பிராத்திக்கிறேன்!
"இறைவா! என்னை அமைதியின் கருவாக்கு! நன்மையின் பொருளாக்கு!
வறுமையை வேரறுத்து செழிமையை செய்து முடிக்கும் செயல்களாக்கு!
நல்லோரிடத்தில் நட்பையும், எல்லா உயிர்களின் அன்பையும் பெற்றவனாக்கு!
உண்மையும், நேர்மையும் கொண்ட பாதையில் என்னை வழி நடத்து!
"என்னை நான் அறியச் செய்" பிறருக்குக் கொடுக்க, எனக்குக் கொடு!
என்னில் மன உறுதியும், முடியாதென தோன்றும் செயலையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவனாக்கு!
என்றும் நான்,நீ!-ஆக்கு".
-பி. குமார் எண்ணம்.-