டு என் மீது கிருபை செய்வாயாக)

*ரப்பானா ஆத்தினா fபித்துன்யா ஹஸனத்தன் வfபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந் நார்*

*யா அல்லாஹ், இவ்வுலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே அருள்பாலிப்பாயாக, நரக நெருப்பின் தண்டனையை விட்டும் காத்தருள்வாயாக.*

அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜபின் வ ஷஅபான். வ பல்லிஃக்னா ரமலான்.

யா அல்லாஹ் ரஜப், ஷாபான் மாதத்தில் எங்களுக்கு பரக்கத்து செய்வாயாக இன்னும் ரமலான் மாதத்தை எங்களை அடையச் செய்வாயாக...

*வகினா அதாபல் கப்ர்*

யா அல்லாஹ்!
மண்ணறையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகினா அதாபுல் ஹஸ்ர்*

யா அல்லாஹ்!
இறுதிநாளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகினா அதாபுல் fபக்ர்*

யா அல்லாஹ்!
வறுமையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகினா அதாபுல் மீஸான்*

யா அல்லாஹ்!
மீஸான் தராஸின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகினா அதாபுல் கர்ழ்*

யா அல்லாஹ்!
"கடன் தொல்லையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகினா அதாபுல் மர்ழ்*

யா அல்லாஹ்!
நோய்களின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகினா அதாபுல் ஆfபாத்*

யா அல்லாஹ்!
பேராபத்துகளின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகினா அதாபுல் சக்ராத்*

யா அல்லாஹ்!
மரண அவஸ்தையின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகினா அதாபல் மௌத்*

யா அல்லாஹ்!
மௌத்தின்போதான தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகினா அதாபுல் fபித்னத்துல் மஸீஹித் தஜ்ஜால்*

யா அல்லாஹ்!
தஜ்ஜாலின் வழிகெட்ட தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக.

*வகினா அதாபந் நார்*

யா அல்லாஹ்!
நரக நெருப்பின் தண்டனையைவிட்டும் காத்தருள்வாயாக...

அல்லாஹீம்ம இன்னி அஸ் அலுகல் ஜன்னா

யா அல்லாஹ் எனக்கு சொர்க்கத்தை வழங்குவாயாக...

யா அல்லாஹ்!
மீண்டும் உயிர் கொடுத்து உன்னை வணங்க நல்வாய்ப்பு வழங்கிய அருளாளனே
யா அல்லாஹ் இந்நாளில் நாங்கள் நல்லறங்கள் புரிய அருள் புரிவாயாக

யா அல்லாஹ்!
எனக்கு நலன்களுக்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!

யா அல்லாஹ்!
உன் பாதுகாப்பினைப் பெறும் வாசல்களைத் திறந்துவிடுவாயாக!

யா அல்லாஹ்!
ஆரோக்கியத்திற்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!

யா அல்லாஹ்!
உன் அருட்கொடைகளுக்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!

யா அல்லாஹ்!
பரக்கத்தினுடைய வாசல்களைத் திறந்துவிடுவாயாக!

யா அல்லாஹ்!
ஆற்றலுக்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!

யா அல்லாஹ்!
பேரன்பிற்கான வாசல்களைத் திறந்து விடுவாயாக!

யா அல்லாஹ்!
ரஹ்மத்தினுடைய வாசல்களைத் திறந்துவிடுவாயாக!

யா அல்லாஹ்!
ரிஜ்குடைய வாசல்களைத் திறந்துவிடுவாயாக!

யா அல்லாஹ்!
கல்விஞானத்திற்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!

யா அல்லாஹ்!
உன்னுடைய மன்னிப்பிற்கான வாசல்களைத் திறந்துவிடுவாயாக!

யா அல்லாஹ்!
சொர்க்கத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் வாசல்களைத் திறந்து விடுவாயாக..

யா அல்லாஹ்! நான் உனது பொருத்தத்தைக் கொண்டு உனது கோபத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன்.

யா அல்லாஹ்!
உனது பொறுத்தருளும் பண்பைக் கொண்டு உனது தண்டனையில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன்

யா அல்லாஹ்!
. உன்னைக் கொண்டு உன்னிடமே பாதுகாவல் தேடுகிறேன்

யா அல்லாஹ்!
உன்னை முழுமையாக புகழ்வதற்கு என்னால் இயலாது.

யா அல்லாஹ்!
உன்னை நீ எப்படி புகழ்ந்தாயோ அப்படியே நீ இருக்கிறாய். (நூல்;அஹ்மது)

யா அல்லாஹ்! கடந்த
காலங்களில் நான் செய்த தவறுகளுக்காகவும்,
பாவங்களுக்காகவும்
நான் வருந்தி உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்
அப்பாவங்களின் காரணமாக எதிர் வரும் நாட்களில் என்னைத் தண்டித்துவிடாதே!

யா அல்லாஹ்!
என்னை மன்னித்து என்மீது கருணை காட்டுவாயாக ரஹ்மானே!

யா அல்லாஹ்!
எங்கள் வாழ்வாதரங்களில் விசாலத்தை ஏற்படுத்து நாயகனே!

யா அல்லாஹ்!
எங்கள் குடும்பத்தில் சாந்தியும் அமைதியும்
ஒற்றுமையும் நிலவச் செய் வாயாக

யா அல்லாஹ்!
எங்களின் வாழ்நாட்களை நீட்டித்து உன்னை வணங்கிடவும் பல நல்லறங்களை நிறைவேற்றிட உடல் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் வழங்கிடு வல்லோனே!
நான் கேட்கும் அனைத்தையும் என் சகோதர , சகோதரிகள் அனைவருக்கும் தந்தருள்வாயாக

யா அல்லாஹ்!
பி ஹக் ஸய்யித்னா முஹம்மது வஆலி ஸய்யித்னா முஹம்மது
வபாரிக் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்

யா அல்லாஹ்!
எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது ﷺ அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் அனைத்து நபித்தோழர்களின் மீதும் உன் அருளை புரிவாயாக!

யா அல்லாஹ்!
எங்கள் துஆவை ஏற்றுக் கொண்டு எங்களை நரகிலிருந்து பாதுகாத்து உயர்ந்த சொர்க்கத்தை அருள்வாயாக..

யா அல்லாஹ்!
உன் கருணையினால் எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!

யா அல்லாஹ்!
இன்றைய நாளை எங்களுக்குப் பலன் உள்ள நாளாக ஆக்குவாயாக ...

யா அல்லாஹ்!
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.

யா அல்லாஹ்!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!!

ஸல்லல்லாஹு அலா ஸய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்..

ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்....

17 hours ago | [YT] | 6

FAHMI CHANNEL

இரண்டாம் கலீபா உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் கடைசி நாட்களும்😞😞😞

நேர்மையையும் தன் உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு தலைவனின் இறுதிப் பயணம் அது.

உமர் (ரலி) அவர்களின் கடைசி நாட்கள்
கி.பி. 644-இல், உமர் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் சுபஹ் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தபோது, அபூ லுக்லூஆ என்ற பாரசீக அடிமையால் நயவஞ்சகமாகத் தாக்கப்பட்டார். விஷம் தடவப்பட்ட கத்தியால் ஆறு முறை அவர் குத்தப்பட்டார்.

* மரணத் தறுவாயில் கவலை: காயமடைந்த நிலையில் அவர் முதலில் கேட்ட கேள்வி, "என்னைத் தாக்கியவன் முஸ்லிமா?" என்பதுதான். அவன் முஸ்லிம் இல்லை என்பதை அறிந்ததும், "ஓர் இறைநம்பிக்கையாளனின் கையால் எனக்கு மரணம் நிகழவில்லையே" என்று நிம்மதி அடைந்தார்.

* அன்னை ஆயிஷாவிடம் அனுமதி: நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் அபூபக்கர் (ரலி) ஆகியோருக்கு அருகிலேயே தானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அவரது பெருவிருப்பமாக இருந்தது. மரணப் படுக்கையில் இருந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்களிடம் தன் மகனை அனுப்பி அனுமதி பெற்று வருமாறு கூறினார். ஆயிஷா (ரலி) அவர்களும் அதற்கு சம்மதித்தார்.
மக்களுக்கு வழங்கிய இறுதி அறிவுரைகள்
தனது மரணத்திற்குப் பிறகு முஸ்லிம் சமூகம் பிளவுபட்டுவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் வழங்கிய முக்கிய அறிவுரைகள்:

* தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை: தனக்கு அடுத்து யாரை நியமிப்பது என்பதை முடிவு செய்ய ஒரு ஆறு பேர் கொண்ட குழுவை (அலி, உஸ்மான், ஸுபைர், தல்ஹா, சாத் பின் அபி வக்காஸ், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்) நியமித்தார். மூன்று நாட்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு கட்டளையிட்டார்.

* அடுத்த கலீபாவிற்கான அறிவுரை: "மக்களிடம் மென்மையாகவும் நீதியுடனும் நடந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் மக்களை ஒடுக்கக் கூடாது" என்று அடுத்த வரவிருக்கும் தலைவருக்குத் தன் மகனிடம் சொல்லி அனுப்பினார்.

* முஸ்லிம் அல்லாதோரின் பாதுகாப்பு: முஸ்லிம் சமூகத்தில் வாழும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரின் (திம்மிகள்) உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

* கடமைகளில் உறுதி: தொழுகையை ஒருபோதும் கைவிடாதீர்கள் என்று அறிவுறுத்தினார். அவர் காயமடைந்த நிலையிலும், "தொழுகையை விட்டவருக்கு இஸ்லாத்தில் இடமில்லை" எனக் கூறிவிட்டுத் தட்டுத்தடுமாறித் தொழுதார்.
ஒரு தலைசிறந்த முன்னுதாரணம்
உமர் (ரலி) அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்தபோது, மக்கள் அவருடைய சாதனைகளைப் புகழ்ந்தனர். அதற்கு அவர், "அல்லாஹ்வின் முன் நான் சமமாக நின்றால் போதும்; எனக்கு நன்மையும் வேண்டாம், தண்டனையும் வேண்டாம்" என்று மிகவும் அடக்கத்துடன் கூறினார். இது ஒரு உண்மையான தலைவனுக்குரிய பண்பாகும்.

#islamicbost #islamic #Umar #Alhamdulillah

1 day ago | [YT] | 35

FAHMI CHANNEL

25.01.2026 SUNDAY

Sha'ban 05, 1447 - INDIA
Sha'ban 06, 1447 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم

அல்ஹம்துலில்லாஹ்!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

என்னைப் படைத்த என் ரப்பே!
உனக்கே புகழனைத்தும்.
அண்ணல் நபி அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் உன் அளப்பரிய கருணையைப் பொழிவாயாக!

கருணையாளனே!

நேற்றைய நாளை விட இன்றைய நாளை சிறப்பாக்குவாயாக!

இன்றைய நாளில் எங்கள் காரியங்களை லேசாக்குவாயாக!

உன்னிடமிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ வருபவைகள் எதுவானாலும் அவைகள் உன் அருளால் மட்டுமே கிடைக்கின்றன என நான் நம்புகிறேன்.

என் தேவையறிந்து உதவிடுவாயாக!

உன்னையே வணங்குகிறேன் உன்னிடமே உதவி தேடுகிறேன்

எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!

எங்களின் இல்லங்களில் உன் அருளை விசாலமாக்குவாயாக!

எங்களின் ரிஜ்குகளில் பரக்கத் செய்வாயாக!

யா அல்லாஹ்!
இவ்வுலக கவலையை பெரும் கவலையாக ஆக்காதே! தொழுகை மூலமாகவும் பொறுமையாலும் உன்னிடம் உதவி கேட்கும் மனதைக் கொடுப்பாயாக!

யாஅல்லாஹ்!
என்னுடைய ரிஜ்க் வானத்தில் இருந்தால் அதனை இறக்கித்தருவாயாக!பூமியின் உள்ளே இருந்தால் அதனை வெளிப்படுத்துவாயாக!
தூரத்தில் இருந்தால் என் அருகே கொண்டுவருவாயாக! அது அருகில்இருந்தால் அதனை எனக்கு இலகுவாக்கித் தருவாயாக!

யா அல்லாஹ்!

எங்களின் இந்த துஆவை ஏற்றுக்கொள்வாயாக !

உன்னையையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்.

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆமீன்

3 days ago | [YT] | 7

FAHMI CHANNEL

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
💫💫💫💫💫💫
*இன்று (22/01/2026) வியாழக்கிழமை ஷஃபான் பிறை 0️⃣2️⃣*
🌹🌹🌹🌹🌹🌹

♦️ *உலக இஸ்லாமியர்களில் அதிகமானோர் பின்பற்றும் ஹனஃபி மத்ஹபை தோற்றுவித்தவர்கள்*

♦️ *பல இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்தவர்கள்*

♦️ *20கும் மேற்பட்ட சஹாபாக்களை சந்தித்த தாபியி*

♦️ *"கல்வி சுரையா எனும் நட்சத்திரத்தில் இருந்தாலும் ஃபாரிசை சேர்ந்த ஒரு மனிதர் அதை அடைந்து கொள்வார்" என்று பெருமானார் ஆல் முன்னறிவிப்பு செய்யப்பட்ட இமாம்*

♦️ *40 வருடங்கள் இஷாவிற்கு செய்த ஒழுவோடு ஃபஜ்ர் தொழுதவர்கள்*

♦️ *"ஒட்டுமொத்த உலக மக்களும் ஃபிக்ஹில் அபூ ஹனிஃபா அவர்களின் குடும்பத்தார்கள் தான்" என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களால் புகழப்பட்டவர்கள்*

👑👑👑👑👑👑
ஹஜ்ரத் சையதுனா வ மவ்லானா கௌதனா ஷைகனா *இமாம் நுஃமான் பின் சாபித் அபூ ஹனிஃபா (ரஹ்மதுல்லாஹி அலைஹி)* அவர்களின் *உரூஸ் (நினைவு) தினம் இன்று*
🌹🌹🌹🌹🌹🌹

ஆகையால் இமாம் அபூ ஹனிஃபா நாயகம் அவர்களின் வரலாற்றை, தியாகத் தீன் பணியை இந்த நாளில் அதிகம் பேசி நமது குழந்தைகள், பெரியவர்களிடம் நினைவு கூர்வோம்.

✨✨✨✨✨✨
மேலும் 1️⃣ *முறை சூரத்துல் ஃபாத்திஹா*
3️⃣ *முறை சூரத்துல் இக்லாஸ்*
1️⃣ *முறை சூரத்துல் ஃபலக்*
1️⃣ *முறை சூரத்துன் நாஸ்*
1️⃣1️⃣ *முறை ஸலவாத் ஓதி*

💫💫💫💫💫💫
*இமாம் அபூ ஹனிஃபா நாயகம் அவர்களுக்கு ஹதியா செய்து எஜமான் அவர்களின் துஆவை, ஃபைஜானை (அருளை) பெறுவோம்*
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

*யா அல்லாஹ்!!!*
"இமாம் அபூ ஹனிஃபா நாயகத்தின் பொருட்டால் எங்களுக்கு தீனில் இஸ்திகாமத், காமில் ஈமானை தருவாயாக,
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

"இமாம் அபூ ஹனிஃபா நாயகத்தின் பொருட்டால் நாங்களும் அவர்கள் போல் ஷரீஅத்தை பேணி நடக்கும் பாக்கியத்தை தருவாயாக"
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

அவர்களுடன் இணைந்து சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை மறுமையில் தருவாயாக"

*-ஆமீன்.*

இப்படிக்கு:
*A.K.F. மீலாது கமிட்டி*
(முகப்பேர் கிழக்கு)

5 days ago | [YT] | 34

FAHMI CHANNEL

*☪️☪️☪️ அஸ்ஸலாமு அலைக்கும்!23.01.2026 வெள்ளிக்கிழமை!!ஜும்மா முபாரக்!!!அல்ஹம்து லில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்*

உள்ளத்தினை மாற்று பவனே
அல்லாஹ்வே!
எங்கள் ஈமானை புதிப்பிக்கும் பார்க்கத்தான் ரமளான் மாதம் வருவதை முன் அறிவிப்பு செய்யும் ஷஃபான் மாத முதல் ஜுமூஆ நாளில் உன்னிடம் கேட்கின்றோம் எங்கள் உள்ளத்தை ஈமானில் இறை நம்பிக்கையில் திக்ரில் தொழுகையில் உறுதியாகக்குவாயாக

​"யா அல்லாஹ்! இந்த காலைப் பொழுதில் நான் உன்னை சாட்சியாக்குகிறேன்; உனது அரியணையை (அர்ஷைச்) சுமப்பவர்களையும், உனது வானவர்களையும், உனது படைப்புகள் அனைத்தையும் சாட்சியாக்குகிறேன். நிச்சயமாக நீயே அல்லாஹ், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, நீ தனித்தவன், உனக்கு இணை ஏதுமில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் உனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்."


​"யா அல்லாஹ்! இந்த அதிகாலையில் எனக்கோ அல்லது உனது படைப்புகளில் யாருக்கோ கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் உன்னிடமிருந்து மட்டுமே வந்தவை. நீ தனித்தவன், உனக்கு இணை இல்லை. உனக்கே எல்லாப் புகழும், உனக்கே எல்லா நன்றிகளும் உரித்தாகட்டும்."


​"யா அல்லாஹ்! இன்றைய நாளின் நன்மையை, அதன் வெற்றியை, அதன் உதவியை, அதன் ஒளியை, அதன் பரகத்தை (அபிவிருத்தியை) மற்றும் அதன் நேர்வழியை உன்னிடமே வேண்டுகிறேன். இந்த நாளில் உள்ள தீமைகளிலிருந்தும், இதற்குப் பின்வரும் தீமைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்."


​"யா அல்லாஹ்! என் உடலில் எனக்கு ஆரோக்கியம் அளிப்பாயாக."
​"யா அல்லாஹ்! என் செவிப்புலனில் எனக்கு ஆரோக்கியம் அளிப்பாயாக."
​"யா அல்லாஹ்! என் பார்வையில் எனக்கு ஆரோக்கியம் அளிப்பாயாக. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை."
​"யா அல்லாஹ்! குفر (இறை நிராகரிப்பு) மற்றும் வறுமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ணறை (கப்ரு) வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்."


​"யா அல்லாஹ்! உன்னிடத்தில் பயனுள்ள கல்வியையும், தூய்மையான (ஹலாலான) வாழ்வாதாரத்தையும், அங்கீகரிக்கப்பட்ட நற்செயல்களையும் வேண்டுகிறேன். நரக நெருப்பிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! இன்றைய நாளின் பரகத்தையும் நன்மைகளையும் எனக்கு வழங்குவாயாக."

*🤲❤️ஆமீன்❤️🤲*.

5 days ago | [YT] | 48

FAHMI CHANNEL

அன்பிற்கினியவர்களே!

அல்லாஹ்வின் அருளால் நபியின் துஆ பரகத்தால் தமிழ்நாடு பிலால்கள் நல சங்கத்தின் சார்பாக

கடலூர் மாவட்ட பிலால்கள் நலசங்கம் அமைப்பு ஆலோசனை கூட்டம் 20.01.2026 செவ்வாய் காலை 10:00 மணி முதல் 12 மணி வரை லால்பேட்டை தைக்கால் மஸ்ஜிதே மஹ்மூத் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

சங்கத்தின்
மாநில நிர்வாகிகள் A.முஹம்மது யூனுஸ், M. முஹம்மது அலி பேக் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சாதிக் அலி நூர் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மௌலானா வஜ்ஹூல்லாஹ் இலாஹி ஹஜ்ரத் அவர்களால் இறைமறை வசனம் ஓதி துவக்கப்பட்டது.

கடலூர்
மாவட்ட பொறுப்பாளர்களாக மௌலானா வஜ்ஹூல்லாஹ் இலாஹி, முஜ்ஜமில், கலீல் அஹம்மது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் 🤲

கடலூரை சேர்ந்த மற்றும் சுற்றுபுற பகுதிகளிலுள்ள பிலால்கள் கீழ்காணும் கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கடலூர் மாவட்ட பிலால்கள் நல சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முஹம்மது யூனூஸ்
98437 33173

5 days ago | [YT] | 32

FAHMI CHANNEL

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
2️⃣3️⃣➖0️⃣1️⃣➖2️⃣6️⃣
ஷஃபான் பிறை 3️⃣
☪️☪️☪️☪️☪️🤲🤲🤲🤲🤲🤲🤲அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்

உள்ளத்தினை மாற்று பவனே
அல்லாஹ்வே!
எங்கள் ஈமானை புதிப்பிக்கும் பார்க்கத்தான் ரமளான் மாதம் வருவதை முன் அறிவிப்பு செய்யும் ஷஃபான் மாத முதல் ஜுமூஆ நாளில் உன்னிடம் கேட்கின்றோம் எங்கள் உள்ளத்தை ஈமானில் இறை நம்பிக்கையில் திக்ரில் தொழுகையில் உறுதியாகக்குவாயாக

​"யா அல்லாஹ்! இந்த காலை ப் பொழுதில் நான் உன்னை சாட்சியாக்குகிறேன்; உனது அரியணையை (அர்ஷைச்) சுமப்பவர்களையும், உனது வானவர்களையும், உனது படைப்புகள் அனைத்தையும் சாட்சியாக்குகிறேன். நிச்சயமாக நீயே அல்லாஹ், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, நீ தனித்தவன், உனக்கு இணை ஏதுமில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் உனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்."


​"யா அல்லாஹ்! இந்த அதிகாலையில் எனக்கோ அல்லது உனது படைப்புகளில் யாருக்கோ கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் உன்னிடமிருந்து மட்டுமே வந்தவை. நீ தனித்தவன், உனக்கு இணை இல்லை. உனக்கே எல்லாப் புகழும், உனக்கே எல்லா நன்றிகளும் உரித்தாகட்டும்."


​"யா அல்லாஹ்! இன்றைய நாளின் நன்மையை, அதன் வெற்றியை, அதன் உதவியை, அதன் ஒளியை, அதன் பரகத்தை (அபிவிருத்தியை) மற்றும் அதன் நேர்வழியை உன்னிடமே வேண்டுகிறேன். இந்த நாளில் உள்ள தீமைகளிலிருந்தும், இதற்குப் பின்வரும் தீமைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்."


​"யா அல்லாஹ்! என் உடலில் எனக்கு ஆரோக்கியம் அளிப்பாயாக."
​"யா அல்லாஹ்! என் செவிப்புலனில் எனக்கு ஆரோக்கியம் அளிப்பாயாக."
​"யா அல்லாஹ்! என் பார்வையில் எனக்கு ஆரோக்கியம் அளிப்பாயாக. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை."
​"யா அல்லாஹ்! குفر (இறை நிராகரிப்பு) மற்றும் வறுமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ணறை (கப்ரு) வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்."


​"யா அல்லாஹ்! உன்னிடத்தில் பயனுள்ள கல்வியையும், தூய்மையான (ஹலாலான) வாழ்வாதாரத்தையும், அங்கீகரிக்கப்பட்ட நற்செயல்களையும் வேண்டுகிறேன். நரக நெருப்பிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

யா அல்லாஹ்! இன்றைய நாளின் பரகத்தையும் நன்மைகளையும் எனக்கு வழங்குவாயாக."
ஆமீன்...

5 days ago | [YT] | 39