பொதக்குடியில் நடக்கும் நிகழ்ச்சிகளை நேரடியாகவும் காணொளி மூலமாகவும் பதிவேற்றம் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த PODAKKUDI MEDIA CHANNEL.

"பொதக்குடி என்கிற ஊர் தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வாழக்கூடிய ஊர்களில் ஒன்று. இது திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூருக்கும் கொரடாச்சேரிக்கும் இடையே அமைந்துள்ளது.

பொதக்குடியின் சிறப்புகள்:

தமிழ்நாட்டின் இரண்டாவது இடத்தை பெற்ற அரபிக் கல்லூரியான அந்நூருல் முஹம்மதியு அரபிக் கல்லூரி பொதக்குடியில் அமைந்துள்ளது.கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, அந்நூருல் முஹம்மதிய்யு அரபிக் கல்லூரி இயங்கி வருகின்றது;
இக்கல்லூரியில் வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், இலங்கையிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து, ஏழாண்டுகள் வரை தங்கியிருந்து கல்வி பயின்று, பட்டம் (ஸனது) பெற்றுச் செல்கின்றனர்.

பல வலிமார்கள் நிறைந்துள்ள ஊர்...குறிப்பாக நூர் முஹம்மது வலியுல்லாஹ், சிந்தாமதார் வலியுல்லாஹ், அப்துல் கரீம் வலியுல்லாஹ் சற்குரு வலியுல்லாக்கள் போன்ற ஏனைய வலிமார்கள் நிறைந்துள்ள ஊர்.