ஸ்ரீ சண்முகா வாஸ்து ஜோதிடம்

ஸ்ரீ சண்முகா வாஸ்து ஜோதிடம்
வாஸ்து ஜோதிட ஆராய்ச்சியாளர்
RK .வீரராகவன் திருச்சி. 87783 98256


#vasthu #bestvasthuastroger #bestastrologer #astrologytamil #jothidam #rasipalan


ஸ்ரீ சண்முகா வாஸ்து ஜோதிடம்

நீங்கள் யார் மீது அதீத பற்றாக இருக்கிறீர்கள்! அதனால் இன்பமா துன்பமா?
இதை ஜாதகங்களில் அறிய முடியுமா?
முடியும் .

5ஆம் அதிபதி 5ஆம் இடம் தான் ஒருவரின் பற்று விருப்பம் போன்று மன நிலையினை எடுத்துக் காட்டும். மேலும்
5 ஆம் இடம் கீழ்கண்ட பாவகங்களில் எதனுடன் தொடர்பு பெறுகிறதோ அவர்கள் மீது அதீத அன்புடன் இருப்பார். .

1 ஆம் பாவகம் ஜாதகர் தன்னை தானே நேசிப்பார்
2. ஆம் பாவகம்தான் குடும்பத்தின் மீது
3. ஆம் பாவகம் இளைய சகோதரம் மீது மாமனார் மீதும்
4.ஆம் பாவகம் தாயார் மீது
5.ஆம் பாவகம் தான் குழந்தைகள் மீது
7. ஆம் பாவகம் வாழ்க்கை துணை மீது
9. ஆம் பாவகம் தந்தை, பேரக் குழந்தைகள் மீது
10. ஆம் பாவகம் தன் தொழில் மாமியார் மீதும்
11 ஆம் பாவகம் மூத்த சகோதரன் மீதும்.

5ஆம் அதிபதியுடன் மேற்கூறிய லக்னம்,2,3,4,5,7,9,10 இடங்களின் தொடர்புடன் 11 அதிபதி தொடர்பு இருந்தால் அந்த அன்பு , விருப்பம் பூர்த்தி பெறும் .

தவிர 5ஆம் அதிபதியுடன் மேற்கூறிய லக்னம்,2,3,4,5,7,9,10 ,11இடங்களின் தொடர்புடன் 6, 8 , 12 அதிபதி தொடர்பு இருந்தால் அந்த மிகுந்த வேதனை உடனும் நிறைய அவமானங்கள் சந்தித்து போராட்டங்களை எதிர்கொண்டாலும் அவரிடம் அன்பு நேசம் காட்டிக் கொண்டே இருப்பார். (மன வேதனைகளை தாண்டி)

யாரெல்லாம் பற்று வைத்து அதனால் வேதனை துன்பம் போராட்டங்களை சந்தித்து, விரக்தியை அடைவார்கள் என்றால்,

5ஆம் அதிபதியுடன் மேற்கூறிய லக்னம்,2,3,4,5,7,9,10 இடங்களுக்கு
6, 8, 12 அதிபதிகள் ஏதாவது ஒன்றின் தொடர்பு மட்டும் இருப்பதால்,

6ஆம் இடம் அல்லது அதிபதியுடன் தொடர்பு எனில் , போராட்டங்களை சந்தித்து இருப்பார் அதனால் விரக்தியில் உத்யோகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதை மறக்க நினைப்பர்

8ஆம் இடம் அல்லது அதிபதியுடன் தொடர்பு எனில் விரக்தியில் இருப்பார். அவமானம் அடைந்திருப்பார். அதில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் ஆகும்

12 ஆம் இடம் அல்லது அதிபதியுடன் தொடர்பு எனில் நிம்மதி தூக்கம் இழந்து தன்னையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு விரக்தியில் இருப்பார்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

1 month ago | [YT] | 3

ஸ்ரீ சண்முகா வாஸ்து ஜோதிடம்

ஒரு கேள்வி ஒரு பதில்

1 month ago | [YT] | 1

ஸ்ரீ சண்முகா வாஸ்து ஜோதிடம்

ஒரு கேள்வி ஒரு பதில் இன்று இரவு 8:01 மணிக்கு

1 month ago | [YT] | 1

ஸ்ரீ சண்முகா வாஸ்து ஜோதிடம்

சுக்கிரனின் தரும் வாழ்க்கை சுகம்

சுக்கிரன் - என்றால் சுகமான சந்தோசம்

சுக்கிரன் - காமத்திற்கு அதிபதி. இதில் காமம் என்பது நாம் பெண்/ஆண் மீது கொள்ளும் மோகம், போகம் காதல் ஆசை மட்டுமின்றி கலிகாலத்தில் ஆடம்பர வசதிகளை அனுபவித்து வாழ்வது என்றும் பொருள் தரும்.

காலபுருஷனின் 2 ம் வீடான ரிஷப வீட்டில் ஆட்சி - 7 ம் வீடான துலாமில் - மூலத் திரிகோண ஆட்சி - 12 ம் வீடான மீனத்தில் உச்சம்.

ஜாதகருக்கு சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தை வலுப்படுத்தி திருமணம் நடத்தி வைத்து அயண சயன
போகத்தை தருகிறார் தாம்பத்தியம் முழுமை பெற செய்பவரும் அவரே
சுக்கிலம் சுரோனியத்தை குறிக்க வரும் அவரே.

சுக்கிரன் என்றால் கவர்ச்சி, நவ நாகரிக ஆடம்பரம், வசதியாக வாழ கூடிய அமைப்பு .

சுக்கிரன் பெண் கிரகம்

திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது பொண்ணு மகா லட்சுமி மாதிரி இருக்கு என்று சொல்வார்கள்.

சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி.
மகாலட்சுமி அம்சம் பொருந்திய மல்லிகையை உங்கள் மனைவிக்கு அன்பாக வாங்கி கொடுங்க.. உங்கள் வாழ்க்கை தான் சொர்க்கம்..,,💕💕💕💕



உங்களுக்கு சுக்கிரன் எங்கே இருக்கிறார்?

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

வாஸ்து ஜோதிடர்
ஆர்கே. வீரராகவன்.
திருச்சி.
ஆன்லைனில் ஜாதகம் பார்க்க விரும்புபவர்கள் 87 783 98 256 இன்று எண்ணிற்கு பிறந்த விவரங்களை வாட்ஸ்அப் செய்யவும்..

3 months ago | [YT] | 2

ஸ்ரீ சண்முகா வாஸ்து ஜோதிடம்

*நாளை*(15-5-2025)
*வியாழக்கிழமை விசுவாசு* *வைகாசி 1 திரிதியை திதியுடன்* *கூடிய வாழ்வை வளமாக்கும்* *விஷ்ணுபதி புண்ணிய* *காலத்தை தவற விட்டு* *விடாதீர்கள்*!

உங்கள் வாழ்க்கையில்
கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா?

நாளைய விஷ்ணுபதி
புண்ய காலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும்
வழிபடுங்கள்

விஷ்ணுபதி புண்ய காலமானது வைகாசி, ஆவணி, கார்த்திகை,
மாசி மாதங்களில் முதல் தேதியில் வரும்.

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகியவை மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதங்களாக கருதப்படுகிறது.

விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம் எனப்படும்

ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர கூடியது இந்த விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும்.

மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள்வருவது உண்டு.

விஷ்ணுவுக்குரிய மாதங்களான மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை மாதங்கள் பிறக்கும் தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த விஷ்ணுபதி புண்ய காலநேரம் அமைகிகிறது.

முழுமையாக 9 மணி நேரம் இந்த விஷ்ணுபதி புண்யகாலம் அமைந்து இருக்கும்.

நாளை(15-5-2025) வைகாசி மாதம் பிறக்கும் நாளில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை முழுமையாக 9 மணி நேரம்
இந்த விஷ்ணுபதி புண்ய கால
நேரம் அமைகிகிறது.

இந்த விஷ்ணுபதி புண்ய காலத்தில் நாம் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும்
மனதார வழிபட்டு நமது
எல்லா தேவைகளையும், வேண்டுதல்களையும்
கூறி பிரார்த்தனை புரியலாம்.

நாளை உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மரத்தை நமஸ்காரம் செய்து
27 உதிரி பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன்பாக வையுங்கள்.

27 சுற்று முடித்த பின்பு
மீண்டும் கொடிமரத்தை
நமஸ்காரம் செய்யுங்கள்

பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு உங்களின் பிராத்தனைகளை மனமுருகி சொல்லுங்கள்

உங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த ஆவணி, கார்த்திகை மாசி மாதங்களில் முதல் தேதி வரும் மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறியே தீரும்,
நிறைவேறியே தீரும்.

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த விஷ்ணுபதி புண்ய கால நாள் அமைந்து உள்ளது...

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெற நாளைய விஷ்ணுபதி புண்ய காலத்தை நல்லபடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

4 months ago | [YT] | 1