இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு கடும் கண்டனம்.
மே 2 தமிழ்நாடு முழுவதும் வாலிபர் சங்கம் போராட்டம்
இந்திய ரயில்வே வாரியத்தின் இயக்குனர் அமித் சிங் மெஹ்ரா, அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் ரயில்வேயின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையில் 2 % இந்த சீரமைப்பு நடவடிக்கைக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய ரயில்வேயில் சுமார் 14.80 லட்சம் பணியாளர்கள் உள்ள நிலையில், இந்த 2 சதவீத இலக்கின் கீழ் 29,608 பணியிடங்கள் குறைக்க உள்ளனர். இதன் வாயிலாக தென்னக ரயில்வேயில் மட்டுமே 2,000 பணியிடங்கள் வரை பறிபோகும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பணியிட ஒழிப்பு ஒவ்வோராண்டும் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. 2024-25 இல் 28,815 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டன. இளைஞர் மத்தியில் பெரும் அதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகமய பொருளாதாரப் பாதையின் "வேலை பறிப்பு வளர்ச்சி" (Jobless Growth) என்பதற்கு ஒரு அரசுத் துறையே பெரும் சாட்சியமாக விளங்குகிறது. இந்த காலத்தில் ரயில்வே வளர்ச்சி அபரிமிதமானது. சரக்கு போக்குவரத்து 74 சதவிகிதம், என்ஜின்கள் 51 சதவிகிதம், தண்டவாளம் 25 சதவிகிதம் அதிகரிப்பை கண்டுள்ளன. ஆனால், 1991 க்கு பின்னர் 25 ஆண்டுகளில் இவ்வாறு ஒழிக்கப்பட்ட பணியிடங்கள் 1.7 லட்சம் ஆகும். ஆனால், பணியிட ஒழிப்பு பிரச்சனை இன்னும் ஆழமானது. அனுமதிக்கப்பட்ட பணி இடங்கள் குறைக்கப்பட்டாலும், குறைக்கப்பட்ட இடங்களாவது நிரப்பப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. அப்படி நிரப்பப்படாத இடங்களான 2.5 லட்சத்தையும் சேர்த்தால் மொத்தம் 4.2 லட்சம் இடங்கள் 25 ஆண்டுகளில் பறி போயிருக்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்த மோடி அரசு, ஒரு துறையில் மட்டுமே ஒவ்வோராண்டும் பல்லாயிரக் கணக்கான வேலை வாய்ப்புகளை பறித்து வருகிறது. இதற்கு காரணம் தனியார்மயம், ஒப்பந்த பணி என்கிற அரசின் கொள்கையே ஆகும்.
மோடி அரசு குறிப்பாக அரசுத் துறையின் வேலை வாய்ப்புகள் கடுமையாக குறைத்து வேலையின்மை விகிதத்தை அதிகப்படுத்த மோடி அரசு திட்டமிடுகிறது, இந்தியாவில் இளைஞர்கள் மீது எந்த ஒரு அக்கறை கொள்ளாமலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல் நிலுவையில் உள்ள பணியிடங்களை குறைத்து இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கிறது ரயில்வே துறையில் பணியாற்றலாம் என லட்சக்கண இளைஞர்கள் படித்து வரும் இந்நிலையில் அவர்களுக்கு அநீதியை இழைத்து இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
மோடி அரசின் தவறான நிர்வாகத் திறனை கண்டித்து ரயில்வே துறையில் ஒழிக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்திட வலியுறுத்தி தமிழ்நாட்டில் சென்னை , விழுப்புரம் , சேலம் , கோவை , திருச்சி , மதுரை , திருவாரூர் , கன்னியாகுமரி ஆகிய மையங்களில் மோடி அரசை கண்டித்து மே 2ம் தேதி போராட்டம் நடத்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு அறைகூவல் விடுக்கிறது....
எம் எல் ஏ சீட்டு கேட்டு கட்சி வாசலில் தவம் கிடக்கவில்லை இவர்கள்! கட்சி கமிட்டி கூடி முடிவு எடுத்து தேர்வு செய்தது ஒரு பைசா கூட தரவில்லை! மாநிலக்குழு உறுப்பினர் தவிர மற்ற வேட்பாளர் களுக்கு தாங்கள் தேர்வு செய்யப்பட்டதே அறிவிப்பு வரும் வரை தெரியாது! வேட்பாளர் டெபாசிட் தொகை கூட இவர்கள் கட்ட வேண்டிய தில்லை, கட்சி செலுத்தும்! தேர்தலுக்கு தங்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டியதில்லை! அதனால் தான் எம் எல் ஏ வாக பணியாற்றும்போது ஒரு பைசா லஞ்சம் வாங்கியதில்லை, ஊழல் செய்ததில்லை! எம் எல் ஏ சம்பளத்தை லட்சமாக இருந்தாலும் கட்சிக்கு வழங்கிவிட்டு, கட்சி கொடுக்கும் 12000/- ரூ அலவன்ஸை மட்டும் பெற்றுக்கொண்டு மக்கள் பணியாற்றும் தோழர்கள் இவர்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாணிக்க ங்கள்! இதோ மக்களுக்காக பணியாற்ற மக்கள் முன்பு அனுமதி கேட்டு நிற்கிறார்கள்! பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே! தவறவிட்டுவிடாதீர்கள்! சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கீழ்வேளூர் தொகுதியில் களம் காணும் வெற்றி வேட்பாளர் தோழர் T.லதா அவர்களுக்கு CPIM 🚩 வேதாரண்யம் தெற்கு ஒன்றியக்குழுவின் சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலினை #CPIM மாநிலச் செயலாளர் *பெ*.*சண்முகத்துடன்* சென்று வேட்பாளர்கள் *என்*.*பாண்டி(பழனி)*, *எம்*.*சின்னதுரை (கந்தர்வகோட்டை)*, *சி*.*செல்லசுவாமி(பத்மநாபபுரம்)*, *எல்*.*சுந்தரராஜன் (திருவொற்றியூர்)*, *டி*.*லதா (கீழ்வேளூர்)* ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்திய விடுதலைப்போராட்ட வீரரும் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் மறைவையொட்டி வேதாரண்யம் தெற்கு ஒன்றியம் வாய்மேடு ஊராட்சியில் ஏற்றப்பட்டிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடியானது அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தெற்கு ஒன்றியம் வாய்மேடு ஊராட்சியில் ஏற்றப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடியினை திருடிச்சென்ற திருடர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டி கிளைத் தலைவர் V.செந்தில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னதாக கிளைச்செயலாளர் R.அறிவழகன் வரவேற்றார்.துணைத்தலைவர் T.விக்னேஷ் துணைச் செயலாளர் R.இராஜசேகரன் முன்னிலை வகிக்க மாவட்டத்தலைவர் M.ஜோதிபாசு ஒன்றியச்செயலாளர் C.பாலசுந்தரம் ஒன்றிய து.செயலாளர் A.லாடமுத்து வி.ச ஒன்றியச்செயலாளர் P.S.பன்னீர்செல்வம் DYFI-மு.ஒன்றியச்செயலாளர் A.வெற்றியழகன் வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் V.இளையபெருமாள் வி.ச ஒன்றியக்குழு N.கோபாலகிருஷ்ணன் K.குழந்தைவேலு மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் M.சுமதி ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் S.இராசகோபால் மாற்றுத்திறனாளிகள் சங்கம் V.வேதரெத்தினம், P.பொன்னுத்துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர். சகோதார அமைப்புகளின் நிர்வாகிகள் பிரதிநிதிகள் வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வாய்மேடு பவர்ஹவுஸ் பகுதியில் கண்காணிப்பு கேமராவும், உயர்கோபுர மின்விளக்கும் அமைத்திட கோரிக்கை வைக்கப்பட்டது.
விஜய்க்கு மறைமுக நெருக்கடி கொடுக்க நினைக்கிறதா ஒன்றிய அரசு ?
கந்தன் மலைக்கு தணிக்கைச் சான்று வழங்குவீர்கள் ! ஜனநாயகனுக்கு மறுப்பீர்களா ?
ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழை உடனே வழங்க வேண்டும்.
வாலிபர் சங்கம் வலியுறுத்தல் !
ஜனநாயகன் திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மத்திய தணிக்கை வாரியத்துக்கு தணிக்கைச் சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அதில் தணிக்கை வாரியம் 15 திருத்தங்கள் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அதை திரைப்படக்குழு தணிக்கை வாரியத்தின் பரிந்துரைகள் படி திருத்தங்களை செய்து மீண்டும் சமர்ப்பித்தாலும், இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இயக்குநரும் , தயாரிப்பாளரும் இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளனர்.
தணிக்கை வாரியம் கேட்ட திருத்தங்களைச் செய்த பிறகும் சிலர் வழங்கிய புகார்கள் காரணம் காட்டி சான்றிதழ் நிறுத்தப்பட்டது நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையின் துவக்கத்திலேயே ஏன் 9 ஆம் தேதியே தான் திரைப்படத்தை வெளியிட வேண்டுமா ? 10 ஆம் தேதி வெளியிட்டால் என்ன பிரச்சனை என கேட்டது பத்திரிக்கைகளில் செய்தியாக வந்தது. அதன் பின் நடந்த விசாரணைகளில் தணிக்கை வாரியம் யாரும் விரும்பும் நேரத்திற்குள் எல்லாம் தணிக்கை செய்து தர முடியாது , புகார் காரணத்தினால் மறு தணிக்கை செய்ய அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளனர்.
இது அரசியல் ரீதியில் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும் நிகழ்வைப் போல் இருக்கிறது. கந்தன் மலை போன்ற சமூக சீர்கேடான பிளவுவாத கருத்துகள் கொண்ட திரைப்படங்களுக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கும் தணிக்கை வாரியம் ஏன் “ ஜனநாயகன் “ திரைப்படத்தை முடக்க நினைக்கிறது என்ற கேள்வியை வாலிபர் சங்கம் எழுப்ப விரும்புகிறது. தனது அரசியல் வாழ்விற்கு முன்பாக தனது கடைசி திரைப்படம் என அறிவித்துள்ள விஜய் அவர்களுக்கு தணிக்கை வாரியம் கொடுக்கும் மரியாதை இது தானா ? என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவு அனைத்து குடிமக்களுக்குமான கருத்து மற்றும் கலை வெளிப்பாடுகளின் சுதந்திர உரிமையை பாதுகாக்கின்றது. அதனால் திரைப்படம் போன்ற கலை வடிவங்களும் இதன் கீழ் வருகின்றன. மத்திய திரைப்படதொகுப்பு வாரியம் (CBFC) என்பது Cinematograph Act, 1952 இன் கீழ் விரும்பிய படைப்புக்களை மதிப்பாய்வு செய்து பொதுவில் காண்பிப்பதற்கான சான்றிதழ் வழங்குமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தணிக்கை செய்தல் என்பது திரைப்படத்தோடு இருக்க வேண்டுமே அல்லாமல் அரசியல் தணிக்கையாக மாறிவிடக் கூடாது என சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
ஜனவரி 9 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என திரை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் , தற்போது இந்த திரைப்படக்குழு தொடர்ந்த வழக்கில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பினை வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது அப்பட்டமாகவே விஜய் அவர்களை அடிபணிய வைப்பதற்கான முயற்சி தான் என்பது தெளிவாகிறது. இதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தணிக்கைகுழு சொல்லி படத்தில் 15 எடிட் செய்த பின்னும் U or u/A or A ஏதாவது ஒரு சான்று கொடுக்க வேண்டுமே தவிர மறுப்பது சரியா ?
உடனடித் தணிக்கையை மேற்கொண்டு 9 ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்புகளை திரைப்படத் தணிக்கைத் துறை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். ஏற்கெனவே சுயேட்சையான நிர்வாக அமைப்புகளை தங்கள் அரசியல் வெறிக்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசு , திரைப்படத் தணிக்கைத் துறையையும் அவ்வாறு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
senkathir
#may day
1 week ago | [YT] | 0
View 0 replies
senkathir
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு கடும் கண்டனம்.
மே 2 தமிழ்நாடு முழுவதும் வாலிபர் சங்கம் போராட்டம்
இந்திய ரயில்வே வாரியத்தின் இயக்குனர் அமித் சிங் மெஹ்ரா, அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் ரயில்வேயின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையில் 2 % இந்த சீரமைப்பு நடவடிக்கைக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய ரயில்வேயில் சுமார் 14.80 லட்சம் பணியாளர்கள் உள்ள நிலையில், இந்த 2 சதவீத இலக்கின் கீழ் 29,608 பணியிடங்கள் குறைக்க உள்ளனர். இதன் வாயிலாக தென்னக ரயில்வேயில் மட்டுமே 2,000 பணியிடங்கள் வரை பறிபோகும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பணியிட ஒழிப்பு ஒவ்வோராண்டும் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. 2024-25 இல் 28,815 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டன. இளைஞர் மத்தியில் பெரும் அதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகமய பொருளாதாரப் பாதையின் "வேலை பறிப்பு வளர்ச்சி" (Jobless Growth) என்பதற்கு ஒரு அரசுத் துறையே பெரும் சாட்சியமாக விளங்குகிறது. இந்த காலத்தில் ரயில்வே வளர்ச்சி அபரிமிதமானது. சரக்கு போக்குவரத்து 74 சதவிகிதம், என்ஜின்கள் 51 சதவிகிதம், தண்டவாளம் 25 சதவிகிதம் அதிகரிப்பை கண்டுள்ளன. ஆனால், 1991 க்கு பின்னர் 25 ஆண்டுகளில் இவ்வாறு ஒழிக்கப்பட்ட பணியிடங்கள் 1.7 லட்சம் ஆகும். ஆனால், பணியிட ஒழிப்பு பிரச்சனை இன்னும் ஆழமானது. அனுமதிக்கப்பட்ட பணி இடங்கள் குறைக்கப்பட்டாலும், குறைக்கப்பட்ட இடங்களாவது நிரப்பப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. அப்படி நிரப்பப்படாத இடங்களான 2.5 லட்சத்தையும் சேர்த்தால் மொத்தம் 4.2 லட்சம் இடங்கள் 25 ஆண்டுகளில் பறி போயிருக்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்த மோடி அரசு, ஒரு துறையில் மட்டுமே ஒவ்வோராண்டும் பல்லாயிரக் கணக்கான வேலை வாய்ப்புகளை பறித்து வருகிறது. இதற்கு காரணம் தனியார்மயம், ஒப்பந்த பணி என்கிற அரசின் கொள்கையே ஆகும்.
மோடி அரசு குறிப்பாக அரசுத் துறையின் வேலை வாய்ப்புகள் கடுமையாக குறைத்து வேலையின்மை விகிதத்தை அதிகப்படுத்த மோடி அரசு திட்டமிடுகிறது, இந்தியாவில் இளைஞர்கள் மீது எந்த ஒரு அக்கறை கொள்ளாமலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல் நிலுவையில் உள்ள பணியிடங்களை குறைத்து இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கிறது ரயில்வே துறையில் பணியாற்றலாம் என லட்சக்கண இளைஞர்கள் படித்து வரும் இந்நிலையில் அவர்களுக்கு அநீதியை இழைத்து இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
மோடி அரசின் தவறான நிர்வாகத் திறனை கண்டித்து ரயில்வே துறையில் ஒழிக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்திட வலியுறுத்தி தமிழ்நாட்டில் சென்னை , விழுப்புரம் , சேலம் , கோவை , திருச்சி , மதுரை , திருவாரூர் , கன்னியாகுமரி ஆகிய மையங்களில் மோடி அரசை கண்டித்து மே 2ம் தேதி போராட்டம் நடத்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு அறைகூவல் விடுக்கிறது....
செல்வராஜ்
மாநிலத் தலைவர்
எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்
1 week ago | [YT] | 0
View 0 replies
senkathir
1 week ago | [YT] | 1
View 0 replies
senkathir
எம் எல் ஏ சீட்டு கேட்டு கட்சி வாசலில் தவம் கிடக்கவில்லை இவர்கள்! கட்சி கமிட்டி கூடி முடிவு எடுத்து தேர்வு செய்தது ஒரு பைசா கூட தரவில்லை! மாநிலக்குழு உறுப்பினர் தவிர மற்ற வேட்பாளர் களுக்கு தாங்கள் தேர்வு செய்யப்பட்டதே அறிவிப்பு வரும் வரை தெரியாது! வேட்பாளர் டெபாசிட் தொகை கூட இவர்கள் கட்ட வேண்டிய தில்லை, கட்சி செலுத்தும்! தேர்தலுக்கு தங்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டியதில்லை! அதனால் தான் எம் எல் ஏ வாக பணியாற்றும்போது ஒரு பைசா லஞ்சம் வாங்கியதில்லை, ஊழல் செய்ததில்லை! எம் எல் ஏ சம்பளத்தை லட்சமாக இருந்தாலும் கட்சிக்கு வழங்கிவிட்டு, கட்சி கொடுக்கும் 12000/- ரூ அலவன்ஸை மட்டும் பெற்றுக்கொண்டு மக்கள் பணியாற்றும் தோழர்கள் இவர்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாணிக்க ங்கள்! இதோ மக்களுக்காக பணியாற்ற மக்கள் முன்பு அனுமதி கேட்டு நிற்கிறார்கள்! பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே! தவறவிட்டுவிடாதீர்கள்! சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்!
4 weeks ago | [YT] | 1
View 0 replies
senkathir
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கீழ்வேளூர் தொகுதியில் களம் காணும் வெற்றி வேட்பாளர் தோழர் T.லதா அவர்களுக்கு CPIM 🚩 வேதாரண்யம் தெற்கு ஒன்றியக்குழுவின் சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
1 month ago | [YT] | 0
View 0 replies
senkathir
திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலினை #CPIM மாநிலச் செயலாளர் *பெ*.*சண்முகத்துடன்* சென்று வேட்பாளர்கள் *என்*.*பாண்டி(பழனி)*, *எம்*.*சின்னதுரை (கந்தர்வகோட்டை)*, *சி*.*செல்லசுவாமி(பத்மநாபபுரம்)*, *எல்*.*சுந்தரராஜன் (திருவொற்றியூர்)*, *டி*.*லதா (கீழ்வேளூர்)* ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 month ago | [YT] | 3
View 0 replies
senkathir
நேற்று மதுரோ !
இன்று கமேனி !!
நாளை ? ….
உலகம் ஏகாதிபத்தியத்தின் வேட்டைக்காடாக மாறியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணியின் இரக்கமற்ற தாக்குதலில் ஈரான் அதிபர் கமேனி கொல்லப்பட்டுள்ளார்.
போர் வெறியும் - லாப வேட்கையும் நர வேட்டையாடுகின்றன.
போர் வெறியைத் தூண்டும் இஸ்ரேல் , துணைபோகும் அமெரிக்கா !
வேண்டாம் போர் !
வேண்டும் அமைதி !
#DYFI #iran #america #Israel #dyfitamilnadu #Waar #Irannews
2 months ago (edited) | [YT] | 0
View 0 replies
senkathir
இந்திய விடுதலைப்போராட்ட வீரரும் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் மறைவையொட்டி வேதாரண்யம் தெற்கு ஒன்றியம் வாய்மேடு ஊராட்சியில் ஏற்றப்பட்டிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடியானது அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
செவ்வணக்கம் தோழர் 🚩
2 months ago | [YT] | 2
View 0 replies
senkathir
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தெற்கு ஒன்றியம் வாய்மேடு ஊராட்சியில் ஏற்றப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடியினை திருடிச்சென்ற திருடர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டி கிளைத் தலைவர் V.செந்தில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னதாக கிளைச்செயலாளர் R.அறிவழகன் வரவேற்றார்.துணைத்தலைவர் T.விக்னேஷ் துணைச் செயலாளர் R.இராஜசேகரன் முன்னிலை வகிக்க மாவட்டத்தலைவர் M.ஜோதிபாசு ஒன்றியச்செயலாளர் C.பாலசுந்தரம் ஒன்றிய து.செயலாளர் A.லாடமுத்து வி.ச ஒன்றியச்செயலாளர் P.S.பன்னீர்செல்வம் DYFI-மு.ஒன்றியச்செயலாளர் A.வெற்றியழகன் வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் V.இளையபெருமாள் வி.ச ஒன்றியக்குழு N.கோபாலகிருஷ்ணன் K.குழந்தைவேலு மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் M.சுமதி ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் S.இராசகோபால் மாற்றுத்திறனாளிகள் சங்கம் V.வேதரெத்தினம், P.பொன்னுத்துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சகோதார அமைப்புகளின் நிர்வாகிகள் பிரதிநிதிகள் வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வாய்மேடு பவர்ஹவுஸ் பகுதியில் கண்காணிப்பு கேமராவும், உயர்கோபுர மின்விளக்கும் அமைத்திட கோரிக்கை வைக்கப்பட்டது.
2 months ago | [YT] | 0
View 0 replies
senkathir
விஜய்க்கு மறைமுக நெருக்கடி கொடுக்க நினைக்கிறதா ஒன்றிய அரசு ?
கந்தன் மலைக்கு தணிக்கைச் சான்று வழங்குவீர்கள் !
ஜனநாயகனுக்கு மறுப்பீர்களா ?
ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழை உடனே வழங்க வேண்டும்.
வாலிபர் சங்கம் வலியுறுத்தல் !
ஜனநாயகன் திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மத்திய தணிக்கை வாரியத்துக்கு தணிக்கைச் சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அதில் தணிக்கை வாரியம் 15 திருத்தங்கள் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அதை திரைப்படக்குழு தணிக்கை வாரியத்தின் பரிந்துரைகள் படி திருத்தங்களை செய்து மீண்டும் சமர்ப்பித்தாலும், இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இயக்குநரும் , தயாரிப்பாளரும் இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளனர்.
தணிக்கை வாரியம் கேட்ட திருத்தங்களைச் செய்த பிறகும் சிலர் வழங்கிய புகார்கள் காரணம் காட்டி சான்றிதழ் நிறுத்தப்பட்டது நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையின் துவக்கத்திலேயே ஏன் 9 ஆம் தேதியே தான் திரைப்படத்தை வெளியிட வேண்டுமா ? 10 ஆம் தேதி வெளியிட்டால் என்ன பிரச்சனை என கேட்டது பத்திரிக்கைகளில் செய்தியாக வந்தது. அதன் பின் நடந்த விசாரணைகளில் தணிக்கை வாரியம் யாரும் விரும்பும் நேரத்திற்குள் எல்லாம் தணிக்கை செய்து தர முடியாது , புகார் காரணத்தினால் மறு தணிக்கை செய்ய அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளனர்.
இது அரசியல் ரீதியில் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும் நிகழ்வைப் போல் இருக்கிறது. கந்தன் மலை போன்ற சமூக சீர்கேடான பிளவுவாத கருத்துகள் கொண்ட திரைப்படங்களுக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கும் தணிக்கை வாரியம் ஏன் “ ஜனநாயகன் “ திரைப்படத்தை முடக்க நினைக்கிறது என்ற கேள்வியை வாலிபர் சங்கம் எழுப்ப விரும்புகிறது. தனது அரசியல் வாழ்விற்கு முன்பாக தனது கடைசி திரைப்படம் என அறிவித்துள்ள விஜய் அவர்களுக்கு தணிக்கை வாரியம் கொடுக்கும் மரியாதை இது தானா ? என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவு அனைத்து குடிமக்களுக்குமான கருத்து மற்றும் கலை வெளிப்பாடுகளின் சுதந்திர உரிமையை பாதுகாக்கின்றது. அதனால் திரைப்படம் போன்ற கலை வடிவங்களும் இதன் கீழ் வருகின்றன.
மத்திய திரைப்படதொகுப்பு வாரியம் (CBFC) என்பது Cinematograph Act, 1952 இன் கீழ் விரும்பிய படைப்புக்களை மதிப்பாய்வு செய்து பொதுவில் காண்பிப்பதற்கான சான்றிதழ் வழங்குமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தணிக்கை செய்தல் என்பது திரைப்படத்தோடு இருக்க வேண்டுமே அல்லாமல் அரசியல் தணிக்கையாக மாறிவிடக் கூடாது என சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
ஜனவரி 9 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என திரை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் , தற்போது இந்த திரைப்படக்குழு தொடர்ந்த வழக்கில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பினை வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது அப்பட்டமாகவே விஜய் அவர்களை அடிபணிய வைப்பதற்கான முயற்சி தான் என்பது தெளிவாகிறது. இதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தணிக்கைகுழு சொல்லி படத்தில் 15 எடிட் செய்த பின்னும் U or u/A or A ஏதாவது ஒரு சான்று கொடுக்க வேண்டுமே தவிர மறுப்பது சரியா ?
உடனடித் தணிக்கையை மேற்கொண்டு 9 ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்புகளை திரைப்படத் தணிக்கைத் துறை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். ஏற்கெனவே சுயேட்சையான நிர்வாக அமைப்புகளை தங்கள் அரசியல் வெறிக்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசு , திரைப்படத் தணிக்கைத் துறையையும் அவ்வாறு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
செல்வராஜ்
மாநிலத் தலைவர்
எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்
#ஜனநாயகன் #Jananaayagan #DYFI #Vijay
4 months ago | [YT] | 0
View 0 replies
Load more